Skip to main content

மாரத்தான் நாயகர் மா.சு.வின் சர்வதேச விர்ச்சுவல் மாரத்தான் ஓட்டம்! 

Published on 17/08/2020 | Edited on 17/08/2020

 

M. Subramaniam

                     

தமிழகத்தின் 'மாரத்தான் நாயகர்' என வர்ணிக்கப்படும் திமுக எம்.எல்.ஏ. மா.சுப்ரமணியன், புதுமையான மாரத்தான் நிகழ்வினை நடத்திக் கொண்டிருக்கிறார்.  

                
தி.மு.க.வின் முன்னாள் தலைவர் கலைஞரின் இரண்டாம் ஆண்டு நினைவு தினத்தை உலகம் முழுவதும் நினைவு கூர்ந்திடும் வகையில், ‘கலைஞர் நினைவு சர்வதேச மெய்நிகர் (விர்ச்சுவல்) மாரத்தான்’ ஓட்டத்தை இணைய வழி மூலம் நடத்தி வருகிறார் மா.சுப்ரமணியன். 


இந்த மாரத்தான் ஓட்டத்தின் இணைய வழி தொடக்கத்தைக் கடந்த 6-ஆம் தேதி அறிவாலய வளாகத்தில் துவக்கி வைத்தார் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின். கரோனா பேரிடரான இந்த நெருக்கடியான காலத்தில், ஒவ்வொருவரும் உடற்பயிற்சி செய்வது அவசியம் என்பதை ஆரம்பத்தில் இருந்தே அறிவுறுத்தி வருகிறது உலக சுகாதார நிறுவனம். 

                  

அந்த வகையில் உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை மக்களிடம் உருவாக்கவும், அதன் தேவையினை எடுத்துச் சொல்லவும் சர்வதேச மாரத்தான் ஓட்டத்தை ஒருங்கிணைத்தார் மா.சுப்ரமணியன். புதுமையான முறையில் துவக்கப்பட்ட இந்த மாரத்தான் ஓட்டத்தில், அமெரிக்கா, பிரிட்டன், ஆஸ்திரேலியா, நியூசிலாந்த், சிங்கப்பூர், மலேசியா, ஐக்கிய அரசு நாடுகள், பின்லாந்து உள்ளிட்ட 15-க்கும் மேற்பட்ட உலக நாடுகளிலிருந்து எண்ணற்ற மக்கள் இதில் கலந்து கொண்டு ஓடினார்கள். 

             

M. Subramaniam

 

இது குறித்து மா.சுப்ரமணியனிடம் நாம் பேசிய போது, "உலகத்தின் எந்த நாட்டிலிருந்தும் அவரவர் இருக்கும் இடத்திலிருந்தே இணையத்தளம் வாயிலாக தங்களைப் பதிவு செய்து கொண்டு இந்த மாரத்தான் ஓட்டத்தில் கலந்துகொள்ளலாம். ஆகஸ்ட்-7 முதல் 25 நாட்கள் அதாவது ஆகஸ்ட் 31 வரை இந்த ஓட்டம் நடந்து கொண்டிருக்கும். 

                        

வீட்டு மாடியில், தோட்டத்தில், ட்ரட்மில்லில், எனத் தங்களின் வாழ்விடங்களுக்கேற்பவும் வாய்ப்புகளுக்கேற்பவும் இந்த ஓட்டத்தில் கலந்து கொண்டு ஓடலாம். இந்த விர்ச்சுவல் மாரத்தானில் கலந்து கொண்டு ஓடுபவர்களுக்கு அதற்கான சான்றிதழும் இணையம் வழியாகவும், அதற்குரிய பதக்கம் அஞ்சல் மூலமாகவும் அவர்களின் முகவரிக்கு அனுப்பி வைக்கப்படும்.

