Skip to main content

கண்ணீர்விட்டு கதறி அழுத  ஸ்டாலின்... திமுகவிற்கு ஆதரவு கொடுத்த அதிமுகவினர்... நடந்த நெகிழ்ச்சி சம்பவம்!

Published on 06/03/2020 | Edited on 06/03/2020

பத்துக்கு பத்தில் ஓலை வேய்ந்த அறை, அதற்குள் ஒரு கட்டில், மேஜை, அலமாரி. இவைதான் குடியாத்தம் தனித்தொகுதி எம்.எல்.ஏ. காத்தவராயனுக்கு சொந்தமாக இருந்தவை. கிளைச் செயலாளர், ஒன்றிய இளைஞரணி அமைப் பாளர், மத்திய மாவட்ட துணைச்செயலாளர்... என படிப்படியாக தி.மு.க.வில் தன்னை வளர்த்துக்கொண்டவர். பொறுப்பில் இருந்தாலும், இல்லாவிட்டாலும் அதிகாரிகளைச் சந்தித்து மக்கள் பிரச்சினைகளைப் பேசுவார்.

 

dmk



இதுபோன்ற செயல்பாடுகள்தான் தாழ்த்தப்பட்டோர் உள்ளிட்ட சிறுபான்மையின மக்கள் பெரும்பான்மையாக வசிக்கும் பேரணாம்பட்டு நகராட்சியின் நகரமன்ற தலைவராக காத்தவராயனை ஆக்கியது. 2016-ல் குடியாத்தம் எம்.எல்.ஏ. சீட் கேட்டபோது கிடைக்கவில்லை. 2019 நாடாளுமன்றத் தேர்தலோடு நடந்த 18 சட்டமன்றத் தொகுதிகளின் இடைத்தேர்தலில், மீண்டும் குடியாத்தத்தில் போட்டியிட விருப்பம் தெரிவித்தார். உட்கட்சிப் பூசல் மீண்டும் தடுத்தது. அதைத் தாண்டியும் மக்கள் செல்வாக்கு இருந்ததால், தலைமை காத்தவராயனுக்கு சீட் ஒதுக்கியது. அ.தி.மு.க.வினரே தேர்தலில் காத்தவராயனை ஆதரித்ததுதான், அவரது எளிமைக்கும், நேர்மைக்கும் கிடைத்த வெற்றி.

 

dmk



தேர்தலில் வெற்றிபெற்றாலும் எந்த பந்தாவும் காட்டியதில்லை. சில ஆண்டுகளாக இதயநோயால் அவதிப்பட்டு வந்தார். அறுவை சிகிச்சை செய்து ஓரளவுக்கு குணமடைந்திருந்த நிலையில்தான், திடீரென பிப்ரவரி 28-ந் தேதி காலையில் உடல் நலக் குறைவால் காத்தவராயனின் உயிர் பிரிந்தது. எம்.எல்.ஏ.வாகத் தேர்ந்தெடுக்கப்பட்டு வெறும் 9 மாதங்கள் மட்டுமே பதவியில் இருந்தவர் காத்தவராயன். திருச்சி தெற்கு தி.மு.க. எம்.எல்.ஏ. மரியம்பிச்சை, திருப்பரங்குன்றம் எம்.எல்.ஏ. போஸ் வரிசையில், குறைந்த கால அளவே எம்.எல்.ஏ. பதவி வகித்து மறைந்தவர் காத்தவராயன் என்கிறார்கள்.

அவருக்கென்று தனியாகக் குடும்பம் கிடை யாது. சலவைத் தொழிலாளியாக இருந்த காத்தவ ராயன், இளமைக் காலத்தில் ஒரு பெண்ணைக் காதலித்தார். உயர்படிப்புப் படித்த அந்தப் பெண்ணுக்கும் காத்தவராயன் மீது காதல் இருந்தது. ஆனால், கைகூட வில்லை.


