Skip to main content

சீன அதிபர் மாமல்லபுரம் வருவதற்கு 2 ஆயிரம் ஆண்டு தொடர்பே காரணம் தெரியுமா?

Published on 08/10/2019 | Edited on 08/10/2019

சீன அதிபர் ஸி ஜின்பிங் மாமல்லபுரம் வரப் போகிறார். அங்கு பிரதமர் மோடியுடன் முக்கிய பேச்சு நடத்தவிருக்கிறார். இந்த வருகை தொடர்பாக பல முக்கியமான விமர்சனங்கள் பரவுகின்றன. அத்துடன் சீனாவுக்கும் மாமல்லபுரத்துக்கும் இடையிலான 2 ஆயிரம் ஆண்டு தொடர்பும் வெளிவந்துள்ளது. பொதுவாக சீன தலைவர்கள் விளம்பரங்களை விரும்புவதில்லை. சீனா செல்லும் வெளிநாட்டுத் தலைவர்களுக்கும் பெரிய அளரில் விளம்பரம் கொடுப்பதில்லை. ஆனால், இந்தியா வரும் சீனா அதிபருக்கு சென்னையிலிருந்து மாமல்லபுரம் வரை விளம்பர பேனர்கள் வைக்க தமிழக அரசே நீதிமன்றத்தில் அனுமதி பெற்றுள்ளது.

 2 thousand years before the arrival of the Chinese President Mamallapuram  Do you know the reason?

மோடி பிரதமர் ஆனதிலிருந்து தமிழகத்தில் பெரிய அளவில் வரவேற்பு பேனர்கள் வைக்கப்பட்டதில்லை. கோ பேக் மோடி #go_back_modi என்ற எதிர்ப்புதான் உலக அளவில் ட்ரெண்ட் ஆகி வந்திருக்கிறது. இதை போக்கும் வகையில் தமிழகத்தில் தனக்கு மக்கள் மத்தியில் செல்வாக்கு இருப்பதுபோன்ற தோற்றத்தை ஏற்படுத்த மோடி விரும்புகிறார். அவருடைய விருப்பத்தை நிறைவேற்றவே, உயிர்ப்பலியையும் மீறி தமிழக அரசே பேனர் வைக்கும் முடிவுக்கு சென்றிருக்கிறது என்று கூறப்படுகிறது. இந்நிலையில்தான் ஸி ஜின்பிங் ஏன் மாமல்லபுரத்தை தேர்வு செய்தார் என்பதற்கான காரணங்கள் வெளியாகத் தொடங்கியிருக்கின்றன. சமீபகாலமாக தமிழைப் பற்றி பிரதமர் மோடி உயர்வாக பேசுவதற்கான காரணங்களும் புரியத் தொடங்கி இருக்கின்றன.
 

 2 thousand years before the arrival of the Chinese President Mamallapuram  Do you know the reason?

 

பல்லவர்கள் காலத்தில் மாமல்லபுரம் துறைமுகம் வர்த்தகத்தில் செழித்திருந்தது. இங்கு நடைபெற்ற அகழ்வாராய்ச்சிகளில் கி.பி.2 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த சீன களிமண் பானைகள் கண்டெடுக்கப்பட்டதை வரலாற்று ஆய்வாளர் ராஜவேலு குறிப்பிடுகிறார். அதுதவிர, சங்ககாலத்துக்கு பிந்தைய புலவர்களில் ஒருவரான உருத்திரங் கண்ணனார் எழுதிய பட்டினப் பாலையில் மாமல்லபுரம் துறைமுகத்தில் கடலுக்குள் நிற்கும் சீன கப்பல்கள் குறித்த வரிகள் இடம்பெற்றிருக்கின்றன என்றும் அவர் தெரிவித்திருக்கிறார். கி.மு.185 முதல் 149 க்கு இடைப்பட்ட காலத்தில் சீனாவை ஆட்சிசெய்த அரசர் வெய், காஞ்சீபுரத்துடன் வர்த்தகத்தை ஊக்குவித்திருக்கிறார். அந்தக் காலகட்டத்தில் காஞ்சிபுரத்தை ஹுவாங்-சே என்று குறிப்பிட்டிருக்கிறார்கள்.
 

