Skip to main content

''நானும் எதிர்ப்பு தெரிவிச்சேன்; மக்களோடுதான் இருப்பேன்'' - செல்வப்பெருந்தகை பேட்டி

Published on 20/12/2022 | Edited on 20/12/2022

 

 I will be with the people'-Selvaperunthakai interview

 

சென்னையிலிருந்து சுமார் 70 கிலோமீட்டரும், காஞ்சிபுரத்திலிருந்து 15 கிலோமீட்டரும் தூரம் கொண்ட பரந்தூரில் புதிய இரண்டாவது விமான நிலையம் அமைய ஏற்பாடுகள் நடந்து வருகிறது. இதற்கு எதிராக கிராம மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் நிலையில் போராட்டக்குழுவினர் அமைச்சர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி போராட்டத்தை தற்காலிகமாக வாபஸ் பெற்றனர். தொடர்ந்து பரந்தூர் விமான நிலையத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து நேற்று பரந்தூர் மக்கள் காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை நோக்கி பேரணி நடத்தினர்.

 

மீண்டும் அமைச்சர்கள், அரசு அதிகாரிகளுடன்  பேச்சுவார்த்தைக்கு ஏற்பாடு செய்யப்பட்ட நிலையில் நேற்று பேரணி தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டது.  இந்நிலையில் இன்று சென்னை தலைமைச் செயலகத்தில் 13 கிராமங்களின் பிரதிநிதிகளுடன் அமைச்சர்கள் எ.வ.வேலு, தங்கம் தென்னரசு, அன்பரசன் மற்றும் அதிகாரிகள் ஆலோசனையில் ஈடுபட்டனர்.

 

 I will be with the people'-Selvaperunthakai interview

 

இந்தக் கூட்டத்தில் காங்கிரஸ் எம்எல்ஏ செல்வப்பெருந்தகையும் கலந்துகொண்டார். பேச்சுவார்த்தைக்குப் பிறகு செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய செல்வப்பெருந்தகை, ''பதினொன்றாம் நூற்றாண்டில் கட்டப்பட்ட கோவில்கள் அந்தப் பகுதியில் இருக்கிறது. கம்பி கால்வாய் என்கின்ற மிகப்பெரிய கால்வாய் இருக்கிறது. காவேரிப்பட்டினத்தில் கொசஸ்தலை ஆற்றில் கலக்கும் கால்வாய் இருக்கிறது. அது நீர்ப்பிடிப்பு பகுதி. இதை எல்லாம் ஆய்வு செய்து ஒரு நல்ல முடிவு எடுக்க வேண்டும் என்று சொல்லி இருக்கிறோம். போராட்டக்காரர்கள், அந்தப் பகுதியைச் சார்ந்தவர்கள் ஜனநாயக முறையில் நியாயமான போராட்டத்தைக் கையில் எடுத்திருக்கிறார்கள். அந்தப் போராட்டத்தின் வாயிலாக எந்தவித பாதிப்பும் ஏற்படவில்லை. ஜனநாயக முறையில் 147 ஆவது நாளாக போராட்டம் நடைபெற்று வருகிறது. அரசும், தமிழக முதல்வரும் கனிவுடன் இதனைப் பார்த்துக் கொண்டிருக்கின்றனர் என நாங்கள் அறிவோம். இருந்த போதிலும் இந்த ஆய்வு அறிக்கை வந்த பிறகு அந்த வீடுகளை அகற்றாமல், மக்களுக்கு பாதிப்பு இல்லாமல் விமான நிலையம் அமைய வேண்டும் என்று கோரிக்கை வைத்திருக்கிறோம்.

 

மூன்று நான்கு இடங்களை அதிமுக ஆட்சியில் விமான நிலையத்திற்காக ஐடென்டிஃபை பண்ணினார்கள். எதிலுமே அமைக்க முடியாது என்று மத்திய அரசு சொல்லிவிட்டது. பரந்தூர் விமான நிலையம் என்று மாநிலங்களவையில் அறிவித்தது மத்திய ஒன்றிய அரசினுடைய அமைச்சர். மேற்கொண்டு அந்தப் பணிகளைத் தொடரும்பொழுது கிராம மக்கள் எதிர்ப்பு தெரிவிக்கிறார்கள். நானும் எதிர்ப்பு தெரிவிச்சேன். என்னுடைய தொகுதி மக்கள்தான் முக்கியம். மக்களுக்குப் பிரச்சனை வராமல் பார்க்க வேண்டும். காலம் காலமாக தலைமுறை தலைமுறையாக இங்கே இருக்கிறார்கள். இப்பொழுது ஆய்வுக்கு உட்படுத்த இருக்கிறார்கள். அண்ணா யுனிவர்சிட்டியின் வாட்டர் மேனேஜ்மென்ட் துறையும் ஐஐடி சேர்ந்து ஆய்வு செய்யப் போகிறார்கள். என்ன ரிப்போர்ட் வருகிறது என்று பார்ப்போம். நான் மக்களோடுதான் இருப்பேன்'' என்றார்.

