Skip to main content

கைகொடுக்குமா மகள்களின் தேர்தல் பிரச்சாரம்... சூடாகும் தேர்தல் களம்.!

Published on 26/03/2021 | Edited on 26/03/2021

 

ministers daughter involved in campaign

 

சட்டமன்றத் தேர்தல் தேதி நெருங்கிக் கொண்டிருக்கும் நிலையில் நாளுக்கு நாள் பிரச்சார யுத்திகளும் மாறிக் கொண்டிருக்கிறது. தங்களின் உடல் நலம் குறித்தும், கண்ணீர் வடித்தும் பிரச்சாரம் செய்வது பேசுபொருளாகிறது. பல இடங்களில் துணி துவைப்பது, அடுப்பு ஊதுவது, தோசை சுடுவது, களை பறிப்பது, நாற்று நடுவது என்ற காட்சிகளும் தற்போது காமெடிகளாகிக் கொண்டிருக்கிறது.

 

இந்த நிலையில் தான் வெற்றி இலக்கை நோக்கி கடும் பயணத்தில் இருக்கும் வேட்பாளர்கள் தங்கள் வீட்டுச் செல்லக் குழந்தைகளையும் தேர்தல் களத்தில் இறக்கி பரப்புரை செய்து வாக்காளர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறார்கள். அந்த வகையில் முதலில் மகள்களை களமிறக்கியது விராலிமலை அதிமுக வேட்பாளர் விஜயபாஸ்கர் தான். தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட அடுத்த நாளே தொகுதியை வலம் வரத் தொடங்கியவர். மறக்காமல் தனது இரு மகள்களையும் தன்னுடன் அழைத்துச் சென்று மழலைக் குரலில் பேச வைத்திருக்கிறார்.

 

ministers daughter involved in campaign

 

முதல் நாளிலேயே முதல் மகள் பிரியதர்ஷினி, “இவரு எங்க அப்பா என்று சொல்ல முடியாது, ஏன்னா எப்பவும் உங்க கூடவே இருக்கிறதால இவரு உங்க வீட்டுப்பிள்ளை தான்” என்று பேசி அசத்தினார். தொடர்ந்து சில நாட்களாக தனது இரண்டாவது மகளிடமும் மைக்கை கொடுத்துள்ளார். இவரது பேச்சு அனைவரது கவனத்தையும் ஈர்த்து வருகிறது. “நான் உங்க விஜயபாஸ்கரோட ரெண்டாவது மகள், உங்களுக்கு ஏதாவது ஆச்சுன்னா அவரு துடிச்சுப் போயிடுவாரு, உங்களுக்கு காது கேட்கலன்னா காது மெசினா வருவாரு, கண்ணு தெரியலன்னா கண்ணாடியா வருவாரு.. கஜா புயல்ன்னா கரண்டா வருவாரு.. கரோனான்னா மாஸ்க்கா வருவாரு.. பொங்கல்ன்னா சீரும் சிறப்பா வருவாரு..” இப்படியான இவரது பேச்சு வரவேற்பை பெற்றுள்ளதால் தொடர்ந்து பரப்புரைக்கு அழைத்துச் செல்லப்படுகிறார். 

 

ministers daughter involved in campaign

 

அதேபோல் அதே தொகுதியில், அமைச்சர் விஜயபாஸ்கருக்கு இணையாகக் களத்தில் நின்று போராடும் திமுக வேட்பாளர் பழனியப்பன் போகுமிடங்களில் எல்லாம் ரெண்டு முறை தோற்றேன், மீண்டும் தோற்றால் என்னைப் பார்க்க முடியாது என்று கண்ணீரை சிந்தி வாக்கு சேகரித்து வருகிறார். இந்நிலையில், தனது மகளையும் பிரச்சாரக் களத்தில் இறக்கிவிட்டுள்ளார். பழனியப்பன் மகள், மக்களிடம் பேசும் போது “எங்க அப்பாவோட ஆசை இந்த தொகுதி முழுவதும் இலவச சிகிச்சை கிடைக்கனும் என்பது தான். அதை நிறைவேற்ற நான் வரப்போறேன். நான் இப்ப எம்பிபிஎஸ் 3வது வருசம் படிக்கிறேன். படிப்பு முடிந்ததும் டாக்டராகி தொகுதி மக்களுக்கு கிராமம் கிராமமாக இலவச சிகிச்சை அளிக்க வருவேன்” என்று பேசி வருகிறார். 

 

ministers daughter involved in campaign

 

இதேபோல மன்னார்குடியில் அமமுக வேட்பாளராகப் போட்டியிடும் எஸ்.காமராஜ் நெஞ்சுவலியால் மருத்துவமனைக்குப் போய் ஆஞ்சியோ செய்து கொண்டு ஓய்வெடுத்து வரும் நிலையில், அவருக்காக மற்ற கட்சி நிர்வாகிகளோடு வேட்பாளர் எஸ்.காமராஜின் மகள் தேர்தல் களத்தில் இறங்கி “எங்க அப்பாவுக்கு ஓட்டுப் போடுங்க” என்று கலக்கி வருகிறார். இப்படி பல வேட்பாளர்கள் தங்கள் செல்ல மகன்கள், மகள்களை தேர்தல் களத்தில் இறக்கி பிரச்சாரங்களை செய்வதால் வாக்காளர்களின் மனங்களில் மாற்றங்களையும் உணர முடிகிறது.

