Skip to main content

சொகுசு வாழ்க்கைக்கு ஆசைப்பட்டு 21வயது பட்டதாரி பெண் நடத்திய கூட்டுக் கொள்ளை... கிருஷ்ணகிரியில் பரபரப்பு!!

Published on 12/09/2020 | Edited on 12/09/2020

 

 21-year-old graduate girl robbed for want of luxury life

 

கிருஷ்ணகிரியில் 21 வயது பட்டதாரி மாணவி தலைமையில் கூட்டுக் கொள்ளை சம்பவம் நடந்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் மாநகராட்சியில் வேலு நகர் குடியிருப்பைச் சேர்ந்த  தம்பதியினர் பார்த்திபன் ஷர்மிளா. இவர்கள் குடியிருந்த வீட்டிற்கு அருகில் வசித்துவந்த பூமிகா என்னும் 21 வயது பட்டதாரி பெண், சர்மிளாவுடன் நட்புடன் பழகி வந்துள்ளார். இந்நிலையில் கடந்த 2ஆம் தேதி பார்த்திபன் வேலை காரணமாக வெளியூர் செல்ல, சர்மிளா உடன் பூமிகா பேசிக் கொண்டிருந்தார். அப்போது 5 பேர் கொண்ட கும்பல் வீட்டிற்கு வந்து சர்மிளா மற்றும் பூமிகா ஆகிய இருவரையும் தாக்கிவிட்டு அவர்களிடம் இருந்த நகைகளை பறித்துச் சென்றனர். பூமிகாவின் கம்மலையும் பறித்துச் சென்றது அந்த கொள்ளை கும்பல்.

 

 21-year-old graduate girl robbed for want of luxury life


கொள்ளையடிக்கப்பட்ட நகைகளின் மதிப்பு 3 லட்சம் எனக் கூறப்பட்ட நிலையில் இதுகுறித்து சிப்காட் காவல் துறையினரிடம் புகார் அளிக்கப்பட்டது. காவல்துறையினர் இதுதொடர்பாக, வீட்டில் பொருத்தப்பட்டிருந்த சி.சி.டி.வி காட்சிகளை அடிப்படையாகக் கொண்டு விசாரணை மேற்கொண்டனர். அதேபோல் வீட்டிற்கு வெளியே பொருத்தப்பட்டிருந்த சி.சி.டி.வி காட்சிகளையும் சேகரித்து விசாரணை மேற்கொண்டு வந்தனர்.

இந்த கொள்ளை சம்பவம் தொடர்பாக அந்த இடத்தில் இருந்த பட்டதாரி பெண்ணான பூமிகாவிடமும் போலீசார் விசாரணை மேற்கொண்ட பொழுது பூமிகாவின் வாக்குமூலங்கள் காவல் துறையினருக்குச் சற்று சந்தேகத்தை ஏற்படுத்தியது. அதன் பின்பு பூமிகாவை அவர்கள் பாணியில் விசாரித்த பொழுது இந்த கொள்ளை சம்பவத்தை தலைமையேற்று அரங்கேற்றியதே பூமிகாதான் என்ற அதிர்ச்சி தகவல் வெளியானது. அதோடு மட்டுமல்லாமல் அப்பகுதியில் பொருத்தப்பட்டிருந்த சி.சி.டி.வி கேமரா காட்சிகளில் பூமிகா தெருவின் ஒரு பகுதியில் ஐந்து நபர்களுடன் நின்று கொள்ளை நடந்த அன்று பேசிக் கொண்டிருந்ததும் தெரிந்தது.

 

 21-year-old graduate girl robbed for want of luxury life


அதன் பின்தான் அடுக்கடுக்கான உண்மைகள் அவரிடம் விசாரித்ததில் வெளிவந்தது, கரோனா பொதுமுடக்கம் காரணமாக வேலை இல்லாமல் வீட்டிலேயே இருந்த பட்டதாரி மாணவி பூமிகா சொகுசாக வாழ ஆசைப்பட்டு ஃபேஸ்புக் நண்பர்களிடம் பக்கத்து வீட்டில் உள்ள நகையைக் கொள்ளையடிக்க திட்டமிட்டதாக ஒப்புக்கொண்டார். இது தொடர்பாக பக்கத்து வீட்டு சர்மிளா என்பவரிடம் அடிக்கடி சென்று நட்பாக பழகி வந்து அவரிடம் உள்ள நகைகள் குறித்தும் முன்கூட்டியே தெரிந்து வைத்துக்கொண்டு கொள்ளை திட்டத்தை அரங்கேற்றியுள்ளார்.

பெங்களூரில் உள்ள தனது ஃபேஸ்புக் நண்பர் பிரசாந்த்திடம் இதைப்பற்றி கூறி கொள்ளையடிக்க தேதியும் குறித்த பூமிகா. கொள்ளை நடந்த நாளன்று சர்மிளாவின் வீட்டிற்கு துணிதைக்க செல்வதுபோல் சென்று பேசியுள்ளார். அப்பொழுது திட்டமிட்டபடி அந்த கும்பல் வீட்டிற்கு வந்து சர்மிளாவிடமிருந்து நகையைப் பறித்தது. சந்தேகம் வராமலிருக்க பூமிகாவிடமும் கம்மலையும் பறித்துச் சென்றனர்.

