Skip to main content

தி.மு.க.வில் உளவாளி! குமுறும் உடன்பிறப்புகள்! 

Published on 26/08/2020 | Edited on 26/08/2020
1054784

 

முதன்மைச் செயலாளர் கே.என்.நேரு விசிட்டுக்கு பிறகு தெளிவு பிறக்கும் என எதிர்பார்த்த கோவை தி.மு.க.வினர் மேலும் குழப்பமடைந்துள்ளனர். கோவை புறநகர் கிழக்கு மாவட்டத்திற்கு துளியும் தொடர்பில்லாத, கோவை மாநகருக்குள் குடியிருக்கும் மருதமலை சேனாதிபதியை மாவட்ட பொறுப்பாளர் ஆக்கியதும், தாழ்த்தப்பட்ட மக்களின் குடிசைகளை எரித்ததாக அறியப்படும் பையா கவுண்டர் என்ற கிருஷ்ணனுக்கு மேற்கு மாவட்ட பொறுப்பாளர் பொறுப்பு கொடுக்கப்பட்டதும்தான் இதற்கு காரணம்.

 

654615

 

இந்த இருவரின் நியமனத்திற்கு பின்னணியில் சுப்பு என்பவர் இருப்பதாக கட்சிக்குள் பேசப்படுகிறது. யார் இந்த சுப்பு? என அவரை அறிந்த தி.மு.க.வினரிடம் கேட்டோம். "ஒரு பத்திரிகையின் ஃபோட்டோகிராபராக அறியப்பட்டவர் சுப்பு. 90களில் காந்திநகரில் சின்ன மளிகைக்கடை நடத்திவந்த சுப்பு, தி.மு.க. ஆதரவு பத்திரிகையின் ஃபோட்டோகிராபராக இருக்கும் முஸ்லீம் ஒருவர் மூலமாக போட்டோ எடுக்க கற்றுக்கொண்டார். அந்த ஃபோட்டோகிராஃபர் மூலமாக அ.தி.மு.க. முக்கியப் பிரமுகர்களின் நெருக்கமும் கிடைத்து, சுப்புவின் கல்லா நிரம்பியது. 1998 கோவை குண்டுவெடிப்புக்குப் பின், கோவை சிறையில் இருந்த கேரளாவின் மதானியை சந்திக்கவரும் அவரது மனைவியிடம், குண்டுவெடிப்பில் எப்படியெல்லாம் முஸ்லீம்கள் இறந்தார்கள் என்பதற்கான போட்டோக்களைக் கொடுத்தார். இதில் சுப்புவுக்கு லட்சங்களில் பணம் கொட்டியது.

 

12654

 

உளவுத்துறை கண்காணித்த வேளையில் பொங்கலூர் பழனிசாமியிடம் அடைக்கலம் ஆகி, தி.மு.க. பிரமுகர்களுடன் நெருக்கம் ஏற்படுத்திக்கொண்டார். ஸ்டாலின், உதயநிதி நிகழ்ச்சிகளை கவர்செய்து அவர்களின் குட்புக்கிலும் இடம்பிடித்தார்.

 

516412

 

அதனை வைத்துதான் சேனாதிபதிக்கும், பையா கவுண்டருக்கும் போஸ்டிங் கிடைப்பதற்கு துணை நின்றிருக்கிறார். மருதமலை சேனாதிபதியின் புதுவீடு திறப்பு விழாவுக்கு உதயநிதியை வரவழைத்ததோடு, அவர் கிளம்பியதும் அ.தி.மு.க.வினரையும் வரவைத்தது சுப்புதான். தி.மு.க.விலிருந்து வெளியாகும் ரகசிய செய்திகளை அ.தி.மு.க. பிரமுகர்களிடம் கசிய விடுவதும் இந்த உளவாளிதான். இதெல்லாம் தளபதிக்கு எப்போதுதான் தெரியப் போகிறதோ?'' என்றார்கள் குமுறலான குரலில்.

 

இதுகுறித்து ஃபோட்டோகிராபர் சுப்புவிடம் விளக்கம் கேட்டபோது, "நான் பத்திரிகையின் ஃபோட்டோகிராபர் மட்டும்தான். வீணாக என்மேல் பழி போடுகிறார்கள். அ.தி.மு.க. பத்திரிகையின் ஃபோட்டோகிராபர் சொல்லி, தி.மு.க.வில் போஸ்டிங் போடுவார்களா? மதானி தரப்புக்கு நான் போட்டோ கொடுத்ததாக சொல்வ தெல்லாம் பொய்'' என்றபடி போனை கட் செய்துவிட்டார். கட்சிக்குள் உளவாளிகள் அதிகரித்திருப்பதாக தமிழகம் முழுவதும் உ.பி.க்களிடம் குமுறல் வெடிக்கிறது.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

தாய் கண்முன்னே மகனுக்கு நேர்ந்த துயரம்; நொடிப் பொழுதில் நடந்த சம்பவம்

Published on 27/04/2024 | Edited on 27/04/2024
Son passed away in front of mother eyes

கோவை மாவட்டம், சாய்பாபா காலனி அருகே அமைந்துள்ளது கருப்புசாமி வீதி. இப்பகுதியைச் சேர்ந்தவர் ஜெகதீஷ். இவரது மகன் ஆனந்த். இளைஞரான இவர் மனநலம் பாதிக்கப்பட்டு இருந்துள்ளார். அதனால், மிகுந்த கவனமுடன் குடும்பத்தினர் ஆனந்தை அரவணைப்புடன் வளர்த்து வந்துள்ளனர்.

இந்த நிலையில், ஆனந்திற்கு உயர் ரத்த அழுத்த பிரச்சனை  ஏற்பட்டுள்ளது. அவரது குடும்பத்தினர் அவருக்கு மருத்துவ மனையில் சிகிச்சை பெற முடிவு செய்துள்ளனர். இதையடுத்து, கடந்த 21ஆம் தேதி இரவு ஆனந்தின் தாய் லட்சுமி மற்றும் பாட்டி சியாமளா இணைந்து ஆனந்தை கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளனர். முன்னதாக பேருந்துக்காக கோவை மேட்டுப்பாளையம் சாலை சாய்பாபா காலனி கங்கா மருத்துவமனை பேருந்து நிறுத்தத்திற்கு அருகே சாலையின் ஓரத்தில் நடந்துச் சென்றுள்ளனர். அப்போது, ஆனந்த் தாய் மற்றும் பாட்டியின் கையை விட்டு நடந்து சென்றுள்ளார். குடும்பத்தினரும் ஆனந்த் சரியாக நடந்துச் செல்வார் என்ற நம்பிக்கையுடன் கூடவே நடந்துச் சென்ற நிலையில், திடீரென ஆனந்த் அவ்வழியே வந்த துடியலூரில் இருந்து போத்தனூர் நோக்கி சென்ற பேருந்தின் முன்பாக பாய்ந்துள்ளார்.

நொடிப் பொழிதில், ