Skip to main content

ஏப்.2 முதல் குடும்ப அட்டைதாரர்களுக்கு 1000 ரூபாய்... தமிழக அரசு அறிவிப்பு

Published on 26/03/2020 | Edited on 26/03/2020

கரோனா தடுப்பு நடவடிக்கைக்காக இந்தியாவில் வரும் ஏப்ரல் 15 தேதி வரை ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதேபோல் தமிழக அரசு அறிவித்திருந்த 144 தடையும்  ஏப்ரல் 15 ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் ஏற்கனவே தமிழக அரசு கரோனா தடுப்பு நடவடிக்கையாக குடும்ப அட்டைதாரர்களுக்கு ஆயிரம் ரூபாய் வழங்கப்படும்  என அறிவித்து இருந்தது.

 

 1000 / - for family cardholders from April 2


இந்நிலையில் தமிழகத்தில் ரேஷன் கார்டுக்கு தலா ஆயிரம் ரூபாய்  ஏப்ரல் 2 முதல் 15 ஆம் தேதி வரை வழங்கப்படும். ஏப்ரல் மாதத்திற்கான அரிசி, பருப்பு, சமையல் எண்ணெய், சர்க்கரையும் விலையில்லாமல் வழங்கப்படும். ரேஷன் கடை ஊழியர்களுக்கு நாளொன்றுக்கு 200 ரூபாய் பயணம் செலவினம், ரேஷன் கடை ஊழியர்களுக்கு தேவையான மாஸ்க் மற்றும் ஆலோசனை வழங்கப்படும்  என கூட்டுறவு துறை தெரிவித்துள்ளது.

 

 

சார்ந்த செய்திகள்