Skip to main content

“முதுநிலை வரை மாணவிகளுக்கு இலவசக் கல்வி” - ஜே.பி.நட்டா வெளியிட்ட தேர்தல் அறிக்கை

Published on 14/02/2023 | Edited on 14/02/2023

 

JP Natta released the election manifesto in Nagaland

 

நாகாலாந்தில் நடைபெறும் சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு பாஜகவின் தேர்தல் அறிக்கையை வெளியிட்ட பாஜக தேசியத் தலைவர் ஜெ.பி.நட்டா முக்கிய அறிவிப்புகள் சிலவற்றையும் அறிவித்துள்ளார்.

 

மேகாலயா, நாகாலாந்து மற்றும் திரிபுரா மாநில சட்டப்பேரவைகளுக்கு தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலை நடத்துவதற்கான அட்டவணை கடந்த 18-ஆம் தேதி தேர்தல் ஆணையத்தால் அறிவிக்கப்பட்டது. அதன்படி மேகாலயா, நாகாலாந்தில் ஒரே கட்டமாக பிப்ரவரி 27-ம் தேதியும், திரிபுராவில் ஒரே கட்டமாக பிப்ரவரி 16-ம் தேதியும் தேர்தல் நடைபெறுகிறது. இதன் காரணமாக மக்கள் பிரதிநிதித்துவச் சட்டம் 1951-இன் பிரிவு மற்றும் 126-ன் படி அனைத்து ஊடகங்களும் கடைப்பிடிக்க வேண்டிய கட்டுப்பாடுகள் குறித்தும் அண்மையில் தேர்தல் ஆணையம் அறிக்கை வெளியிட்டு இருந்தது.

 

இந்நிலையில், நாகாலாந்தில் பாஜகாவின் தேர்தல் அறிக்கையை வெளியிடுவதற்காக அக்கட்சியின் தேசியத் தலைவர் ஜே.பி.நட்டா நாகாலாந்து வந்திருந்தார். திமாபூர் விமான நிலையத்திற்கு வந்திறங்கிய நட்டாவிற்கு நாகாலாந்து மாநில பாஜக தலைவர் டெம்ஜென் இம்னா உற்சாக வரவேற்பளித்தார். மேலும், நட்டாவை வரவேற்க பாஜக மூத்த தலைவர்களும் நிர்வாகிகளும் திமாபூர் விமான நிலையத்திற்கு வந்திருந்தனர்.

 

நாகாலாந்து தேர்தலை முன்னிட்டு பாஜகவின் தேர்தல் அறிக்கையை ஜே.பி.நட்டா வெளியிட்டார். இதன் பின் பேசிய அவர், நாகாலாந்தில் பாஜக ஆட்சிக்கு வந்தால் முதுநிலை பட்டப்படிப்பு வரை மாணவிகளுக்கு இலவசக் கல்வி வழங்கப்படும் என்றும், சிறப்பிடம் பெறும் கல்லூரி மாணவர்களுக்கு இலவசமாக ஸ்கூட்டர் வழங்கப்படும் என்றும் கூறியுள்ளார்.

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

4 கோடி ரூபாய் பறிமுதல் சம்பவம்; தமிழக டிஜிபி அதிரடி உத்தரவு

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
 4 Crore Seizure Incident; Tamilnadu DGP action order

