Skip to main content

கோபம் வருமா வராதா? எத்தனை நாளைக்கு சகித்துக்கொள்வது? ரஜினியை போட்டுதாக்கும் சீமான்

Published on 15/04/2019 | Edited on 15/04/2019

 

நக்கீரன் இணையதளத்திற்கு நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் சிறப்பு பேட்டி அளித்தார்.
 

தொடர்ந்து நீர் மேலாண்மை பற்றி உங்கள் கட்சி பேசுகிறது. சமீபத்தில் பேசிய ரஜினி, நதிநீர் இணைப்பு பாஜக தேர்தல் அறிக்கையில் இருக்கிறது. பாஜக ஆட்சி மீண்டும் ஆட்சி அமைத்தால் அதனை சாத்தியப்படுத்த வேண்டும் என்று பேசியிருக்கிறார். இதுபற்றி உங்கள் கருத்து என்ன?

 

rajini



இது ஒரு ஏமாற்று. ஏரி, குளம், ஊரணி, கிணறு நாம் உருவாக்கியது. ஆறுகளை நாம் உருவாக்கவில்லை. அதனை உருவாக்கியது அருவி. அது தனக்காக பாதை கண்டு ஓடியது. எங்கு மேடு, எங்கு பள்ளம் என அதற்கு ஏற்ப ஓடியது. அதனை இணைப்பது என்பது முட்டாள்கள் கூடி முடிவெடுப்பது போன்ற செயல். 





 

ஆறுகளை அதன் போக்கில் ஓடவிட்டு, தேவையென்றால் அதன் பக்கத்தில் சேமித்துக்கொள்லாமே தவிர, அதன் போக்கை திருப்பக்கூடாது. உடலில் ரத்த நாளங்கள் போல, பூமியின் ரத்த நாளங்கள் ஆறுகள். அதனை இங்கு திருப்புவேன் அங்கு திருப்புவேன் என்பதா? ஒரு சாதாரண ரோடு போடுவதற்கே பல காடுகளை அழிக்கிறோம், மலைகளை அழிக்கிறோம். அதனை எதிர்த்தே போராடிக்கொண்டிருக்கிறோம். ஆறுகளை திசை திருப்புகிறேன் என்றால் எவ்வளவு லட்சக்கணக்கான காடுகள், மலைகள், விவசாய நிலங்கள், உயிரிழனங்களை அழிக்கணும். ஒரு அறிவும் இல்லாமல் நதிகளை இணைக்கிறோம் என்று சொல்லுகிறார்கள்.

 

நதிகள் எங்கு இணையாமல் இருக்கிறது. மனங்கள்தான் இணைய மறுக்கிறது. காவேரி ஒரே நதியா. மூன்று நதியா. ஒரே நதிதான். ஏன் எனக்கு தண்ணீர் வரவில்லை. உங்களுக்கு நதிநீர் சிக்கல் இருக்கிறது. நீங்கள் முதல் அமைச்சராக வேண்டும் என்று ஆசைப்படும்போது காவிரி பற்றி என்ன சொல்கிறீர்கள் என்றால் பதில் இல்லை. ஆகையால் நதிகளை இணையுங்கள் என்கிறார். காவிரியோட எந்த நதியை இணைப்பார்கள். அவரை சொல்ல சொல்லுங்கள். காவிரி இணைய மறுத்ததா? தர மறுக்கிறான். 150 டிஎம்சி தண்ணீர் தர மறுப்பவனை இணையலாம் என்றால் துண்டாக போய்விடமாட்டானா? எங்களை அடித்து விரட்டிக்கொண்டிருப்பவனிடம் நதிகளை இணைக்கலாம் என்று சொன்னால் ஏற்றுக்கொள்வானா? எங்களுக்கு கொடுக்க வேண்டியதை கொடுத்துவிட்டால் நதிகள் இணைப்புக்கு பேச்சே இருக்காது. 

 

seeman


 

ஓயாம இதையே பேசிக்கொண்டிருப்பது. நதிகள் இணைப்புக்கு ஒரு கோடி ரூபாய் கொடுப்பதாக சொன்னார். இது சாத்தியமில்லை என்று அப்பவே சொன்னோம். ஒரு புகழ் பெற்ற கலைஞன், புரிந்து பேச வேண்டும். சம்மந்தம் இல்லாமல் பேசக்கூடாது. நாங்கள் எவ்வளவு நீர் மேலாண்மை குறித்து கொடுத்துள்ளோம். எவ்வளவு ஆக சிறந்த திட்டங்களை கொடுத்திருக்கிறோம். அதைப்பற்றியெல்லாம் பேசாமல் பாஜகவை பற்றி மட்டும் பேசுவது என்ன இது. அது தேவையில்லாததுதானே உங்களுக்கு. 