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

'தலைமைக்கு விசுவாசம் இல்லை'-ஆலோசனைக் கூட்டத்தில் அதிருப்தியா?

Published on 23/04/2024 | Edited on 23/04/2024
Edappadi Palaniswami expressed displeasure 'no faith'

இந்திய நாட்டின் 18ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக கடந்த 19.04.2024 அன்று தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வாக்குப்பதிவு முடிந்தது. வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.

தமிழகத்தில் தேர்தல் முடிந்திருக்கும் நிலையில் அரசியல் கட்சிகள் தேர்தல் களத்தில் தங்களுக்கு ஏற்பட்ட நிறைகுறைகள் குறித்து ஆலோசனைகளை மேற்கொள்ள தயாராகி வருகின்றன. அந்த வகையில் அதிமுக தலைமை சார்பாக தலைமை அலுவலகத்தில் இன்று சென்னை மண்டலத்தில் உள்ள அதிமுக வேட்பாளர்கள் மற்றும் பொறுப்பாளர்களின் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில் கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கலந்து கொண்டார்.

சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக அலுவலகத்தில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில் அதிமுகவில் போட்டியிட்ட சென்னை மற்றும் காஞ்சிபுரம், ஸ்ரீபெரும்புதூர் அதிமுக வேட்பாளர்கள் பங்கேற்றனர். மாவட்டச் செயலாளர்களும் பங்கேற்றனர். களத்தில் வாக்கு சேகரித்தது குறித்தும், எதிர்க்கட்சியினரின் பரப்புரைகள் குறித்தும் அதில் என்னென்ன சவால்கள் இருந்தது என்பது குறித்தும் நிர்வாகிகள் எடப்பாடி பழனிசாமியிடம் கூறியதாக கூறப்படுகிறது.

அதன் பிறகு நிர்வாகிகள் மத்தியில் சுமார் 15 நிமிடங்கள் எடப்பாடி பழனிசாமி பேசியிருக்கிறார். அதில், ''எம்ஜிஆர், ஜெயலலிதா காலத்தில் இருந்தது போன்று தற்போதுள்ள தலைமைக்கு விசுவாசம் என்பது இல்லாமல் போய்விட்டது. பல நிர்வாகிகள் இது நம்ம கட்சி என்ற எண்ணத்தோடு பணியாற்றவில்லை. கட்சிக்காக கொடுத்த பணத்தை கூட பல நிர்வாகிகள் சுருட்டி விட்டார்கள். கடைசி நிர்வாகி வரை தேர்தலுக்காக கொடுக்கப்பட்ட பணம் போய் சேரவில்லை. அதிமுக நிர்வாகிகளே இப்படி சுயநலமாக இருந்தால் எப்படி? திமுக ஆட்சி வந்த பிறகு சொத்து வரி, குடிநீர் வரி உயர்த்தியுள்ளார்கள். அதுமட்டுமல்லாமல் மின் கட்டணம், பால் கட்டணம் பலவித கட்டணங்கள் உயர்த்தப்பட்டுள்ளது. ஆனால் இதையெல்லாம் நாம் களத்தில் சரியாக மக்களிடம் கொண்டு சேர்க்கவில்லை. போதுமான அளவுக்கு திருப்தியாக பிரச்சாரம் செய்யவில்லை. நிர்வாகிகளின் செயல்பாடுகளில் எனக்கு பெரிய அளவு திருப்தி இல்லை'' என எடப்பாடி தன்னுடைய அதிருப்தியை சொன்னதாக கூறப்படுகிறது.

Next Story

அதிமுக மாவட்டச் செயலாளர்களுடன் இ.பி.எஸ் திடீர் ஆலோசனை (படங்கள்)

Published on 23/04/2024 | Edited on 23/04/2024

 

இந்திய நாட்டின் 18 வது மக்களவை தேர்தல் 7 கட்டங்களாக நடைபெற்றுவரும் நிலையில், முதற்கட்டமாக தமிழகம் மற்றும் புதுவையில் உள்ள 40   தொகுதிகளுக்கும் கடந்த 19ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்றது.  இந்த நிலையில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அக்கட்சியினருடன் திடீரென ஆலோசனை நடத்தியுள்ளார்.

சென்னை ராயப்பேட்டையில் உள்ள கட்சியின் தலைமை அலுவலகத்தில் எடப்பாடி பழனிசாமி சென்னை மற்றும் புறநகர் பகுதியைச் சேர்ந்த அதிமுக மாவட்டச் செயலாளர்களுடன் ஆலோசனை நடத்தினார். இந்த ஆலோசனைக் கூட்டத்தில் ஒன்பது மாவட்டச் செயலாளர்கள் மற்றும் வட சென்னை, தென் சென்னை  உள்ளிட்ட தொகுதிகளில் போட்டியிட்ட அதிமுக வேட்பாளர்களும், தொகுதி பொறுப்பாளர்களும் கலந்து கொண்டதாகக் கூறப்படுகிறது.  நடைபெற்ற வாக்குப்பதிவில் வெற்றி வாய்ப்பு எப்படி உள்ளது என்பது குறித்தும் தொகுதி நிலவரம் குறித்தும் ஆலோசிக்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.