Skip to main content

கோவையில் பிரபல நிறுவனங்களின் ஸ்டிக்கர் ஒட்டப்பட்ட கலப்பட நெய்!!அதிகாரிகள் அதிரடி!!

Published on 23/11/2018 | Edited on 23/11/2018

கோவையில் இரண்டு இடங்களில் கலப்பட நெய் தயாரித்து பிரபல நிறுவனங்களின் பெயரில் ஸ்டிக்கர் ஒட்டப்பட்டு விற்பனை செய்த  நபர்கள் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர் உணவுத்துறை அதிகாரிகள்.

 

ghee

 

கோவையில் சாயிபாபா காலனியில் கலப்பட நெய்கள் தயாரிக்கப்பட்டு பிரபல பெயர்களில் ஸ்டிக்கர் ஒட்டப்பட்டு விற்பனை செய்து வருவதாக எழுந்த புகாரின் அடிப்படையில் உணவு பாதுகாப்பு துறை அதிகாரி விஜயலலிதாம்பிகை தலைமையில் அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர்.

 

ghee

 

இந்த சோதனையில் பொன்ராஜ் என்பவரின் கிடங்கில் ஆய்வு செய்தபோது அங்கு கலப்படம் செய்யப்பட்ட நெய்கள் டின், டின்னாக அடிக்கிவைக்கப்பட்டிருந்து. மேலும் அதன் அருகியிலே பல பிரபல நெய் தயாரிப்பு நிறுவனங்களின் லேபிள் மற்றும் ஸ்டிக்கர்கள் இருப்பது கண்டு அதிர்ந்த அதிகாரிகள். 620 கிலோ கலப்பட நெய் மற்றும் போலி ஸ்டிக்கர்கள் போன்றவன்றை  பறிமுதல் செய்தனர்.

 

ghee

 

அதேபோல் கோவை கே.கே.நகரில் மணி என்பவரது வீட்டிலும் நடத்தப்பட்ட சோதனையிலும் போலி கலப்பட நெய்யை உணவுத்துறை அதிகாரிகள் கைப்பற்றினர். மேலும் இந்த இருவர் மீதும் வழக்கு தொடர்ந்து நடவடிக்கை எடுக்க இருப்பதாக தெரிவித்தனர்.

 

  

சார்ந்த செய்திகள்