Skip to main content

தன்னார்வலர்களின் ஆணி பிடுங்கும் திருவிழா!

Published on 09/12/2019 | Edited on 09/12/2019

மரங்களில் ஆணி அடித்து விளம்பர பதாகைகள் பொருத்தப்படுவது நீண்ட காலமாகவே நடந்து வருகிறது. இதனால் மரங்களின் வளர்ச்சி பாதிக்கப்படுகிறது. ஆணிகள் அடிக்கப்பட்ட மரங்களில் தேனீக்கள் கூடு கட்டாது என்பதில் இருந்தே பசுமைக்கும், பல்லுயிர் சூழலுக்கும் எவ்வளவு பெரிய பாதிப்பை ஏற்படுத்துகிறது என்பது தெளிவாகிறது. 
 

இப்படிப்பட்ட சூழலில் தான், மரங்களில் அடிக்கப்பட்ட ஆணிகளை அகற்றுவதற்காக தேனி மாவட்டத்தில் தன்னார்வலர்கள் பலர் ஒருங்கிணைந்து, 'ஆணி பிடுங்கும் திருவிழா' என்ற பெயரில் புதிய வடிவிலான களப்பணியை தொடங்கி உள்ளனர். சமூக வலைத்தளம் மூலம் தன்னார்வலர்கள் ஒருங்கிணைந்து, மரங்களில் அடிக்கப்பட்ட ஆணிகளை அகற்றும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில் தேனியில் கடந்த மாதம் 17-ந்தேதி ஆணி பிடுங்கும் திருவிழா தொடங்கியது. 

social Volunteers nail Pulling out festival theni district trees


அதைத் தொடர்ந்து, தேனி, கம்பம், உத்தமபாளையம், சின்னமனூர் உள்ளிட்ட இடங்களிலும் ஆணிகள் பிடுங்கும் களப்பணியை தொடங்கி தீவிரமாய் சேவையாற்றி வருகின்றனர். ஆணியை அகற்றிய இடத்தில், பூச்சி, வண்டுகளால் பாதிப்பு ஏற்படாமல் இருக்க வேப்ப எண்ணெய் மற்றும் மஞ்சள் கலந்த கலவையை தடவி வருகின்றனர். வயது வித்தியாசமின்றி சிறுவர்கள் முதல் முதியவர்கள் வரை இந்த தன்னார்வலர்களின் களப்பணியில் இணைந்து கொள்வதை பார்க்க முடிகிறது. சாதி, மதங்களை கடந்து, அமைப்புகள் என்ற கட்டமைப்பை எல்லாம் புறந்தள்ளி தன்னார்வ இளைஞர்கள் இந்த பணியை முன்னெடுத்துள்ளனர்.
 

தமிழகத்தில் இதுநாள் வரையும் சமூக சேவை என்றால் ஏதாவது தன்னார்வ அமைப்போ, தொண்டு நிறுவனமோ அந்த பணிகளை முன்னெடுக்கும். அதில் தன்னார்வலர்கள் பங்கேற்பார்கள். ஆனால், தேனியில் தன்னார்வ தொண்டர்கள் மற்றும் பத்திரிக்கையாளர்கள் ஆணி பிடுங்கும் திருவிழாவை நடத்துகின்றனர். அதில், பல்வேறு அமைப்புகளை சேர்ந்தவர்கள் பங்கேற்று களப்பணியாற்றுகின்றனர். பசுமை செந்தில், விக்னேஷ்பாபு, பாலசுப்பிரமணியம் உள்ளிட்ட தன்னார்வல இளைஞர்களின் ஒருங்கிணைப்பில் தொடர்ச்சியாக ஆணி பிடுங்கும் பணி நடந்து வருகிறது. பணிகளை தீவிரப்படுத்தும் நோக்கில், "நடைப் பயிற்சி நேர களப்பணி" என்ற பெயரில் தேனி நகரில் உள்ள குடியிருப்புகளில் நிற்கும் மரங்களில் அடிக்கப்பட்ட ஆணிகளை பிடுங்கும் பணியை தினமும் காலை 6.30 மணி முதல் 8 மணி வரை நடத்தி வருகின்றனர். தன்னார்வலர்களின் இந்த முயற்சிக்கு சமூக வலைத்தளங்களில் பாராட்டுகள் குவிந்து வருகிறது. 

