Skip to main content

ஆன்லைனில் ஓட்டு வேட்டை நடத்தும் தமிழக காங்கிரஸ் வேட்பாளர் லுயிஸ் அடைக்கலராஜ் !

Published on 19/02/2019 | Edited on 19/02/2019

 

பாராளுமன்ற தேர்தல் தேர்தல் தேதி இன்னும் அறிவிக்காத நிலையில் கூட்டணி தொடர்பான பேச்சு வார்த்தை தீவிரமாக நடைபெற்று வருகிறது. திமுக-காங் பேச்சுவார்த்தை தற்போது டில்லியில் நடைபெற்று வருவதாகவும் இதற்காக எம்பி கனிமொழி டில்லியில் தங்கி ராகுல்காந்தி உள்ளிட்ட முக்கிய பிரமுகர்களை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார்.

 

lo


இந்த நிலையில் நேற்று காலையிலிருந்து திருச்சியில் உலாவரும் வாட்ஸ் அப் தகவல் திமுக, காங்கிரஸ் மட்டுமல்லாது தோழமை கட்சியினர் இடையே ஒரு தகவல் வேகமாக பரவி வருகிறது. 

 

ஆங்கிலத்தில் பதிவிட்டுள்ள தகவலில் திருச்சி லோக்சபா வேட்பாளராக லூயிஸ் அடைக்கலராஜ்( முன்னாள் எம்பி அடைக்கலராஜின் மகன்) நிற்க அவரை அனைவரும் ஆதரிக்க வேண்டும் என்றும், உங்கள் வாக்காளர் அடையாள அட்டையின் எண்ணை - 9944999991 என்ற எண்ணுடன் 8828843022 என்கிற எண்ணுக்கு அனுப்புங்கள் என்று அறிவிப்பு வெளியாகி இருந்தது. இந்த வாட்ஸ் அப் பதிவு முதலில் காங்கிரசில் இருந்து வெளியானதாக கூறப்படுகிறது.

 

lo

 

இந்த தகவல் கட்சியினர் இடையே பெரிய பரபரப்பை உண்டாக்கி உள்ளது. இன்னும் கூட்டணியே எத்தனை இடங்கள் என்று இன்னும் முடிவு எட்டாத நிலையில் இப்படி வாட்ச் அப் செய்தியால் எல்லோரும் குழப்பம் அடைந்துள்ளனர். இது குறித்து லூயிஸ் தரப்பில் விசாரித்தால் யாராவது ஆர்வக் கோளாரில் செய்து இருப்பார்கள் என்கிற தகவலே வெளியாகி உள்ளது. 

 

திருச்சி நாடாளுமன்ற தொகுதியை வைகோ கேட்டுக்கொண்டு இருக்கும் நிலையில் திருச்சியில் 4 முறை காங்கிரஸ் சார்பில் வெற்றி பெற்ற அடைக்கலராஜ் மகன் லூயிஸ் அடைக்கலராஜின் இந்த ஆன்லைன் ஓட்டு வேட்டை கட்சியினர் இடையே பெரிய பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 


 

சார்ந்த செய்திகள்

 

Next Story

உலக போதை ஒழிப்பு தினம்; மாணவர்கள் விழிப்புணர்வு பேரணி!

Published on 27/06/2024 | Edited on 27/06/2024
World Anti-Drug Day; Students awareness rally!

உலக போதை ஒழிப்பு தினத்தை முன்னிட்டு திருச்சி ஜங்ஷன் ரெயில் நிலையத்தில் பள்ளி மாணவர்கள் விழிப்புணர்வு பேரணியை ரெயில்வே எஸ்.பி தொடங்கி வைத்தார்

