Skip to main content

“அறிவிக்கப்படாத எமர்ஜென்சியில் நாடு இருக்கா?; திமுவை சீண்டிப் பார்க்க வேண்டாம்” - வீடியோ வெளியிட்ட மு.க. ஸ்டாலின்

Published on 15/06/2023 | Edited on 15/06/2023

 

 "Is the country under an undeclared emergency? Don't look at DMU" - M.K.Stalin released the video

 

அமலாக்கத்துறையால் செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்டுள்ள நிலையில் இது தொடர்பான திமுகவின் மனுக்கள் இன்று பிற்பகல் 3:30 மணிக்கு விசாரணைக்கு வரும் என உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

 

இந்நிலையில் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவில், ''வழக்கமாக நான் 'உங்களில் ஒருவன்' நிகழ்ச்சி மூலமாக உங்களுடைய கேள்விகளுக்குப் பதில் சொல்லிக் கொண்டு வருகிறேன். ஆனால் இப்பொழுது இந்த வீடியோ மூலமாக இன்னொரு முக்கியமான விஷயம் பற்றிப் பேசப் போகிறேன். அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு அமலாக்கத்துறை மூலமாகக் கொடுக்கப்படுகிற அநியாயமான தொல்லைகள் எல்லாம் உங்களுக்கு நன்றாகத் தெரியும். இது அப்பட்டமான அரசியல் பழிவாங்கும் செயல் என்று யாருக்கும் கொஞ்சமும் சந்தேகமில்லை. பத்து ஆண்டுகளுக்கும் முன்னாடி உள்ள பழைய புகாரை வைத்து 18 மணி நேரம் அடைத்து வைத்து மன அழுத்தம் கொடுத்து மன ரீதியாகவும் உடல் ரீதியாகவும் பலவீனப்படுத்தி உயிருக்கு ஆபத்து ஏற்படும் வகையில் இருதய நோயை உருவாக்கி இருக்கிறார்கள் என்றால் இதைவிட அப்பட்டமான அரசியல் பழிவாங்கல் இருக்க முடியுமா?

 

செந்தில் பாலாஜி மேல் புகார் இருக்கும் என்றால், அது தொடர்பாக நீதிமன்ற தீர்ப்பு இருக்கும் என்றால் அவரை அழைத்து விசாரணை நடத்தியதை நான் தவறு என்று சொல்லவில்லை. ஓடி ஒளியும் அளவிற்கு அவர் சாதாரணமானவர் அல்ல. மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட எம்எல்ஏ. அதுவும் ஐந்து முறை எம்எல்ஏவாக இருக்கிறார். இரண்டாவது முறையாக மினிஸ்டராக இருக்கிறார். நாள்தோறும் பொது நிகழ்ச்சிகளில் கலந்து கொள்கிறவர். அப்படிப்பட்டவரை ஏதோ தீவிரவாதியைப் போல அடைத்து வைத்து விசாரிக்க என்ன அவசியம் இருக்கிறது. அமலாக்கத்துறை அதிகாரிகள் வந்தபொழுது முழு ஒத்துழைப்பு தந்தார். எந்த ஆவணங்களை எடுத்திருந்தாலும் அது தொடர்பாக விளக்கம் அளிக்கத் தயார் என்று சொல்லி இருந்தார். அதற்கு அப்புறமும் 18 மணி நேரமாக அடைத்து வைத்திருக்கிறார்கள். யாரையும் சந்திக்க அனுமதியில்லை. இறுதியாக அவருக்கு உடல் நலம் முழுமையாகப் பாதிக்கப்பட்டு இதய வலி அதிகமான பிறகுதான் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றிருக்கிறார்கள்.

 

அதிலேயும் அலட்சியம் காட்டியிருந்தார்கள் என்றால் அது அவருடைய உயிருக்கு ஆபத்தாக இருக்கும். இப்படி ஒரு விசாரணையை மேற்கொள்ளும் அளவிற்கு அப்படி என்ன எமர்ஜென்சி. அறிவிக்கப்படாத எமர்ஜென்சியில் நாடு இருக்கா? அப்படித்தான் இருக்கு அமலாக்கத்துறையின் நடவடிக்கை. சிம்பிளா சொல்ல வேண்டும் என்றால் பாஜக தலைமை, அமலாக்கத்துறை மூலமாக அவர்களுடைய அரசியலை செய்ய நினைக்கிறது. மக்களை சந்தித்து அரசியல் செய்ய பாஜக தயாராக இல்லை. பாஜகவை நம்ப மக்களும் தயாராக இல்லை. மக்களுக்கான அரசியலை செய்தால் தான் மக்கள் பாஜகவை நம்புவார்கள். பாஜகவுடைய அரசியலே மக்கள் விரோத அரசியல் தான். கருத்து ரீதியாக, அரசியல் ரீதியாகத் தேர்தல் களத்தில் எதிர்கொள்ள முடியாதவர்களை வருமானவரித்துறை, அமலாக்கத்துறை, சிபிஐ என விசாரணை அமைப்புகளை வைத்து மிரட்டுவது பாஜகவுடைய பாணி.

