Skip to main content

எல்லைதாண்டி மீன் பிடித்ததாக 13 தமிழக மீனவர்கள் கைது!

Published on 21/02/2019 | Edited on 21/02/2019

 

arrest


எல்லை தாண்டி மீன் பிடித்ததாக தமிழக மீனவர்கள் 13 மூன்று பேரை இலங்கை கடற்படை கைது செய்துள்ளது. ராமநாதபுரம் மாவட்டம் மண்டபத்தில் இருந்து நேற்று இரவு இரண்டு படகுகளில் கடலுக்குச் சென்ற மீனவர்கள் 9 பேர் நெடுந்தீவு அருகே மீன் பிடித்துக் கொண்டிருந்தனர். அப்போது அங்கு வந்த இலங்கை கடற்படையினர் எல்லை தாண்டி வந்ததாக கூறி மீனவர்கள் 9 பேரை யும் அவரது படகுகளுடன் கைது செய்தனர்.

 

அவர்களை காங்கேசன்துறை கடற்படை முகாமுக்குலந்து சென்று விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் இலங்கை கடற்படையினர். இந்த நிலையில் இன்று காலை மேலும் நான்கு  மீனவர்களை இலங்கை கடற்படை கைது செய்து அவர்கள் சென்ற படகை பறிமுதல் செய்து இருக்கிறது.

 

ஒரே நாளில் தமிழக மீனவர்கள் 13 பேர் கைது செய்யப்பட்டுள்ளது மண்டபம் பகுதியில் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

சார்ந்த செய்திகள்