Skip to main content

‘ஆளுநரோடு சண்டை; மத்திய அரசோடு சச்சரவு’ - அமைச்சரவை மாற்றம் குறித்து ஆர்.பி.உதயகுமார்

Published on 12/05/2023 | Edited on 12/05/2023

 

 'Fight with the governor; Argument with the central government - RB Udayakumar on cabinet reshuffle

 

தமிழக அமைச்சரவையில் புதிதாக டி.ஆர்.பி.ராஜா அமைச்சராக நேற்று பதவியேற்றுக் கொண்டார். அதேபோல் சில அமைச்சர்களின் துறைகளும் மாற்றியமைக்கப்பட்டிருந்தது.

 

இந்தநிலையில் செய்தியாளர்களைச் சந்தித்த அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமாரிடம் இது குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த அவர், ''மக்கள் மிகப்பெரிய எதிர்பார்ப்போடு திமுகவை ஆட்சியில் அமர்த்தினார்கள். அந்த எதிர்பார்ப்பு இந்த இரண்டு ஆண்டுக் காலத்தில் ஒன்று கூட நிறைவேறாமல் போய்விட்டது. நீட் தேர்வு ரத்து நிறைவேறும் என்று மாணவர்கள் எதிர்பார்த்தார்கள். திமுக சொன்ன பொய்யை நம்பி அவர்கள் ஆட்சிக்கு வருவதற்கு ஏதோ ஒரு விதத்தில் காரணமாக இருந்தார்கள். அரசு ஊழியர்கள் பென்ஷன் திட்டம் கிடைத்துவிடும், மத்திய அரசுக்கு இணையான அகவிலைப்படி கிடைத்துவிடும் என்று அவர்களை நம்ப வைத்தார்கள்.

 

நிவாரணங்களை வழங்குகிறோம் என்று சொல்லி விவசாயிகளை நம்ப வைத்தார்கள். கல்விக்கடனை ரத்து செய்வோம் என மாணவர்களை நம்ப வைத்தார்கள். அனைத்து மகளிருக்கும் உதவித்தொகை, ஊக்கத்தொகை தருகிறோம் என மகளிரையும் ஏமாற்றினார்கள். ஆனால் ஆட்சிப்பொறுப்பை ஏற்றதற்கு பிறகு புதிய திட்டங்களை அறிவிக்காமல், 520 வாக்குறுதிகளை ஏமாற்றியதோடு மட்டுமல்லாமல் அதிமுக ஆட்சியில் கொண்டுவரப்பட்ட திட்டங்களையும் முடக்கி வைத்திருந்தார்கள்.

 

இந்த இரண்டு ஆண்டுகளிலேயே அரசு 100% தோல்வியுற்ற அரசாக மாறிவிட்டது. சண்டை சச்சரவுகள், ஆளுநரோடு மோதல், மத்திய அரசோடு மோதல், நிதி பெற முடியாத நிலை, நிர்வாகக் குளறுபடி. இப்படி ஒட்டுமொத்த தோல்வி அரசாக திமுக மாறிவிட்டது. முக்கியத் துறையான நிதித்துறை அமைச்சரே ஒப்புதல் வாக்குமூலம் கொடுத்ததை போல் வெளியான ஆடியோ அதிர்வலையை ஏற்படுத்தியிருக்கிறது. அதை திசை மாற்றுவதற்கு அமைச்சர் விடுவிப்பு, அமைச்சர் சேர்ப்பு, இலாகா மாற்றம் என்று ஒரு பரபரப்பு செய்தியை உருவாக்கி புதிய அமைச்சரவை வடிவமைத்துக் கொண்ட ஒரு உருவகத்தை உருவாக்க முயற்சி செய்திருக்கிறார்கள். இந்த முயற்சி மக்களிடம் எடுபடாது'' என்றார்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

'பாஜகவின் செயலை மக்கள் பார்த்துக்கொண்டுதான் இருக்கிறார்கள்'-முதல்வர் மு.க.ஸ்டாலின் கருத்து 

Published on 27/04/2024 | Edited on 27/04/2024
 'Our people are watching the work of the BJP' - Chief Minister M. K. Stalin's opinion

18ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக கடந்த 19ஆம் தேதி தொடங்கி வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு வாக்குப்பதிவு நடைபெற்றது. இதன் ஒரு பகுதியாக நாடு முழுவதும் 13 மாநிலங்களில் உள்ள 88 மக்களவைத் தொகுதிகளில் நேற்று (26.04.2024) 2ஆம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்றது.

இந்நிலையில் 'நிதியும் கிடையாது, நீதியும் கிடையாது' என பாஜக அரசு தமிழகத்தை வஞ்சிப்பதாக தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இதுகுறித்து எக்ஸ் வலைதளத்தில் வெளியிட்டுள்ள பதிவில் 'மிக்ஜாம் புயல் மற்றும் வெள்ளப் பாதிப்புகளுக்கான நிவாரணமாகத் தமிழ்நாடு கோரியது 37,907 கோடி ரூபாய். பாதிக்கப்பட்ட மக்களுக்கு உடனடி நிவாரணமாகவும், உட்கட்டமைப்புகளை மறுசீரமைக்கவும் தமிழ்நாடு அரசு மாநிலப் பேரிடர் நிதியில் இருந்து இதுவரை செலவு செய்துள்ளது 2,477 கோடி ரூபாய்.

