Skip to main content

மக்கள் அச்சத்தை போக்க முயற்சிப்பேன் என ரஜினி கூறினார்- காஜா மொய்னுதீன் பாகவி பேட்டி!

Published on 01/03/2020 | Edited on 01/03/2020

சென்னை போயஸ் கார்டனில் உள்ள இல்லத்தில் நடிகர் ரஜினிகாந்தை தமிழ்நாடு ஜமாஅத்துல் உலமா சபை நிர்வாகிகள் சந்தித்து பேசினர். குடியுரிமை திருத்தச் சட்டம் குறித்து இஸ்லாமிய மதகுருமார்கள் ரஜினியிடம் விரிவாக விளக்கினர்.



இந்த சந்திப்பு சுமார் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக நீடித்தது. ரஜினி உடனான சந்திப்புக்கு பின் செய்தியாளர்களிடம் பேசிய தமிழ்நாடு ஜமாஅத்துல் உலமா சபை தலைவர் காஜா மொய்னுதீன் பாகவி, "மக்களின் அச்சத்தை போக்க அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்வேன் என ரஜினி எங்களிடம் கூறினார்". 

 

சார்ந்த செய்திகள்