நாட்டார் தெய்வமாக வணங்கப்படும் காத்தவராயன், ஆரிய மாலாவைக் காதலித்து கைகூடாமலேயே வாழ்ந்து, கழுவில் ஏற்றப்பட்டதாக புராணங்கள் சொல்கின்றன. இந்தக் காத்தவராயன் கடைசிவரை காதலை நெஞ்சில் சுமந்தபடி, திருமணம் செய்துகொள்ளாமலேயே வாழ்க்கையின் முடிவை எய்திவிட்டார். அவருக்குச் சேர வேண்டிய, மாதாந்திர உதவித்தொகை இனி அவரது சகோதரர் குடும்பத்திற்கு கிடைக்கலாம் என்கிறார்கள் சட்டமன்ற செயலக வட்டாரத்தைச் சேர்ந்தவர்கள்.

எம்.எல்.ஏ. காத்தவராயனின் இறுதி நிகழ்வில் கலந்துகொண்ட தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின், கண்ணீர்விட்டு கதறியழுதார். தி.மு.க.வைச் சேர்ந்தவர்கள் மட்டுமின்றி, அமைச்சர் வீரமணி உள்ளிட்ட பலரும் இந்த இறுதி நிகழ்வில் பங்கெடுத்தது, கட்சிகள் கடந்து காத்தவராயன் பெற்றிருந்த நன்மதிப்பைக் காட்டியது. குடிசை வீட்டில் ஒரு எம்.எல்.ஏ. என்பதே இன்றைய காலத்தில் அரசியல் அதிசயம்தானே.

 

சார்ந்த செய்திகள்

 

Next Story

தனியார் கல்லூரி விடுதியில் மாணவி தற்கொலை; பெற்றோர் குற்றச்சாட்டு

Published on 25/06/2024 | Edited on 25/06/2024
Student incident in private college hostel; Accusation of parents

திருச்சியில் தனியார் கல்லூரி விடுதியில் மாணவி தற்கொலை செய்து கொண்ட சம்பவத்தில் இந்த உயிரிழப்பில் மர்மம் இருப்பதாக பெற்றோர் குற்றச்சாட்டு தெரிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திருச்சி மாவட்டம் சமயபுரம் அடுத்து டோல் பிளாசா அருகே தனலட்சுமி சீனிவாசன் பல்கலைக்கழகத்தில் மருத்துவக் கல்லூரி,பொறியியல் கல்லூரி, கலைக் கல்லூரி செயல்பட்டு வருகிறது. தனலட்சுமி சீனிவாசன் பல்கலைக்கழகத்தில் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் பயின்று வருகின்றனர். சிவகங்கை மாவட்டம், மானாமதுரை மாரியம்மன் தெருவைச் சேர்ந்த அமமுக நகர செயலாளர் பாலாஜியின் மகள் தாரணி (வயது 19) விடுதியில் தங்கி பி.டெக் முதலாம் ஆண்டு படித்து வந்தார்.

தாரணி காய்ச்சல் காரணமாக நேற்று காலை கல்லூரி வளாகத்தில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று விடுதிக்கு சென்றுள்ளார். மேலும் காய்ச்சல் அதிகமாக இருந்ததால் கல்லூரிக்கு செல்லாமல் விடுதியில் தங்கியுள்ளார். தாரணி காய்ச்சல் குறித்து பேராசிரியரிடம் தெரிவித்துள்ளார். ஆனால் விடுமுறை எடுக்கக்கூடாது நிர்வாகத்திடம் கேட்டு தான் விடுமுறை எடுக்க வேண்டும் என தெரிவித்துள்ளனர். காய்ச்சல் அதிகமாக இருந்ததால் தாரணி விடுதியிலேயே தங்கி உள்ளார். விடுதியில் தங்கியிருந்த சக மாணவிகள் கல்லூரிக்கு சென்று மீண்டும் விடுதிக்கு வந்தபோது அறை உள்புறம் தாழ்பாள் போடப்பட்டு இருந்ததால் இது குறித்து விடுதி சக மாணவிகள் நிர்வாகத்திடம் தெரிவித்தனர். அதன்படி நிர்வாகத்தினர் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்த போது ஜன்னலில் துப்பட்டாவால் தூக்கு மாட்டி தற்கொலை செய்ததாக கூறி அவரை படுக்கையில் வைத்திருந்தனர்.

