Skip to main content

திருவண்ணாமலை தொகுதிக்காக மோதும் பாஜக.. - விட்டுத்தர தயங்கும் அதிமுக..!

Published on 06/03/2021 | Edited on 06/03/2021

 

Thiruvannamalai constituency bjp admk


சட்டமன்றத் தேர்தலில் அதிமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள பாஜகவுக்கு 20 சட்டமன்ற தொகுதிகளும், காலியாகவுள்ள கன்னியாகுமரி நாடாளமன்ற தொகுதியும் ஒதுக்கப்பட்டுள்ளன. 20 சட்டமன்ற தொகுதிகளில் திருவல்லிக்கேணி, ஆம்பூர், கே.வி.குப்பம், போளுர், திருவண்ணாமலை, பழனி, கோவை போன்ற தொகுதிகளைத் தங்களுக்கு ஒதுக்க வேண்டுமென பாஜக தரப்பில் பட்டியல் தரப்பட்டுள்ளது.

 

பாஜகவின் தமிழக தலைவர் முருகன், திருவண்ணாமலை தொகுதி வேண்டும் என முரண்டு பிடிக்கிறார். போளுர் தொகுதியை பிற்படுத்தப்பட்டோர் அணியின் மாநில துணைத் தலைவர் ஏழுமலை கேட்கிறார். கே.வி.குப்பம் தொகுதி வேண்டுமென முன்னாள் மேயரும் மாநில மகளிரணி செயலாளர்களுள் ஒருவரான கார்த்திகாயினி காய் நகர்த்துகிறார். வானதி சீனிவாசன் கோவையில் ஒரு தொகுதியைக் குறிவைத்துள்ளார்.

 

இதில் திருவண்ணாமலை தொகுதியில் ஆரம்பத்தில் போட்டியிட ஆர்வம் காட்டிய தொகுதி பொறுப்பாளர் தணிகைவேல், கள நிலவரத்தைப் பார்த்து வேண்டாம் என ஒதுங்கிக்கொண்டதாக கூறப்படுகிறது. தங்கள் கட்சியின் மாவட்ட நிர்வாகிகளிடம் நான் போட்டியிடவில்லை எனச் சொல்லியுள்ளார். இந்நிலையில் மீண்டும் மாநிலத் தலைவர் வழியாக திருவண்ணாமலை தொகுதி வேண்டும், எனக்கு வாங்கி தாருங்கள் என கேட்பதாகவும், அவருக்கு மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீத்தாராமன் சப்போர்ட் செய்வதாகவும் கூறப்படுகிறது.

 

இதுகுறித்து பாஜகவைச் சேர்ந்த சில பிரமுகர்கள் நம்மிடம், தமிழக தேர்தல் பொறுப்பாளராக சில தேசிய தலைவர்கள் இருந்தாலும், உண்மையில் தமிழக தேர்தல் களத்தில் பாஜகவுக்காக பணியாற்றுபவர் முன்னாள் மத்தியமைச்சரும், இப்போது பெரிய பதவியில் உள்ள ஆந்திரா பிரமுகர்தான். அவர்தான் யாருக்கு சீட் தரலாம் என்பதைக் கூட முடிவு செய்கிறார். நாங்கள் வாங்கியுள்ள 20 தொகுதிகளில் பாதி தொகுதிகள் எதுஎதுவென முடிவாகிவிட்டது. அதற்கான வேட்பாளர்களும் முடிவாகிவிட்டார்கள்.

 

வேலூர் மாவட்டம் கே.வி.குப்பம் தொகுதி கார்த்திகாயினிக்கு என்பதும் உறுதியாகிவிட்டது. திருவண்ணாமலை மாவட்டம் போளுர் தொகுதிக்கு சி.ஏழுமலை என்பது 90 சதவிதம் உறுதி. இதேபோல் வானதி சீனிவாசன் உட்பட சிலருக்கான தொகுதிகளும் முடிவாகிவிட்டது. இந்நிலையில் திருவண்ணாமலை தொகுதியைக் குறிவைத்த வர்த்தகர் அணி மாநில துணைத் தலைவர் தணிகைவேல், பின்பு வேண்டாம் என ஒதுங்கினார். திருவண்ணாமலை தொகுதியில் எ.வ.வேலுவுக்கு நெருக்கடி தருகிறேன் எனச் சொல்லியே பாஜகவில் இணைந்தவர். அவருக்கான அனைத்து வசதிகளும் செய்து தரப்படும் என எங்கள் தலைமையும் வாக்குறுதி தந்தது. தொகுதியில் செலவு செய்து வலம் வந்தவர், பின்னர் திடீரென சைலண்டாகிவிட்டார்.

 

Thiruvannamalai constituency bjp admk

 

தொகுதிகளுக்கான மறைமுக பேச்சுவார்த்தையின்போது அதிமுக தலைமை, மாவட்ட தலைநகரம் அமைந்துள்ள தொகுதியை எங்களுக்கு ஒதுக்க தயக்கம் காட்டினர். ஆனாலும் அந்த தொகுதியில் வேலுவை எதிர்த்துப் போட்டியிட அதிமுக பிரமுகர்கள் தயக்கம் காட்டியதை தொடர்ந்து எங்களுக்கே தள்ளிவிட முடிவு செய்தது. தணிகைவேல் ஆர்வம் காட்டாததால் நாங்கள் அதில் ஆர்வம் காட்டவில்லை. இப்போது மீண்டும் தொகுதி வேண்டுமென தலைவர் முருகனுக்கு நெருக்கடி தந்துவருகிறார் தணிகைவேல். ஆளும்கட்சியான அதிமுக பிரமுகர்களே வேலுவை எதிர்த்து வெற்றிபெற முடியாது என பின்வாங்கும் சூழ்நிலையில் இவர் இப்போது மீண்டும் சீட் கேட்பது எங்களுக்கு சந்தேகத்தை ஏற்படுத்துகிறது என்றார்கள்.

