Skip to main content

திமுக கொடுத்த அழுத்தம் - வாக்குறுதி அளித்த ராகுல்காந்தி

Published on 03/04/2019 | Edited on 03/04/2019

 

சென்னைக்கு கடந்த முறை ராகுல் காந்தி வந்திருந்தபோது, தொலைபேசியில் தொடர்பு கொண்ட மு.க.ஸ்டாலின், தமிழகத்தில் நீட் தேர்வில் விலக்கு அளிப்பதும், கல்வியை மாநிலப்பட்டியலுக்கு மாற்ற வேண்டும் என்பதும் கட்சிப்பாகுபாடின்றி எல்லோருடைய கோரிக்கையாக இருக்கிறது. அதில் நீங்கள் கவனம் செலுத்த வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். அதேபோல் காங்கிரஸ் தேர்தல் அறிக்கை குழு அமைத்தவுடன், மீண்டும் ராகுலை தொடர்பு கொண்ட ஸ்டாலின், தமிழ்நாட்டில் இது முக்கியமான பிரச்சனை, மேலும் மிகவும் எதிர்பார்ப்பை உருவாக்கக்கூடிய விஷயங்கள். இதனை நீங்கள் கொண்டு வந்தால் நல்ல வரவேற்பு இருக்கும் என்றும், இதனை நீங்கள் தேர்தல் அறிக்கையில் கொண்டு வரவேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார். இதனையே ப.சிதம்பரத்திடமும் வலியுறுத்தியுள்ளார். 

அதற்கு ராகுல், கண்டிப்பாக இதனை தேர்தல் அறிக்கையில் கொண்டு வருவதாக வாக்குறுதி அளித்திருந்தார். மேலும் மத்தியில் காங்கிரஸ் ஆட்சி அமையும் பட்சத்தில் முதலில் செய்யக்கூடிய பணிகளில், தமிழகத்தில் நீட் தேர்வில் விலக்கு அளிப்பதில் கவனம் செலுத்தப்படும் என்றும் கூறியிருந்தார். 

 

rahul gandhi mk stalin



இந்த நிலையில் டெல்லியில் ராகுல் காந்தி, சோனியா காந்தி  மற்றும் மன்மோகன் சிங் ஆகியோர் செவ்வாய்க்கிழமை காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கையை வெளியிட்டனர். அதில் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால், நீட் தேர்வுக்கு பல்வேறு மாநிலங்களில் எதிர்ப்பு இருக்கும் நிலையில் அந்த தேர்வு ரத்து செய்யப்படும். நீட் தேர்வுக்கு இணையாக மாநிலங்கள் மருத்துவத்துக்கு தனியாக தேர்வு நடத்திக்கொள்ள அனுமதிக்கப்படும். பள்ளிக்கல்வி மத்தியப் பட்டியலில் இருந்து மாநிலப்பட்டியலுக்கு மாற்றப்படு்ம் என்று வாக்குறுதி அளிக்கப்பட்டுள்ளது.
 

திமுக கொடுத்த அழுத்தம் காரணமாகவே நீட் தேர்வில் விலக்கு மற்றும் கல்வியை மாநிலப்பட்டியலுக்கு மாற்றப்படும் என்ற வாக்குறுதிகளை காங்கிரஸ் தேர்தல் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது என்கிறது திமுக வட்டாரங்கள். 
 

காங்கிரஸ் தேர்தல் அறிக்கையால் தேர்தல் முடிவுகள் வெளிவரும் முன்பே மக்களுக்கு வெற்றி கிடைத்துவிட்டது என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலினும் கூறியுள்ளார்.
 

 

 

சார்ந்த செய்திகள்

 

Next Story

8 மாநில முதல்வர்களுக்கு தமிழக முதல்வர் கடிதம்

Published on 28/06/2024 | Edited on 28/06/2024
Tamil Nadu Chief Minister's Letter to 8 State Chief Ministers

இளநிலை மருத்துவ படிப்பிற்காக இந்த ஆண்டு நடைபெற்ற நீட் தேர்வில் முறைகேடு நடந்ததாகப் பல புகார்கள் எழுந்தது. அந்த வகையில், நீட் தேர்வின் வினாத்தாள் கசிவு, கருணை மதிப்பெண், 67 பேருக்கு முழு மதிப்பெண்கள், நீட் தேர்வின் போது ஏற்பட்ட குளறுபடிகள், ஆள்மாறாட்டம் செய்து நீட் தேர்வு எழுதியது, ஒரே பயிற்சி மையத்தைச் சேர்ந்த பல மாணவர்கள் நிறைய மதிப்பெண்கள் எடுத்தது எனத் தொடர்ச்சியாக பல்வேறு புகார் மனுக்கள் உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டு வழக்குகள் குவிந்துள்ளன.

இது தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்று வருகிறது. அதேநேரம் சிபிஐ போலீசார் இந்த வழக்கை விசாரித்து வருகின்றனர். மேலும் என்.டி.ஏ எனப்படும் தேசிய தேர்வு முகமையின் தலைவர் நீக்கப்பட்டு புதிய ஒருவரை நியமனம் செய்து மத்திய கல்வித்துறை உத்தரவிட்டிருந்தது. தொடர்ந்து நீட் முறைகேடுகளை கண்டித்து பல்வேறு மாநிலங்களில் போராட்டங்கள் வெடித்துள்ளது. நேற்று டெல்லியில் உள்ள தேசிய தேர்வு முகமை வளாகத்தில் போராடிய மாணவர்கள் போலீசார் மீது தடியடி நடத்தியது பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது.

