Skip to main content

நான் ஜாதி பார்த்து அரசியல் செய்ததில்லை! நீங்களும் செய்யாதீங்க! – கே.என்.நேரு

Published on 25/02/2020 | Edited on 25/02/2020

திமுக முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு மாவட்ட செயலாளர் பதவியிலிருந்து கட்சியின் முதன்மை செயலாளராக ஆக்கப்பட்ட பின்பு திருச்சி திமுகவை 3 மாவட்டமாக பிரித்து அன்பில் மகேஷ், காடுவெட்டி தியாகராஜன், வைரமணி ஆகியோரை நியமித்தனர்.

 

DMK - KN Nehru speech in trichy

 



கே.என்.நேரு மாவட்ட செயலாளராக இருந்த சமயத்தில் அன்பில் மகேஷ் புதிதாக நிகழ்ச்சிகளில் கலந்து கொண்ட போது கே.என்.நேருவிடம் இருந்து சிலர் அன்பில் மகேஷ்க்கு மாநகருக்குள் பிரமாண்டமான வரவேற்ப்பு கொடுத்து அழைத்து சென்றது கே.என்.நேரு ஆதரவாளர்கள் இடையே கொஞ்சம் அதிர்ப்தியை ஏற்படுத்தியது.

கே.என்.நேரு மாநில அரசியலுக்கு சென்றதால் இனி மாவட்ட அரசியல் அன்பில் மகேஷ் சொல்கிறப்படி தான் நடக்கும். இதனால் அன்பில் மகேஷ் ஆதரவாளர்கள் உற்சாகம் அடைந்தனர். அதே நேரத்தில் கே.என்.நேரு மாநில அரசியலுக்கு சென்றதால் உள்ளூரில் அரசியல் பண்ண முடியாமல் போய் விடுமோ என்கிற பயத்தில் இருந்த நேரத்தில் உள்ளூர் விசேஷங்களுக்கு நேரு கலந்து கொள்ள முடியாமல் போன நிலையில் கே.என்.நேரு மகன் அருண் நேருவை களத்தில் இறக்கி பட்டாசு, டிரம் செட் என திருச்சியை அதிர வைத்து இருந்த நிலையில்தான் திமுக தலைவர் ஸ்டாலின் பிறந்த நாள் விழா கொண்டாட்டம் குறித்த செயல்வீரர்கள் கூட்டம் என தலைமை அறிவித்து இருந்தது.

 

DMK - KN Nehru speech in trichy

 

 

தற்போது பரபரப்பான அரசியல் பின்புலத்தோடு புதிய மாவட்ட செயலாளர்கள் பொறுப்பேற்ற பின்பு திருச்சியில் நடைபெறும் முதல் செயல்வீரர்கள் கூட்டம் என்பதால் திருச்சி திமுக கட்சியினர் இடையே பெரிய எதிர்பார்ப்பு இருந்தது. திருச்சி மாவட்ட திமுக செயல்வீரர்கள் கூட்டம் கலைஞர் அறிவாலயத்தில் நடைபெற்றது. கூட்டத்தில் பேசிய கே.என்.நேரு, "நான் ஜாதி மதங்களுக்கு அப்பாற்பட்டு தொடர்ந்து திருச்சி மாவட்டத்தில் பணியாற்றி வருகிறேன்.  எந்த ஒரு சூழ்நிலையிலும் எனது சொந்த ஜாதிக்காரர்களை அருகில் வைத்துக் கொள்வது கிடையாது. நான் ஜாதி அரசியல் பண்ணாத காரணத்தால் தான் அனைவரின் ஆதரவால்தான் நான் இப்போது முதன்மைச் செயலாளராக உயர்ந்திருக்கிறேன். உங்களை ஒருபோதும் மறக்க மாட்டேன்.

