Skip to main content

மாஜி அமைச்சரின் குருபூசை நாளில் ஆர்ப்பாட்டமா? தேதியை மாற்ற ர.ரக்கள் கோரிக்கை

Published on 05/10/2023 | Edited on 05/10/2023

 

AIADMK  members demand to change Arpattam date

 

புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அதிமுக முன்னாள் சட்ட மன்ற உறுப்பினரும், மாஜி அமைச்சருமான வடகாடு அ.வெங்கடாசலம் கடந்த 2010 ம் ஆண்டு படுகொலை செய்யப்பட்டார். அதிமுகவில் ஆளுமையாக இருந்த மாஜி அமைச்சர் வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தால் தமிழ்நாடு முழுவதும் பரபரப்பும் பதற்றமும் ஏற்பட்டிருந்தது. புதுக்கோட்டை மாவட்டத்தில் சில நாட்கள் வரை போக்குவரத்து முடங்கியது. 

 

அதன் பிறகு ஒவ்வொரு ஆண்டும் மாஜி அமைச்சர் அ.வெங்கடாசலம் உடல் அடக்கம் செய்யப்பட்ட அக்டோபர் 7 ந் தேதி குருபூஜை நாளாக அனுசரிக்கப்பட்டு வருகிறது. இந்த நாளில் அன்னதானம், ரத்ததானம் போன்ற நிகழ்வுகளும் நடத்தப்படுவதுடன் கட்சி பாகுபாடின்றி அனைத்துக் கட்சியினரும் வந்து மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தி செல்கின்றனர். ஒவ்வொரு ஆண்டும் அதிமுக முன்னாள் அமைச்சர் விராலிமலை விஜயபாஸ்கர் எம்.எல்.ஏ உள்பட அதிமுக நிர்வாகிகள் பலரும் தவறாமல் கலந்து கொண்டு மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்திச் செல்வார்கள். மேலும் தமிழ்நாடு முழுவதும் இருந்த பல ஆயிரக்கணக்கான இளைஞர்கள் வாகனங்களில் வந்து குருபூசையில் பங்கேற்று செல்வர்.

 

அதே போல இந்த ஆண்டும் 7 ஆம் தேதி சனிக்கிழமை ஏராளமானவர்கள் வருவார்கள் என்று எதிர்பார்த்துள்ளனர். தேர்தல் வர உள்ளதால் இந்த ஆண்டு அரசியல் கட்சி நிர்வாகிகள் மேலும் கூடுதலாக வர உள்ளதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் தான் கறம்பக்குடி அரசு மருத்துவமனையில் போதிய மருத்துவர்கள், மருத்துவப் பணியாளர்கள், மருத்துவ கட்டமைப்புகள் இல்லை அதனை சரி செய்ய வேண்டும் என்று பல்வேறு அமைப்புகளும் தொடர் போராட்டங்களை முன்னெடுத்துள்ள நிலையில் அதிமுக வடக்கு மாவட்டம் சார்பில் 7 ந் தேதி மதியம் மா.செ, மாஜி அமைச்சர் விஜயபாஸ்கர் எம்.எல்.ஏ தலைமையில் ஆர்ப்பாட்டம் நடத்துவதாக அதிமுக தலைமை அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

 

இந்த அறிவிப்பைப் பார்த்த புதுக்கோட்டை மாவட்ட ர.ரக்கள், மாஜி அமைச்சர் வெங்கடாசலம் குருபூசை நாளில் கறம்பக்குடி ஆர்ப்பாட்டம் நடத்துவதால் இரு நிகழ்வுகளிலும் கட்சிக்காரர்கள் பங்கேற்பது சிரமமாக இருக்கும். அதனால் ஆர்ப்பாட்டத் தேதியை மாற்றி அறிவிக்க வேண்டும் என்று எடப்பாடிக்கு பலர் கடிதம் எழுதியுள்ளனர். மேலும் அதிமுக வில் வெங்கடாசலம் பலமாக இருந்து மறைந்துள்ளார். அவரது நினைவிடத்தில் முதலமைச்சராக இருந்த போது எடப்பாடியாரும் அஞ்சலி செலுத்தியுள்ளீர்கள். இப்படி ஒரு மதிக்கத்தக்க தலைவரின் குருபூசை நாளில் ஆர்ப்பாட்டம் நடத்தும் தேதியை மாற்றி அமைத்தால் இரு நிகழ்வுகளில் அதிமுக வினர் ஏராளம் கலந்து கொள்வார்கள் என்று அந்த மனுக்களில் குறிப்பிட்டுள்ளனர். ர.ர க்களின் இந்த கோரிக்கை மனுக்களுக்கு அதிமுக தலைமை மதிப்பு கொடுக்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது.

