Skip to main content

''உங்களால எதுவுமே செய்ய முடியாது சார்...'' -ஆடியோ வெளியிட்டு ம.நீ.மய்யத்திலிருந்து விலகிய தொழிலதிபர்

Published on 26/03/2019 | Edited on 26/03/2019



 

மக்கள் நீதி மய்யம் கட்சியில் இருந்து விலகுவதாகவும், சுயேட்சையாக திருப்பூர் மக்களவைத் தொகுதியில் போட்டியிட உள்ளதாகவும், ஆடியோ ஒன்றை வெளியிட்டள்ளார் மக்கள் நீதி மய்யம் கட்சியின் திருப்பூர் கிழக்கு மாவட்ட பொறுப்பாளர் வெங்கடேசன். 
 

அவர் அந்த ஆடியோவில், 
 

''மக்கள் நீதி மய்யம் கட்சிக்கு நாங்க இறங்கி செலவு பண்ணினோம். நீங்க வந்த திருப்பூர் சுற்றப்பயணம், சேலம் நிகழ்ச்சியாகட்டும் 50, 60 ஆயிரம் செலவு செய்துவிட்டு ஒரு நாள்கூட ஓய்வு இல்லை. பின்னர் விவசாயிகளை அழைத்து வர சொன்னீர்கள். மூன்று தொகுதி பொறுப்பாளர் நான். அதுகூட ஒரு தொகுதி சேர்த்து பார்க்க சொன்னீர்கள். எனக்கே தெரியவில்லை நான் எந்த தொகுதி பொறுப்பாளர் என்று. திருப்பூர் மாவட்டத்தை நான் பார்க்கிறேன் என்று சொன்னால், உங்களுக்கு கொடுத்த வேலையை பாருங்கள் என்று அருணாச்சலம் அய்யா சொல்லுகிறார். அதற்கும் நீங்கள் தலையை ஆட்டிவிட்டீர்கள். எல்லாவற்றிற்கும் நீங்கள் தலையையாட்டி பொம்மையாகத்தான் இருக்கிறீர்களேயொழிய நீங்களாக எந்த முடிவும் எடுப்பதில்லை. 

 

Makkal Needhi Maiam kamal-vengadesan thirupur


 

நாமக்கல் தங்கபாலு எனக்கு எதுவுமே தெரியாது என்கிறார்.  ஸ்ரீப்ரியா மேடமும் அதைத்தான் சொல்லுகிறார்கள். அப்ப உங்களுக்கு என்னதான் தகவல் தெரியும். அப்புறம் எப்படி நாட்டை மாத்துவீங்க, எப்படி ஊழலை ஒழிப்பீங்க, சொல்லுங்க பார்க்கலாம். உங்களால எதுவுமே செய்ய முடியாது சார். 
 

நான் பேசியதை நம்ம குரூப்பில்தான் போடுவேன். இது இந்தியா முழுவதும் பரவும். அந்த அளவுக்கு நெட் ஒர்க் நான் வைத்திருக்கிறேன். ஏனென்றால் என்னை கட்சியில் இருந்து தூக்கிவிடுவீர்கள் என்று தெரியும். அதைப்பற்றி எனக்கு கவலையில்லை. ஆனால் இன்னைக்கு ஒரு நாளில் எல்லோருக்கும் போய் சேர்ந்துவிடும். 


எல்லா மாவட்ட பொறுப்பாளர்கள், தொகுதி பொறுப்பாளர்களை சந்தித்து பேசுங்கள். காலேஜ் காலேஜா போனீங்கன்னா ஓட்டு போடுவாங்களா? யாரும் போட மாட்டாங்க. கமல் சாரை பாக்கணுமுன்னு வருவாங்க. பாப் கார்ன் சாப்பிட்டு, பப்ஸ் சாப்பிட்டு போயிடுவாங்க. நீங்க நினைப்பதெல்லாம் தவறு. 
 

மக்களை சந்திக்கணுமுன்னா ஒவ்வொரு மாவட்ட பொறுப்பாளர்களை சந்தியுங்கள். உங்களுக்காக உயிரை கொடுத்து வேலை செய்யுற ஒவ்வொருத்தரையும் பாருங்க. யார் யார் எதை எதை வித்தார்கள் என்று பாருங்கள். 

 

kamal-vengadesan thirupur makkal needhi maiam


 

கமல் சார் உங்க மேல எனக்கு நல்ல நட்பு இருக்கிறது. தமிழ்நாட்டு மக்கள் படிக்காதவர்களாக இருந்தாலும் புத்திசாலி. நீங்க புதுமையை உருவாக்க நினைக்கலாம். உங்க பின்னால் நிற்பவர்கள் மிக மோசமானவர்கள். இந்த தமிழ்நாட்டை ஆள வேண்டும் என்று நினைத்தால் திமுக, அதிமுக மட்டும்தான். அதுதான் உண்மையான கட்சி. அவர்களுக்குத்தான் தெரியும் எங்க மேடு இருக்கிறது, எங்கு பள்ளம் இருக்கிறது, எங்கு குழி இருக்கிறது, எங்கு தண்ணீர் வரும், எதை நிறுத்தணும் என்று அவர்களுக்குத்தான் தெரியும். 

 

நீங்க முதல்ல மக்கள் நீதி மய்யத்தில் நல்ல ஆட்களை தேர்ந்தெடுங்கள். உங்களுக்கு பின்னால் யார் இருக்கிறார்கள் என்று பாருங்கள். 110 மாவட்ட பொறுப்பாளர், 500க்கும் மேற்பட்ட தொகுதி பொறுப்பாளர்கள் களப்பணியாளர்களெல்லாம் போட்டு எல்லாவற்றையும் கெடுத்திடாதீங்க. உண்மையை முதல்ல தெரிஞ்சி, வேலை செய்யுங்கள் ஒவ்வொரு விஷயத்திலும். நன்றி அய்யா. இதற்கு மேல பேச விருப்பமில்லை. ஏனென்றால் இதற்கு மேல பேசினால் உங்களைப் பற்றியே தவறாக பேசிவிடுவேன். நீங்களும் அந்த அளவுக்குத்தான் இருக்கிறீர்கள். நன்றி. வணக்கம்.'' இவ்வாறு பேசியுள்ளார். 

 

 

 


 

சார்ந்த செய்திகள்