மேலும் இறந்த தாரணியை பிரேதப் பரிசோதனைக்காக ஸ்ரீரங்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்தநிலையில் தாரணிக்கு காய்ச்சல் காரணமாக தந்தை பாலாஜியிடம் தொலைபேசியில் மதியம் 12 மணி அளவில்  தொடர்பு கொண்டு காய்ச்சலால் வீட்டிற்கு அழைத்துச் செல்லுமாறு தாரணி தெரிவித்துள்ளார். இதனால் நேற்று மதியம் 3 மணி அளவில் கல்லூரிக்கு வந்த தாரணியின் தந்தை பாலாஜி நெடு நேரமாகி அவரது மகளை பார்க்க விடாமல் காத்திருக்க வைத்துள்ளனர். நெடுநேரத்திற்கு பின் ஆறு மணி அளவில்  தாரணி இறந்துவிட்டார் என விடுதி நிர்வாகம் தெரிவித்துள்ளது. இதனால் அதிர்ச்சியடைந்த பாலாஜி உறவினர்களுடன் தனது மகளுக்கு நீதி வேண்டும், தனது மகளை கல்லூரி நிர்வாகத்தினர் கொலை செய்துள்ளனர். மேலும் மண்ணச்சநல்லூர் சட்டமன்ற தொகுதி திமுக எம்எல்ஏ கதிரவனின் கல்லூரி என்பதால் காவல்துறையினர் மருத்துவமனை நிர்வாகத்திற்கு ஆதரவாக செயல்பட்டு வருவதாக குற்றம் சாட்டினார்கள்.

இறந்த தாரணி ஜன்னல் கம்பியில் துப்பட்டாவைக் கட்டி ஒரு கையில் துப்பட்டாவை கழுத்தை நெரித்து தற்கொலை செய்ததாக விடுதி நிர்வாகம் தெரிவிக்கின்றனர். ஆனால் தாரணியின் கழுத்தில் பெல்டால் கழுத்தை நெரித்து இறந்தது போன்று உள்ளதால் இதற்கு உரிய விசாரணை வேண்டும் என்றும் கூறியுள்ளார்.

ஸ்ரீரங்கம் அரசு மருத்துவமனையில் மாணவியின் தாய், 'தனது மகளை கல்லூரி நிர்வாகத்தினர் கொன்று விட்டனர். எனது மகளை பறிகொடுத்து விட்டேனே' எனக் கூறி கதறி அழுதது பார்ப்போரை கண்கலங்க வைத்தது.

Next Story

கள்ளக்குறிச்சி விவகாரம்; திமுக அரசைக் கண்டித்து தேமுதிக கண்டன ஆர்ப்பாட்டம்

Published on 25/06/2024 | Edited on 25/06/2024
DMK struggle against DMK government

தமிழகத்தைக் கஞ்சா , கள்ளச்சாராயம், டாஸ்மாக் மதுபானங்கள் போன்ற போதைப் பொருட்கள் தள்ளாடும் நிலைமைக்கு திமுக அரசு கொண்டுசென்றதாகக் கூறி தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு பேசிய பிரேமலதா விஜயகாந்த், “எதற்கெடுத்தாலும் முன்னே வந்து நிற்கும் திமுக தலைவர் தமிழக முதல்வர் ஸ்டாலின் கள்ளக்குறிச்சி பகுதியில் 60க்கும் மேற்பட்டோர் உயிரிழந்த நிலையில் இதுவரை ஏன் வந்து சந்திக்கவில்லை? தனது மகனை அனுப்பி 10 லட்ச ரூபாய் நிவாரணத்தை வழங்கியது ஏன்?

