Skip to main content

கூடா நட்பு: தூங்கிக் கொண்டிருந்த பெண்ணுக்கு நேர்ந்த சோகம்

Published on 05/05/2023 | Edited on 05/05/2023

 

4 member gang robbed a woman of 100 baht worth of jewellery while she was sleeping

 

கோவை மாவட்டம் ராமநாதபுரம் பகுதிக்கு அருகே உள்ள கிருஷ்ணா காலனியைச் சேர்ந்தவர் ராஜேஸ்வரி. இவரது கணவரான வெங்கடேசன் என்பவர் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு உயிரிழந்துவிட்டார். இந்நிலையில், தனது வீட்டில் தனியாக இருக்கும் ராஜேஸ்வரி, ரியல் எஸ்டேட் தொழிலை செய்து வந்துள்ளார்.

 

தன்னுடைய தொழில் காரணமாக பல்வேறு ஊர்களுக்குச் சென்று வரும் ராஜேஸ்வரிக்கு, சிங்காநல்லூரைச் சேர்ந்த வர்ஷினி என்ற பெண்ணுடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. அந்த பெண்ணும் ரியல் எஸ்டேட் தொழிலை செய்து வந்ததால், இவர்களுடைய நட்புறவு நெருக்கமானது. இருவரும் ஒன்றாகச் சேர்ந்து தொழில் செய்து வந்துள்ளனர். அதன்பிறகு, வர்ஷினி  தனக்குத் தெரிந்த இடைத்தரகர்கள் எனக்கூறி அருண்குமார்,  சுரேந்திரன், பிரவீன் என மூன்று பேரை ராஜேஸ்வரிக்கு அறிமுகம் செய்து வைத்துள்ளார். நாளடைவில் இவர்கள் அனைவரும் ஒன்றாகத் தொழில் செய்து வந்துள்ளனர். இந்நிலையில், கடந்த ஏப்ரல் மாதம் 20 ஆம் தேதியன்று, வர்ஷினி மற்றும் அந்த மூன்று இடைத்தரகர்களும் ராஜேஸ்வரியின் வீட்டிற்கு வந்து உணவு சாப்பிட்டுள்ளனர். மேலும், அது இரவு நேரம் என்பதால் அவர்கள் அனைவரும் ராஜேஸ்வரியின் வீட்டிலேயே தூங்கச் சென்றுள்ளனர். அப்போது, நள்ளிரவு 12.30 மணியளவில் திடீரென கண் விழித்த வர்ஷினி மற்றும் அவரது 3 நண்பர்களும், ராஜேஸ்வரி தூங்கிக் கொண்டிருந்த நேரத்தில் அவரது பெட் ரூமில் இருந்த நூறு பவுன் மதிப்புள்ள தங்க நகைகள் மற்றும் இரண்டரை கோடி ரொக்கப் பணம் ஆகியவற்றை கொள்ளையடித்துக்கொண்டு அங்கிருந்து எஸ்கேப் ஆகியுள்ளனர்.

 

இதையடுத்து, அடுத்த நாள் காலை ராஜேஸ்வரி கண் விழித்து பார்த்தபோது, வர்ஷினியும் அவரது நண்பர்களும் அங்கு காணவில்லை. அப்போது சந்தேகமடைந்த ராஜேஸ்வரி, தனது பீரோவை திறந்து பார்த்தபோது, அதிலிருந்த தங்க நகைகள் பணங்கள் என அனைத்தும் கொள்ளையடிக்கப்பட்டது தெரியவந்துள்ளது. இதனால் அதிர்ச்சியடைந்த ராஜேஸ்வரி, என்ன செய்வது எனத் தெரியாமல் கண்ணீர்விட்டு கதறிய நிலையில், வர்ஷினி மற்றும் அவரது மூன்று நண்பர்கள் மீது இராமநாதபுரம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அதன்பேரில் வழக்குப்பதிவு செய்து விசாரணையைத் தொடங்கிய போலீசார், தலைமறைவாக இருக்கும் குற்றவாளிகளைத் தீவிரமாகத் தேடி வந்தனர். மேலும், போலீசாரின் தேடுதல் வேட்டையில், பத்து நாட்களுக்குப் பிறகு திருவள்ளூர் மாவட்டம் காட்டூர் கிராமத்தில் பதுங்கியிருந்த அருண்குமார், சுரேந்திரன் மற்றும் பிரவீன்  ஆகிய மூன்று பேரை கைது செய்து, அவர்களிடம் இருந்து 33 லட்ச ரூபாய் ரொக்கப் பணத்தையும் 31 பவுன் தங்க நகைகளையும் பறிமுதல் செய்துள்ளனர்.