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

நீர் மோர் பந்தல் திறப்பதில் கோஷ்டி பூசல்;  மாறி மாறி புகாரளிக்கும் அதிமுக!

Published on 27/04/2024 | Edited on 27/04/2024
Group fight in opening of Neer Mor Pandal; AIADMK reports alternately

அண்மையில் நடைபெற்ற அதிமுக நிர்வாகிகள் கூட்டத்தில் கலந்துகொண்ட எடப்பாடி பழனிசாமி, கோடைகாலம் என்பதால் வெப்பத்தை தணிப்பதற்காக நீர் மோர் பந்தல் அமைக்க வேண்டும் என உத்தரவிட்டிருந்தார். அதன்படி அதிமுகவினர் பல இடங்களிலும் நீர் மோர் பந்தல்களை அமைத்து வருகின்றனர். இந்நிலையில் கடலூரில் நீர் மோர் பந்தல் அமைப்பதில் இரு தரப்பினருக்கிடையே ஏற்பட்ட மோதல் போக்கு  காரணமாக மாறி மாறி புகார் கொடுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

கடலூர் மாவட்டம் திருப்பாதிரிபுலியூர், மஞ்சக்குப்பம் மற்றும் முதுநகர் பகுதிகளில் அதிமுக மாநில எம்ஜிஆர் இளைஞரணி துணைச் செயலாளர் கார்த்திகேயன் தலைமையில் அவருடைய ஆதரவாளர்கள் நீர் மோர் பந்தல் திறக்க ஏற்பாடு செய்துள்ளனர். இந்நிலையில் முன்னாள் தொழில்துறை அமைச்சரும், அதிமுக மாவட்ட செயலாளருமான எம்.சி.சம்பத், அனுமதியின்றி நீர்மோர் பந்தல் அமைக்க அனுமதி தந்தால் சட்ட ஒழுங்கு பிரச்சனை ஏற்படும் என காவல்துறையில் வாய்மொழி புகார் அளித்ததாகவும், அதிமுக சார்பில் மாவட்டச் செயலாளர்கள் யாரை பரிந்துரை செய்கிறார்களோ அவர்கள் தான் நீர் மோர் பந்தலை திறக்க வேண்டும் எனவும் கூறப்பட்டது.

இந்நிலையில் அனுமதியின்றி நீர் மோர் பந்தல் அமைப்பதற்காக செய்யப்பட்ட அனைத்து ஏற்பாடுகளையும் காவல்துறையினர் அப்புறப்படுத்தினர். அதேநேரம் நீர் மோர் பந்தல் அமைக்க அனுமதிகோரி அதிமுக மாநில எம்ஜிஆர் அணி இளைஞரணி செயலாளர் கார்த்திகேயன் அவருடைய ஆதரவாளர்களுடன் கடலூர் கோட்டாட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தார். நீர் மோர் பந்தல் அமைக்க அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி எங்களை அறிவுறுத்தி உள்ளார். அதன்படி நாங்கள் அதை செய்து வருகிறோம் என அனுமதி கேட்டு மனு அளிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு மனு கொடுக்கப்பட்ட சிறிது நேரத்திலேயே அதிமுக மாவட்ட அவைத்தலைவர் குமார் தலைமையில் கடலூர் மாநகராட்சிக்குட்பட்ட பல பகுதிகளில் நீர் மோர் பந்தல் அமைக்க அனுமதி கேட்டு மனு அளிக்கப்பட்டுள்ளது. அந்த மனுவில், அதிமுகவின் மாவட்டச் செயலாளர் எம்.சி.சம்பத் யாரை அனுமதிக்கிறாரோ அவர்களுக்கு மட்டும்தான் நீர் மோர் பந்தல் அமைக்க அனுமதி அளிக்க வேண்டும். இல்லை என்றால் சட்ட ஒழுங்கு பிரச்சனைகள் ஏற்பட வாய்ப்புள்ளது என தெரிவித்துள்ளனர்.

இப்படி கடலூரில் நீர் மோர் பந்தல் அமைப்பு தொடர்பாக அதிமுகவினர் இரு கோஷ்டியாக மாறி மாறி மனு அளித்துள்ளது அங்கு பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

Next Story

சங்கம்விடுதி குடிநீர் தொட்டி விவகாரம்! அதிகாரிகள் ஆய்வு!

