தமிழகத்தில், நேற்று மேலும் 5,489 பேருக்கு கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. இதனால், தமிழகத்தில் நேற்றுவரை கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 6,19,996 ஆக உயர்ந்துள்ளது. அதேபோல் 46,120 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
நேற்று சென்னையில், கரோனா பாதிப்பு எண்ணிக்கை 1,348 ஆக பதிவாகியுள்ளது. இதனால், சென்னையில் 11-வது நாளாக 1,000-க்கும் மேலாக கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னையில் மட்டும் இதுவரை கரோனா உறுதி செய்யப்பட்டோர் எண்ணிக்கை 1,72,773 ஆக அதிகரித்துள்ளது. கடந்த 10 நாட்களில் சென்னையில் 13,515 பேருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.
சென்னையில் நேற்று வரை 10 இடங்கள் கரோனா கட்டுப்பாட்டுப் பகுதிகளாக இருந்த நிலையில், தற்போது 36 இடங்களாக அதிகரித்துள்ளது. அதிகபட்சமாக அம்பத்தூர் மண்டலத்தில் 16 தெருக்கள் கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளாக உள்ளன. கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளில் தொற்று பரவாமல் இருக்க தடுப்பு நடவடிக்கைகளை சென்னை மாநகராட்சி ஊழியர்கள் மேற்கொண்டு வருகின்றனர்.