 

Ad


இந்த கொள்ளை சம்பவம் தொடர்பாக பூமிகா, பிரசாந்த், புட்டராஜு. சஞ்சய், கிரண், நாகராஜ், என ஆறு பேரையும் சிப்காட் காவல் துறையினர் கைது செய்துள்ளனர். படித்த பட்டதாரி இளம்பெண் சொகுசு வாழ்க்கைக்கு ஆசைப்பட்டு வீட்டுக்கு அருகில் நட்பு முறையில் பழகிவந்த பெண்ணிடமே கொள்ளை சம்பவத்தை அரங்கேற்றியது கிருஷ்ணகிரியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

திருமணத்தை மீறிய உறவு; பெண்ணை பெட்ரோல் ஊற்றி எரித்த நடத்துநர்

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
Conductor who doused woman with petrol and her in Krishnagiri

கிருஷ்ணகிரியைச் சேர்ந்தவர் திருப்பதி. இவரது மனைவி சிவகாமி(பெயர் மாற்றப்பட்டுள்ளது). இவருக்கும் கிருஷ்ணகிரி பாத்திமா நகரைச் சேர்ந்த அரசு பேருந்து நடத்துனர் மாதவன் என்பவருக்கும் கடந்த ஐந்து ஆண்டுகளாக திருமணத்தை மீறிய உறவு இருந்துள்ளது. இந்த நிலையில் மாதவனுக்கு வேறு சில பெண்களுடன் தொடர்பு  இருப்பதாக கருதிய லட்சுமி மாதவன் உடனான உறவை துண்டித்துள்ளார்.

இதனைத் தொடர்ந்து மாதவன் சிவகாமிக்கு தொடர்ந்து தொல்லை கொடுத்து வந்துள்ளார். இந்த நிலையில் நேற்று இரவு வீட்டிற்கு வெளியே சென்று லட்சுமியைப் பின் தொடர்ந்து வந்த மாதவன் சிவகாமியிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். மேலும் தன்னுடன் பேசுமாறு வற்புறுத்தியுள்ளார். ஆனால்   இதற்குச் சிவகாமி மறுப்பு தெரிவிக்க, ஆத்திரமடைந்த மாதவன் சிவகாமி மீது பெட்ரோலை ஊற்றி உயிரோடு எரித்துள்ளார். பின்னர் வீட்டின் அருகே உள்ள முட்புதிரில் தீயில் கருகி நிலையில் உயிருக்கு போராடி கொண்டிருந்த சிவகாமியைப் பார்த்த அக்கம் பக்கத்தினர் உடனடியாக அவரை மீட்டு கிருஷ்ணகிரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனர்.

இந்த நிலையில் இது குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் சிவகாமிடம் விசாரணை செய்ததில் மேற்கண்ட விவரங்கள் தெரியவந்துள்ளது. இதை அடுத்து மாதவன் மீது வழக்கு பதிவு செய்த போலீசார் அவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்

Next Story

தீ விபத்து; பலி எண்ணிக்கை 6 ஆக உயர்வு!

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
incident for hotel near Patna Railway Station Bihar

பீகார் மாநிலம் பாட்னா ரயில் நிலையம் அருகே உள்ள ஹோட்டலில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு படை வீரர்கள் தீயை அணைக்கும் பணியிலும், மீட்புப் பணியிலும் ஈடுபட்டனர். இந்த தீ விபத்தில் சிக்கிய 12 பேர் மீட்கப்பட்டு சிகிச்சைக்காக முதற்கட்டமாக அனுப்பி வைக்கப்பட்டனர். இச்சம்பவம் பாட்னாவில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி இருந்தது. இந்த தீ விபத்தில் சிக்கி 3 பேர் உயிரிழந்ததாகவும், 7 பேர் பலத்த காயமடைந்துள்ளனர் என பாட்னா போலீஸ் எஸ்.எஸ்.பி. ராஜீவ் மிஸ்ரா தெரிவித்திருந்தார்.

இது குறித்து பாட்னா தீயணைப்புத் துறை போலீஸ் டிஜி, ஷோபா ஓஹட்கர் கூறுகையில், “தீயணைப்புத் அணைக்கும் மேற்கொண்டோம். இதுபோன்ற நெரிசலான பகுதிகளில் விபத்துகளை தடுக்க தொடர்ந்து சிறப்பு கவனம் செலுத்தி வருகிறோம். இதுபோன்ற சம்பவங்களைத் தடுக்க நாங்கள் தொடர்ந்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறோம். சிலிண்டர் வெடித்ததால் இந்த தீ விபத்து நடந்தது. இருப்பினும் தற்போது தீ முற்றிலும் அணைக்கப்பட்டது” எனத் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் பாட்னா சட்டம் மற்றும் ஒழுங்கு போலீஸ் டிஎஸ்பி கிருஷ்ணா முராரி கூறுகையில், “இந்த தீ விபத்தில் 5 முதல் 6 பேர் வரை இறந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சுமார் 30க்கும் மேற்பட்டோர் மீட்கப்பட்டுள்ளனர். அதில் பலத்த காயம் அடைந்த 7 பேர் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்” எனத் தெரிவித்தார்.