Skip to main content

ராகுலிடம் பேசிய எடப்பாடி! கோபத்தில் மோடி! அரசியல் பரபரப்பு பின்னணி!

Published on 23/06/2022 | Edited on 24/06/2022

 

telephone conversation edappadi palaniswami and congress leader rahul gandhi

 

பா.ஜ.க.வுடன் நெருக்கமாகவும், அதனுடன் கூட்டணியாகவும், இருக்கும் எடப்பாடி பழனிச்சாமி, காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தியிடம் ரகசியமாக பேசிய விசயம் அம்பலமாகியிருக்கிறது! இந்த ரகசிய பேச்சை அறிந்து எடப்பாடி மீது செம காட்டமாக இருக்கிறது பா.ஜ.க. தலைமை! 

 

அ.தி.மு.க.வில் ஒற்றைத் தலைமையை உருவாக்கி, அதனை தனதாக்கி பொதுச்செயலாளராக அமர வேண்டும் என திட்டமிட்டார் எடப்பாடி. அதற்கு எதிர்ப்பு தெரிவித்த ஓ.பி.எஸ்.சை கட்சியிலிருந்தே தூக்கி எறியவேண்டி அனைத்தையும் செய்து முடித்தார் எடப்பாடி. ஆனால், நீதிமன்றத்தின் உத்தரவினால் அது தடுத்து நிறுத்தப்பட்டிருக்கிறது. 

 

இந்த திட்டத்திற்கிடையே, ராகுல்காந்தியிடம் பேசியிருக்கிறார் எடப்பாடி. அரசியல் தேர்தல் வியூக வகுப்பாளரான சுனில், எடப்பாடியின் நண்பர். இவரிடம் அடிக்கடி ஆலோசனை கேட்டு வருகிறார். அ.தி.மு.க.வில் ஏற்பட்ட விவகாரங்களைத் தொடர்ந்து அண்மையில் எடப்பாடியைச் சந்தித்தார் சுனில். அப்போது அரசியல் ரீதியாக பல விசயங்களை அலசியுள்ளனர். இதனையடுத்து, ராகுல்காந்தியை சந்தித்த சுனில் தனது ஃபோனிலிருந்து எடப்பாடியை தொடர்புகொண்டுள்ளார். தொடர்பு கிடைத்ததும், எடப்பாடி பழனிசாமியிடம் அவர் பேசிவிட்டு ஃபோனை ராகுலிடம் கொடுத்துள்ளார் சுனில். 

 

telephone conversation edappadi palaniswami and congress leader rahul gandhi

 

ஃபோனை வாங்கிய எடப்பாடி, ராகுலிடம் நலம் விசாரித்ததோடு, விசாரணை என்ற பெயரில் ராகுல்காந்தியை அமலாக்கத்துறை தொந்தரவு கொடுப்பதைச் சொல்லி பா.ஜ.க.வை எதிர்மறையாக விமர்சித்துள்ளார். ராகுலுக்கும் எடப்பாடிக்குமான ஃபோன் உரையாடல் 5 நிமிடம் நடந்துள்ளது. ராகுல் கொடுத்த தைரியம் எடப்பாடிக்கு உற்சாகப்படுத்தியுள்ளது.

 

அதன்பிறகு, ராகுலிடம் சுனில் சிறிது நேரம் பேசிவிட்டு தொடர்பைத் துண்டித்துக் கொண்டார். ராகுலிடம் எடப்பாடி பேசிய விவகாரத்தை அடுத்த 48 மணிநேரத்தில் மோப்பம் பிடித்த உளவுத்துறை, அதனை பிரதமர் நரேந்திர மோடிக்கு தெரியப்படுத்தியிருக்கிறது. இதனை அறிந்து செம காட்டமாகியிருக்கிறார் நரேந்திர மோடி! 

