Skip to main content

கோட்டாச்சியர் அலுவலகம் வேண்டி எம்.எல்.ஏ தலைமையில் கோரிக்கை மனு!

Published on 28/11/2019 | Edited on 28/11/2019

வேலூர் மாவட்டம் மூன்றாக பிரிக்கப்பட்டுள்ளது. இதற்கான தொடக்க விழா நவம்பர் 28ஆம் தேதி நடைபெறுகிறது. தொடக்க விழாவுக்கு தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி வருகிறார். இந்நிலையில் ஆம்பூர் சட்டமன்ற தொகுதி எம்.எல்.ஏ வில்வநாதன் ( திமுக ) தலைமையில் நவம்பர் 26ஆம் தேதி ஒரு ஆலோசனை கூட்டத்தை ஆம்பூர் அனைத்து கட்சி பிரமுகர்கள், பொதுநல அமைப்புகள் நடத்தியுள்ளன.

 

MLAVilvanatan



அதில், ஆம்பூரை ஒரு கோட்டமாக அறிவித்து இங்கு கோட்டாச்சியர் அலுவலகம் அமைக்க வேண்டும். ஏன் எனில் மத்திய மாநில அரசுகளுக்கு அதிக வரி வருவாய் தரும் பகுதியாக ஆம்பூர் தாலுகா உள்ளது. அதோடு, கோட்டாச்சியர் அலுவலகம் அமைக்க தேவையான நிலம் 20 ஏக்கர் உள்ளது. டான்சி நிறுவனத்தினர் பயன்படுத்தாமல் வைத்துள்ள 20 ஏக்கரில் கோட்டாச்சியர் அலுவலகம் மற்றும் அவர்களுக்கான குடியிருப்புகள் கட்டலாம்.

வாணியம்பாடி இ.எஸ்.ஐ மருத்துவமனையை தரம் உயர்த்தி உள்ளதைப் போல, ஆம்பூர் இ.எஸ்.ஐ மருத்துவமனையின் தரத்தையும் உயர்த்த வேண்டும். இந்த மருத்துவமனையில் மட்டும் 37 ஆயிரம் தொழிலாளர்கள் பதிவு செய்துவைத்துள்ளனர். இதனால் ஒரு லட்சம் பேர் பயன்பெறுகிறார்கள். இதனையும் இந்த நேரத்தில் கவனத்தில் கொள்ள வேண்டும்.

அதேபோல், ஆம்பூர் தாலுகாவில் இதுவரை இருந்த பல கிராமங்கள், மாவட்ட எல்லை பிரிப்பில் திருப்பத்தூர் மாவட்டத்திற்குள் வருவதற்கு பதில், வேலூர் மாவட்டத்தோடு இணைக்கப்பட்டுள்ளது. அந்த கிராமங்கள் திருப்பத்தூர் மாவட்டத்தோடு இணைந்திருந்தால் மட்டும்மே அக்கிராம மக்களுக்கு பயனுள்ளதாக இருக்கும். வேலூர் மாவட்டத்தோடு இணைக்கும் பட்சத்தில் வேலூர்க்கு பயணமாகி நீண்ட ஆளைச்சலை ஏற்படுத்தும்.

இந்த மூன்று கோரிக்கைகளை ஆம்பூர் மக்கள், பொதுநல அமைப்புகள், அனைத்து அரசியல் கட்சிகளின் சார்பாக வைக்கிறோம். இதனை அரசின் கவனத்துக்கு கொண்டு சென்று இந்த கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும்மென முடிவு செய்தனர். அந்த முடிவினை தொடர்ந்து நவம்பர் 27ஆம் தேதி காலை வேலூர் மாவட்ட ஆட்சியர் சண்முகசுந்தரத்தை ஆம்பூர் எம்.எல்.ஏ வில்வநாதன் தலைமையில் சென்று சந்தித்து, தங்களது கோரிக்கை கடிதத்தை தந்துவிட்டு வந்துள்ளனர்.

சார்ந்த செய்திகள்

Next Story

'அவராலே பாதி தண்ணீர் புதுக்கோட்டைக்கு வராமல் போகிறது'-அமைச்சர் ரகுபதி குற்றச்சாட்டு

Published on 28/04/2024 | Edited on 28/04/2024
nn


தமிழ்நாடு முழுவதும் சுட்டெரிக்கும் வெயிலின் தாக்கம் நாளுக்குநாள் அதிகரித்து வரும் நிலையில் அதிமுக, திமுக என அனைத்துக் கட்சிகளும் ஆங்காங்கே தண்ணீர் பந்தல்கள் அமைத்து தாகம் தணித்து வருகின்றனர். அதேபோல், புதுக்கோட்டை திமுக அலுவலகத்தில் திமுக மருத்துவ அணி சார்பில் இன்று ஞாயிற்றுக்கிழமை கோடைகால தண்ணீர் பந்தலை சட்டத்துறை அமைச்சர் ரகுபதி, மருத்துவ பணி மாவட்ட செயலாளர் முத்து கருப்பன் ஆகியோர் திறந்து வைத்து பொதுமக்களுக்கு குளிர்பானங்களை வழங்கினார்கள்.

அதன் பிறகு சட்டத்துறை அமைச்சர் ரகுபதி செய்தியாளர்களை சந்தித்த பேசும்போது, ''குஜராத் என்பது போதைப் பொருட்களின் நடமாட்டத்திற்கான மாநிலம். அங்குள்ள துறைமுகத்திற்கு தான் வெளிநாடுகளில் இருந்து இந்தியாவிற்கு போதைப் பொருட்கள் வருகிறது. பிறகு பல மாநிலங்களுக்கு கொண்டு செல்லப்படுகிறது. குஜராத்தில் போதைப் பொருட்களின் நடமாட்டம் அதிகமாக உள்ளது என்பது அதிசயமான செயல் அல்ல.

