Skip to main content

'முல்லைப் பெரியாறு பற்றிப் பேச ஓபிஎஸ், இபிஎஸ்க்கு தார்மிக உரிமை கிடையாது'- நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் பேட்டி!

Published on 05/11/2021 | Edited on 05/11/2021

 

'OPS and EPS have no moral right to talk about Mullai Periyar' - Interview with Water Resources Minister Duraimurugan!

 

தேனி மாவட்டத்தில் உள்ள தமிழக-கேரள எல்லையில் அமைந்திருக்கும் கர்னல் பென்னிகுக் கட்டிய முல்லைப் பெரியாறு அணையை ஆய்வு செய்வதற்காகத் தமிழக நீர்ப்பாசனத்துறை அமைச்சர் துரைமுருகன் மற்றும் கூட்டுறவுத் துறை அமைச்சர் ஐ.பெரியசாமி, உணவு மற்றும் வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி, பத்திர பதிவுத்துறை அமைச்சர் மூர்த்தி உள்பட எம்எல்ஏக்களும், அதிகாரிகளும் குமுளியில் உள்ள தேக்கடியில் இருந்து முல்லைப் பெரியாறு அணைக்குப் படகில் சென்று மெயின் அணையையும் பேபி அணையையும் மற்றும் அணையிலிருந்து கேரளாவுக்குத் திறந்துவிடப்பட்ட தண்ணீரையும் பார்வையிட்டு ஆய்வு செய்து  மீண்டும் அதே தேக்கடிக்கு வந்தனர்.

 

அதன்பின் பத்திரிக்கையாளர்களிடம் நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் பேசும் போது, ''நான் இந்தத் துறையின் அமைச்சர் என்ற முறையில் முல்லைப் பெரியாறு அணையை இன்று ஆய்வு செய்துள்ளேன். பதவியேற்றபோதே தமிழகத்தில் உள்ள அனைத்து அணைகளையும் ஆய்வு செய்யத் திட்டமிட்டிருந்தேன். கரோனா காலம் என்பதால் உடனடியாக ஆய்வுப் பணியைத் தொடங்க முடியவில்லை. தற்போது ஆய்வுப் பணியைத் தொடங்கியுள்ளேன். தொடர்ச்சியாக ஆழியாறு உள்ளிட்ட அணைகளைப் பார்வையிட உள்ளேன். சமீபத்தில் உச்சநீதிமன்றத்தில் மத்திய நீர்வள ஆணையம் விதியைக் கொண்டு வந்துள்ளது. அதற்குப் பெயர் 'ரூல் கர்வ்' அந்த விதிப்படி 30 ஆண்டுகள் எவ்வளவு தண்ணீர் வந்தது. எவ்வளவு நீர்மட்டம் உயர்ந்தது என்பதைக் கணக்கெடுத்துள்ளனர். அந்த க் கணக்கெடுப்பின்படி அணையின் நீர்மட்டம் எந்தெந்த காலகட்டத்தில் எவ்வளவு வைத்திருக்க வேண்டும் என அட்டவணை கொடுத்துள்ளனர். அப்படிப் பார்க்கும்போது இன்றைய நிலவரப்படி 139.50 அடி நீர்மட்டம் வைக்க அனுமதி வைக்கப்பட்டுள்ளன. நவம்பர் 30 ஆம் தேதி 142 உயர்த்திக் கொள்ளலாம் எனத் தெரிவித்துள்ளனர். அதனடிப்படையில் தான், தண்ணீர் திறந்துள்ளோம். 1979-ல் அணை பலவீனமாக இருக்கிறது. பலப்படுத்த வேண்டும் எனக் கூறினார். அதையடுத்து 3 நிலைகளில் பலப்படுத்தும் பணி நடந்தது. 152 உயர்த்த வேண்டும் என கோட்டுக்குச் சென்றோம். பேபி அணையைப் பலப்படுத்திவிட்டு 152 நீர்மட்டம் நிலைநிறுத்திக் கொள்ளலாம் எனக் கூறியது. அந்தப் பேபி அணையைப் பார்வையிட்டேன். அதில் என்னப் பிரச்சனை என்றால் அந்த அணை கீழே 3 மரங்கள் இருக்கிறது. அந்த மரங்களை அகற்றினால் பலப்படுத்தும் பணி நடத்த முடியும். கேரள அரசைக் கேட்டால், வனத்துறையிடம் கேட்க வேண்டும் என்கிறனர். வனத்துறையை அணுகினால் மத்திய வனத்துறையை அணுகக் கூறுகின்றனர். விரைவில் அந்த 3 மரங்களை அகற்றிவிடுவோம். அகற்றி விட்டால் பேபி அணையை பலப்படுத்தி 152 அடி நீர்மட்டம் உயர்த்தி விடலாம். அணையிலிருந்து தமிழகத்திற்குக் கூடுதலாகத் தண்ணீர் எடுப்பது குறித்து இருமாநில அரசுகளும் பேசி தான் முடிவெடுக்க வேண்டும். 