 

இந்த நேரத்தில் தான், பொதுக்குழு விவகாரத்தில் எடப்பாடிக்கு சாதகமாக தீர்ப்பு வர... மேல்முறையீடு செய்யுங்கள் என்று ஓ.பி.எஸ்.சுக்கு டெல்லியில் இருந்து தகவல் வந்தது. இதனையடுத்து சுறுசுறுப்பான ஒபிஎஸ் டீம், அவசரம் அவசரமாக மனு தயாரித்து நள்ளிரவில் இரு நீதிபதிகள் அடங்கிய அமர்வு முன்பு தாக்கல் செய்தது. அதில் ஓ.பி.எஸ்.சுக்கு சாதகமாகவும், எடப்பாடிக்கு எதிராகவும் தீர்ப்பளிக்கப்பட்டது. 

 

மேலும், பொதுக்குழுவைப் புறக்கணிக்க முடிவு செய்திருந்த ஓ.பி.எஸ்.சுக்கு, டெல்லி கொடுத்த யோசனையின்படி கலந்துகொண்டார் என்கிறார்கள். பொதுக்குழுவின் இடையில் வெளிநடப்பு செய்த ஓ.பி.எஸ். டெல்லிக்கு சென்றிருக்கிறார். 

 

எடப்பாடி- ராகுல் குறித்து விசாரித்தபோது, "ஜனாதிபதி தேர்தலில் எதிர்க்கட்சிகளின் பொதுவேட்பாளரை ஆதரிக்க வேண்டும் என ராகுல் கேட்டுக்கொண்டார். இதைத்தாண்டி எந்த ரகசிய அரசியலும் கிடையாது" என்கிறார்கள் எடப்பாடிக்கு நெருக்கமானவர்கள்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

“பிரதமர் வேட்பாளர் பிரியங்கா காந்தி” - காங்கிரஸில் இணையும் மன்சூர் அலிகான் அதிரடி

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
mansoor ali khan willing to join congress

இந்திய ஜனநாயகப் புலிகள் என்ற அரசியல் கட்சியை நடத்தி வரும் மன்சூர் அலிகான், நாடாளுமன்ற தேர்தலில் வேலூர் தொகுதியில் சுயேட்சை வேட்பாளராக போட்டியிட்டார். அப்போது பிரச்சாரத்தின் போது அவருக்கு உடல்நலக்குறவு ஏற்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றது அரசியல் வட்டாரங்களில் பரப்பரப்பாக பேசப்பட்டது. 

இந்த நிலையில் மன்சூர் அலிகான் காங்கிரஸில் ராகுல் காந்தி முன்னிலையில் இணைய விருப்பம் தெரிவித்துள்ளார். இது தொடர்பான கடிதத்தை சத்தியமூர்த்தி பவனில் தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகையை சந்தித்து கொடுத்துள்ளார். பின்பு செய்தியாளர்களைச் சந்தித்த அவர், “பிரதமர் மோடி ஒரு விஷப்பாம்பை விட மோசமாக விஷம் கக்கிற அளவிற்கு, தேசத்தில் பிரிவை ஏற்படுத்தி ரத்த ஆறு ஓடவைத்து, மதக் கலவரத்தை உண்டு பண்ணி, எப்படி மணிப்பூர், குஜராத்தில் பண்ணினாரோ அதையே இப்போதும் பண்ண நினைக்கிறார்.  மன்மோகன் சிங் கால் தூசிக்கு கூட இவர் ஈடாகமாட்டார். மன்மோகன் சிங் 2006ல் கருணை அடிப்படையில் பேசியதை திரித்து ராஜஸ்தானில் பேசியுள்ளார். அவர் மனிதராக இருக்கவே தகுதியற்றவர். தேர்தல் ஆணையம் பிரதமர் மீது கடும் நடவடிக்கை எடுத்து கைது செய்து திகார் ஜெயிலில் உடனடியாக அடைக்க வேண்டும்.   