 


 

சார்ந்த செய்திகள்

Next Story

டெல்லி காங்கிரஸ் தலைவர் ராஜினாமா!

Published on 28/04/2024 | Edited on 28/04/2024
Delhi Congress president resigns

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக கடந்த 19ஆம் தேதி தொடங்கி வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு கடந்த 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்று முடிவடைந்துள்ளது.

இதனையடுத்து 13 மாநிலங்களில் உள்ள 88 மக்களவைத் தொகுதிகளில் நேற்று முன்தினம் (26.04.2024) 2ஆம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்றது. அதே சமயம் இந்தியா கூட்டணி சார்பில் டெல்லியில் ஆம் ஆத்மி - காங்கிரஸ் இணைந்து போட்டியிடுகின்றன. இந்நிலையில் ஆம் ஆத்மி உடனான கூட்டணிக்கு எதிர்ப்பு தெரிவித்து டெல்லி காங்கிரஸ் தலைவர் பதவியில் இருந்து அரவிந்தர் சிங் லவ்லி ராஜினாமா செய்தார்.

இது குறித்து காங்கிரஸ் கட்சியின் தலைவர் மல்லிகார்ஜூன கார்கேவுக்கு அரவிந்தர் சிங் லவ்லி எழுதியுள்ள கடிதத்தில், “காங்கிரஸ் கட்சியின் மீது பொய்யான, இட்டுக்கட்டப்பட்ட மற்றும் தவறான ஊழல் குற்றச்சாட்டுகளை சுமத்துவதன் அடிப்படையில் உருவாக்கப்பட்ட ஒரு கட்சியுடன் காங்கிரஸ் கூட்டணி அமைப்பது, கட்சியின் கொள்கைக்கு எதிரானது. மேலும் இதனைப் பொருட்படுத்தாமல் டெல்லியில் ஆம் ஆத்மி கட்சியுடன் கூட்டணி அமைக்க காங்கிரஸ் கட்சி முடிவெடுத்துள்ளது. எனவே தனது பதவியை ராஜினாமா செய்கிறேன்” எனத் தெரிவித்துள்ளார். 

Next Story

தலைமைத் தேர்தல் அதிகாரிக்கு எம்.எல்.ஏ.க்கள் கடிதம்!

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
MLAs letter to Chief Electoral Officer Satyapratha Sahu

உலகின் மிகப்பெரிய ஜனநாயக திருவிழாவான இந்திய நாட்டின் 18ஆவது நாடாளுமன்ற தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக கடந்த 19 ஆம் தேதி (19.04.2024) தொடங்கி வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. முதற்கட்டமாக தமிழகம் உள்ளிட்ட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு வாக்குப்பதிவு நடைபெற்றது. இதனையடுத்து தமிழ்நாட்டில் நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் 69.72 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளதாக தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வமாக கடந்த 21 ஆம் தேதி (21.04.2024) அறிவித்திருந்தது. அதில் அதிகபட்சமாக தருமபுரி தொகுதியில் 81.20 சதவீத வாக்குகளும், குறைந்தபட்சமாக மத்திய சென்னை தொகுதியில் 53.96 சதவீத வாக்குகளும் பதிவாகியுள்ளன எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது.

அதே சமயம் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்ததால் வாக்காளர்களுக்குப் பணம் மற்றும் பரிசுப் பொருட்கள் கொடுப்பதைத் தடுக்கும் வகையில் தேர்தல் பறக்கும் படையினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். மேலும் தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டுள்ள அமைச்சர்கள் மற்றும் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களின் வாகனங்களை தேர்தல் பறக்கும் படையினர் தீவிரமாகச் சோதனை செய்தனர். இதன் ஒருபகுதியாக அரசியல் கட்சி தலைவர்களின் சிலைகள், பெயர்பலகைகள், எம்.எல்.ஏ. மற்றும் எம்.பி.க்களின் அலுவலகங்கள் சீல் வைக்கப்பட்டன.

இந்நிலையில் எம்.எல்.ஏ. அலுவலகங்களை திறக்க அனுமதி கோரி தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகுவிற்கு எம்.எல்ஏ.க்கள் கடிதம் எழுதியுள்ளனர். அந்த கடிதத்தில், “தேர்தல் முடிந்து ஒரு வாரம் ஆகிவிட்டதால் மக்கள் பணியாற்ற எம்.எல்.ஏ அலுவலகங்களை திறக்க வேண்டும்” எனத் தெரிவித்துள்ளனர். இது குறித்து தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு விரைவில் முடிவெடுப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.