ஒட்டுமொத்த தமிழகத்தில் மதுவை ஒழிக்க வேண்டும் என முன்பு எதிர்க்கட்சியாக இருந்தபோது தங்களின் இல்லத்தின் வாசல் முன்பே கருப்பு சட்டை அணிந்த முதல்வர் ஸ்டாலின் தற்போது ஆட்சிக்கு வந்து அதை ஏன் செய்யவில்லை, அதேபோல் ஸ்டாலின் தங்கை கனிமொழி தமிழக முழுவதும் டாஸ்மாக்கினால் விதவைகள் அதிகமாக உள்ளதாகக் கூறிய பொழுது தற்பொழுது திமுக ஆட்சி வந்த பின்பு ஏன் டாஸ்மாக் கடைகளை மூடவில்லை? எனக் கேள்வி எழுப்பினார்.

தொடர்ந்து பேசிய அவர், “பெண்களுக்கு பாதுகாப்பான அரசு எனச் சட்டசபையில் முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். ஆனால் எத்தனை பெண்கள் தற்பொழுது தங்களது கணவரை இழந்து வாடி வருகின்றனர். இதற்கு என்ன பதில் கூறுவார். நான்காயிரம் கோடி ரூபாய் மதிப்பீட்டில் சாலை மேம்படுத்தப்படும் எனத் தெரிவித்தார் இதுவரை தமிழகத்தில் எத்தனை சாலை சரியாக உள்ளது? கள்ளக்குறிச்சியில் இத்தனை உயிரிழப்புக்கு என்ன காரணம் என டெல்லி அறிக்கை வெளியிட வேண்டும் எனவும் இந்த விவகாரத்தை சிபிஐ வழக்காக மாற்ற வேண்டுமெனவும் மக்களுக்கு தெளிவாக பதில் கூற வேண்டும்.

முன்னாள் எதிர்க்கட்சித் தலைவர் கேப்டன் விஜயகாந்த் அமைத்த பேருந்து நிறுத்தத்தை ஏன் அகற்றினீர்கள்?  இதுதான் உங்களது பணியா? பணத்தை வைத்து மக்களின் வாயை மூடி விடலாம் என நினைக்கும் இந்த அரசை நம்ப கூடாது அதேபோல் இந்த சம்பவத்திற்கு காரணம் இரண்டு திமுக சட்டமன்ற உறுப்பினர்கள் தான். திமுக அமைச்சர் முத்துசாமி இத்தனை உயிர் இழப்புக்கு காரணமாக தனது பதவியை ராஜினாமா செய்ய வேண்டும். 

இது இந்த பட்டியலின மக்கள் வேறு எங்காவது உயிரிழந்தால் வாய் திறக்கும் நிலையில், தற்போது இங்கு நடந்த உயிரிழப்புக்கு ஏன் திரைத்துறையினர் வாய் திறக்கவில்லை? இந்தக் கள்ளச்சாராயத்தில் உயிர் இழந்தவர்களுக்கு பணம் வழங்கிய இந்த அரசு உயிரிழந்த ராணுவ வீரர் குடும்பத்திற்கும் மீனவர் குடும்பத்திற்கும் பணம் வழங்குகிறதா? என கேட்டுகொண்டார். 

தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த அவர், ரூ.10 லட்சம் கொடுத்தது இதற்கு தீர்வு கிடையாது. இது பெண்களைப் பாதுகாக்கும் அரசு கிடையாது. ஆயிரக்கணக்கான பெண்கள் தாலி இழந்து வாழ்க்கை இழந்து உள்ளனர். உண்மைக்கு புறம்பானவை மட்டுமே சட்டசபையில் முதலமைச்சர் பேசியுள்ளார். சிபிசிஐடி விசாரணை வைத்து அனைத்தும் மூடி மறைக்க பார்க்கின்றனர். இவை அனைத்திற்கும் காரணம்  கள்ளக்குறிச்சியில் உள்ள திமுக எம்எல்ஏக்கள் திமுகவை சேர்ந்தவர்கள் மட்டும்தான். வழக்கை சிபி.ஐ க்கு மாற்றக் கோரி தேமுதிக தொடர்ந்து போராடும் ஆளுநரை சந்திக்க நேரம் கேட்டுள்ளோம்” என்றார்.