 2 thousand years before the arrival of the Chinese President Mamallapuram  Do you know the reason?

 



 

புத்தமதம் செழித்திருந்த காஞ்சிபுரத்திற்கு சீன வரலாற்று அறிஞர் யுவான் சுவாங் வந்திருக்கிறார். அவர் மாமல்லபுரம் துறைமுகம் வழியாகவே வந்திருக்க வேண்டும் என்று நம்பப்படுகிறது. காஞ்சிபுரத்தில் பல்கலைக்கழகம் சிறப்பாக செயல்பட்டதாக அவர் குறிப்பிட்டிருக்கிறார். 2004 ஆம் ஆண்டுசலுவன் குப்பம் அகழ்வாராய்ச்சியில் சங்க காலத்திலேயே அதாவது 2 ஆயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய காலத்திலேயே துறைமுகமாக செயல்பட்டிருப்பது உறுதி செய்யப்பட்டிருக்கிறது.

 

ஆகவே, தமிழகத்தை காட்டி, சீனாவுக்கும் இந்தியாவுக்கும் நீண்டகால உறவு இருந்ததாக பிரதமர் மோடி நிச்சயமாக தனது உரையில் குறிப்பிடுவார் என்றும், தமிழகத்தின் பெருமைகளை சீனாவுக்கு உணர்த்தியதாக பிரச்சாரம் மேற்கொள்ளப்படும் என்றும் அரசியல் பார்வையாளர்கள் எதிர்பார்க்கிறார்கள்.



 


 

சார்ந்த செய்திகள்

Next Story

படையெடுக்கும் புலிகள்; பாதுகாப்பு வளையத்தில் மூணாறு !

Published on 27/04/2024 | Edited on 27/04/2024
 Invading Tigers; Munnar in the observation ring

கோடை வெயிலின் தாக்கத்தால் வனப்பகுதியை விட்டு வனவிலங்குகள் உணவு மற்றும் தண்ணீர் தேவைக்காக கிராமங்களுக்கு நுழைவது தொடர்கதையாகி வருகிறது. வனத்துறை சார்பில் வனவிலங்குகளுக்கு தண்ணீர் தொட்டிகள் திறக்கப்பட்டு வரும் நிலையில் அதையும் மீறி பல்வேறு இடங்களில் யானை, சிறுத்தை உள்ளிட்ட விலங்குகள் வனத்தை விட்டு வெளியேறி உணவிற்காக கிராமங்களுக்குள் நுழைவது வாடிக்கையாகி வருகிறது.

அண்மையில் மயிலாடுதுறையில் புகுந்த சிறுத்தை தற்பொழுது வரை மர்மமாகவே நீடித்து வருகிறது. இந்நிலையில் தமிழக-கேரள எல்லையான மூணாறு பகுதியில் சர்வ சாதாரணமாக புலி நடமாட்டம் இருப்பது அந்த பகுதி மக்களுக்கு அதிர்ச்சியை கொடுத்துள்ளது. கன்னிமலா பகுதியில் உள்ள தேயிலை எஸ்டேட் பகுதியில் புலிகள் நடமாட்டம் இருப்பதாக தோட்டத் தொழிலாளர்கள் வனத்துறையினருக்கு தகவல் கொடுத்தனர். தற்போது இது தொடர்பாக வெளியாகி உள்ள வீடியோ ஒன்றில் மூன்று புலிகள் தேயிலை எஸ்டேட் பகுதியில் இருந்து வனப்பகுதிக்குள் நுழைவது போன்ற வீடியோ காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தற்போது அந்த புலிகளை பிடிக்கும் முயற்சியில் வனத்துறையினர் இறங்கியுள்ளனர். புலிகள் நடமாட்டம் இருப்பதால் அந்தப் பகுதி மக்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என வனத்துறை சார்பில் அறிவுறுத்தல் கொடுக்கப்பட்டுள்ளது.