 

திருவண்ணாமலை தொகுதி பாஜக கேட்கும் பட்டியலில் உள்ளது. அந்த தொகுதிக்கான வேட்பாளரை தேர்வு செய்து தயாராக வைத்திருப்பதால், அதனை விட்டுத்தர அதிமுக தலைமை தயக்கம் காட்டுகிறது. அதற்கான பேச்சுவார்த்தைகள் நடைபெற துவங்கியுள்ளன. இந்நிலையில், பாஜக போட்டியிட விரும்பும்  தொகுதிகள்  மற்றும் வேட்பாளர்கள் குறித்த உத்தேச பட்டியல் வெளியாகியுள்ளது. அதில் தணிகைவேல் -  திருவண்ணாமலை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

ஸ்ட்ராங் ரூம் சிசிடிவி கேமராக்கள் செயலிழப்பு; நீலகிரியில் பரபரப்பு

Published on 27/04/2024 | Edited on 27/04/2024
Malfunction of strong room CCTV cameras; Excitement in the Nilgiris

18ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக கடந்த 19ஆம் தேதி தொடங்கி வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு வாக்குப்பதிவு நடைபெற்றது. இதன் ஒரு பகுதியாக நாடு முழுவதும் 13 மாநிலங்களில் உள்ள 88 மக்களவைத் தொகுதிகளில் நேற்று (26.04.2024) 2ஆம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்றது.
 

தமிழகத்தில் தேர்தல் மக்களவை தேர்தல் முடிந்திருக்கும் நிலையில் வாக்கு பெட்டிகள் அனைத்தும் ஸ்ட்ராங் ரூம் எனப்படும் ஐந்து அடுக்கு பாதுகாப்பு அறைக்குள் வைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் நீலகிரியில் ஸ்ட்ராங் ரூமில் வைக்கப்பட்டிருந்த சிசிடிவி கேமராக்கள் திடீரென செயலிழந்தது பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

நீலகிரி அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் வாக்கு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ளது. 200க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். அருகிலுள்ள அறையிலிருந்து கண்காணிப்பதற்காக அனைத்து அரசியல் கட்சியினருக்கும் பொதுவாக ஒரு அறை ஒதுக்கப்பட்டுள்ளது. இந்தநிலையில் இன்று மாலை திடீரென 173 சிசிடிவி கேமராக்கள் செயலிழந்தது. பின்னர் சுமார்  20 நிமிடங்களுக்கு பிறகு மீண்டும் சிசிடிவி கேமராக்கள் வழக்கம் போல் செயல்பட தொடங்கி இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

அதீத வெப்பம் காரணமாக சிசிடிவி கேமராக்கள் செயலிழந்திருக்கலாம் என மாவட்ட ஆட்சியர் தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் வாக்கு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள அறையில் சிசிடிவி காட்சிகள் திடீரென செயலிழந்தது அரசியல் கட்சியினர் இடையே பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. நீலகிரியில் திமுக சார்பில் ஆ.ராசாவும், அதிமுக கூட்டணி சார்பில் லோகேஷ் தமிழ்ச்செல்வனும், பாஜக கூட்டணியில் எல்.முருகனும், நாம் தமிழர் கட்சி சார்பாக ஜெயக்குமாரும் போட்டியிடுகின்றனர் என்பது குறிப்பிடத்தகுந்தது.

Next Story

'பாஜகவின் செயலை மக்கள் பார்த்துக்கொண்டுதான் இருக்கிறார்கள்'-முதல்வர் மு.க.ஸ்டாலின் கருத்து 

Published on 27/04/2024 | Edited on 27/04/2024
 'Our people are watching the work of the BJP' - Chief Minister M. K. Stalin's opinion

18ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக கடந்த 19ஆம் தேதி தொடங்கி வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு வாக்குப்பதிவு நடைபெற்றது. இதன் ஒரு பகுதியாக நாடு முழுவதும் 13 மாநிலங்களில் உள்ள 88 மக்களவைத் தொகுதிகளில் நேற்று (26.04.2024) 2ஆம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்றது.

இந்நிலையில் 'நிதியும் கிடையாது, நீதியும் கிடையாது' என பாஜக அரசு தமிழகத்தை வஞ்சிப்பதாக தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இதுகுறித்து எக்ஸ் வலைதளத்தில் வெளியிட்டுள்ள பதிவில் 'மிக்ஜாம் புயல் மற்றும் வெள்ளப் பாதிப்புகளுக்கான நிவாரணமாகத் தமிழ்நாடு கோரியது 37,907 கோடி ரூபாய். பாதிக்கப்பட்ட மக்களுக்கு உடனடி நிவாரணமாகவும், உட்கட்டமைப்புகளை மறுசீரமைக்கவும் தமிழ்நாடு அரசு மாநிலப் பேரிடர் நிதியில் இருந்து இதுவரை செலவு செய்துள்ளது 2,477 கோடி ரூபாய்.

ஆனால், ஒன்றிய பா.ஜ.க அரசு தற்போது அறிவித்திருப்பதோ வெறும் 276 கோடி ரூபாய். இதுவும் நாம் உச்சநீதிமன்றத்தை நாடிய பிறகே அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டுக்கு நிதியும் கிடையாது, நீதியும் கிடையாது என வஞ்சிக்கும் ஒன்றிய பாஜக அரசின் ஒவ்வொரு செயலையும் நம் மக்கள் பார்த்துக்கொண்டுதான் இருக்கிறார்கள்!' எனத் தெரிவித்துள்ளார்.