Skip to main content

பள்ளியில் மின்மோட்டாரை இயக்கிய மாணவன் உயிரிழப்பு-2 ஆசிரியர்கள் சஸ்பெண்ட்

Published on 04/09/2019 | Edited on 04/09/2019

ராமநாதபுரம் மாவட்டம் குண்டுக்கல் வலசை அருகே உள்ள அரசு உயர்நிலைப்பள்ளியில் எட்டாம் வகுப்பு மாணவனை மின்மோட்டாரை இயக்க ஆசிரியர்கள் அறிவுறுத்த, ஆசிரியரின் உத்தரவுபடி மின்மோட்டாரை இயக்கிய எட்டாம் வகுப்பு மாணவன் கார்த்தீஸ்வரன் மின்சாரம் தாக்கி  உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது.

 

teacher


இந்நிலையில் இந்த சம்பவத்தில் மின்மோட்டாரை இயக்க சொல்லிய பள்ளி ஆசிரியர்கள் தமிழரசன், அபிலாஷா ஆகியோரை சஸ்பெண்ட் செய்து முதன்மை தொடக்க கல்வி அலுவலர் உத்தரவு பிறப்பித்துள்ளார். 

பள்ளியில் மின்மோட்டாரை இயக்கிய போது எட்டாம் வகுப்பு மாணவன் மின்சாரம் தாக்கி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது.

 

 

சார்ந்த செய்திகள்