நீங்க ஷீட்டிங் போறீங்கன்னா, ஷீட்டிங்தான் போகணும். நடிக்கப்போறீங்கன்னா, நடிக்கத்தான் போகணும். நதிநீரை இணைக்கணுமுன்னா இணைத்துக்காட்டுங்கள் பார்ப்போம். மக்களை ஏமாற்றும் வேலை. என்னை முட்டாள் என்று நினைத்து பேசிக்கொண்டிருக்கக்கூடாது. அப்போ கோபம் வருமா வராதா. எத்தனை நாளைக்கு சகித்துக்கொள்வது. ஒரு கோடி கொடுப்பதாக சொன்னீர்கள். எங்கு கொடுத்தீர்கள். ஒரு கோடியை வைத்து ஒரு கிலோ மீட்டர் நதியை இணைத்துவிடலாமா. இதையெல்லாம் ஒரு நகைச்சுவை நடிகர் கூட பேசக்கூடாத ஒன்னு. இதனை ஒரு உயர்ந்த இடத்தில் இருக்கும் நடிகர் இப்படி பேசிக்கொண்டு அலையலாமா? இயற்கையை நேசிப்பவன், இயற்கையை படிப்பவன் இதனை எப்படி பார்ப்பான். அப்படி பார்ப்பதுதான் விமர்சிக்கிறது என்று ஒன்றும் இல்லை.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

‘கரும்பு விவசாயி’ சின்னம் பெற்ற வேட்பாளரின் வேட்புமனு நிராகரிப்பு!

Published on 28/03/2024 | Edited on 28/03/2024
Rejection of the nomination of the candidate with the sugarcane farmer symbol

நாட்டின் 18 ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு, மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்படவுள்ள நிலையில், முதற்கட்டமாகத் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்துவிட்டது.

அதே சமயம் தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் நேற்று (27.03.2024) முடிவடைந்தது. அந்த வகையில் 39 மக்களவை தொகுதிகளுக்கு 1749 வேட்பு மனுக்கள் பெறப்பட்டன. அதிகபட்சமாக கரூர் தொகுதியில் 62 வேட்பாளர்கள் வேட்பு மனுவைத் தாக்கல் செய்திருந்தனர். அதனைத் தொடர்ந்து இன்று (28.03.2024) வேட்புமனு பரிசீலனை நடைபெற்றது. அதாவது 39 மக்களவைத் தொகுதிகளில் தாக்கலான வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை நிறைவடைந்துள்ளது. வேட்புமனுக்களை திருப்பப் பெற மார்ச் 30 ஆம் தேதி கடைசி நாள் ஆகும்.

இதற்கிடையே தேர்தல் சின்னம் தொடர்பான குழப்பம் நாம் தமிழர் கட்சிக்கு ஏற்பட்டது. அதாவது கடந்த தேர்தல்களில் நாம் தமிழர் கட்சிக்கு கொடுக்கப்பட்டிருந்த ‘கரும்பு விவசாயி’ சின்னம் இந்த தேர்தலில் கர்நாடகாவைச் சேர்ந்த பாரதிய பிரஜா ஐக்கிய கட்சிக்கு ஒதுக்கப்பட்டது. முதலில் வருபவருக்கே சின்னம் என்ற அடிப்படையில் கரும்பு விவசாயி சின்னம் அக்கட்சிக்கு வழங்கப்பட்டதாகக் தேர்தல் ஆணையத்தின் சார்பில் தெரிவிக்கப்பட்டது. அதே சமயம் நாம் தமிழர் கட்சிக்கு ‘மைக்’ சின்னம் வழங்கப்பட்டது.