social Volunteers nail Pulling out festival theni district trees


இது சம்மந்தமாக தன்னார்வ இளைஞர்களில் ஒருவரான பசுமை செந்திலிடம் கேட்ட போது, மரங்களில் ஆணி அடிப்பதால் அதன் ஆயுள் குறையும். ஆணியை அகற்றி விட்டால், அதன் ஆயுளை பாதுகாக்கலாம். இதுகுறித்து மக்களிடம் விழிப்புணர்வு ஏற்பட வேண்டும் என்பதற்காக ஆணி பிடுங்கும் திருவிழா என்ற பெயரில் களப்பணியாற்றி வருகிறோம். அமைப்புகளுக்கு அப்பாற்பட்டு சமூக வலைத்தளங்கள் மூலம் ஒருங்கிணைந்து தன்னார்வலர்களால் மேற்கொள்ளப்படும் பணி இது. சென்னை மாநகராட்சி முனிசிபில் சட்டம் 1919- ஆம் ஆண்டு 326 விதியின்படி மரங்களில் ஆணி அடிப்பது தண்டனைக்குரிய குற்றமாகும். 

social Volunteers nail Pulling out festival theni district trees


தேனி மாவட்டத்தில் மரங்களில் ஆணி அடிக்கும் சம்பவங்கள் தொடர்கதையாக உள்ளது. சில தனியார் பள்ளி, கல்லூரி நிர்வாகங்கள், நீட், கணினி, வேலைவாய்ப்பு பயிற்சி மையங்கள், உரம், பூச்சிக் கொல்லி மருந்துகள் விற்பனை நிறுவனங்களை சேர்ந்தவர்கள் தான் மரங்களில் அதிக அளவில் ஆணி அடித்து தங்களின் விளம்பர பதாகைகளை தொங்கவிட்டுச் செல்கின்றனர். நெடுஞ்சாலைத்துறையினரும், சாலையோரம் உள்ள மரங்களில் ஆணிகளை அடித்து ஒளிரும் பட்டைகளை பொருத்தி வருகின்றனர். எனவே, மரங்களில் பொருத்தப்பட்டுள்ள விளம்பர பதாகைகளை அகற்ற வேண்டும் என்றும் இனி வரும் காலங்களில் மரங்களில் ஆணி அடிக்காமல் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் கோரிக்கை மனுவும் அளித்துள்ளோம். தேனியை தொடர்ந்து சேலத்தில் ஆணிகளை பிடுங்கும் பணியை தன்னார்வ இளைஞர்கள் முன்னெடுத்துள்ளனர். அடுத்து திருப்பூர், மதுரை, கோவை உள்பட மேலும் சில இடங்களிலும் தொடங்க உள்ளனர் என்று கூறினார்.
 

ஆக தேனி மாவட்டத்தில் தன்னார்வலர்களில் இந்த களப்பணிக்கு காவல் துறையினர் மட்டுமே ஒத்துழைப்பு வழங்கி வருகின்றனர். ஆனால் மாவட்ட நிர்வாகத்திடம் இந்த தன்னார்வ தொண்டர்கள் கோரிக்கை வைத்தும் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை.

 

சார்ந்த செய்திகள்

Next Story

படையெடுக்கும் புலிகள்; பாதுகாப்பு வளையத்தில் மூணாறு !

Published on 27/04/2024 | Edited on 27/04/2024
 Invading Tigers; Munnar in the observation ring

கோடை வெயிலின் தாக்கத்தால் வனப்பகுதியை விட்டு வனவிலங்குகள் உணவு மற்றும் தண்ணீர் தேவைக்காக கிராமங்களுக்கு நுழைவது தொடர்கதையாகி வருகிறது. வனத்துறை சார்பில் வனவிலங்குகளுக்கு தண்ணீர் தொட்டிகள் திறக்கப்பட்டு வரும் நிலையில் அதையும் மீறி பல்வேறு இடங்களில் யானை, சிறுத்தை உள்ளிட்ட விலங்குகள் வனத்தை விட்டு வெளியேறி உணவிற்காக கிராமங்களுக்குள் நுழைவது வாடிக்கையாகி வருகிறது.

அண்மையில் மயிலாடுதுறையில் புகுந்த சிறுத்தை தற்பொழுது வரை மர்மமாகவே நீடித்து வருகிறது. இந்நிலையில் தமிழக-கேரள எல்லையான மூணாறு பகுதியில் சர்வ சாதாரணமாக புலி நடமாட்டம் இருப்பது அந்த பகுதி மக்களுக்கு அதிர்ச்சியை கொடுத்துள்ளது. கன்னிமலா பகுதியில் உள்ள தேயிலை எஸ்டேட் பகுதியில் புலிகள் நடமாட்டம் இருப்பதாக தோட்டத் தொழிலாளர்கள் வனத்துறையினருக்கு தகவல் கொடுத்தனர். தற்போது இது தொடர்பாக வெளியாகி உள்ள வீடியோ ஒன்றில் மூன்று புலிகள் தேயிலை எஸ்டேட் பகுதியில் இருந்து வனப்பகுதிக்குள் நுழைவது போன்ற வீடியோ காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தற்போது அந்த புலிகளை பிடிக்கும் முயற்சியில் வனத்துறையினர் இறங்கியுள்ளனர். புலிகள் நடமாட்டம் இருப்பதால் அந்தப் பகுதி மக்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என வனத்துறை சார்பில் அறிவுறுத்தல் கொடுக்கப்பட்டுள்ளது.