 

'OPS and EPS have no moral right to talk about Mullai Periyar' - Interview with Water Resources Minister Duraimurugan!

 

முல்லைப்பெரியாறு குறித்துப் பேசுவதற்கு ஒபிஎஸ்-க்கும், ஈபிஎஸ்-க்கும் தார்மீக உரிமை கிடையாது. இரண்டு பேரும் மாறிமாறி பொதுப்பணித்துறை அமைச்சர்களாக இருந்தனர். பத்து ஆண்டுக்காலத்தில் அந்தத் துறையின் அமைச்சர்கள் ஒருவராவது இந்த அணையை வந்து பார்வையிட்டுள்ளனரா? நான் இந்த 80 வயதில் தட்டுதடுமாறியாவது வந்து ஆய்வு செய்துள்ளேன். ஈபிஎஸ் ஆவது சேலத்துக்காரர், ஓபிஎஸ் தேனிக்காரர். இவராவது ஆய்வு செய்திருக்கலாம். அப்போது கவனிக்காமல் இப்போது உண்ணாவிரதம் இருக்கப் போவதாகக் கூறுவதைப் பார்த்து நாடே சிரிக்கிறது. பக்கத்து மாநில அமைச்சர்கள் அந்யோநியாமாக இருந்தால் பிரச்சனைகள் சுமூகமாக தீர்க்கலாம். 15 ஆண்டுகளுக்கு முன் சென்ற வந்த போட்டில் தான் இன்றும் ஆய்வு செய்து வந்தேன். நல்லகாலம் வழியில் அந்த போட் நிற்கவில்லை. ஆய்வின்போது கூறினேன். தமிழக சார்பில் அதிவேக படகுகள் வாங்கி விட வேண்டும் என்றேன். 3 மரங்களை வெட்டுவதற்கு 7 ஆண்டுகளாக முடியவில்லை. நாங்கள் வந்து 6 மாதங்கள் தான் ஆனால் அனுமதி பெற்றுவிடுவோம். கேரளா முதலமைச்சர் பினராயி விஜயன் மீது எனக்கு மரியாதை உண்டு. அவரை தனிப்பட்ட முறையில் நன்கு அறிவேன். அவர் நேர்மையான சுமூகமான அமைச்சர். அவர் காலத்தில் தான் முல்லைப்பெரியாறு அணை விவகாரத்தில் தீர்வு காணப்படும்'' என்று கூறினார்.

