Skip to main content

இணையத்தைப் பார்த்து கள்ளநோட்டு அச்சிட்ட பலே ஆசாமிகள் கைது...!

Published on 20/12/2019 | Edited on 20/12/2019

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் வடக்கு பேட்டை பகுதியை சேர்ந்தவர் வெங்கடேஷ், தர்மபுரி மாவட்டம் அரூரை சேர்ந்தவர் குமரேஸ். இவர்கள் இருவரும் நேற்று ஈரோட்டுக்கு வந்து  ஒரு மசாஜ் சென்டரில் மசாஜ் செய்து கொண்டனர்.   பின்னர் அவர்கள் 2000 ரூபாய் நோட்டை மசாஜ் சென்டர் ஊழியர்களிடம் கொடுத்தனர். மசாஜ் செய்ய ஆயிரம் ரூபாய் போக மீதி சில்லறை இல்லையென்று, சில்லறை மாற்ற மசாஜ் ஊழியர் அருகில் உள்ள கடைக்கு சென்று ரூபாயை கொடுத்து சில்லறை கேட்டுள்ளார்.

 

 Arrested people for attempting to transfer fake money

 



2000 ரூபாய் நோட்டை பார்த்து சந்தேகம் அடைந்த கடை ஊழியர் அந்த ரூபாய் நோட்டை சோதனை செய்தபோது அது கள்ள நோட்டு என தெரியவந்தது.  அந்த நபர் மசாஜ் சென்டர் ஊழியரிடம் இது கள்ள நோட்டு என்று தெரிவித்துள்ளார். இதன்பிறகு மசாஜ் சென்டர் ஊழியர் ஈரோடு போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளார். பின்னர் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், இருவரையும் பிடித்து விசாரணை மேற்கொண்டனர். பின்னர் அவர்களை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி கோவை மத்திய சிறையில் அடைத்தனர். 

இது குறித்து போலீசார் கூறும்போது, குமரேஸ் திருப்பூர் பனியன் நிறுவனத்தில் பணியாற்றி வந்துள்ளார்.  அதிக பணம் சம்பாதிக்க வேண்டும். உல்லாசமாக, சொகுசாக வாழ வேண்டும் என்ற எண்ணத்தில்  இருந்துள்ளார்.  குமரேஸிடம் இருந்த காரை அடகு வைத்து இந்த வெங்கடேஷ் பணம் வாங்கி கொடுத்துள்ளார். இருவருக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது.  சொகுசு வாழ்க்கை வாழ பணம் சம்பாதிக்க என்ன வழி என்று இருவரும் இணையதளத்தில் தேடி உள்ளனர். அதில் கள்ள நோட்டு அச்சடித்து புழக்கத்தில் விடுவது குறித்த சில தகவல்கள் கிடைத்தது.

இதன் பிறகு அவர்கள் இருவரும் அதி நவீன தொழில்நுட்பம் கொண்ட ஒரு பிரிண்டர் எந்திரத்தை வாங்கியிருக்கிறார்கள். பின்னர் அந்த எந்திரத்தில் பணத்தை அச்சிட்டுள்ளனர். அந்த கள்ள நோட்டை புழக்கத்தில் விட்டுள்ளனர். கடந்த மூன்று மாதத்திற்கும் மேலாக பிரிண்டரை உபயோகப் படுத்தி கள்ள நோட்டு அச்சிட்டு வந்துள்ளனர்.  ஈரோடு மட்டுமன்றி பல்வேறு மாவட்டங்களில் அந்த பணத்தை புழக்கத்தில் விட்டுள்ளார்கள்.

இவர்கள் பிரிண்டெடுக்கும் கள்ள நோட்டுகள் அப்படியே ஒரிஜினல் ரூபாய் நோட்டு போன்று இருந்ததால் இவர்களுக்கு   வசதியாக போனது இரண்டு ஆயிரம் ரூபாய் நோட்டு, 200 ரூபாய் நோட்டு  அச்சு அசலாக அப்படியே இருந்துள்ளது. லட்சக்கணக்கான ரூபாய் கள்ள நோட்டுக்கள் இவர்கள் அச்சிட்டு மளிகை கடை முதல் சலூன் கடை வரை மாற்றியுள்ளனர். இவர்களைப் போல ஏராளமான கள்ள நோட்டு பேர்வழிகள் இப்போது அதிகமாகி விட்டனர்" என்றனர்.

