Skip to main content

அஜித் படத்தை பார்க்க விடுமுறை கொடுங்க...மாணவனின் லீவ் லெட்டர்!

Published on 07/08/2019 | Edited on 07/08/2019

"அம்மாவுக்கு உடம்புக்கு சரியில்ல, எனக்கு உடம்புக்கு சரியல்ல," அதனால் எனக்கு ஒரு நாள் விடுப்பு வேண்டும் என்று விடுப்பு கடிதம் கொடுக்கும் மாணவ சமுதாயத்தை தான் பார்த்திருப்போம்.  ஆனால் நாகையில் உள்ள தனியார் கல்லூரி மாணவர் ஒருவர் கல்லூரி துறைத்தலைவருக்கு எழுதிய விடுப்பு கடிதத்தில் "நான் நாளைய தினம் நடிகர் அஜித் குமார் நடித்து வெளியாக உள்ள நேர்கொண்ட பார்வை படத்தைக் காண செல்வதால் தனக்கு விடுமுறை அளிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்," என எழுதி கொடுத்திருக்கிறார்.

 

ACTOR AJITHKUMAR FILM NERKONDA PAARVAI FILM I WACHING TODAY PLEASE GIVE LEAVE STUDENT LEAVE LETTER

 

அந்த கடிதத்தை பார்த்து கோபமடைந்த துறைத்தலைவர் கடிதத்தை நிராகரித்து, அக்கடிதத்திலேயே அந்த மாணவனிடம் நாளை கல்லூரி வரும் போது பெற்றோரை அழைத்துக்கொண்டு வர வேண்டும் என குறிப்பிட்டுள்ளார். இந்த கடிதம் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. ஒரு காலத்தில் பல்வேறு காரணங்களுக்காக விடுப்பு எடுத்த நிலை மாறி திரைப்படம் பார்க்க செல்வதற்கே விடுமுறை கடிதம் எழுதிக்கொடுக்கும், இக்கால இளைஞர்களின் நிலையைக் கண்டு கல்வியாளர்கள், பெற்றோர்கள், சமூக ஆர்வலர்கள் புலம்புகின்றனர். 

 

ACTOR AJITHKUMAR FILM NERKONDA PAARVAI FILM I WACHING TODAY PLEASE GIVE LEAVE STUDENT LEAVE LETTER

 


தமிழ் சினிமா திரையுலகில் முக்கிய நடிகராகவும், இளைய தலைமுறை ரசிகர்கள், வயதானவர்கள் என அதிக ரசிகர்களை கொண்டிருப்பவர் நடிகர் அஜித்குமார். அவர் நடிப்பில் உருவாகியுள்ள "நேர்கொண்ட பார்வை" திரைப்படம் இன்று (08/08/2019) உலகெங்கும் வெளியாக உள்ளது. இந்த திரைப்படத்தை காண அஜித் ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர். தமிழகத்தில் உள்ள பல்வேறு திரையரங்கங்களில் டிக்கெட்களை எடுப்பதற்கு கல்லூரி மாணவர்களும், இளைஞர்களும் குவிந்து வருகின்றனர்.




 

சார்ந்த செய்திகள்

Next Story

செஞ்சுரிக்கு மத்தியில் சிலிர்க்க வைத்த மழை

Published on 13/04/2024 | Edited on 13/04/2024
summer rain in madurai

பல இடங்களில் வெயில் செஞ்சுரி அடித்து வரும் நிலையில் ஒரு சில இடங்களில் பெய்த மழை மக்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. குறிப்பாக மதுரையின் நகரப் பகுதிகளில் பரவலாக மழை பொழிந்து வருகிறது.

மதுரையில் காலை முதலே வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்ட நிலையில் மதுரையின் நகரப் பகுதி மற்றும் கோரிப்பாளையம், தல்லாகுளம் உள்ளிட்ட பகுதிகளில் சாரல் மழை பெய்தது. இதனால் வெப்பம் தணிந்து குளிர்ந்த சூழல் ஏற்பட்டதால் மக்கள் மகிழ்ச்சியில் உள்ளனர். ஒரு சில இடங்களில் நீர் தேங்கியதால் இருசக்கர வாகனங்களில் செல்வோர் சிறிது சிரமத்திற்கு உள்ளாகினர்.

மதுரையின் பழங்காநத்தம், பெரியார் பேருந்து நிலையம் உள்ளிட்ட பகுதிகளில் காலை முதல் மழை பெய்த நிலையில் பிற்பகலுக்கு மேல் தற்பொழுது கோரிப்பாளையம் தல்லாகுளம் பகுதிகளில் மழை பொழிந்து வருகிறது. அதேபோல் சென்னை வானிலை ஆய்வு மையம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில் தமிழ்நாட்டில் அடுத்த மூன்று மணி நேரத்தில் 15 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு இருக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அறிவிப்பின்படி நீலகிரி, ராமநாதபுரம், திருச்சி, புதுக்கோட்டை, பெரம்பலூர், சேலம், நாமக்கல், கரூர், தேனி, மதுரை, திண்டுக்கல், விருதுநகர், தென்காசி, சிவகங்கை ஆகிய 15 மாவட்டங்களில் அடுத்த மூன்று மணி நேரத்தில் மழைக்கு வாய்ப்பு இருக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Next Story

மக்களவை தேர்தல்;தமிழகத்தில் பொது விடுமுறை அறிவிப்பு 

Published on 04/04/2024 | Edited on 04/04/2024
 Lok Sabha election; public holiday announced in Tamil Nadu

நாட்டின் 18 ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு, மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்படவுள்ள நிலையில், முதற்கட்டமாக தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்துவிட்டது.

அரசியல் கட்சிகள் தேர்தல் பரப்புரைகளை தீவிரப்படுத்தி வரும் நிலையில்,தமிழகத்தில் 8 ஆயிரத்து 50 வாக்குச்சாவடிகள் பதற்றமானவை என்றும் 181 வாக்குச்சாவடிகள் மிகவும் பதற்றமானவை எனவும் கண்டறியப்பட்டுள்ளன. தமிழ்நாட்டிலேயே மதுரை மாவட்டத்தில் அதிகபட்சமாக 511 வாக்குச்சாவடிகள் பதற்றமானவை என கண்டறியப்பட்டுள்ளன எனவும் தேர்தல் ஆணையம் தெரிவித்திருந்தது. இந்நிலையில் மக்களவை தேர்தல் நடைபெறும் நாளான ஏப்ரல் 19ஆம் தேதி வெள்ளிக்கிழமை தமிழகத்தில் பொதுவிடுமுறை என அறிவிக்கப்பட்டுள்ளது.