இதேபோல் திருச்சி மாவட்டத்தில் தற்போது பொறுப்பேற்றிருக்கும் மாவட்ட செயலாளர்களும் கடைபிடிக்க வேண்டும். திமுகவில் எனது பரிந்துரையால் பாராளுமன்றத்தில் நியமன எம்பியாக ஒருவர் நியமிக்கப்பட்டுள்ளார்.  இதேபோல் திருச்சி மாநகர் அளவில் பொறுப்பு வகிக்ககூடிய அன்பழகனுக்கு மாவட்ட செயலாளர் பதவிக்கு பரிந்துரை செய்தேன். அன்பில் மகேஷக்கு அந்த பொறுப்பு வழங்கப்பட்டதால் தான் அன்பழகனுக்கு கிடைக்காமல் போனது. தலைவர் அன்பகழனை அழைத்து பேசினார். கட்சியில் புரோமோசன் உண்டு. மேலும் மாவட்ட பொறுப்பு எனது பரிந்துரை மூன்று பேருக்கும் வழங்கப்பட்டுள்ளது என்றார். கலைஞர் கருணாநிதி திருச்சியில் எப்போது கலைஞர் அறிவாலயம் கட்ட போகிறாய் என்று கேட்டார். உடனடியாக திருச்சியில் சிறிய அளவில் இடத்தை வாங்கி அதை பின்னர் பெரிய அளவில் கட்டி முடித்தேன். கட்சியில் நான்  ஜாதி மதங்களுக்கு அப்பாற்பட்டு செயல்பட்டதால் தான் திருச்சியில் என்னால் இவ்வளவு பெரிய வளர்ச்சியை அடைய முடிந்தது. வரும் சட்டமன்ற தேர்தலில் டெல்டா மாவட்டத்தில் உள்ள 90 சதவிகிதத் தொகுதிகளில் தி.மு.க-வை வெற்றிபெறச் செய்ய வேண்டும்" என்று தெரிவித்தார்.

ஆரம்பத்தில் பேசிய அன்பில் மகேஷ், "பொய்யாமொழி எனது அப்பா மறைவின்போது, நான் படித்துக்கொண்டிருந்தேன். அப்போது, மறைந்த ராமஜெயம் என்னை அழைத்து, `இப்படியே இருக்கக்கூடாது மகேஷ். அரசியலுக்கு வரத்திட்டமிடுங்கள்' என்றார். அதன் தொடர்ச்சியாகவே, நான் தளபதி மற்றும் உதயநிதி ஆகியோர் மூலம் அரசியலுக்கு வந்தேன். என்னைப் பொறுத்தவரை மாவட்டச் செயலாளராக எந்தவொரு முடிவு என்றாலும் அண்ணன் நேருவை கேட்டுத்தான் முடிவெடுப்பேன்" என்றார்.பரபரப்பாக எதிர்பார்க்கப்பட்ட செயல்வீரர்கள் கூட்டம் அன்பும், பாசமும் நெகிழ்ச்சியாக முடிந்தது திருச்சி திமுகவினர் இடையே பெரிய உற்ச்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.

 

சார்ந்த செய்திகள்

Next Story

''40 தொகுதிகளிலும் வெற்றி பிரகாசமாக உள்ளது''- அமைச்சர் துரைமுருகன் பேட்டி

Published on 19/04/2024 | Edited on 19/04/2024
nn

உலகின் மிகப்பெரிய ஜனநாயகத் திருவிழாவான இந்திய நாட்டின் 18-ஆவது நாடாளுமன்ற தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக இன்று தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெற்றது.

தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிக்கும், புதுச்சேரியில் உள்ள ஒரு நாடாளுமன்ற தொகுதிக்கும் இன்று வாக்குப்பதிவு நடைபெற்றது. பதற்றமான வாக்குச்சாவடிகளில்  பல அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டது. சரியாக காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெற்று முடிந்துள்ளது.

முன்னதாக அரக்கோணம் நாடாளுமன்ற தொகுதிக்குட்பட்ட வேலூர் மாவட்டம் காட்பாடி, காந்தி நகர் தனியார் பள்ளியில் அமைக்கப்பட்டுள்ள பூத் எண் 155 ல் திமுக பொதுச்செயலாளர், நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன், அவரது மகனும், வேலூர் நாடாளுமன்ற தொகுதி திமுக வேட்பாளருமான கதிர் ஆனந்த் ஆகியோர் குடும்பத்தோடு வந்து வாக்களித்தனர்.

பின்னர் செய்தியாளர்களுக்கு அமைச்சர் துரைமுருகன் அளித்த பேட்டியில், 'காலையிலிருந்து எட்டுத்திக்கும் என்னோடு தொடர்பு கொண்டு பேசிக் கொண்டிருக்கிறார்கள். முதலமைச்சரும் பேசிக்கொண்டிருக்கிறார்.

அரக்கோணம் நாடாளுமன்றத்தில் எப்படி இந்திய கூட்டணிக்கு பிரகாசமாக தெரிகிறதோ அதேபோல் 40 தொகுதிகளிலும் எங்களுக்கு பிரகாசமாக இருப்பதாக கூறியிருக்கிறார்கள். இந்தியா கூட்டணி அமைக்கப்பட்ட பிறகு முதல் கட்ட தேர்தல் தமிழகத்தில் நடைபெறுகிறது. முதல் வெற்றியும் இங்குதான் கிடைக்கும். நிச்சயமாக மத்தியில் ஒரு மாற்றம் இருக்கும் என்பது என்னுடைய கணிப்பு.

