Skip to main content

“என் புள்ளைக்கு பொண்ணு பாக்க சொல்லி, அவனும் சரின்னு சொன்னான்” - அரவிந்த்தின் தாய் கதறல்

Published on 17/01/2023 | Edited on 17/01/2023

 

Arvind's mother, who passed away in Balamedu Jallikattu, met and spoke to the media

 

பாலமேடு ஜல்லிக்கட்டு நேற்று நடந்தது. போட்டியை அமைச்சர் மூர்த்தி கொடியசைத்து துவக்கி வைத்தார்.

 

போட்டியில் நான்காம் சுற்றின் இறுதி வரை 414 காளைகள் களம் கண்டன. 16 காளைகளை அடக்கி மணி என்பவர் முதல் இடத்திலும் 11 காளைகளை அடக்கி ராஜா இரண்டாவது இடத்திலும் 9 காளைகளை அடக்கி அரவிந்த் மற்றும் வாஞ்சிநாதன் ஆகியோர் மூன்றாவது இடத்திலும் இருந்தனர்.

 

இந்நிலையில், மூன்றாவது இடத்தில் இருந்த அரவிந்த் ஒரு காளையைப் பிடிக்க முற்பட்டபோது காளை அவரை முட்டியது. இதனால் படுகாயமடைந்த அரவிந்த் சிகிச்சைக்காக மதுரை ராஜாஜி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில், சிகிச்சை பலனளிக்காமல் உயிரிழந்தார்.

 

சென்னையில் அரவிந்த்தின் தந்தையும் சகோதரரும் வேலை பார்த்து வந்த நிலையில், சொந்த ஊரில் தாயுடன் வசித்து வந்தார் அரவிந்த். உயிரிழந்த அரவிந்த்தின் தாயாரை செய்தியாளர்கள் சந்தித்த போது பேசிய அவர், “நான் வேணாமுன்னு சொல்லியும் எம்புள்ள நான் போய்ட்டு வரேன்னு சொல்லிட்டுப் போனான். 25 வயசு முடிஞ்சு 26 வயசு இந்த மாசம் ஆரம்பிக்குது. என் புள்ளைக்கு பொண்ணு பாக்க சொல்லிட்டேனே. அவனும் சரின்னு சொன்னானே” என அந்தத் தாயின் அழுகுரல் காண்போரையும் கலங்க வைத்தது.

 

பாலமேடு ஜல்லிக்கட்டில் உயிரிழந்த மாடுபிடி வீரர் அரவிந்த்திற்கும் திருச்சி சூரியூரில் மாடு முட்டி உயிரிழந்த பார்வையாளர் அரவிந்த்திற்கும் தமிழக அரசு சார்பில் 3 லட்சம் நிதியுதவி வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

ஜல்லிக்கட்டு பார்க்கச் சென்ற இளைஞர் காளை முட்டி உயிரிழப்பு

Published on 12/02/2024 | Edited on 12/02/2024
A youth who went to see Jallikattu was lose their live by a bull

தமிழ்நாட்டிலேயே அதிகம் ஜல்லிக்கட்டு நடக்கும் புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள தென்னலூர் என்கிற திருநல்லூரில் தான் அதிகமான வாடிவாசல்கள் கொண்ட ஜல்லிக்கட்டு திடல் உள்ளது. ஒரே நேரத்தில் ஏராளமான வாசல்களைத் திறந்து காளைகளை வெளியே விட்ட ஊர் இது. இந்த ஊரில் உள்ள முத்துமாரியம்மன் கோயில் திருவிழாவையொட்டி திங்கள் கிழமை (12/02/2024) நடந்த ஜல்லிக்கட்டு போட்டியில் 737 காளைகள் அவிழ்க்கப்பட்டது.

200 மாடுபிடி வீரர்களும் பங்கேற்றனர். பல மாவட்டங்களில் இருந்தும் காளைகளும் காளையர்களும் வந்திருந்தனர். இதில் கந்தர்வக்கோட்டை தொகுதி கொத்தம்பட்டி கிராமத்தைச் சேர்ந்த பாஸ்கரன் என்ற இளைஞரை காளை தூக்கி பந்தாடிய நிலையில், காளை நெஞ்சில் குத்தியதால் பலியானார். மேலும் மாடுபிடி வீரர்கள் 19 பேர் உள்பட 79 பேர் காயமடைந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Next Story

'காளையா காளையர்களா? நீயா நானா?'- நடிகர் சூரி பேட்டி

Published on 17/01/2024 | Edited on 17/01/2024
'Bulls or youngsters? Are you me?'-actor Soori interviewed

இன்று (17-01-24) அலங்காநல்லூர் பகுதியில் ஜல்லிக்கட்டு போட்டி 7 மணிக்கு தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த போட்டியை விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கொடியசைத்து தொடங்கி வைத்தார். உலகப் புகழ்பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டியில் 1200 காளைகள், 700 மாடுபிடி வீரர்கள் பங்கேற்று இருக்கின்றனர்.

தற்போது வரை எட்டு சுற்றுகள் நடைபெற்றுள்ளது. இந்த போட்டியில் வெற்றி பெறும் சிறந்த மாடுபிடி வீரர் மற்றும் சிறந்த காளைக்கு முதல்வர் ஸ்டாலின் மற்றும் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சார்பில் 2 கார்கள் வழங்கப்பட உள்ளன. மேலும், பைக், தங்கம், வெள்ளி காசு், டிவி, பிரிட்ஜ், வாஷிங் மெஷின், சைக்கிள், அண்டா, பீரோ, கட்டில் போன்ற பரிசுகளும் வழங்கப்படும். மேலும், பாதுகாப்பிற்காக தென்மண்டல ஐஜி தலைமையில் 2,000க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு பார்க்க வந்த நடிகர் சூரி செய்தியாளர்களைச் சந்தித்து பேசுகையில், ''இன்று உலகத்திலேயே முக்கியமான நிகழ்வுகளில் இந்த அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டும் புகழ்பெற்றது. அதேபோல நமது உறவுகளால், நம் தமிழ், நம் பாரம்பரியத்தை, நம் கலாச்சாரத்தை காப்பாற்றும் ஒரே வீர விளையாட்டு ஜல்லிக்கட்டு.

காளையா காளையர்களா? நீயா நானா? அப்படி ஒரு வீர விளையாட்டு தான் ஜல்லிக்கட்டு. அதைத்தான் பார்க்க வந்தேன். போன வருடமும் வந்தேன். போன வருடமும் ஜல்லிக்கட்டில் என்னுடைய மாடு வந்தது. இந்த வருடமும் என்னுடைய மாடு வந்தது. தொடர்ந்து வந்து கொண்டே இருப்பேன். என்னுடைய மாடு இங்கே தொடர்ந்து அவிழ்த்து விடப்படும்'' என்றார்.