ஆனால், ஒன்றிய பா.ஜ.க அரசு தற்போது அறிவித்திருப்பதோ வெறும் 276 கோடி ரூபாய். இதுவும் நாம் உச்சநீதிமன்றத்தை நாடிய பிறகே அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டுக்கு நிதியும் கிடையாது, நீதியும் கிடையாது என வஞ்சிக்கும் ஒன்றிய பாஜக அரசின் ஒவ்வொரு செயலையும் நம் மக்கள் பார்த்துக்கொண்டுதான் இருக்கிறார்கள்!' எனத் தெரிவித்துள்ளார்.

 

Next Story

நீர் மோர் பந்தல் திறப்பதில் கோஷ்டி பூசல்;  மாறி மாறி புகாரளிக்கும் அதிமுக!

Published on 27/04/2024 | Edited on 27/04/2024
Group fight in opening of Neer Mor Pandal; AIADMK reports alternately

அண்மையில் நடைபெற்ற அதிமுக நிர்வாகிகள் கூட்டத்தில் கலந்துகொண்ட எடப்பாடி பழனிசாமி, கோடைகாலம் என்பதால் வெப்பத்தை தணிப்பதற்காக நீர் மோர் பந்தல் அமைக்க வேண்டும் என உத்தரவிட்டிருந்தார். அதன்படி அதிமுகவினர் பல இடங்களிலும் நீர் மோர் பந்தல்களை அமைத்து வருகின்றனர். இந்நிலையில் கடலூரில் நீர் மோர் பந்தல் அமைப்பதில் இரு தரப்பினருக்கிடையே ஏற்பட்ட மோதல் போக்கு  காரணமாக மாறி மாறி புகார் கொடுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

கடலூர் மாவட்டம் திருப்பாதிரிபுலியூர், மஞ்சக்குப்பம் மற்றும் முதுநகர் பகுதிகளில் அதிமுக மாநில எம்ஜிஆர் இளைஞரணி துணைச் செயலாளர் கார்த்திகேயன் தலைமையில் அவருடைய ஆதரவாளர்கள் நீர் மோர் பந்தல் திறக்க ஏற்பாடு செய்துள்ளனர். இந்நிலையில் முன்னாள் தொழில்துறை அமைச்சரும், அதிமுக மாவட்ட செயலாளருமான எம்.சி.சம்பத், அனுமதியின்றி நீர்மோர் பந்தல் அமைக்க அனுமதி தந்தால் சட்ட ஒழுங்கு பிரச்சனை ஏற்படும் என காவல்துறையில் வாய்மொழி புகார் அளித்ததாகவும், அதிமுக சார்பில் மாவட்டச் செயலாளர்கள் யாரை பரிந்துரை செய்கிறார்களோ அவர்கள் தான் நீர் மோர் பந்தலை திறக்க வேண்டும் எனவும் கூறப்பட்டது.

இந்நிலையில் அனுமதியின்றி நீர் மோர் பந்தல் அமைப்பதற்காக செய்யப்பட்ட அனைத்து ஏற்பாடுகளையும் காவல்துறையினர் அப்புறப்படுத்தினர். அதேநேரம் நீர் மோர் பந்தல் அமைக்க அனுமதிகோரி அதிமுக மாநில எம்ஜிஆர் அணி இளைஞரணி செயலாளர் கார்த்திகேயன் அவருடைய ஆதரவாளர்களுடன் கடலூர் கோட்டாட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தார். நீர் மோர் பந்தல் அமைக்க அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி எங்களை அறிவுறுத்தி உள்ளார். அதன்படி நாங்கள் அதை செய்து வருகிறோம் என அனுமதி கேட்டு மனு அளிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு மனு கொடுக்கப்பட்ட சிறிது நேரத்திலேயே அதிமுக மாவட்ட அவைத்தலைவர் குமார் தலைமையில் கடலூர் மாநகராட்சிக்குட்பட்ட பல பகுதிகளில் நீர் மோர் பந்தல் அமைக்க அனுமதி கேட்டு மனு அளிக்கப்பட்டுள்ளது. அந்த மனுவில், அதிமுகவின் மாவட்டச் செயலாளர் எம்.சி.சம்பத் யாரை அனுமதிக்கிறாரோ அவர்களுக்கு மட்டும்தான் நீர் மோர் பந்தல் அமைக்க அனுமதி அளிக்க வேண்டும். இல்லை என்றால் சட்ட ஒழுங்கு பிரச்சனைகள் ஏற்பட வாய்ப்புள்ளது என தெரிவித்துள்ளனர்.

இப்படி கடலூரில் நீர் மோர் பந்தல் அமைப்பு தொடர்பாக அதிமுகவினர் இரு கோஷ்டியாக மாறி மாறி மனு அளித்துள்ளது அங்கு பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.