மேகதாது கட்டக் கூடாது என்பது கர்நாடகாவின் தயவு அல்ல அது தமிழகத்தின் உரிமை. 25 ஆண்டாக இந்தத் துறையை கவனிக்கிறேன் எனக்கு சாதாரணமான செய்தி சிவக்குமார் புதிதாக வந்ததால் அது அவருக்கு புதிதாக தெரியும். இந்தியா கூட்டணி ஆட்சிக்கு வந்தால் கர்நாடகாவிற்கு எந்த அளவுக்கு உரிமை உள்ளதோ அதே அளவுக்கு தமிழகத்திற்கும் உரிமை உள்ளது. கர்நாடக மக்களை தேர்தல் நேரத்தில் உற்சாகப்படுத்துவதற்காக சிவகுமார் இப்படி பேசுகிறார்.

இன்னமும் மலை கிராமங்களுக்கு ஓட்டு பெட்டிகளை கழுதைகள் மீது கொண்டு செல்வது வருத்தப்பட வேண்டிய செய்திதான். காரணம் இந்தியா ஒரு பெரிய நாடு பல்வேறு மூலை முடுக்குகள் உள்ளது. தேர்தல் ஆணையம் எப்போதும் சரியாக இருக்காது. ஆளும் கட்சிக்கு சாதகமாக தான் இருக்கும். நதிநீர் இணைப்புக்கு  தமிழகம் எப்போதும் தயார். அதை நாங்கள் வரவேற்கிறோம் அதனால் தமிழகத்திற்கும் பயன் உள்ளது. வாக்குச்சீட்டு முறை வேண்டாம். இயந்திர வாக்குப்பதிவு முறையே தேவை. இன்றைய காலகட்டத்தில் இயந்திர வாக்குப்பதிவு முறையே சிறந்ததாக உள்ளது. வாக்குச்சீட்டு முறை தேவையில்லை'' என கூறினார்.

Next Story

கோவையில் ஜிபே மூலம் பாஜக பணப்பட்டுவாடா-திமுக புகார்

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
DMK complains about BJP payment through GPay in Coimbatore

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அந்த வகையில் முதற்கட்டமாக தமிழகம், புதுச்சேரி உள்ளிட்ட 21 மாநிலங்களில் உள்ள 102 மக்களவைத் தொகுதிகளுக்கு நாளை (19.04.2024) வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இந்த வாக்குப்பதிவு காலை 7.00 மணி முதல் மாலை 6.00 மணி வரை நடைபெற உள்ளது. அதன்படி முதற்கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ள தொகுதிகளில் தேர்தல் பரப்புரை நேற்று (17.04.2024) மாலை 6 மணியுடன் நிறைவு பெற்றது. மேலும் இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது.

அந்த வகையில் முதற்கட்டமாக தமிழகத்திலும், புதுச்சேரியிலும் வாக்குப்பதிவு நடைபெற உள்ளதால் மக்களவைத் தேர்தலுக்கான பரப்புரை நேற்றுடன் ஓய்ந்தது. அதே சமயம் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளதால், வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசுப் பொருட்கள் கொடுப்பதைத் தடுக்கும் வகையில் தேர்தல் பறக்கும் படையினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில் கோவை தொகுதியில் பாஜகவினர் ஜிபே மூலம் பண பட்டுவாடா செய்வதாக புகார்கள் எழுந்துள்ளது. இதுகுறித்து திமுக புகார் எழுப்பியுள்ளது. பிரச்சாரம் முடிந்தவுடன் வெளியூர் நபர்கள் தொகுதியை விட்டு வெளியேற வேண்டும் என்ற நடைமுறையை பின்பற்றவில்லை என திமுக குற்றம் சாட்டியுள்ளது. கோவை அவிநாசி சாலையில் உள்ள அலுவலகத்தில் வெளி மாவட்டத்தைச் சேர்ந்த பலர் தங்கி ஜிபே மூலம் பணம் பட்டுவாடா செய்து பாஜகவுக்கு வாக்களிக்கும்படி கோரி வருகின்றனர் எனவும், சென்னையை சேர்ந்த ஜெயப்பிரகாஷ், கிருஷ்ணகுமார், கரூரை சேர்ந்த சிவகுமார் ஆகியோர் பணம் பட்டுவாடா செய்வதாகவும் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் திமுக வலியுறுத்தியுள்ளது.