Next Story

“பாஜகவுக்கு தமிழகத்தின் மீது இருப்பது கோபமல்ல; தீராத வன்மம்” - சு.வெங்கடேசன்

Published on 27/04/2024 | Edited on 27/04/2024
BJP unending anger towards Tamil Nadu says Su. Venkatesan

திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில் மிகக் கடுமையான வெள்ள பாதிப்பு ஏற்பட்டது. அதனைத் தொடர்ந்து தென்மாவட்டங்களான திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களும் அதிக கனமழையினால் பெரிதும் பாதிக்கப்பட்டது. இந்த பாதிப்புகளிலிருந்து பொதுமக்களை மீட்கவும், அவர்களுக்குத் தேவையான நிவாரண உதவிகளை வழங்கிடவும் தமிழ்நாடு அரசு போர்க்கால அடிப்படையில் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டது.

அதே சமயம் மிக்ஜாம் புயல் மற்றும் தென் மாவட்ட வெள்ள பாதிப்புகளுக்கு நிவாரணம் கோரி தமிழக முதலமைச்சரும், தலைமைச் செயலாளரும் மத்திய அரசுக்கு பலமுறை கடிதம் அனுப்பியும் மத்திய அரசு  நிதி வழங்காமல் இருந்தது. இந்த நிலையில்,  தமிழ்நாட்டில் ஏற்பட்ட மிக்ஜாம் புயல் நிவாரண நிதியாக ரூ.285 கோடியை வழங்க மத்திய அரசு ஒப்புதல் வழங்கியுள்ளது. மேலும், தமிழகத்தில் 2023 டிசம்பர் மாதத்தில் ஏற்பட்ட வெள்ள பாதிப்புகளுக்காக ரூ.397 கோடி வழங்கவும் மத்திய அரசு ஒப்புதல் வழங்கியுள்ளது.

அதில் முதற்கட்டமாக ரூ.285 கோடி மிக்ஜாம் புயல் பாதிப்புக்கான நிதியில் இருந்து ரூ.115 கோடியை மத்திய அரசு விடுவித்துள்ளது. அதே போல், வெள்ள பாதிப்புக்காக மத்திய அரசு ஒப்புதல் வழங்கியுள்ள ரூ.397 கோடி நிதியில் இருந்து ரூ.160 கோடியை தமிழ்நாட்டுக்கு மத்திய அரசு விடுவித்துள்ளது. அதே சமயம் கர்நாடகாவிற்கு வறட்சி நிவாரணமாக ரூ.3,454 கோடியை மத்திய அரசு அறிவித்துள்ளது.

மிக்ஜாம் புயல், வெள்ள பாதிப்புகளுக்காக தமிழ்நாடு அரசு ரூ.38,000 கோடி நிவாரணம் வழங்க கோரியிருந்த நிலையில், மத்திய அரசு தமிழ்நாட்டுக்கு குறைந்தபட்ச அளவில் நிவாரண நிதி வழங்கியுள்ளதாக பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் மதுரை நாடாளுமன்ற தொகுதி வேட்பாளர் சு.வெங்கடேசன் பாஜக தமிழகத்திற்கு வஞ்சனைக்கு மேல் வஞ்சனை செய்வதாக குற்றம்சாட்டியுள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், “கர்நாடகாவில் முதல் கட்டம் சாதகமாக இல்லை போல, வறட்சி நிவாரணம் என ரூ.3454 கோடி அறிவிப்பு. தமிழ்நாட்டிற்கு வஞ்சனைக்கு மேல் வஞ்சனை. மிக் ஜாம் புயல் மற்றும் வெள்ளத்திற்கு ரூ.275 கோடி மட்டுமே. தமிழ்நாடு  கேட்டதோ 38,000 கோடி. பாஜகவுக்கு தமிழகத்தின் மீது இருப்பது கோபமல்ல… வன்மம். தீராத வன்மம்” எனக் கடுமையாக சாடியுள்ளார்.