Skip to main content

வேலூரில் காய்ச்சலால் 7 மாத கர்ப்பிணி பெண் உயிரிழப்பு!!

Published on 30/10/2018 | Edited on 30/10/2018
 7 months pregnant woman dies due to fever in Vellore

 

வேலூர் மாவட்டம் ஆம்பூரில் காய்ச்சலால் கர்ப்பிணி பெண் உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

ஏற்கனவே இன்று காலை வேலூர் மாவட்டம் ஆம்பூரில் பன்றி காய்ச்சலுக்கு தீவிர சிகிச்சை எடுத்து வந்த ருக்மணியம்மாள் என்பவர் உயிரிழந்த நிலையில் அதே வேலூர் மாவட்டம் ஆம்பூர் வீரசாங்குப்பத்தில் வசித்து வந்த 7 மாதம் கர்ப்பிணியான வினோதினி என்ற பெண் காய்ச்சலுக்காக வேலூர் அரசு மருத்துவமனையில் அனுமதித்திக்கபட்டிருந்த நிலையில் தற்போது உயிரிழந்துள்ளார்.

இந்த தொடர் உயிரிழப்பு அங்கு பெரும் சோகத்தையும் பீதியையும் கிளப்பியுள்ளது.

சார்ந்த செய்திகள்