 

அப்போது, அவர்களிடம் மேற்கொண்ட விசாரணையில், "கொள்ளையடித்த பணத்தில் வர்ஷினி, கார்த்திக், அருண்குமார், சுரேந்திரன், நவீன்குமார் மற்றும் பிரவீன் ஆகிய 6 பேரும் பங்கு போட்டுக்கொண்டு ஆளுக்கொரு மூலையில் தலைமறைவானது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. 6 ஜோடி தங்க வளையல்கள், 20 லட்சம் ரூபாய் ரொக்கப்பணம் என பிரித்துக்கொண்டது தெரியவந்துள்ளது. இதையடுத்து, அருண்குமார், சுரேந்திரன் மற்றும் பிரவீன் ஆகிய மூன்று பேரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்த போலீசார், தலைமறைவாக இருக்கும் வர்ஷினி, கார்த்திக் மற்றும் நவீன்குமார் ஆகியோரை வலைவீசி தேடி வருகின்றனர். தற்போது, பெண்ணிடம் நட்பாக பழகிய கொள்ளை கும்பல், வீட்டுக்குள் இருந்த தங்க நகைகளையும் ரொக்கப் பணத்தையும் மொத்தமாகச் சுருட்டிச் சென்ற சம்பவம் கோவையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

முன்னாள் பிரதமரின் பேரன் மீது பாலியல் புகார்!

Published on 28/04/2024 | Edited on 28/04/2024
complaint against the grandson of the former prime minister

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக கடந்த 19ஆம் தேதி தொடங்கி வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு வாக்குப்பதிவு நடைபெற்றது. இதனையடுத்து 13 மாநிலங்களில் உள்ள 88 மக்களவைத் தொகுதிகளில் நேற்று முன்தினம் (26.04.2024) 2ஆம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்றது. மொத்தம் 28 தொகுதிகள் கொண்ட கர்நாடகா மாநிலத்தில் ஏப்ரல் 26 ஆம் தேதி 14 தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு நடந்து முடிந்துள்ளது. மே 7 ஆம் தேதி மற்ற 14 தொகுதிகளில் தேர்தல் நடைபெறவிருக்கிறது.

இந்தத் தேர்தலில், பா.ஜ.க தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில், தேவகவுடாவின் ஜனதா தளம் (எஸ்) கட்சி போட்டியிடுகிறது. கர்நாடகாவில் ஆளும் கட்சியான காங்கிரஸ் இந்தத் தேர்தலில் தனித்துப் போட்டியிடுகிறது. இந்நிலையில் முன்னாள் பிரதமர் தேவகவுடாவின் பேரனும், ஹாசன் மக்களவைத் தொகுதியின் எம்.பி.யுமான பிரஜ்வல் ரேவண்ணா பல பெண்களை பாலியல் வன்கொடுமை செய்ததாக புகார் எழுந்துள்ளது. தன்னிடம் உதவி கேட்டு வந்த ஏராளமான பெண்களை பிரஜ்வல் ரேவண்ணா பாலியல் தேவைகளுக்காக பயன்படுத்திக் கொண்டதாக பரபரப்பு குற்றச்சாட்டு எழுந்துள்ளது. பிரஜ்வல் ரேவண்ணா பல பெண்களுடன் இருப்பது போன்ற ஆபாச காட்சிகள் வெளியாகி மக்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும் பிரஜ்வல் ரேவண்ணா மீது உரிய நடவடிக்கை எடுக்கவும் மாநில மகளிர் ஆணையம் கர்நாடக அரசுக்கு கடிதம் எழுதியுள்ளது.

