Skip to main content

கே.பி.அன்பழகனுக்குச் சொந்தமான இடங்களில் இருந்து ரூ.1.60 கோடி பறிமுதல்?

Published on 20/01/2022 | Edited on 20/01/2022

 

kl


அதிமுக முன்னாள் அமைச்சர்கள் வீடுகளில் சொத்துக் குவிப்பு புகார் தொடர்பாக லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் கடந்த சில மாதங்களாக தொடர் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். முன்னாள் அமைச்சர்கள் எம்.ஆர்.விஜயபாஸ்கர், சி.விஜயபாஸ்கர், எஸ்.பி.வேலுமணி, கே.சி.வீரமணி, தங்கமணி ஆகியோரது இல்லங்களில் அண்மையில் லஞ்ச ஒழிப்புத்துறை சார்பில் சோதனை நடைபெற்றது.

 

இந்நிலையில், தருமபுரி மாவட்டத்தைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர் கே.பி அன்பழகன் வீட்டில் லஞ்ச ஒழிப்பு போலீசார் இன்று காலை முதல் சோதனை செய்து வருகிறார்கள். இவர் மீது பல்வேறு முறைகேடுகள் தொடர்பாக தொடர் புகார்கள் வந்ததையடுத்து இதுதொடர்பாக லஞ்ச ஒழிப்பு போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். காலையில் தொடங்கிய இந்தச் சோதனை 7 மணி நேரத்தை கடந்தும் தொடர்ந்து வருகிறது.  இந்நிலையில், இந்தச் சோதனையில் இதுவரை 1.60 கோடி ரூபாய் பணம், 3 கிலோ தங்கம், 10 கிலோ வெள்ளி கைப்பற்றப்பட்டதாக லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பான அதிகாரப்பூர்வ விரிவான அறிக்கை விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

 

 

சார்ந்த செய்திகள்