மத்திய அரசின் நிதி ஒதுக்கீடு யானை பசிக்கு சோலப் பொறி போல என எங்கள் தலைவர் கூறியுள்ளார். அது எந்த அளவு பத்தும் என்பதை நீங்களே யோசித்துக் கொள்ளுங்கள். இருந்த போதிலும் எங்களுக்கு தேவையான நிதியை தரச் சொல்லி வலியுறுத்துவோம். விஜயபாஸ்கர் அதிமுக ஆட்சி காலத்தில் குடிநீர் பிரச்சினைகளில் தீர்வு காணாமல் கோட்டை விட்டுவிட்டார். புதுக்கோட்டைக்கு வரும் காவிரி நீரை வழிமறித்து அவரது கல்லூரிக்கும், அவரது வயலுக்கும் காவிரி நீரை கொண்டு செல்கிறார். வயலுக்கு காவிரித் தண்ணீரை பயன்படுத்தக்கூடிய ஒரே நபர் விஜயபாஸ்கர் மட்டும்தான். இன்னும் ஒரு மணி நேரத்திற்குள் அங்கு சென்றால் அதை பார்க்கலாம். அது குறித்து நடவடிக்கை எடுக்க சென்றால் போராட்டம் நடத்துவார்கள். அவராலே பாதி தண்ணீர் புதுக்கோட்டைக்கு வராமல் போகிறது.ஆனால் இதை அனுமதிக்க முடியாது. விரைவில் குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகள் அந்த பிரச்சனை குறித்து நடவடிக்கை எடுப்பார்கள்'' என்றார்.

இந்த பேட்டி தொலைக்காட்சிகளில் வெளியான நிலையில், அமைச்சர் ரகுபதி போகிற போக்கில் ஏதேதோ பேசி விட்டு போகிறார். பல வருடமாக குடிநீர் திருட்டு நடப்பதாக இருந்தால் இவர்கள் ஆட்சிக்கு வந்த பிறகு கூட ஏன் தடுக்கவில்லை, நடவடிக்கை எடுக்கவில்லை. ஊராட்சி, பேரூராட்சி, நகராட்சி, மாநகராட்சிகளில் கூட ஒரு வீட்டிற்கு வரும் தண்ணீரை மோட்டார் வைத்து உறிஞ்சினால் உடனே நடவடிக்கை எடுத்து மோட்டாரை பறிமுதல் செய்து அபராதம் விதிக்கப்படுகிறது. ஆனால் எங்கள் முன்னாள் அமைச்சர் காவிரி கூட்டுக் குடிநீரை தங்கள் கல்லூரிக்கும், தோட்டத்திற்கும் எடுக்கிறார் என்றால் இத்தனை ஆண்டுகளாக ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை. அப்படி இருந்தால் நடவடிக்கை எடுக்க வேண்டியது தானே? தண்ணீர் திருட்டு நடந்தால் அதிகாரிகளை அனுப்பி நடவடிக்கை எடுக்க என்ன தயக்கம்? ஆதாரமற்ற குற்றச்சாட்டை கூறியுள்ளார் என்கின்றனர் அதிமுகவினர்.

Next Story

தலைமைத் தேர்தல் அதிகாரிக்கு எம்.எல்.ஏ.க்கள் கடிதம்!

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
MLAs letter to Chief Electoral Officer Satyapratha Sahu

உலகின் மிகப்பெரிய ஜனநாயக திருவிழாவான இந்திய நாட்டின் 18ஆவது நாடாளுமன்ற தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக கடந்த 19 ஆம் தேதி (19.04.2024) தொடங்கி வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. முதற்கட்டமாக தமிழகம் உள்ளிட்ட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு வாக்குப்பதிவு நடைபெற்றது. இதனையடுத்து தமிழ்நாட்டில் நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் 69.72 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளதாக தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வமாக கடந்த 21 ஆம் தேதி (21.04.2024) அறிவித்திருந்தது. அதில் அதிகபட்சமாக தருமபுரி தொகுதியில் 81.20 சதவீத வாக்குகளும், குறைந்தபட்சமாக மத்திய சென்னை தொகுதியில் 53.96 சதவீத வாக்குகளும் பதிவாகியுள்ளன எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது.

அதே சமயம் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்ததால் வாக்காளர்களுக்குப் பணம் மற்றும் பரிசுப் பொருட்கள் கொடுப்பதைத் தடுக்கும் வகையில் தேர்தல் பறக்கும் படையினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். மேலும் தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டுள்ள அமைச்சர்கள் மற்றும் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களின் வாகனங்களை தேர்தல் பறக்கும் படையினர் தீவிரமாகச் சோதனை செய்தனர். இதன் ஒருபகுதியாக அரசியல் கட்சி தலைவர்களின் சிலைகள், பெயர்பலகைகள், எம்.எல்.ஏ. மற்றும் எம்.பி.க்களின் அலுவலகங்கள் சீல் வைக்கப்பட்டன.

இந்நிலையில் எம்.எல்.ஏ. அலுவலகங்களை திறக்க அனுமதி கோரி தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகுவிற்கு எம்.எல்ஏ.க்கள் கடிதம் எழுதியுள்ளனர். அந்த கடிதத்தில், “தேர்தல் முடிந்து ஒரு வாரம் ஆகிவிட்டதால் மக்கள் பணியாற்ற எம்.எல்.ஏ அலுவலகங்களை திறக்க வேண்டும்” எனத் தெரிவித்துள்ளனர். இது குறித்து தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு விரைவில் முடிவெடுப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.