Skip to main content

போலி ஆவணங்கள் மூலம் 2 கோடி ரூபாய் நிலம் ஆக்கிரமிப்பு; 3 பேர் அதிரடி கைது! 

Published on 06/04/2023 | Edited on 06/04/2023

 

3 people arrested case of 2 crore land encroachment through fake documents

 

சேலத்தில், போலி ஆவணங்கள் மூலம் 2 கோடி ரூபாய் மதிப்புள்ள நிலத்தை ஆக்கிரமித்த வழக்கில் மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். வழக்கறிஞர் உள்ளிட்ட 5 பேரை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.     

 

சேலம் ஏற்காடு அடிவாரம் செல்லும் வழியில் உள்ள சுபாஷ் சந்திரபோஸ் நகரைச் சேர்ந்தவர் ரேவதி (45). பார்சல் சர்வீஸ் நிறுவனம் நடத்தி வருகிறார். இவருக்குச் சொந்தமாக நெத்திமேடு பகுதியில் 40 ஆயிரம் சதுர அடி நிலம் உள்ளது. இங்கு எண்ணெய் தயாரிப்பு ஆலையும், கிடங்கும் உள்ளது. இந்த இடத்தை பார்த்துக் கொள்ளும்படி ரேவதி, தனது மாமனார் ஜம்புகேஸ்வரனிடம் ஒப்படைத்து இருந்தார். உடல்நலமில்லாமல் அவர் இறந்துவிட்டார்.  

 

இந்நிலையில், ரேவதிக்கு சொந்தமான நிலத்தில் 2 கோடி ரூபாய் மதிப்புள்ள 5000 சதுர அடி பரப்பளவு நிலத்திற்கு மட்டும் வாடகை ஒப்பந்தம்  போட்டு கொடுத்ததாகக் கூறி, தாதகாப்பட்டி திருஞானம் நகரைச் சேர்ந்த கோபாலகிருஷ்ணன் (45), கொண்டலாம்பட்டி முன்சீப் தோட்டத்தைச் சேர்ந்த ராஜேந்திரன் (63), அவருடைய மகன் கார்த்தி (33), வழக்கறிஞர் ஒருவர் உள்பட 8 பேர் போலியான ஆவணங்களுடன் அந்த நிலத்திற்குள் புகுந்தனர். தான் யாருக்கும் தனது நிலத்தில் புதிதாக வாடகை ஒப்பந்தம் போட்டுக் கொடுக்கவில்லை என ரேவதி விளக்கம் அளித்தும் அந்த கும்பல் நிலத்தை விட்டு வெளியேறவில்லை. ஒரு கட்டத்தில் அந்த கும்பல், இந்த நிலத்தை விட்டு வெளியேற வேண்டுமானால் பணம் கொடுக்க வேண்டும் என ஒரு பெரிய தொகையைக் கேட்டு ரேவதியை மிரட்டியுள்ளனர்.  

 

இதில் கோபாலகிருஷ்ணன், இறந்துபோன ஜம்புகேஸ்வரனிடம் கார் ஓட்டுநராக வேலை செய்து வந்துள்ளார். அப்போது அவர், வேலவன் என்பவருடன் சேர்ந்து ஜம்புகேஸ்வரனை மிரட்டி 15 லட்சம் ரூபாய் வாங்கியிருப்பதும் தெரிய வந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த ரேவதி, இதுகுறித்து சேலம் மாநகர நில அபகரிப்பு தடுப்புப் பிரிவு காவல்துறையில் புகார் அளித்தார். அதன்பேரில், கோபாலகிருஷ்ணன் உள்ளிட்ட 8 பேர் மீது ஆய்வாளர் பழனியம்மாள் வழக்குப்பதிவு செய்தார். முதல் கட்டமாக இந்த வழக்கில் கோபாலகிருஷ்ணன், ராஜேந்திரன், அவருடைய மகன் கார்த்தி ஆகிய மூன்று பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். வழக்கறிஞர் உள்ளிட்ட 5 பேர் தலைமறைவாக உள்ளனர். அவர்களை காவல்துறையினர் தேடி வருகின்றனர். 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

கள்ள மது விற்பதை காட்டிக் கொடுத்தவருக்கு மிரட்டலா?-100க்கு அழைத்து புலம்பிய புகார்தாரர்

Published on 28/04/2024 | Edited on 28/04/2024
Complainant who called 100 to threaten the person who betrayed him for selling fake liquor?

கடலூரில் கள்ளத்தனமாக மதுவிற்ற சம்பவம் தொடர்பாக புகார் அளித்தவருக்கு கொலை மிரட்டல் விடப்பட்டதாக நபர் ஒருவர் பேசும் ஆடியோ ஒன்று வைரலாகி வருகிறது.

கடலூர் மாவட்டம் ஸ்ரீமுஷ்ணம் அருகே உள்ளது ராமாபுரம் பகுதி. இந்த பகுதியில் கள்ளத்தனமாக மது விற்பனை நடைபெற்று வருவதாக ஜேசுதாஸ் என்பவர் காவல்துறை கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவித்துள்ளார். ஆனால் புகார் கொடுத்தவரின் செல்போன் நம்பரை காவல்துறையினரே கள்ளமது விற்ற நபருக்கு தந்து விட்டதாக அந்த நபர் மீண்டும் அவசர அழைப்பு எண்ணான 100 க்கு தொடர்பு கொண்டு புலம்பியுள்ளார்.

