Skip to main content

'விலை குறைவாக பெட்ரோல் டீசலை கொடுத்துக் கொண்டிருப்பது இந்தியாதான்''-வானதி சீனிவாசன் பேட்டி! 

Published on 28/04/2022 | Edited on 29/04/2022

 

'India is giving cheap petrol and diesel' '- Vanathi Srinivasan interview!

 

பெட்ரோல், டீசல் மீதான வரியை தமிழகம் உள்ளிட்ட மாநிலங்கள் குறைக்கவில்லை என்ற பிரதமர் நரேந்திர மோடியின் குற்றச்சாட்டுக்கு தமிழக சட்டப்பேரவையில் இன்று (28/04/2022) தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விளக்கம் அளித்துப் பேசினார்.

 

"பெட்ரோல், டீசல் விலை விவகாரத்தில் பிரதமர் நரேந்திர மோடி முழு பூசணிக்காயைச் சோற்றில் மறைத்துப் பேசியுள்ளார். பெட்ரோல் மீதான வரியை ஏற்கனவே தமிழக அரசு குறைத்துள்ளது. சில மாநிலங்களில் சட்டமன்றத் தேர்தல் நடக்கிறது என்பதற்காக விலையை உயர்த்தாமல் இருந்தது யார்? பெட்ரோல் விலையைக் குறைப்பதுபோல நடித்து மற்றவர் மீது பழியைப் போடுவது யார் என மக்களுக்குத் தெரியும். பெட்ரோல் விலையைக் குறைத்தது யார்? ஏற்றியது யார்? என்பதை மக்கள் முடிவிற்கே விட்டு விடுகிறேன். கடந்த எட்டு ஆண்டுகளில் பெட்ரோல், டீசல் மீது மத்திய அரசு கடுமையாக வரி உயர்த்தியது" என மு.க.ஸ்டாலின் பேசியிருந்தார்.

 

'India is giving cheap petrol and diesel' '- Vanathi Srinivasan interview!

 

பெட்ரோல், டீசல் விலை உயர்வுக்கு காரணம் மத்திய அரசா? மாநில அரசா? என்ற விவாதம் எழுந்திருக்கும் நிலையில் இதுகுறித்து பாஜக எம்.எல்.ஏ வானதி சீனிவாசன் தெரிவித்துள்ளதாவது, ''நமது உலகத்தில் இருக்கக்கூடிய நாடுகளை பெட்ரோல், டீசலை பொறுத்தவரை இரண்டு வகைகளாகப் பிரிக்க வேண்டும். ஒன்று தாங்களே பெட்ரோல், டீசல் உற்பத்தி செய்யக்கூடிய நாடுகள், இரண்டாவது அதை இறக்குமதி செய்யக்கூடிய நாடுகள். இறக்குமதி செய்யக்கூடிய நாடுகள் பட்டியலில் தான் இந்தியா இருக்கிறது. அப்படி பார்த்தாலும் கூட சிங்கப்பூர், நெதர்லாந்து போன்ற எரிபொருள்களை இறக்குமதி செய்கிற மற்ற நாடுகளை ஒப்பிடுகையில் நாம் மிக மிக குறைவாக பெட்ரோல், டீசல் விலை நிர்ணயம் செய்திருக்கிறோம். அதேபோல் பிரிக்ஸ்  கூட்டமைப்பில் இருக்கக்கூடிய ரஷ்யாவை தவிர விலை குறைவாக மக்களுக்கு பெட்ரோல் டீசலை கொடுத்துக் கொண்டிருப்பது இந்திய அரசுதான். இதுமட்டுமல்ல ரொம்ப முக்கியமான விஷயம் கடந்த நவம்பர் மாதம் முதல் மத்திய அரசு பெட்ரோல், டீசல் விலை குறைத்ததனால் கிட்டத்தட்ட ஒரு வருடத்திற்கு ஒரு லட்சம் கோடி ரூபாய் இழப்பு ஏற்படும் என அறிக்கை சொல்லியுள்ளார்கள்.

 

இது இல்லாமல் மற்ற மாநிலங்களில் வாட் வரி குறைப்பினால் அந்த மாநிலங்களுக்கு எல்லாம் 15,969 கோடி ரூபாய் இழந்திருக்கிறார்கள். ஆனால் அதற்கு மாற்றாக நவம்பர் மாதம் மத்திய அரசு விலையைக் குறைத்தது. அதற்குப்பின்னால் வாட் வரியை குறைக்காத மாநிலங்களில் முக்கியமாக வருவாய் பெறுகின்ற மாநிலமாக தமிழ்நாடு இருக்கிறது. ஒவ்வொரு மாதமும் கிட்டத்தட்ட 484 கோடி ரூபாய் வருமானத்தை பெட்ரோல், டீசல் வாட் வரி மூலமாக தமிழகம் பெற்றுக் கொண்டிருக்கிறது. இதன் வாயிலாகக் கடந்த நவம்பரில் இருந்து இப்போது வரைக்கும் 2,800 கோடி ரூபாயை தமிழக அரசு வாட் வாரியாக பெட்ரோல் டீசலில் இருந்து பெற்றுக் கொண்டிருக்கிறது. மத்திய அரசாங்கம் குறைக்கும் பொழுது மாநில அரசும் வரியைக் குறைத்தால் ஏழை எளிய மக்களுக்கு அது பிரயோஜனமாக இருக்கும்'' என்றார்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