இதனையடுத்து இந்தப் புகார் குறித்து சிறப்பு புலானாய்வுக் குழு அமைத்து விசாரணை தொடங்க முடிவெடுக்கப்பட்டுள்ளது. அதே சமயம் புகார் குறித்த நெருக்கடி அதிகரிப்பால் பிரஜ்வல் ரேவண்ணா கர்நாடகாவில் இருந்து ஜெர்மனிக்கு தப்பியோடியதாவும் தகவல் வெளியாகியுள்ளது. இது குறித்து கர்நாடக முதல்வர் சித்தராமைய தனது எக்ஸ் சமூக வலைத்தளப்பக்கத்தில், “பிரஜ்வல் ரேவண்ணாவின் ஆபாச வீடியோ வழக்கு தொடர்பாக சிறப்பு புலனாய்வு குழுவை அமைக்க அரசு முடிவு செய்துள்ளது. ஹாசன் மாவட்டத்தில் பெண்கள் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகியிருப்பது போன்ற ஆபாச வீடியோ காட்சிகள் பரவி வருகின்றன. இந்நிலையில், எஸ்ஐடி விசாரணை நடத்துமாறு அரசுக்கு மகளிர் ஆணையத் தலைவர் கடிதம் எழுதியிருந்தார். எனவே இந்தக் கோரிக்கையை ஏற்று இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது” எனக் குறிப்பிட்டுள்ளார். இந்த மக்களவைத் தேர்தலில் ஹாசன் தொகுதியில் பாஜக கூட்டணி வேட்பாளராக பிரஸ்வால் ரேவண்ணா மீண்டும் போட்டியிடுவது குறிப்பிடத்தக்கது. 

Next Story

மதுரையில் இளைஞர்கள் அட்டூழியம்; வெளியான சிசிடிவி காட்சிகள்!

Published on 28/04/2024 | Edited on 28/04/2024
madurai incident Released CCTV footage

மதுரை மாவட்டம் ஒத்தக்கடை பகுதியில் கடந்த 22 ஆம் தேதி (22.04.2024) சித்திரை திருவிழாவின் போது மது போதையில் இருந்த 5க்கும் மேற்பட்ட இளைஞர்கள் ஒத்தக்கடை பகுதிகளில் இரு சக்கர வாகனத்தில் சென்றவர்களை தாக்குவது, பெண்கள் மீது தாக்குதல் நடத்துவது, அப்பகுதியில் இருந்த பொருட்களை அடித்து நொறுக்குவது, வீட்டிற்கு வெளியே உள்ள இருசக்கர வாகனங்களைத் தள்ளிவிட்டு உடைப்பது, கடைகளை சேதப்படுத்துவது எனத் தொடர்ந்து அராஜகங்களில் ஈடுபட்டுள்ளனர். இது தொடர்பான சிசிடிவி காட்சிகள் வெளியாகி மக்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது.

இத்தகைய சூழலில் தான் ஒத்தக்கடை பகுதியைச் சேர்ந்த கான் முகமது கான், கடந்த 22 ஆம் தேதி இரவு தனது பணியை முடித்துவிட்டு இருசக்கர வாகனத்தில் சுந்தரம் நகர் பகுதியில் வந்துள்ளார். அப்போது இந்த இளைஞர்கள் அவரை கடுமையாக தாக்கியுள்ளனர். இந்தத் தாக்குதலில் கான் முகமது கான் பலத்த காயம் அடைந்தார். அதன் பின்னர் மருத்துவனையில் அனுமதிக்கப்பட்ட்டு சிகிச்சை பெற்றார். இது குறித்து ஒத்தக்கடை காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

இதற்கிடையே இந்த இளைஞர்கள் ஐயப்பன் நகர் பகுகுதியில் சென்று அங்குள்ள இரண்டு கடைகளை அடித்து நொறுக்கினர். மேலும் கடையில் இருந்த பெண்கள் மீதும் தாக்குதல் நடத்தியுள்ளனர். இந்நிலையில் இது தொடர்பான சிசிடிவி காட்சிகள் தற்போது வெளியாகி மக்கள் மத்தியில் பதைபதைப்பை ஏற்படுத்தியுள்ளது. அதே சமயம் இந்தச் சம்பவத்தில் ஈடுபட்ட இளைஞர்கள் சிலரை போலீசார் கைது செய்துள்ளனர். மேலும் இருவரை கைது செய்ய போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.