இது தொடர்பான ஆடியோ ஒன்று வெளியாகி உள்ளது. அதில் பேசும் புகாரளித்த ஜேசுதாஸ் என்பவர் ''சார் கள்ளச்சாராயம் விற்கிறார்கள் என்று சொல்லிவிட்டு போலீஸ் ஸ்டேஷனுக்கு கனெக்சன் கொடுங்க என கம்ப்ளைன்ட் கொடுத்தேன். ஆனால் அவர்கள் என்னான்னா என்னுடைய நம்பரை எடுத்து இவன்தான் புகார் கொடுக்கிறான் என கள்ளச்சாராயம் விற்றவர்களிடம் என் நம்பரை போட்டு கொடுத்துள்ளார்கள். அவர்கள் போலீசுக்கு நீதாண்டா போன் பண்ணுனே எனக்கூறி, உன்ன வெட்டாம விடமாட்டேன் என மிரட்டுகிறார்கள். நான் தோப்பில் வந்து ஒளிந்து கொண்டிருக்கிறேன். தண்ணீர் கூட குடிக்க முடியவில்லை'' என பேசும் அந்த ஆடியோ வைரலாகி வருகிறது.

Next Story

பிரஜ்வல் ரேவண்ணா மீது வழக்குப்பதிவு!

Published on 28/04/2024 | Edited on 28/04/2024
Case filed against Prajwal Revanna

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக கடந்த 19ஆம் தேதி தொடங்கி வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு வாக்குப்பதிவு நடைபெற்றது. இதனையடுத்து 13 மாநிலங்களில் உள்ள 88 மக்களவைத் தொகுதிகளில் நேற்று முன்தினம் (26.04.2024) 2ஆம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்றது. மொத்தம் 28 தொகுதிகள் கொண்ட கர்நாடகா மாநிலத்தில் ஏப்ரல் 26 ஆம் தேதி 14 தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு நடந்து முடிந்துள்ளது. மே 7 ஆம் தேதி மற்ற 14 தொகுதிகளில் தேர்தல் நடைபெறவிருக்கிறது.

இந்தத் தேர்தலில், பா.ஜ.க தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில், முன்னாள் பிரதமர் தேவகவுடாவின் ஜனதா தளம் (எஸ்) கட்சி போட்டியிடுகிறது. கர்நாடகாவில் ஆளும் கட்சியான காங்கிரஸ் இந்தத் தேர்தலில் தனித்துப் போட்டியிடுகிறது. இந்நிலையில் தேவகவுடாவின் பேரனும், ஹாசன் மக்களவைத் தொகுதியின் எம்.பி.யுமான பிரஜ்வல் ரேவண்ணா பல பெண்களை பாலியல் வன்கொடுமை செய்ததாக புகார் எழுந்துள்ளது. தன்னிடம் உதவி கேட்டு வந்த ஏராளமான பெண்களை பிரஜ்வல் ரேவண்ணா பாலியல் தேவைகளுக்காக பயன்படுத்திக் கொண்டதாக பரபரப்பு குற்றச்சாட்டு எழுந்துள்ளது. பிரஜ்வல் ரேவண்ணா பல பெண்களுடன் இருப்பது போன்ற ஆபாச காட்சிகள் வெளியாகி மக்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும் பிரஜ்வல் ரேவண்ணா மீது உரிய நடவடிக்கை எடுக்கவும் மாநில மகளிர் ஆணையம் கர்நாடக அரசுக்கு கடிதம் எழுதி இருந்தது.

இதனையடுத்து இந்தப் புகார் குறித்து சிறப்பு புலானாய்வுக் குழு அமைத்து விசாரணை தொடங்க முடிவெடுக்கப்பட்டது. இதற்கான உத்தரவை கர்நாடக முதல்வர் சித்தராமையா வெளியிட்டிருந்தார். அதே சமயம் இந்தப் புகார் குறித்த நெருக்கடி அதிகரிப்பால் பிரஜ்வல் ரேவண்ணா கர்நாடகாவில் இருந்து ஜெர்மனிக்கு தப்பியோடியதாவும் தகவல் வெளியாகி இருந்தது. இதற்கிடையே காங்கிரஸ் கட்சியின் மகளிர் அணியினர் கைது செய்ய வலியுறுத்தி போராட்டத்திலும் ஈடுபட்டனர். இந்த மக்களவைத் தேர்தலில் ஹாசன் தொகுதியில் பாஜக கூட்டணி வேட்பாளராக பிரஸ்வால் ரேவண்ணா ப்ரஜ்வால் மீண்டும் போட்டியிடும் ஹசான் தொகுதியில் கடந்த 26ம் தேதி தேர்தல் நடைபெற்று முடிவடைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் பிரஜ்வால் ரேவண்ணா மீது ஹோலேநரசிப்பூர் காவல் நிலையத்தில் ஐபிசி 354 ஏ, 354 டி, 506, மற்றும் 509 ஆகியவற்றின் கீழ் 4 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கை விசாரிக்கும் சிஐடி பிரிவின் எஸ்ஐடி (சிறப்பு புலனாய்வுக் குழு) குழு ஐபிஎஸ் அதிகாரி விஜய் குமார் சிங் தலைமையில் செயல்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்தக் குழுவில் சிஐடி டிஜி சுமன் டி பென்னேகர் மற்றும் ஐபிஎஸ் அதிகாரி சீமா லட்கர் ஆகியோர் உறுப்பினர்களாக இருப்பார்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.