திருச்சி ஜங்ஷன் ரயில் நிலையத்தில் உலக போதைப் பொருள் ஒழிப்பு தினத்தை முன்னிட்டு பேரணி நடைபெற்றது. இதில் 50-க்கும் மேற்பட்ட பள்ளி மாணவர்கள் கலந்து கொண்டனர். மேலும் போதைப் பொருட்கள் குறித்த விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தியவாறு பள்ளி மாணவர்கள் ரயில் நிலைய நடை மேடைகள் மற்றும் வளாகத்தில் ஊர்வலமாக சென்றனர். இதில் ரெயில்வே போலீஸ் சூப்பிரண்டு செந்தில்குமார் தலைமைத் தாங்கினார். இதில் துணை போலீஸ் கண்காணிப்பாளர் செந்தில்குமார், இன்ஸ்பெக்டர் மோகனசுந்தரி, ரயில்வே பாதுகாப்பு படை இன்ஸ்பெக்டர் செபாஸ்டியன், சப் இன்ஸ்பெக்டர் திருமலை ராஜா, லட்சமி, சிறப்பு சப் இன்ஸ்பெக்டர்கள் ஜான்சன், பாலமுருகன் உள்ளிட்ட ரெயில்வே போலீசார் கலந்து கொண்டனர்.

இதையடுத்து பத்திரிகையாளர்களிடம் போலீஸ் சூப்பிரண்டு செந்தில்குமார் கூறுகையில் “போதைப் பொருட்களுக்கு எதிராக விழிப்புணர்வு பேரணி திருச்சி ரெயில் நிலையம் மட்டும் இன்றி திருச்சி கோட்டத்திற்கு உட்பட்ட 24 மாவட்டங்களிலும் நடைபெற்றது. போதைப் பொருட்களை ஒழிப்பதற்கு பொதுமக்கள் முழு ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும். மேலும் 3 ரெயில்வே உட்கோட்டங்களிலும் தனிப்படை அமைக்கப்பட்டு போதைப் பொருட்கள் குறித்து தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகிறது” என்று கூறினார்.

Next Story

“திருச்சியில் கலைஞர் பெயரில் நூலகம்” - முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு!

Published on 27/06/2024 | Edited on 27/06/2024
Cm MK Stalin announcement for Library in the name of the kalaiganr in Trichy 

தமிழக சட்டப்பேரவையில் 110 விதியின் கீழ் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டு உரையாற்றினார். அப்போது அவர், “தமிழ்நாடு அனைத்து துறைகளிலும் வளர்ந்து வருகிறது. இந்தியாவிலேயே 2வது பெரிய பொருளாதார மாநிலமாக தமிழ்நாடு உள்ளது. கடந்த 2022 ஆம் ஆண்டில் ஆண்டிற்கான ஏற்றுமதி குறியீட்டில் இந்தியாவிலேயே தமிழ்நாடு நம்பர் 1 மாநிலமாக முன்னேறியுள்ளது. மோட்டார் வாகனங்கள் மற்றும் மின்னணு உதிரி பாகங்கள் உற்பத்தியில் முன்னணி மாநிலமாக இருக்கிறது.

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் 2 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் பன்னாட்டு விமான நிலையம் அமைக்கப்படும். ஆண்டுக்கு சுமார் 3 கோடி பயணிகள் வந்து செல்லும் வகையில் இந்த விமான நிலையம் அமைக்கப்படவுள்ளது. திருச்சியில் கலைஞர் பெயரில் நூலகம் மற்றும் ஆராய்ச்சி மையம் அமைக்கப்படும்” எனத் தெரிவித்தார்.

அதே சமயம் சென்னை எழும்பூர் ராஜரத்தினம் மைதானம் அருகே அதிமுக எம்எல்ஏக்கள் இன்று (27.06.2024) காலை முதல் உண்ணாவிரதம் இருந்து வருகின்றனர். சட்டமன்றக் கூட்டத்தொடரில் இருந்து அதிமுக எம்எல்ஏக்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டதைக் கண்டித்தும், கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய விவகாரத்தில் சிபிஐ விசாரணை கேட்டும் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். அதிமுக எம்எல்ஏக்கள் கருப்புச் சட்டை அணிந்து உண்ணாவிரதப் போராட்டத்தில் பங்கேற்றுள்ளனர்.