ஸ்ட்ராங் ரூம் சிசிடிவி கேமராக்கள் செயலிழப்பு; நீலகிரியில் பரபரப்பு

Published on 27/04/2024 | Edited on 27/04/2024
Malfunction of strong room CCTV cameras; Excitement in the Nilgiris

18ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக கடந்த 19ஆம் தேதி தொடங்கி வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு வாக்குப்பதிவு நடைபெற்றது. இதன் ஒரு பகுதியாக நாடு முழுவதும் 13 மாநிலங்களில் உள்ள 88 மக்களவைத் தொகுதிகளில் நேற்று (26.04.2024) 2ஆம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்றது.
 

தமிழகத்தில் தேர்தல் மக்களவை தேர்தல் முடிந்திருக்கும் நிலையில் வாக்கு பெட்டிகள் அனைத்தும் ஸ்ட்ராங் ரூம் எனப்படும் ஐந்து அடுக்கு பாதுகாப்பு அறைக்குள் வைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் நீலகிரியில் ஸ்ட்ராங் ரூமில் வைக்கப்பட்டிருந்த சிசிடிவி கேமராக்கள் திடீரென செயலிழந்தது பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

நீலகிரி அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் வாக்கு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ளது. 200க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். அருகிலுள்ள அறையிலிருந்து கண்காணிப்பதற்காக அனைத்து அரசியல் கட்சியினருக்கும் பொதுவாக ஒரு அறை ஒதுக்கப்பட்டுள்ளது. இந்தநிலையில் இன்று மாலை திடீரென 173 சிசிடிவி கேமராக்கள் செயலிழந்தது. பின்னர் சுமார்  20 நிமிடங்களுக்கு பிறகு மீண்டும் சிசிடிவி கேமராக்கள் வழக்கம் போல் செயல்பட தொடங்கி இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

அதீத வெப்பம் காரணமாக சிசிடிவி கேமராக்கள் செயலிழந்திருக்கலாம் என மாவட்ட ஆட்சியர் தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் வாக்கு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள அறையில் சிசிடிவி காட்சிகள் திடீரென செயலிழந்தது அரசியல் கட்சியினர் இடையே பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. நீலகிரியில் திமுக சார்பில் ஆ.ராசாவும், அதிமுக கூட்டணி சார்பில் லோகேஷ் தமிழ்ச்செல்வனும், பாஜக கூட்டணியில் எல்.முருகனும், நாம் தமிழர் கட்சி சார்பாக ஜெயக்குமாரும் போட்டியிடுகின்றனர் என்பது குறிப்பிடத்தகுந்தது.

Next Story

'பாஜகவின் செயலை மக்கள் பார்த்துக்கொண்டுதான் இருக்கிறார்கள்'-முதல்வர் மு.க.ஸ்டாலின் கருத்து 

Published on 27/04/2024 | Edited on 27/04/2024
 'Our people are watching the work of the BJP' - Chief Minister M. K. Stalin's opinion

18ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக கடந்த 19ஆம் தேதி தொடங்கி வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு வாக்குப்பதிவு நடைபெற்றது. இதன் ஒரு பகுதியாக நாடு முழுவதும் 13 மாநிலங்களில் உள்ள 88 மக்களவைத் தொகுதிகளில் நேற்று (26.04.2024) 2ஆம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்றது.

இந்நிலையில் 'நிதியும் கிடையாது, நீதியும் கிடையாது' என பாஜக அரசு தமிழகத்தை வஞ்சிப்பதாக தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இதுகுறித்து எக்ஸ் வலைதளத்தில் வெளியிட்டுள்ள பதிவில் 'மிக்ஜாம் புயல் மற்றும் வெள்ளப் பாதிப்புகளுக்கான நிவாரணமாகத் தமிழ்நாடு கோரியது 37,907 கோடி ரூபாய். பாதிக்கப்பட்ட மக்களுக்கு உடனடி நிவாரணமாகவும், உட்கட்டமைப்புகளை மறுசீரமைக்கவும் தமிழ்நாடு அரசு மாநிலப் பேரிடர் நிதியில் இருந்து இதுவரை செலவு செய்துள்ளது 2,477 கோடி ரூபாய்.

ஆனால், ஒன்றிய பா.ஜ.க அரசு தற்போது அறிவித்திருப்பதோ வெறும் 276 கோடி ரூபாய். இதுவும் நாம் உச்சநீதிமன்றத்தை நாடிய பிறகே அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டுக்கு நிதியும் கிடையாது, நீதியும் கிடையாது என வஞ்சிக்கும் ஒன்றிய பாஜக அரசின் ஒவ்வொரு செயலையும் நம் மக்கள் பார்த்துக்கொண்டுதான் இருக்கிறார்கள்!' எனத் தெரிவித்துள்ளார்.