Skip to main content

நாடாளுமன்றத் தேர்தலுக்குத் தயார்: டி.டி.வி. தினகரன்

Published on 03/08/2018 | Edited on 03/08/2018
T. T. V. Dhinakaran


டிசம்பர், ஜனவரி மாதங்களில் நாடாளுமன்றத் தேர்தல் வந்தாலும் அதனை சந்திக்க தயாராக இருக்கிறோம் என்று டி.டி.வி. தினகரன் கூறியுள்ளார். 
 

அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் துணைப் பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன் பெங்களூருவில் செய்தியாளர்களை சந்தித்தார்.
 

அப்போது அவர் கூறியதாவது, 
 

நாடாளுமன்றத் தேர்தலில் எப்படி போட்டியிட்டாலும் 37 தொகுதிகளில் வெற்றி பெறுவோம். காங்கிஸ் கூட்டணியா என்று இப்போது எதுவும் சொல்ல முடியாது. காங்கிரஸ், திமுக கூட்டணியில் உள்ளது. அதிலிருந்து விலகி வரட்டும், பின்னர் அதைப்பற்றி பேசலாம். ஒவ்வொரு தொகுதியிலும் வேட்பாளர்கள் 3, 4 பேர் தகுதியானவர்கள் உள்ளனர். 
 

 

 

டிசம்பர், ஜனவரி மாதங்களில் நாடாளுமன்றத் தேர்தல் வந்தாலும் அதனை சந்திக்க தயாராக இருக்கிறோம். அதோடு சட்டமன்றத் தேர்தல் வரும் என்று என்ற நம்பிக்கை இருக்கிறது. 234 தொகுதிகளிலும் ஏப்ரல் மாதத்திலிருந்து பணிகளை தொடங்கிவிட்டோம் என்றார். 

 


 

சார்ந்த செய்திகள்