Published on 27/04/2024 | Edited on 27/04/2024
Sangamviduthi drinking water tank issue officials investigation

புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட சங்கம்விடுதி ஊராட்சியில் உள்ள குருவாண்டான் தெருவில் சுமார் 100 குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இந்தப் பகுதி பொதுமக்களின் பயன்பாட்டிற்காக அதே பகுதியில் ஆழ்குழாய் கிணறு அமைத்து மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி மூலம் குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது. பொதுமக்களுக்கு மட்டுமின்றி அப்பகுதியில் உள்ள அங்கன்வாடி மையத்திற்கும் இந்த தண்ணீரே வழங்கப்படுகிறது. ஒரே தொட்டியில் இருந்தே அனைத்து சமுதாய மக்களுக்கும் குடிநீர் வழங்கப்படுகிறது. பாகுபாடற்ற ஒற்றுமையான கிராமமாக உள்ளது.

இந்த நிலையில் சில நாட்களுக்கு முன்பு காலையில் குழாயில் தண்ணீர் தூசியாக வந்துள்ளதையடுத்து அப்பகுதி இளைஞர்கள் தண்ணீர் தொட்டியில் ஏறிப் பார்த்துவிட்டு தண்ணீரை வெளியேற்றி பார்த்துள்ளனர். உள்ளே பாசி போல கருப்பாக ஆங்காங்கே கிடந்துள்ளது. அவற்றை சேகரித்து வெளியே எடுத்து பார்த்த போது கூடியிருந்தவர்கள் ஒவ்வொருவரும் மாட்டுச் சாணம் என்றும், தொட்டி சரியாக கழுவாததால் சேர்ந்துள்ள பாசி என்றும் கூறினர்.

Sangamviduthi drinking water tank issue officials investigation

இந்த தகவல் அறிந்து வருவாய்த் துறை, ஊரகவளர்ச்சித்துறை, காவல்துறை, சுகாதாரத்துறை அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு வந்து ஆய்வு செய்து விசாரனை செய்தனர். தொடர்ந்து தண்ணீரையும், தண்ணீர் தொட்டியில்இருந்து சேகரிக்கப்பட்ட கழிவுகளையும் ஆய்வுக்காக எடுத்துச் சென்றதுடன் தற்காலிகமாக சம்மந்தப்பட்ட தண்ணீர் தொட்டியில் இருந்து குடிநீர் கொடுப்பதை நிறுத்திவிட்டு டேங்கர் லாரிகள் மூலம் தண்ணீர் வழங்க ஏற்பாடு செய்தனர். சேகரிக்கப்பட்ட மாதிரிகள் ஆய்வகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

இதனையடுத்து அறந்தாங்கி டிடி நமச்சிவாயம் தலைமையில் கடந்த 2 நாட்களாக அந்த ஊரில் மருத்துவ முகாம் நடந்து வருகிறது. மேலும் அதே பகுதியில் உள்ள காவிரி குடிநீர் தொட்டியில் இருந்து தண்ணீர் வழங்க அதிகாரிகள் ஆய்வு செய்துள்ளனர். இந்த நிலையில் அங்குள்ள சிலர் கூறும் போது, தண்ணீர் தொட்டி சரிவர சுத்தம் செய்யாததால் தேங்கிய பாசி கரைந்து குழாய்களில் வந்திருக்கலாம். மேலும் இந்த ஒரே தொட்டியில் இருந்தே அனைத்து சமூதாயத்தவர்களுக்கும் தண்ணீர் போவதால் வேறு கழிவுகளை கலந்திருக்க அச்சப்படுவார்கள். ஆய்வு முடிவுகள் வந்த பிறகே உண்மை நிலை தெரியும். அதற்குள் யாரும் சமுதாய ரீதியாக அணுக வேண்டாம் என்கின்றனர்.

Sangamviduthi drinking water tank issue officials investigation

தண்ணீர் தொட்டியை ஆய்வு செய்த டிடி நமச்சிவாயம்.. கழிவு இருந்ததாக மக்கள் சொன்னார்கள் கழிவுகள், தண்ணீர் ஆய்விற்கு போய் உள்ளது. ஏதேனும் கலந்த தண்ணீரை குடித்திருந்தால் வாந்தி, வயிற்றுப்போக்கு வந்திருக்கும். இதுவரை இந்த கிராமத்தில் அப்படி எந்த பாதிப்பும் இல்லை. மேலும் தண்ணீர் தொட்டியில் மீண்டும் சுத்தம் செய்து தண்ணீர் ஏற்றி குளோரின் செய்யப்பட்டுள்ளது. அதை ஆய்வு செய்யும் போது கலப்படம் இருந்தால் தெரியும். இரண்டு நாள் மருத்துவ முகாமில் நேற்று 40 பேரும் இன்று 12 பேருமே வந்துள்ளனர். அவர்களும் சாதாரணமாக வந்தவர்கள் தான். தொடர்ந்து ஆய்வுகள் நடக்கிறது என்றார். இந்த நிலையில் போலீசார் வஜ்ரா வாகனத்துடன் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.