Skip to main content

தினகரன் அதிரடி பதில்..! சீட் வேண்டாம் என ஓட்டம் பிடிக்கும் அமமுக நிர்வாகிகள்..!

Published on 11/03/2021 | Edited on 11/03/2021

 

Dinakaran  Response  Amukha executives who don't interested to consent in election


தமிழக சட்டமன்றத்துக்கு நடைபெறும் 16வது பொதுத்தேர்தலை முன்னிட்டு ஒவ்வொரு கட்சிகளும் தங்களது வேட்பாளர்களை அறிவித்து வருகின்றன. அதன்படி அமமுக முதற்கட்ட வேட்பாளர் பட்டியலை அறிவித்துள்ளது. இன்னும் பல தொகுதிகளுக்கான வேட்பாளர்களை அறிவிக்காமல் வைத்துள்ளது. ‘அதற்கு காரணம் வேறு சில கட்சிகள் கூட்டணிக்கு வருகின்றன, அவை வந்தபின் அவர்களுக்கான தொகுதிகள் ஒதுக்கியது போக மற்ற தொகுதிகளுக்கு வேட்பாளர்கள் அறிவிக்கப்படுவார்கள்’ என தினகரன் தரப்பில் கூறுகின்றனர்.

 

ஆனால், உண்மைக் காரணம் வேறு என்கிறார்கள் அமமுக மாநில நிர்வாகிகள். இதுபற்றி அவர்களிடம் நாம் பேசியபோது, சசிகலா சிறையில் இருந்து வெளியில் வந்தவுடன் அதிமுகவுடன் எப்படியும் இணைந்துவிடுவோம் என்கிற நம்பிக்கையில் பலர் வேட்புமனு தாக்கல் செய்தனர். ஆனால், சசிகலா துறவறம் என அறிவித்த பின் இங்குள்ள பலருக்கும் ஒருவித விரக்தி ஏற்பட்டது. அதேபோல் சீட் வேண்டும் என மனு தந்தவர்களுக்கு நீங்கள்தான் உங்கள் சொந்த பணத்தை வைத்து தொகுதிக்கான செலவை செய்ய வேண்டும். கட்சி எந்தவிதமான நிதியும் தராது எனக் கூறியுள்ளனர். இதனால் பலரும் எங்களுக்கு சீட் வேண்டாம் என ஒதுங்கி போகின்றனர். 

 

உதாரணத்திற்கு, திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் தொகுதி எம்.எல்.ஏ.வாக இருந்தவர் பாலசுப்பிரமணியன். அதிமுக பிரிந்து அமமுக உருவானபோது தினகரன் பின்னால் சென்றதால், தனது எம்.எல்.ஏ. பதவியை இழக்க நேரிட்டது. 2019இல் நடைபெற்ற இடைத்தேர்தலில் அவருக்கு மீண்டும் சீட் வழங்கப்பட்டது. அவர் தோல்வியைச் சந்தித்தார். இந்நிலையில் தற்போது அவருக்கு மீண்டும் சீட் வழங்க தினகரன் முடிவு செய்துள்ளார். ஆனால், பாலசுப்பிரமணி தனக்கு வேண்டாம், தொகுதிக்கு செலவு செய்ய தன்னிடம் பணம் இல்லை என கூறுவதாக தெரிகிறது.

 

ராணிப்பேட்டை மாவட்டம், சோளிங்கர் தொகுதியில் அமமுக வேட்பாளராக முன்னாள் எம்.எல்.ஏ. பார்த்திபன் அறிவிக்கப்பட்டுள்ளார். தன்னிடம் செலவு செய்ய நிதி இல்லை என தேர்தல் வேலையில் சுணக்கமாக உள்ளதாக அமமுகவினர் கூறுகின்றனர்.

 

 

சார்ந்த செய்திகள்

 

Next Story

''நேரம் கனித்துள்ளது; என் அரசியல் பிரவேசம் தொடக்கம்'' - சசிகலா பேச்சு

Published on 16/06/2024 | Edited on 16/06/2024
 ''The time is ripe; My political entry begins'' - Sasikala speech

விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி சட்டமன்றத் தொகுதிக்கு ஜூலை 10 ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறும் எனத் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. அரசியல் கட்சிகள் வேட்பாளர்களை அறிவிப்பதில் தீவிரம் காட்டி வரும் நிலையில் அதிமுக இந்த இடைத்தேர்தலை புறக்கணிக்க முடிவெடுத்துள்ளது. இது தொடர்பாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் 'அராஜகம் என்றால் திமுக... திமுக என்றால் அராஜகம்...' திமுக ஆட்சியில் சட்ட ஒழுங்கு கெட்டுள்ளது. விக்கிரவாண்டி தேர்தல் ஜனநாயக முறைப்படி முழு சுதந்திரமாக நடக்குமா எனக் கேள்வி எழுந்துள்ளது. எனவே இந்தத் தேர்தலைப் புறக்கணிக்கிறோம். 2026ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் மக்களின் பேராதரவுடன் அதிமுக ஆட்சி மலர்வது உறுதி' எனத் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்த சசிகலா பேசுகையில், ''விக்கிரவாண்டி தொகுதியில் இடைத்தேர்தலில் அதிமுக புறக்கணித்திருப்பது சரியான முடிவு அல்ல. அதிமுகவில் தற்போது குறிப்பிட்ட ஜாதியினர் ஜாதி அரசியல் செய்கின்றனர். ஆனால் எனக்குக் குறிப்பிட்ட ஜாதியினர்தான் சொந்தம் என்றெல்லாம் கிடையாது. ஜெயலலிதாவும் ஜாதி பார்த்துப் பழகியவர் அல்ல. நான் ஜாதி பார்த்து இருந்தால் எடப்பாடி பழனிசாமியை முதலமைச்சராக ஆக்கி இருக்க மாட்டேன். சிலரது சுயநலத்தால் அதிமுக சரிவை சந்தித்துள்ளது. தற்போது அதிமுக மூன்றாவது இடத்திற்கும் நான்காவது இடத்துக்கும் சென்றுள்ளது. தானும் கெட்டு கட்சியையும் சிலர் கெடுத்து விட்டனர். அதிமுகவினர் ஒன்றிய வேண்டும் என நான் அடிக்கடி கூறி வந்ததற்கான நேரம் தற்பொழுது கனிந்துள்ளது. அதிமுகவில் தன்னுடைய அரசியல் பிரவேசம் தொடங்கியுள்ளதால் கட்சி அழிந்துவிடும் என்று கூற முடியாது. 2026 சட்டமன்றத் தேர்தல் அதிமுக தனித்து ஆட்சி அமைக்கும்'' என்றார்.

Next Story

'மறப்போம் மன்னிப்போம்'- நான்கு பேரிடமும் நேரம் கேட்டு புகழேந்தி கடிதம்

Published on 14/06/2024 | Edited on 14/06/2024
'Let's forget and forgive'- pugazhendhi letter to the four people asking for time

அதிமுகவில் ஏற்பட்ட பிளவைத் தொடர்ந்து அடுத்தடுத்த தேர்தல்களில் தோல்வியைச் சந்தித்து வருகிறது. இந்நிலையில் அதிமுக மீண்டும் ஒன்று பட வேண்டும் எனப் பல்வேறு தரப்புகளில் இருந்து அக்கட்சியின் நிர்வாகிகள் வலியுறுத்தி வருகின்றனர். குறிப்பாக கட்சியில் இருந்து நீக்கப்பட்ட ஓ.பன்னீர்செல்வம் அதிமுகவை மீண்டும் ஒன்றிணைக்க வேண்டும் என வலியுறுத்தி வருகிறார். 'ஒற்றைக் குச்சியை உடைப்பது சுலபம்; கத்தை குச்சியை முறிப்பது கடினம். இனியும் தாமதம் சொல்லி தோல்விக்குத் தொண்டர்களைப் பழக்குவது பாவ காரியம். நமது வெற்றியை நாளை சரித்திரமாக்கிட மனமாட்சியம் மறந்து ஒன்றாக வேண்டும். கட்சியை மீட்டெடுக்க எத்தகைய தியாகத்துக்கும் தயாராகுவோம்' என அண்மையில் ஓபிஎஸ் வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிட்டு இருந்தார். ஆனால் அடுத்த நாளே செய்தியாளர்களைச் சந்தித்த கே.பி.முனுசாமி, 'எம்ஜிஆர், ஜெயலலிதா போன்ற முன்னாள் தலைவர்களை விமர்சித்தவருடன் தேர்தல் கூட்டணி வைக்கும் ஓபிஎஸ் அதிமுக ஒன்றிணைவது குறித்து பேசத் தகுதியற்றவர். அவர் அறிவுரை சொல்லத் தேவையில்லை' எனத் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் ஓபிஎஸ் அணியில் இருந்த புகழேந்தி, ஜே.சி.டி.பிரபாகர் ஆகியோர் தங்களுடைய ஆதரவை விலக்கிக் கொண்டு அதிமுக ஒன்றிணைய வேண்டும் என வலியுறுத்தி வருகின்றனர். அந்த வகையில் அதிமுக ஒருங்கிணைப்புக் குழு என்ற புதிய குழுவை உருவாக்கி உள்ளனர். இந்த குழுவின் சார்பில் வ.புகழேந்தி தற்போது அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், டி.டி.வி.தினகரன், சசிகலா ஆகியோருக்கு கடிதம் எழுதியுள்ளார்.

அந்த கடிதத்தில், ;ஜெயலலிதா மறைவுக்குப் பின்னும் ஒற்றுமை ஏற்பட்டு மீண்டும் பிளவு ஏற்பட்டுள்ளது. மறப்போம் மன்னிப்போம் என்பதை மனதில் கொண்டு அனைவரும் ஒன்றுபட வேண்டும். எம்ஜிஆர், ஜெயலலிதா ஆட்சி தமிழகத்தில் மீண்டும் அமைவதே அதிமுக தொண்டர்களின் எண்ணமாக இருக்கிறது. அதிமுக ஒற்றுமை வேண்டி நான்கு பேரையும் சந்திக்க விரும்புகிறோம். ஆலோசனைகள் கருதிப் பகிர நேரம் ஒதுக்கித் தரும்படி கேட்டுக்கொள்கிறோம்' எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.