Next Story

“பாஜகவுக்கு தமிழகத்தின் மீது இருப்பது கோபமல்ல; தீராத வன்மம்” - சு.வெங்கடேசன்

Published on 27/04/2024 | Edited on 27/04/2024
BJP unending anger towards Tamil Nadu says Su. Venkatesan

திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில் மிகக் கடுமையான வெள்ள பாதிப்பு ஏற்பட்டது. அதனைத் தொடர்ந்து தென்மாவட்டங்களான திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களும் அதிக கனமழையினால் பெரிதும் பாதிக்கப்பட்டது. இந்த பாதிப்புகளிலிருந்து பொதுமக்களை மீட்கவும், அவர்களுக்குத் தேவையான நிவாரண உதவிகளை வழங்கிடவும் தமிழ்நாடு அரசு போர்க்கால அடிப்படையில் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டது.

அதே சமயம் மிக்ஜாம் புயல் மற்றும் தென் மாவட்ட வெள்ள பாதிப்புகளுக்கு நிவாரணம் கோரி தமிழக முதலமைச்சரும், தலைமைச் செயலாளரும் மத்திய அரசுக்கு பலமுறை கடிதம் அனுப்பியும் மத்திய அரசு  நிதி வழங்காமல் இருந்தது. இந்த நிலையில்,  தமிழ்நாட்டில் ஏற்பட்ட மிக்ஜாம் புயல் நிவாரண நிதியாக ரூ.285 கோடியை வழங்க மத்திய அரசு ஒப்புதல் வழங்கியுள்ளது. மேலும், தமிழகத்தில் 2023 டிசம்பர் மாதத்தில் ஏற்பட்ட வெள்ள பாதிப்புகளுக்காக ரூ.397 கோடி வழங்கவும் மத்திய அரசு ஒப்புதல் வழங்கியுள்ளது.

அதில் முதற்கட்டமாக ரூ.285 கோடி மிக்ஜாம் புயல் பாதிப்புக்கான நிதியில் இருந்து ரூ.115 கோடியை மத்திய அரசு விடுவித்துள்ளது. அதே போல், வெள்ள பாதிப்புக்காக மத்திய அரசு ஒப்புதல் வழங்கியுள்ள ரூ.397 கோடி நிதியில் இருந்து ரூ.160 கோடியை தமிழ்நாட்டுக்கு மத்திய அரசு விடுவித்துள்ளது. அதே சமயம் கர்நாடகாவிற்கு வறட்சி நிவாரணமாக ரூ.3,454 கோடியை மத்திய அரசு அறிவித்துள்ளது.

மிக்ஜாம் புயல், வெள்ள பாதிப்புகளுக்காக தமிழ்நாடு அரசு ரூ.38,000 கோடி நிவாரணம் வழங்க கோரியிருந்த நிலையில், மத்திய அரசு தமிழ்நாட்டுக்கு குறைந்தபட்ச அளவில் நிவாரண நிதி வழங்கியுள்ளதாக பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் மதுரை நாடாளுமன்ற தொகுதி வேட்பாளர் சு.வெங்கடேசன் பாஜக தமிழகத்திற்கு வஞ்சனைக்கு மேல் வஞ்சனை செய்வதாக குற்றம்சாட்டியுள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், “கர்நாடகாவில் முதல் கட்டம் சாதகமாக இல்லை போல, வறட்சி நிவாரணம் என ரூ.3454 கோடி அறிவிப்பு. தமிழ்நாட்டிற்கு வஞ்சனைக்கு மேல் வஞ்சனை. மிக் ஜாம் புயல் மற்றும் வெள்ளத்திற்கு ரூ.275 கோடி மட்டுமே. தமிழ்நாடு  கேட்டதோ 38,000 கோடி. பாஜகவுக்கு தமிழகத்தின் மீது இருப்பது கோபமல்ல… வன்மம். தீராத வன்மம்” எனக் கடுமையாக சாடியுள்ளார்.