Skip to main content

மகன், மருமகனால் சீட் இழந்த அமைச்சர்..!

Published on 11/03/2021 | Edited on 11/03/2021

 

Minister loses seat to son, nephew

 

திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடி தொகுதி எம்.எல்.ஏ.வாக இருப்பவர் அதிமுகவைச் சேர்ந்த தொழிலாளர் நலத்துறை அமைச்சர் நிலோபர் கபில். கட்சியில் மகளிரணி பிரிவிலும் நிர்வாகியாக உள்ளார். தற்போது வெளியாகியுள்ள அதிமுக வேட்பாளர் பட்டியலில் அமைச்சர் நிலோபர் கபில் பெயர் இல்லாதது அமைச்சரின் ஆதரவாளர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 

வாணியம்பாடி தொகுதி வேட்பாளராக ஆலங்காயம் மேற்கு ஒ.செ செந்தில்குமார் என்கிற இளைஞர் வேட்பாளராக நிறுத்தப்பட்டுள்ளார். இதுகுறித்து அதிமுக வட்டாரத்தில் நாம் பேசியபோது, ஒரு உறையில் இரண்டு கத்தி என்பது போல் ஒரே மாவட்டத்தில் அதுவும் பக்கத்து பக்கத்து தொகுதியைச் சேர்ந்த வீரமணி, நிலோபர் என இருவரை, ஜெயலலிதா அப்போது தனது அமைச்சரவையில் சேர்த்துக்கொண்டார். அவர் மறைந்து கட்சிக்குள் சண்டை வந்தபோது, முதல்வர் எடப்பாடி பழனிசாமி பக்கம் நிலோபர் நின்றார். கட்சியின் மா.செவும், அமைச்சருமான வீரமணி ஓ.பி.எஸ் பக்கம் நின்றார். ஓ.பி.எஸ் வெளியேறி பிரச்சனை செய்தபோது, வீரமணி, இ.பி.எஸ் பக்கம் சென்றார். அவரின் கை அங்கு ஓங்கியதும், நிலோபர் ஓ.பி.எஸ் பக்கம் சென்றார்.

 

அதோடு நீங்களும் அமைச்சர், நானும் அமைச்சர் உங்களை எதுக்கு நான் மதிக்கனும் என நிலோபர், வீரமணியை மதிக்கவில்லை. இதனால் அவர்களுக்குள் மோதல் வந்து அவர் வாணியம்பாடி தொகுதியில் எந்த நிகழ்ச்சியிலும் கலந்துகொள்ளாமல் புறக்கணித்தார். தற்போது தேர்தலில் அவருக்கு சிட் வழங்கக்கூடாது என ஓ.பி.எஸ், இ.பி.எஸ் இருவரிடமும் காய் நகர்த்தி நிலோபரை ஓரம் கட்ட வைத்து, சீட் இல்லாமல் செய்துவிட்டார் என்கிறார்கள் கட்சியினர்.

 

இந்தம்மாவும் கட்சியினரை மதித்ததே இல்லை. தனது மகன், மருமகனுக்கு முக்கியத்துவம் தந்து அவர்கள்தான் எல்லாமுமாக இருந்தார். அவர்களும் கட்சியினரை மதிக்கவில்லை. கட்சி நிர்வாகிகளும் இவருக்கு சீட் வழங்கினால் தோற்றுவிடுவோம், நாங்களும் அவருக்கு வேலை செய்ய மாட்டோம் என தலைமைக்குத் தெரிவித்தனர். அதேபோல் எம்.பி. தேர்தலின்போதும், குடியுரிமைச் சட்டத் திருத்தத்தின்போதும் இஸ்லாமியர்கள் போராடியபோது, பாஜகவை விமர்சித்திருந்தார். இதுவெல்லாம் சேர்ந்து அவருக்கு சீட் இல்லாமல் செய்ய வைத்துவிட்டது என்கிறார்கள்.

 

Minister loses seat to son, nephew

 

அமைச்சருக்கு சீட் வழங்காததைக் கண்டித்து அவரது ஆதரவாளர்கள், நிலோபர் வீட்டு முன் குவிந்து எடப்பாடி பழனிசாமி மற்றும் அதிமுகவுக்கு எதிராக கோஷங்கள் எழுப்பி வருகின்றனர். நாங்கள் ஓட்டளிக்க மாட்டோம் என சபதம் போட்டு பேசிவருகின்றனர். மீண்டும் அமைச்சருக்கு சீட் வழங்க வேண்டும் என கோஷமிட்டு வருகின்றனர்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

முன்னாள் அமைச்சர் சி. விஜயபாஸ்கர் நீதிமன்றத்தில் ஆஜர்!

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
Former Minister C. Vijayabaskar appears in court
கோப்புப்படம்

விராலிமலை சட்டமன்றத் தொகுதி உறுப்பினராக உள்ள முன்னாள் அமைச்சர் சி. விஜயபாஸ்கர் கடந்த அதிமுக ஆட்சியில் அமைச்சராக இருந்த காலகட்டத்திலேயே ஊழல்கள், முறைகேடுகள் எனப் பல்வேறு குற்றச்சாட்டுகளில் சிக்கினார். இதனால் 2017 ஆம் ஆண்டு அமைச்சராக இருந்தபோதே அவருடைய வீடு உள்ளிட்ட பல்வேறு இடங்களில் சோதனை நடத்தப்பட்டது. ஆர்.கே. நகர் இடைத்தேர்தலில் 89 கோடி ரூபாய் பணப் பட்டுவாடா உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் வருமான வரித்துறையினர், அமலாக்கத்துறையினர், கனிமவளத் துறையினர் எனப் பல்வேறு துறையினர் சோதனை நடத்தினர்.

அமைச்சராக இருந்த 2021 அக்டோபர் 18 ஆம் தேதி 2016 முதல் 2021 வரை காலக்கட்டத்தில் வருமானத்திற்கு அதிகமாக 27 கோடி ரூபாய் அசையும் மற்றும் அசையா சொத்துகளை வாங்கிக் குவித்ததாக லஞ்ச ஒழிப்புத் துறை போலீசார் சி. விஜயபாஸ்கர் மீது வழக்குப் பதிவு செய்தனர். வீடு உள்ளிட்ட அவருக்கு தொடர்புடைய 56 இடங்களில் சோதனை நடத்தினர். சோதனையில் 23.85 லட்சம் ரூபாய் ரொக்கம், 4.87 கிலோ தங்கம், 136 கனரக வாகன சான்றிதழ்கள், பல்வேறு ஆவணங்களை லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் கைப்பற்றினர்.

அதனைத் தொடர்ந்து முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கரும் அவருடைய மனைவியும் வருமானத்திற்கு அதிகமாக 35.29 கோடி ரூபாய் சொத்து சேர்த்ததாக புதுக்கோட்டை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் 216 பக்க குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்தனர். 800க்கும் மேற்பட்ட ஆவணங்கள் அந்த குற்றப்பத்திரிகையில் இணைக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் புதுக்கோட்டை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் இந்த வழக்கு தொடர்பாக விஜயபாஸ்கரும், அவரது மனைவி ரம்யாவும் இன்று (25.04.2024) நேரில் ஆஜராகியுள்ளனர். இதனையடுத்து நீதிமன்றம் இந்த வழக்கை ஜூன் 12ஆம் தேதிக்கு ஒத்தி வைத்துள்ளது.

Next Story

குடிநீர் தட்டுப்பாடு; அணையில் இருந்து தண்ணீர் திறக்ககோரி முன்னாள் அமைச்சர் மனு!

Published on 24/04/2024 | Edited on 24/04/2024
M.R vijayabaskar  demanding release of water from Amaravathi Dam

கரூர் ஆண்டாங்கோவில் கிழக்கு உள்ளிட்ட ஊராட்சிகளில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால் அமராவதி அணையில் இருந்து தண்ணீர் திறந்து விட வேண்டும். கரூர் மக்களுக்கு குடிநீர் தொடர்ந்து  புறக்கணிக்கப்படுகிறது. என மாவட்ட வருவாய் அலுவலர் கண்ணனிடம் முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் மனு அளித்தார்.

கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகவத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் கண்ணனிடம் முன்னாள் அமைச்சரும், அதிமுக மாவட்டச் செயலாளருமான எம்.ஆர்.விஜயபாஸ்கர் மற்றும் ஆண்டாங்கோவில் கிழக்கு ஊராட்சி மன்றத்தலைவர் சாந்தி ஆகியோர் மனு அளித்தனர்.  

இதுகுறித்து முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் செய்தியாளர்களிடம் பேசுகையில், “கரூர்  மாவட்டம் தாந்தோணி ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட ஆண்டாங்கோவில் கிழக்கு, ஆண்டாங்கோவில் மேற்கு, கருப்பம்பாளையம், பள்ளாபாளையம், அப்பிபாளையம், விஸ்வநாதபுரி  ஆகிய ஊராட்சிகளில் உள்ள அனைத்து பகுதிகளிலும் மிக கடுமையான குடிநீர் தட்டுப்பாடு  ஏற்பட்டுள்ளது.

இப்பகுதி மக்களின் குடிநீர் தேவையை அமராவதி ஆற்று நீரே பூர்த்தி செய்கிறது. அமராவதி  அணையில் இருந்து தண்ணீர் திறக்கும் போது கடைமடை வரை செல்லாமல் தாராபுரம் பகுதியிலேயே தண்ணீர் நின்று விடுகிறது. இதனால் மேற்சொன்ன பகுதிகளில் மிக கடுமையான குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டு பொதுமக்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர்.

தற்போது ஏற்பட்டுள்ள வறட்சி காரணமாக அனைத்து குடிநீர் கிணறுகளிலும் குடிநீர் வற்றிவிட்டது. எனவே அமராவதி அணையில் இருந்து தண்ணீர் திறந்து விட நடவடிக்கை எடுக்க வேண்டும் எனத் தெரிவித்தோம். டி.ஆர்.ஓ ஆட்சியரிடம் பேசி விட்டு உரிய நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்துள்ளார்.   மேலும் ஆண்டாங்கோவில் ஊராட்சி மன்றத் தலைவர் சாந்தி அளித்துள்ள மனுவில், ஆண்டாங்கோவில் கிழக்கு ஊராட்சிக்குட்பட்ட பெரியார் நகர் மற்றும் 18 குக்கிராமங்களுக்கு அமராவதி ஆற்றிலிருந்து குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.

தற்போது அமராவதி ஆற்றில் நீர் மட்டம் வெகுவாக குறைந்து விட்ட நிலையில் பெரியார் நகர்  தடுப்பணையிலும் நீர்மட்டம் இல்லை. இந்த நிலையில் அமராவதி ஆற்றில் எவ்வித அனுமதியும் இன்றி குடிநீர் கிணறு அமைத்து தனியார் லாரிகள் மூலம் குடிநீர் எடுத்து விற்பனை செய்து வருகின்றனர். இதனால் ஊராட்சியின் கிணறுகள் அனைத்தும் நீரின்றி வறண்டு வருகிறது. எனவே மேற்படி  தனி நபர்கள் அமராவதி ஆற்றிலிருந்து அனுமதியின்றி நீர் எடுப்பதையும் தடை செய்ய வேண்டும்” என்றார்.

மேலும் அவர் அளித்துள்ள மற்றொரு மனுவில், ஆண்டாங்கோவில் கிழக்கு ஊராட்சியில் வடிகால் அமைக்கும் பணிகளை நேற்று தொடங்கிய நிலையில் பணிகளைத் தடுத்து விட்டனர். இதற்கான அனுமதியைக் கடந்த மார்ச் 28ம் தேதி ரத்து செய்துவிட்டதாக வட்டார வளர்ச்சி அலுவலர் ஊராட்சி செயலாளருக்கு நேற்று முன்தினம்(22.4.2024) வாட்ஸ்அப்பில் தகவல் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக நீதிமன்றத்தை அணுக உள்ளோம் என்றார்.