 

சார்ந்த செய்திகள்

Next Story

திருமணத்தை மீறிய உறவு; பெண்ணை பெட்ரோல் ஊற்றி எரித்த நடத்துநர்

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
Conductor who doused woman with petrol and her in Krishnagiri

கிருஷ்ணகிரியைச் சேர்ந்தவர் திருப்பதி. இவரது மனைவி சிவகாமி(பெயர் மாற்றப்பட்டுள்ளது). இவருக்கும் கிருஷ்ணகிரி பாத்திமா நகரைச் சேர்ந்த அரசு பேருந்து நடத்துனர் மாதவன் என்பவருக்கும் கடந்த ஐந்து ஆண்டுகளாக திருமணத்தை மீறிய உறவு இருந்துள்ளது. இந்த நிலையில் மாதவனுக்கு வேறு சில பெண்களுடன் தொடர்பு  இருப்பதாக கருதிய லட்சுமி மாதவன் உடனான உறவை துண்டித்துள்ளார்.

இதனைத் தொடர்ந்து மாதவன் சிவகாமிக்கு தொடர்ந்து தொல்லை கொடுத்து வந்துள்ளார். இந்த நிலையில் நேற்று இரவு வீட்டிற்கு வெளியே சென்று லட்சுமியைப் பின் தொடர்ந்து வந்த மாதவன் சிவகாமியிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். மேலும் தன்னுடன் பேசுமாறு வற்புறுத்தியுள்ளார். ஆனால்   இதற்குச் சிவகாமி மறுப்பு தெரிவிக்க, ஆத்திரமடைந்த மாதவன் சிவகாமி மீது பெட்ரோலை ஊற்றி உயிரோடு எரித்துள்ளார். பின்னர் வீட்டின் அருகே உள்ள முட்புதிரில் தீயில் கருகி நிலையில் உயிருக்கு போராடி கொண்டிருந்த சிவகாமியைப் பார்த்த அக்கம் பக்கத்தினர் உடனடியாக அவரை மீட்டு கிருஷ்ணகிரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனர்.

இந்த நிலையில் இது குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் சிவகாமிடம் விசாரணை செய்ததில் மேற்கண்ட விவரங்கள் தெரியவந்துள்ளது. இதை அடுத்து மாதவன் மீது வழக்கு பதிவு செய்த போலீசார் அவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்

Next Story

தீ விபத்து; பலி எண்ணிக்கை 6 ஆக உயர்வு!

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
incident for hotel near Patna Railway Station Bihar

பீகார் மாநிலம் பாட்னா ரயில் நிலையம் அருகே உள்ள ஹோட்டலில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு படை வீரர்கள் தீயை அணைக்கும் பணியிலும், மீட்புப் பணியிலும் ஈடுபட்டனர். இந்த தீ விபத்தில் சிக்கிய 12 பேர் மீட்கப்பட்டு சிகிச்சைக்காக முதற்கட்டமாக அனுப்பி வைக்கப்பட்டனர். இச்சம்பவம் பாட்னாவில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி இருந்தது. இந்த தீ விபத்தில் சிக்கி 3 பேர் உயிரிழந்ததாகவும், 7 பேர் பலத்த காயமடைந்துள்ளனர் என பாட்னா போலீஸ் எஸ்.எஸ்.பி. ராஜீவ் மிஸ்ரா தெரிவித்திருந்தார்.

இது குறித்து பாட்னா தீயணைப்புத் துறை போலீஸ் டிஜி, ஷோபா ஓஹட்கர் கூறுகையில், “தீயணைப்புத் அணைக்கும் மேற்கொண்டோம். இதுபோன்ற நெரிசலான பகுதிகளில் விபத்துகளை தடுக்க தொடர்ந்து சிறப்பு கவனம் செலுத்தி வருகிறோம். இதுபோன்ற சம்பவங்களைத் தடுக்க நாங்கள் தொடர்ந்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறோம். சிலிண்டர் வெடித்ததால் இந்த தீ விபத்து நடந்தது. இருப்பினும் தற்போது தீ முற்றிலும் அணைக்கப்பட்டது” எனத் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் பாட்னா சட்டம் மற்றும் ஒழுங்கு போலீஸ் டிஎஸ்பி கிருஷ்ணா முராரி கூறுகையில், “இந்த தீ விபத்தில் 5 முதல் 6 பேர் வரை இறந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சுமார் 30க்கும் மேற்பட்டோர் மீட்கப்பட்டுள்ளனர். அதில் பலத்த காயம் அடைந்த 7 பேர் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்” எனத் தெரிவித்தார்.