இன்று  நீட் தேர்வுக்கு எதிராக மீண்டும் ஒருமுறை தமிழக சட்டப்பேரவையில் நீட் தேர்வுக்கு விலக்கு அளிக்க வேண்டி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இன்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பிரதமர் மோடிக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அதில், 'மாணவர்களுடைய நலன் கருதி தேசிய அளவில் நீட் தேர்வை ரத்து செய்திட வேண்டும். நீட் விலக்கு கோரிய தீர்மானம் தொடர்பான சட்ட முன்வடிவு குடியரசுத் தலைவருக்கு ஏற்கனவே அனுப்பப்பட்டு கோப்பு நிலுவையில் உள்ளது வருத்தம் அளிக்கிறது. மருத்துவக் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கைக்கு நீட் தேர்வில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும் என்ற தமிழகத்தின் தொடர்ச்சியான கோரிக்கை மீண்டும் வலியுறுத்துகிறேன்' என தெரிவித்துள்ளதோடு, இன்று சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தையும் முதல்வர் கடிதத்தில் இணைத்துள்ளார்.

அதேபோல் தேசிய அளவில் மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு நீட் தேர்வை ரத்து செய்ய வலியுறுத்த வேண்டும் என எட்டு மாநில முதல்வர்களுக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். டெல்லி, ஹிமாச்சல், ஜார்கண்ட், கர்நாடகா, கேரளா, பஞ்சாப், தெலுங்கானா, மேற்கு வங்கம் ஆகிய 8 மாநில முதல்வர்களுக்கு நீட் தேர்வை ரத்து செய்ய வலியுறுத்த வேண்டும் என தமிழக முதல்வர் கடிதம் எழுதியுள்ளார்.

Next Story

மூன்றாவது முறையாக நிறைவேறிய சட்ட மசோதா; மோடிக்கு முதல்வர் மீண்டும் கடிதம்

Published on 28/06/2024 | Edited on 28/06/2024
Bill passed for the third time; CM again letter to Modi

இளநிலை மருத்துவ படிப்பிற்காக இந்த ஆண்டு நடைபெற்ற நீட் தேர்வில் முறைகேடு நடந்ததாகப் பல புகார்கள் எழுந்தது. அந்த வகையில், நீட் தேர்வின் வினாத்தாள் கசிவு, கருணை மதிப்பெண், 67 பேருக்கு முழு மதிப்பெண்கள், நீட் தேர்வின் போது ஏற்பட்ட குளறுபடிகள், ஆள்மாறாட்டம் செய்து நீட் தேர்வு எழுதியது, ஒரே பயிற்சி மையத்தைச் சேர்ந்த பல மாணவர்கள் நிறைய மதிப்பெண்கள் எடுத்தது எனத் தொடர்ச்சியாக பல்வேறு புகார் மனுக்கள் உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டு வழக்குகள் குவிந்துள்ளன.

இது தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்று வருகிறது. அதேநேரம் சிபிஐ போலீசார் இந்த வழக்கை விசாரித்து வருகின்றனர். மேலும் என்.டி.ஏ எனப்படும் தேசிய தேர்வு முகமையின் தலைவர் நீக்கப்பட்டு புதிய ஒருவரை நியமனம் செய்து மத்திய கல்வித்துறை உத்தரவிட்டிருந்தது. தொடர்ந்து நீட் முறைகேடுகளை கண்டித்து பல்வேறு மாநிலங்களில் போராட்டங்கள் வெடித்துள்ளது. நேற்று டெல்லியில் உள்ள தேசிய தேர்வு முகமை வளாகத்தில் போராடிய மாணவர்கள் போலீசார் மீது தடியடி நடத்தியது பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது.

இந்நிலையில் இன்று  நீட் தேர்வுக்கு எதிராக மீண்டும் ஒருமுறை தமிழக சட்டப்பேரவையில் நீட் தேர்வுக்கு விலக்கு அளிக்க வேண்டி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இந்நிலையில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பிரதமர் மோடிக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அதில், 'மாணவர்களுடைய நலன் கருதி தேசிய அளவில் நீட் தேர்வை ரத்து செய்திட வேண்டும். நீட் விலக்கு கோரிய தீர்மானம் தொடர்பான சட்ட முன்வடிவு குடியரசுத் தலைவருக்கு ஏற்கனவே அனுப்பப்பட்டு கோப்பு நிலுவையில் உள்ளது வருத்தம் அளிக்கிறது. மருத்துவக் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கைக்கு நீட் தேர்வில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும் என்ற தமிழகத்தின் தொடர்ச்சியான கோரிக்கை மீண்டும் வலியுறுத்துகிறேன்' என தெரிவித்துள்ளதோடு, இன்று சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தையும் முதல்வர் கடிதத்தில் இணைத்துள்ளார்.