                      

http://onelink.to/nknapp

 

அவரவர் நாடுகளில் உள்ள ஊரடங்கு சட்ட விதிகள், முன்னெச்சரிக்கை பாதுகாப்பு நடவடிக்கைகள், தனி மனித இடைவெளி ஆகியவைகளைக் கட்டாயம் கடைப்பிடிக்க வேண்டும் எனக் கலந்து கொள்பவர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. இப்போட்டியில் பங்கேற்பதற்கு வயது தடையில்லை. மேலும், இதில் கலந்துகொள்ள 300 ரூபாய் கட்டணம் வசூலிக்கப்படும். மாரத்தான் ஓட்டம் நிறைவு பெற்றதும், கட்டணம் பெறப்பட்ட மொத்த தொகையும் கரோனா நோய்த் தடுப்பு உபகரணங்கள் வாங்குவதற்க்ய் பயன்படுத்தப்பட்டு, அந்த உபகரணங்கள் அனைத்தும் அரசு மருத்துவமனைகளுக்கு வழங்கப்படும்!"  என்கிறார் பெருமிதமாக மா.சுப்ரமணியன்.

                   

மாரத்தான் நாயகரின் இந்தப் புதிய முயற்சி கின்னஸில் இடம் பெறும் என்கிறார்கள் தி.மு.க.வினர்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

'குடிநீர் தட்டுப்பாட்டைப் போக்க நடவடிக்கை எடுக்கப்படும்' - அமைச்சர் முத்துசாமி

Published on 29/04/2024 | Edited on 29/04/2024
nn

ஈரோடு மாவட்டம் பவானி சாகர் அணையில் தண்ணீர் வேகமாகக் குறைந்து வருகிறது. இருப்பினும் மாவட்டத்தில் குடிநீர் பற்றாக்குறை ஏற்படாமல் இருக்க உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்று வீட்டு வசதி துறை அமைச்சர் எஸ்.முத்துசாமி கூறியுள்ளார்.

அவர் ஈரோடு காந்திஜி சாலையில் திமுக சார்பில் நீர் மோர் பந்தலை திறந்து வைத்தார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது, 'பவானி சாகர் அணையில் மட்டுமல்லாமல் நீலகிரி மாவட்டத்தில் உள்ள மின் உற்பத்தி அணைகளிலும் தண்ணீர் மிக குறைவாக உள்ளது. எங்களுக்கு கீழ் பவானி பாசனப்பகுதியில் உள்ள புஞ்சை பயிர்களுக்கு ஐந்தாவது நினைப்பிற்கு தண்ணீர் விட வேண்டும் என்பது ஆசைதான். ஆனால் நீர் இருப்பு அணையில் இல்லை. தமிழக முதலமைச்சர் 22 மாவட்டங்களுக்கு குடி தண்ணீர் தட்டுப்பாட்டை போக்க ரூபாய் 150 கோடி ஒதுக்கீடு செய்துள்ளார். ஈரோடு மாவட்டத்திலும் எந்தக் குடிதண்ணீர் பிரச்சனையும் ஏற்படாமல் இருக்க முதலமைச்சர் உரிய நடவடிக்கை எடுப்பார். ஈரோடு மாவட்டத்தில் நடப்பாண்டு அதிக உஷ்ணம் நிலவுகிறது. சாலை விரிவாக்கத்திற்காக பல இடங்களில் மரங்கள் வெட்டப்பட்டுள்ளன. அவ்விடங்களில் மரக்கன்றுகள் நட நடவடிக்கை எடுக்கப்படும். நீலகிரி மாவட்டத்தில் வாக்கு எண்ணும் மையத்தில் உள்ள சிசிடிவி கேமராக்கள் 26 நிமிடங்கள் பழுது அடைந்தது குறித்து திமுக சார்பில் தேர்தல் ஆணையத்தில் புகார் செய்யப்பட்டுள்ளது'' என்றார்.

ஈரோடு மாநகர மாவட்டச் செயலாளர் சுப்பிரமணியம் பகுதிச் செயலாளர் அக்னி சந்துரு மூன்றாம் மண்டல தலைவர் சசிகுமார் உட்பட பலர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

Next Story

'அவராலே பாதி தண்ணீர் புதுக்கோட்டைக்கு வராமல் போகிறது'-அமைச்சர் ரகுபதி குற்றச்சாட்டு

Published on 28/04/2024 | Edited on 28/04/2024
nn


தமிழ்நாடு முழுவதும் சுட்டெரிக்கும் வெயிலின் தாக்கம் நாளுக்குநாள் அதிகரித்து வரும் நிலையில் அதிமுக, திமுக என அனைத்துக் கட்சிகளும் ஆங்காங்கே தண்ணீர் பந்தல்கள் அமைத்து தாகம் தணித்து வருகின்றனர். அதேபோல், புதுக்கோட்டை திமுக அலுவலகத்தில் திமுக மருத்துவ அணி சார்பில் இன்று ஞாயிற்றுக்கிழமை கோடைகால தண்ணீர் பந்தலை சட்டத்துறை அமைச்சர் ரகுபதி, மருத்துவ பணி மாவட்ட செயலாளர் முத்து கருப்பன் ஆகியோர் திறந்து வைத்து பொதுமக்களுக்கு குளிர்பானங்களை வழங்கினார்கள்.