 

அதுதான் அவர்களுக்குத் தெரிந்த ஒரே பாணி. இந்த ஜனநாயக விரோதச் செயலைத்தான் இந்தியா முழுக்க ஃபாலோ பண்ணுகிறார்கள். ஒரே ஒரு ஸ்கிரிப்ட் தான் வேற வேற மாநிலங்களில் டப்பிங் பண்ணிக் கொண்டிருக்கிறார்கள். ஊழல் பற்றிப் பேச பம்மாத்து பழனிசாமிக்கு அருகதையில்லை. திமுகவினரை சீண்டிப் பார்க்க வேண்டாம்'' எனத் தெரிவித்துள்ளார்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

'விசாரணையை சந்தியுங்க'-மீண்டும் மீண்டும் கொட்டுப்பட்ட ஹெச்.ராஜா!

Published on 29/04/2024 | Edited on 29/04/2024
' inquiry'-repeatedly dumped by H.Raja

தன் மீதான வழக்கை ரத்து செய்ய வேண்டும் எனப் பாஜக நிர்வாகி ஹெச்.ராஜா தொடர்ந்த மனுவை நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.

தமிழக பாஜக நிர்வாகியான ஹெச்.ராஜா கடந்த 2018 ஆம் ஆண்டு பெண்கள் குறித்து டிவிட்டர் வலைத்தளத்தில் சர்ச்சைக்குரிய கருத்து ஒன்றைப் பதிவிட்டு இருந்தார். இது தொடர்பாக முன்னாள் அமைச்சர் அந்தியூர் செல்வராஜ்  உட்பட திமுகவின் முக்கிய நிர்வாகிகள் ஈரோடு மாவட்ட காவல்துறையில் ஹெச்.ராஜா மீது புகார் அளித்திருந்தனர். இது தொடர்பாக  ஈரோடு டவுன் காவல் நிலைய போலீசார் பெண்களுக்கு எதிராக ஆபாசமாக பேசுதல்; பொது அமைதியைச் சீர்குலைக்கும் வகையில் செயல்படுதல்; கலவரத்தை ஏற்படுத்தும் நோக்கில் செயல்படுதல் உள்ளிட்ட சட்டப்பிரிவுகளின் கீழ் ஹெச்;ராஜா மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.

இந்த வழக்கு ஈரோடு மாவட்ட நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. தொடர்ந்து இந்த வழக்கு சென்னை மாவட்ட ஆட்சியர் வளாகத்தில் உள்ள சிறப்பு நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டது. இந்நிலையில், இந்த வழக்கை ரத்து செய்யக்கோரி ஹெச்.ராஜா சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவை விசாரித்த உயர்நீதிமன்றம் வழக்கை மூன்று மாதத்திற்குள் முடிக்க சிறப்பு நீதிமன்றத்திற்கு உத்தரவிட்டிருந்தது. இந்நிலையில் சிறப்பு நீதிமன்றத்தில் தன் மீது விசாரணையில் வழக்கை ரத்து செய்யக்கோரி மீண்டும் சென்னை நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கு இன்று நீதிபதி ஜெயச்சந்திரன் முன்பு விசாரணைக்கு வந்தது. விசாரணையின் போது 'அந்தச் சர்ச்சைக்குரிய பதிவை பதிவிட்டது நீங்களா?' என ஹெச்.ராஜா தரப்புக்கு கேள்வி எழுப்பினார். அதற்கு ஹெச்.ராஜா தரப்பு வழக்கறிஞர் ஆம் எனப் பதிலளித்தார். தொடர்ந்து ஹெச்.ராஜா மீதான இந்த வழக்கை ரத்து செய்ய முடியாது என உத்தரவிட்ட நீதிபதி விசாரணையை சந்திக்க வேண்டும் என உத்தரவிட்டு ஹெச்.ராஜா தரப்பு மனுவைத் தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.

Next Story

தடுமாறிய ஹெலிகாப்டர்; உயிர் தப்பிய அமித்ஷா

Published on 29/04/2024 | Edited on 29/04/2024
nn

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக கடந்த 19ஆம் தேதி தொடங்கி வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு வாக்குப்பதிவு நடைபெற்றது. இதனையடுத்து 13 மாநிலங்களில் உள்ள 88 மக்களவைத் தொகுதிகளில் நேற்று முன்தினம் (26.04.2024) 2ஆம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்றது. மொத்தம் 28 தொகுதிகள் கொண்ட கர்நாடகா மாநிலத்தில் ஏப்ரல் 26 ஆம் தேதி 14 தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு நடந்து முடிந்துள்ளது. மே 7 ஆம் தேதி மற்ற 14 தொகுதிகளில் தேர்தல் நடைபெறவிருக்கிறது.

தேர்தல் நடைபெற இருக்கும் மாநிலங்களில் தேர்தல் பரப்புரைகள் களை கட்டியிருக்கும் நிலையில் பீகாரில் அமித்ஷா சென்ற ஹெலிகாப்டர் சில நிமிடங்கள் தடுமாறியது பரபரப்பை ஏற்படுத்தியது. சில நிமிடங்கள் கட்டுப்பாட்டை இழந்து தடுமாறி அலைந்த ஹெலிகாப்டர் பின்னர் சில நிமிடங்களுக்கு பிறகு மீண்டும் நிலைநிறுத்தப்பட்டு இயல்பு நிலைக்கு திரும்பி மீண்டும் அங்கிருந்து புறப்பட்டது. இந்தச் சம்பவத்தால் அங்கு சில நிமிடங்கள் பரபரப்பு ஏற்பட்டது.