காங்கிரஸில் இணைய போன வருஷம் நவம்பரிலே கடிதம் கொடுத்திருந்தேன். அது என் தாய் கழகம். 15 வருஷங்களுக்கு முன்னால் நான் காங்கிரஸில் இருந்தேன். திண்டிவனம் ராமமூர்த்தியுடன் கருத்து வேற்பாடு ஏற்பட்டதால் விலகிவிட்டேன். பின்பு மீண்டும் சேர கடிதம் கொடுத்தேன். ஆனால், சரியாகப் போய் சேரவில்லை போல. அதனால்தான் கட்சியை தொடங்கி என் கைக்காசைப் போட்டு செலவு செய்து, போராடி இந்தத் தேர்தலை சந்தித்திருக்கிறேன். என்னுடைய ஆதரவு இந்தியா கூட்டணிக்குதான். சோனியா காந்தியின் மகள் பிரியங்கா காந்தியை பிரதமர் வேட்பாளராகப் பார்க்கிறேன். அந்த மகராசிக்கு பிரதமருக்கான முகராசி உள்ளது. அல்லது ராகுல் காந்தி பிரதமர் ஆவார் என்ற என் ஆசையையும் நிலைப்பாட்டையும் தெரியப்படுத்தி இருந்தேன். 10 வருடங்கள் நாட்டை ஆண்ட பாரதப் பிரதமர் ஒரு வெங்காயம் உரிச்சு போடல. நாட்டு மக்களை பிச்சைக்காரங்க ஆக்கிட்டாங்க. கோவணத்தை உருவிட்டு வெளிநாட்டில் இருந்து இவரைக் கொல்ல சதி செய்கிறார்கள் என உளறிக் கொண்டிருக்கிறார். ஒரு சாதாரண குடிமகனாக அவரைத் தூக்கி உள்ளே போடுங்க. இல்லைன்னா போராட்டம் வெடிக்கும்” என்றார்.

Next Story

முன்னாள் அமைச்சர் சி. விஜயபாஸ்கர் நீதிமன்றத்தில் ஆஜர்!

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
Former Minister C. Vijayabaskar appears in court
கோப்புப்படம்

விராலிமலை சட்டமன்றத் தொகுதி உறுப்பினராக உள்ள முன்னாள் அமைச்சர் சி. விஜயபாஸ்கர் கடந்த அதிமுக ஆட்சியில் அமைச்சராக இருந்த காலகட்டத்திலேயே ஊழல்கள், முறைகேடுகள் எனப் பல்வேறு குற்றச்சாட்டுகளில் சிக்கினார். இதனால் 2017 ஆம் ஆண்டு அமைச்சராக இருந்தபோதே அவருடைய வீடு உள்ளிட்ட பல்வேறு இடங்களில் சோதனை நடத்தப்பட்டது. ஆர்.கே. நகர் இடைத்தேர்தலில் 89 கோடி ரூபாய் பணப் பட்டுவாடா உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் வருமான வரித்துறையினர், அமலாக்கத்துறையினர், கனிமவளத் துறையினர் எனப் பல்வேறு துறையினர் சோதனை நடத்தினர்.

அமைச்சராக இருந்த 2021 அக்டோபர் 18 ஆம் தேதி 2016 முதல் 2021 வரை காலக்கட்டத்தில் வருமானத்திற்கு அதிகமாக 27 கோடி ரூபாய் அசையும் மற்றும் அசையா சொத்துகளை வாங்கிக் குவித்ததாக லஞ்ச ஒழிப்புத் துறை போலீசார் சி. விஜயபாஸ்கர் மீது வழக்குப் பதிவு செய்தனர். வீடு உள்ளிட்ட அவருக்கு தொடர்புடைய 56 இடங்களில் சோதனை நடத்தினர். சோதனையில் 23.85 லட்சம் ரூபாய் ரொக்கம், 4.87 கிலோ தங்கம், 136 கனரக வாகன சான்றிதழ்கள், பல்வேறு ஆவணங்களை லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் கைப்பற்றினர்.

அதனைத் தொடர்ந்து முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கரும் அவருடைய மனைவியும் வருமானத்திற்கு அதிகமாக 35.29 கோடி ரூபாய் சொத்து சேர்த்ததாக புதுக்கோட்டை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் 216 பக்க குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்தனர். 800க்கும் மேற்பட்ட ஆவணங்கள் அந்த குற்றப்பத்திரிகையில் இணைக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் புதுக்கோட்டை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் இந்த வழக்கு தொடர்பாக விஜயபாஸ்கரும், அவரது மனைவி ரம்யாவும் இன்று (25.04.2024) நேரில் ஆஜராகியுள்ளனர். இதனையடுத்து நீதிமன்றம் இந்த வழக்கை ஜூன் 12ஆம் தேதிக்கு ஒத்தி வைத்துள்ளது.