Skip to main content

80 ஆயிரம் வழக்கறிஞர்கள் நாளை நீதிமன்ற புறக்கணிப்பு போராட்டம்

Published on 09/09/2019 | Edited on 09/09/2019

 

 

தமிழகம் மற்றும் புதுச்சேரி வழக்கறிஞர் சங்கங்களின் கூட்டுக்குழு தலைவர் நந்தகுமார் கோவையில் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில்,  ‘’ சென்னை ஐகோர்ட் தலைமை நீதிபதி வி.கே.தஹில் ரமானியை,  மேகாலயா ஐகோர்ட்டுக்கு இடமாற்றம் செய்து சுப்ரீம் கோர்ட் பரிந்துரை செய்துள்ளதை எதிர்க்கிறோம்.  

 

 

நீதிபதி தஹில் ரமானியை சென்னையிலேயே பணியாற்ற உத்தரவிட வலியுறுத்தி தமிழகம், புதுச்சேரி நீதிமன்றங்களில் பணியாற்றும் வழக்கறிஞர்கள் நாளை(10.9.2019) நீதிமன்ற புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபடுவார்கள்.  இந்த போராட்டத்தில் 80 ஆயிரம் வழக்கறிஞர்கள் பங்கேற்கிறார்கள்.’’என்று தெரிவித்துள்ளார்.

 

a

 

சார்ந்த செய்திகள்