 

 


 

சார்ந்த செய்திகள்

Next Story

'வெறுப்பும் பாகுபாடும் தான் மோடியின் உத்தரவாதம்'-முதல்வர் மு.க.ஸ்டாலின் கண்டனம்

Published on 22/04/2024 | Edited on 22/04/2024
'Hatred and discrimination is Modi's guarantee'- CM Stalin condemns


18ஆவது நாடாளுமன்றத் தேர்தல், நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. 7 கட்டங்களாக இந்தத் தேர்தல் நடைபெறும் நிலையில் முதற்கட்ட வாக்குப்பதிவு, கடந்த 19ஆம் தேதி நடைபெற்று முடிந்துள்ளது. இதில் தமிழ்நாடு உள்ளிட்ட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்கள் அடங்கும். இதையடுத்து மற்ற மாநிலங்களில் அடுத்தடுத்து வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. ஜூன் 1ஆம் தேதி கடைசி நாள் வாக்குப்பதிவு நடைபெறுகிறது. ஜூன் 4ஆம் தேதி தேர்தலின் முடிவுகள் அறிவிக்கப்படவுள்ளன.

இதனால் இரண்டாம் கட்ட தேர்தலுக்கான பிரச்சாரம் வட இந்திய மாநிலங்களில் களைகட்டி வருகிறது. அரசியல் தலைவர்கள் தங்களின் பிரச்சாரத்தைத் தீவிரமாக செய்து வருகின்றனர். அந்த வகையில் ராஜஸ்தான் மாநிலம் பன்ஸ்வாராவில் பிரதமர் மோடி நேற்று தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். அப்போது, “காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கையில் தாய்மார்கள் மற்றும் மகள்கள் வைத்திருக்கும் தங்கம் கணக்கீடு செய்யப்பட்டு பங்கீடு செய்யப்படும் என்று வாக்குறுதி அளிக்கப்பட்டுள்ளது. முன்பு காங்கிரஸ் ஆட்சி காலத்தின் போது நாட்டின் உடைமைகளில் இஸ்லாமியர்களுக்கு முன்னுரிமை இருக்கிறது என்று கூறினார்கள். அப்படியென்றால் யாருக்கு உங்கள் வளங்கள் போகப்போகிறது?. நாட்டில் ஊடுருவி வருபவர்களுக்கும், அதிக குழந்தைகளைப் பெற்றெடுப்பவர்களுக்கும், மக்கள் கஷ்டப்பட்டு சம்பாதித்த செல்வத்தை காங்கிரஸ் கட்சி பங்கிட்டுக் கொடுத்துவிடும்.

அதாவது, காங்கிரஸ் கட்சியினர் இந்தியாவுக்குள் ஊடுருவிய, அதிக குழந்தைகள் பெற்றுக் கொண்டவர்களுக்கு சொத்துகளை வழங்குவோம் என்கிறார்கள். நீங்கள் கடினமாக உழைத்து சேர்த்த சொத்தை அவர்களுக்குக் கொடுக்க ஒப்புக்கொள்ளப் போகிறீர்களா?” எனப் பேசினார். பிரதமரின் இந்தப் பேச்சு பெரும் சர்ச்சையானது.

பிரதமர் மோடியின் இத்தகைய வெறுப்பு பேச்சுக்கு தேர்தல் ஆணையம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்கள் அபிஷேக் மனு சிங்வி, சல்மான் குர்ஷித், குர்தீப் சத்பால் ஆகியோர் தேர்தல் ஆணையத்திற்கு நேரில் சென்று புகார் மனு அளித்துள்ளனர். சமூகங்களுக்கு இடையே வெறுப்பை பரப்பும் வகையில் பேசிவரும் பிரதமர் மோடி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என அந்த மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

'Hatred and discrimination is Modi's guarantee'- CM Stalin condemns

இந்நிலையில் பிரதமர் மோடியின் பேச்சுக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார். 'பிரதமர் மோடியின் நச்சு பேச்சு கேவலமானது, மிகவும் வருந்தத்தக்கது. மக்களின் கோபத்திற்கு அஞ்சி மத உணர்வுகளைத் தூண்டி வெறுப்பு பேச்சை நாடி உள்ளார் பிரதமர் மோடி. பிரதமரின் அப்பட்டமான வெறுப்பு பேச்சுக்கு தேர்தல் ஆணையம் நடுநிலைமையைக் கைவிட்டு விட்டது. வெறுப்பும் பாகுபாடும் தான் மோடியின் உண்மையான உத்தரவாதம்' என  தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது கண்டனத்தை தெரிவித்துள்ளார்.

