Skip to main content

இலங்கைத் தமிழர்கள் 7 பேர் தமிழகத்தில் தஞ்சம்

Published on 27/11/2023 | Edited on 27/11/2023

 

7 Sri Lankan Tamils have taken refuge in Tamil Nadu
மாதிரிப்படம்

 

இலங்கைத் தமிழர்கள் 7 பேர் தனுஷ்கோடியில் தஞ்சமடைந்துள்ளனர்.

 

இலங்கையில் நிகழும் பொருளாதார நெருக்கடியால் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த இலங்கைத் தமிழர்கள் 7 பேர் அகதிகளாக யாழ்ப்பாணத்தில் இருந்து ராமநாதபுரம் மாவட்டம் தனுஷ்கோடி அரிச்சல் முனைக்கு வந்துள்ளனர். யாழ்ப்பாணம் மன்னார் துறைமுகத்தில் இருந்து வந்த இவர்கள் 7 பேரையும் கடலோர காவல் துறையினர் அழைத்துச் சென்று விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

 

விசாரணைக்குப் பிறகு 7 இலங்கைத் தமிழர்களும் மண்டபம் முகாமில் தங்க வைக்கப்பட உள்ளதாகத் தகவல் வெளியாகி இருக்கிறது. இதுவரை இலங்கையில் இருந்து வாழ்வாதாரம் தேடி தமிழகத்திற்கு 100க்கும் மேற்பட்டவர்கள் தஞ்சமடைந்துள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றனர். 

 

 

சார்ந்த செய்திகள்