அதன் பிறகு சட்டத்துறை அமைச்சர் ரகுபதி செய்தியாளர்களை சந்தித்த பேசும்போது, ''குஜராத் என்பது போதைப் பொருட்களின் நடமாட்டத்திற்கான மாநிலம். அங்குள்ள துறைமுகத்திற்கு தான் வெளிநாடுகளில் இருந்து இந்தியாவிற்கு போதைப் பொருட்கள் வருகிறது. பிறகு பல மாநிலங்களுக்கு கொண்டு செல்லப்படுகிறது. குஜராத்தில் போதைப் பொருட்களின் நடமாட்டம் அதிகமாக உள்ளது என்பது அதிசயமான செயல் அல்ல.

மத்திய அரசின் நிதி ஒதுக்கீடு யானை பசிக்கு சோலப் பொறி போல என எங்கள் தலைவர் கூறியுள்ளார். அது எந்த அளவு பத்தும் என்பதை நீங்களே யோசித்துக் கொள்ளுங்கள். இருந்த போதிலும் எங்களுக்கு தேவையான நிதியை தரச் சொல்லி வலியுறுத்துவோம். விஜயபாஸ்கர் அதிமுக ஆட்சி காலத்தில் குடிநீர் பிரச்சினைகளில் தீர்வு காணாமல் கோட்டை விட்டுவிட்டார். புதுக்கோட்டைக்கு வரும் காவிரி நீரை வழிமறித்து அவரது கல்லூரிக்கும், அவரது வயலுக்கும் காவிரி நீரை கொண்டு செல்கிறார். வயலுக்கு காவிரித் தண்ணீரை பயன்படுத்தக்கூடிய ஒரே நபர் விஜயபாஸ்கர் மட்டும்தான். இன்னும் ஒரு மணி நேரத்திற்குள் அங்கு சென்றால் அதை பார்க்கலாம். அது குறித்து நடவடிக்கை எடுக்க சென்றால் போராட்டம் நடத்துவார்கள். அவராலே பாதி தண்ணீர் புதுக்கோட்டைக்கு வராமல் போகிறது.ஆனால் இதை அனுமதிக்க முடியாது. விரைவில் குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகள் அந்த பிரச்சனை குறித்து நடவடிக்கை எடுப்பார்கள்'' என்றார்.

இந்த பேட்டி தொலைக்காட்சிகளில் வெளியான நிலையில், அமைச்சர் ரகுபதி போகிற போக்கில் ஏதேதோ பேசி விட்டு போகிறார். பல வருடமாக குடிநீர் திருட்டு நடப்பதாக இருந்தால் இவர்கள் ஆட்சிக்கு வந்த பிறகு கூட ஏன் தடுக்கவில்லை, நடவடிக்கை எடுக்கவில்லை. ஊராட்சி, பேரூராட்சி, நகராட்சி, மாநகராட்சிகளில் கூட ஒரு வீட்டிற்கு வரும் தண்ணீரை மோட்டார் வைத்து உறிஞ்சினால் உடனே நடவடிக்கை எடுத்து மோட்டாரை பறிமுதல் செய்து அபராதம் விதிக்கப்படுகிறது. ஆனால் எங்கள் முன்னாள் அமைச்சர் காவிரி கூட்டுக் குடிநீரை தங்கள் கல்லூரிக்கும், தோட்டத்திற்கும் எடுக்கிறார் என்றால் இத்தனை ஆண்டுகளாக ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை. அப்படி இருந்தால் நடவடிக்கை எடுக்க வேண்டியது தானே? தண்ணீர் திருட்டு நடந்தால் அதிகாரிகளை அனுப்பி நடவடிக்கை எடுக்க என்ன தயக்கம்? ஆதாரமற்ற குற்றச்சாட்டை கூறியுள்ளார் என்கின்றனர் அதிமுகவினர்.