Next Story

முல்லைப் பெரியாறு அணை விவகாரம்; தமிழக அரசு அதிரடி முடிவு!

Published on 22/04/2024 | Edited on 22/04/2024
Mullai Periyar Dam Issue TN govt decision

முல்லைப் பெரியாறு அணைப்பகுதியில் மிகப்பெரிய நான்கு சக்கர வாகன நிறுத்தம் அமைக்கும் பணியில் கடந்த 2013 ஆண்டு முதல் கேரள அரசு ஈடுபட்டு வருகிறது. இதையடுத்து முல்லைப் பெரியாறு அணையின் நீர்த்தேக்கப் பகுதிகள் தமிழகத்திற்கு குத்தகைக்கு விடப்பட்டிருப்பதால், அதில் கட்டுமானப் பணிகள் நடைபெறும் பகுதியில் கட்டுமான பணிகள் மேற்கொள்ள அனுமதி இல்லை என்று தெரிவித்தும், கேரளா அரசின் முடிவை எதிர்த்தும் தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்திருந்தது.

இந்த வழக்கு உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தபோது நீதிபதி, “நில அளவை தொடர்பாக உச்ச நீதிமன்றத்தால் நியமிக்கப்படும் மேற்பார்வைக் குழுவின் தலைமையில் கேரளா மற்றும் தமிழகத்தை உள்ளடக்கிய கூட்டு சர்வே நடத்த வேண்டும்” என தெரிவித்திருந்தார். இதனையடுத்து இது தொடர்பான அய்வு குழுவினரால் ஆய்வு மேற்கொண்டு உச்ச நீதிமன்றத்தில் ஆய்வறிக்கை சமர்ப்பிக்கப்பட்டது. அந்த ஆய்வறிக்கையில், ‘கேரள அரசு கட்டிவரும் வாகன நிறுத்துமிடம் குத்தகை பகுதிக்குள் இல்லை. நீர்பிடிப்பு மற்றும் நீர் பரவல் பகுதியின் எல்லைகள் பெரியாறு, குமுளி கிராமத்தில் உள்ளன’ என வரைபடத்தின் மூலம் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Mullai Periyar Dam Issue TN govt decision

இந்நிலையில் முல்லைப் பெரியாறு அணை பகுதியில் வாகன நிறுத்துமிடம் கட்டுவது தொடர்பாக இந்திய நில அளவைத் துறை அளித்த ஆய்வறிக்கையை ஏற்க முடியாது என உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த மனுவில், “கடந்த 1924 ஆம் ஆண்டு நீர்வளத்துறையால் தயாரிக்கப்பட்ட வரைபடத்தை தற்போதைய ஆய்வு குழு கணக்கில் கொள்ளவில்லை. கேரளா கட்டிவரும் மிகப்பெரிய வாகன நிறுத்துமிடத்தின் மூலப்பகுதி, தரைத்தளம் எங்கு உள்ளது என்பதை ஆய்வு குழு ஆய்வு செய்யவில்லை. வாகன நிறுத்துமிடத்தின் எல்லை நிர்ணயிக்கப்பட்ட போது தமிழ்நாடு அரசின் கோரிக்கைகள் ஏற்கப்படவில்லை.

மெகா வாகனம் நிறுத்துமிடம் என்பது உணவகம், வாகன பேட்டரி சார்ஜ் செய்யும் இடம், கழிவு நீர் சுத்திகரிப்பு நிலையத்தை உள்ளடக்கியது ஆகும். எனவே வாகன நிறுத்துமிடத்தை அளவிடும் போது அதன் சார்பு வசதிகளை கணக்கில் எடுக்க நில அளவைத் துறை தவறிவிட்டது” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.