இந்தியாவின் 18 ஆவது மக்களவை தேர்தல் களைகட்டி வருகிறது. முதல்கட்டமாக தமிழகத்தில் தேர்தல் நடைபெற்ற போது சென்னை எழும்பூர் ரயில் நிலையத்திலிருந்து திருநெல்வேலிக்குச் செல்லும் ரயிலில் தாம்பரம் ரயில் நிலையத்தில் கடந்த 6 ஆம் தேதி (06.04.2024) இரவு உரிய ஆவணங்களின்றி கொண்டு செல்ல முயன்றதாக சுமார் ரூ. 4 கோடி மதிப்பிலான ரொக்கம் பறக்கும் படையினரால் பறிமுதல் செய்யப்பட்டது. இதனையடுத்து இந்தப் பணத்தை எடுத்து வந்த புரசைவாக்கம் தனியார் விடுதி மேலாளரும் பாஜக உறுப்பினருமான சதீஷ், அவரின் சகோதரர் நவீன் மற்றும் லாரி ஓட்டுநர் பெருமாள் ஆகிய 3 பேரும் கைது செய்யப்பட்டனர். அப்போது திருநெல்வேலி மக்களவைத் தொகுதி பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரனுக்கு, இந்தப் பணத்தைக் கொண்டு செல்ல முயன்றதாக மூவரும் வாக்குமூலம் கொடுத்ததாகத் தகவல் வெளியாகி இருந்தது.

இந்தச் சம்பவம் தொடர்பாக நயினார் நாகேந்திரன் ஆஜராகி பதிலளிக்கும்படி காவல்துறை தரப்பில் சம்மன் அனுப்பப்பட்டிருந்தது. ஆனால் நயினார் நாகேந்திரன் விசாரணைக்கு ஆஜராகாத நிலையில், விசாரணைக்கு ஆஜராக பத்து நாட்கள் அவகாசம் வேண்டும் என நயினார் நாகேந்திரன் தரப்பில் காவல்துறைக்குப் பதில் கடிதம் கொடுக்கப்பட்டிருந்தது. அதேசமயம் இந்தப் பணத்தை நயினார் நாகேந்திரன் உறவினர் முருகன், இவரின் நண்பர்களான ஆசைத்தம்பி, ஜெய்சங்கர் ஆகிய மூவரும் கொடுத்து அனுப்பியதாகத் தெரிவித்திருந்தனர். இதனடிப்படையில் போலீசார் முருகன், ஆசைத்தம்பி, ஜெய்சங்கர் ஆகியோருக்கு சம்மன் அனுப்பி இருந்தனர். இதனையடுத்து இவர்கள் 23.04.2024 அன்று தாம்பரம் காவல் நிலையத்தில் நேரில் ஆஜராகி இருந்தனர். இந்நிலையில் நான்கு கோடி ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது தொடர்பான இந்த வழக்கை சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றி தமிழக டிஜிபி சங்கர் ஜிவால் அதிரடியாக உத்தரவு பிறப்பித்துள்ளார்.

Next Story

தேஜஸ்வி சூர்யா மீது வழக்குப்பதிவு

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
Case registered against Tejaswi Surya

உலகின் மிகப்பெரிய ஜனநாயக திருவிழாவான இந்திய நாட்டின் 18ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி வாக்குப்பதிவானது முதற்கட்டமாக கடந்த ஏப்ரல் 19 ஆம் தேதி தொடங்கி வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக நடைபெற உள்ளது. தமிழ்நாடு உள்ளிட்ட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு கடந்த 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்று முடிந்தது. இதன் ஒரு பகுதியாக நாடு முழுவதும் 13 மாநிலங்களில் உள்ள 87 மக்களவைத் தொகுதிகளில் இன்று (26.04.2024) 2ஆம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் கர்நாடக மாநிலம் பெங்களூருவின் தெற்கு மக்களவைத் தொகுதி பாஜக வேட்பாளர் தேஜஸ்வி சூர்யா மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். சமூக வலைத்தள பக்கமான எக்ஸ் வலைத்தள பக்கத்தில் மதரீதியாக வாக்கு சேகரிப்பது தொடர்பான வீடியோ ஒன்றை பாஜக வேட்பாளர் தேஜஸ்வி சூர்யா வெளியிட்டிருந்தார். இந்நிலையில் ஜெயநகர் போலீசார் அவர் மீது தற்போது வழக்குப்பதிவு செய்துள்ளனர். ஏற்கெனவே இன்று காலை மற்றொரு பாஜக வேட்பாளரான சுதாகர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்திருந்தனர் என்பது குறிப்பிடத்தகுந்தது.