Rejection of the nomination of the candidate with the sugarcane farmer symbol

இத்தகைய சூழலில் திருவள்ளுர் நாடாளுமன்ற தொகுதிக்கு பாரதிய பிரஜா ஐக்கிய கட்சி சார்பில் கந்தன் என்பவர் வேட்பு மனு தாக்கல் செய்திருந்தார். இந்நிலையில் பாரதிய பிரஜா ஐக்கிய கட்சி சார்பில் திருவள்ளூர் நாடாளுமன்ற தொகுதிக்கு வேட்புமனு தாக்கல் செய்த கந்தனின் வேட்பு மனு நிராகரிக்கப்பட்டுள்ளது. அவர் தாக்கல் செய்திருந்த வேட்பு மனுவில் சுயேட்சை என்றும் சில இடங்களில் பாரதிய பிரஜா ஐக்கிய கட்சி என்றும் குறிப்பிட்டுள்ளார். இதனை நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர் ஜெகதீஷ் சந்தர் சுட்டிக்காட்டி கந்தனின் வேட்பு மனுவை நிராகரிக்க வேண்டும் என கோரிக்கை வைத்தார். இதனை ஏற்றுக்கொண்ட திருவள்ளூர்  மாவட்ட ஆட்சியரும், தேர்தல் நடத்தும் அதிகாரியுமான பிரபு சங்கர் கரும்பு விவசாயி சின்னம் பெற்ற கட்சியின் வேட்பாளர் கந்தனின் வேட்பு மனுவை நிராகரித்து அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளார். 

Next Story

'நாம் தமிழர் கட்சிக்கு மைக் சின்னம்' - அதிகாரப்பூர்வமாக அறிவித்த சீமான்

Published on 27/03/2024 | Edited on 27/03/2024
'Mike symbol for Naam Tamilar Party'-Seeman official announcement

நாட்டின் 18 ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு, மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்படவுள்ள நிலையில், முதற்கட்டமாகத் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது.

இந்த தேர்தலில் நாம் தமிழர் கட்சி தனித்துப் போட்டியிடும் நிலையில், சின்னம் தொடர்பான பிரச்சனையில் சிக்கியிருந்தது. சின்னம் உறுதியாகும் முன்னரே 40 தொகுதிகளில் போட்டியிடும் வேட்பாளர்களை அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அறிமுகப்படுத்தி இருந்தார். குறிப்பாக நாம் தமிழர் கட்சியில் கிருஷ்ணகிரி தொகுதியில் வீரப்பன் மகள் வித்யா ராணி அறிவிக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் நாம் தமிழர் கட்சிக்கு ஒலிவாங்கி (mike) சின்னம் ஒதுக்கப்பட்டதை அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.

இதற்கான செய்தியாளர் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது. இதில் பேசிய சீமான், ''மாற்றத்திற்கான எளிய மக்களின் புரட்சி என்ற முழக்கத்தை முன்வைத்து தேர்தல் அறிக்கையை வெளியிட்டுள்ளோம். தேர்தல் ஆணையம் தன்னாட்சி அமைப்பாக செயல்படவில்லை. இந்த தேர்தலில் நாம் தமிழர் கட்சி ஒலிவாங்கி ( MIKE) சின்னத்தில் போட்டியிடும். நாம் தமிழர் எப்படி 7 விழுக்காடு வாக்கை பெற்றது என்பதுதான் எல்லோருக்கும் வியப்பு. இந்த தேர்தலில் என்ன நடக்கும் என ஜூன் 4 ஆம் தேதி பார்ப்போம்'' என்றார்.

தொடர்ந்து செய்தியாளர்கள் மதிமுக போல விசிகவும் பானை சின்னம் ஒதுக்க வேண்டும் என நீதிமன்றத்தை நாடியுள்ளது குறித்து கேள்வி எழுப்பினர். அதற்கு, ''மதிமுக, விசிக, பாஜக கூட்டணியில் இல்லை அதனால் சின்னம் கிடைக்கவில்லை. பாஜக கூட்டணியில் உள்ளதால் அமமுக டி.டி.வி. தினகரனுக்கு குக்கர் சின்னமும், த.மா.கா. ஜி.கே. வாசனுக்கு சைக்கிள் சின்னமும் ஒதுக்கப்பட்டுள்ளது. பாஜக உடன் கூட்டணி வைத்திருந்தால் நாங்கள் கேட்ட சின்னம் கிடைத்திருக்கும். ஒரு தொகுதியில் போட்டியிட்டால் பம்பரம் சின்னம் இல்லை என்று சொல்கிறதே தேர்தல் ஆணையம், திருமாவளவன் இரண்டு தொகுதிகளில் போட்டியிடுகிறாரே அவர் கேட்கும் சின்னத்தை கொடுங்களேன். அறம் சார்ந்து நில்லுங்க'' என்று பதிலளித்தார்.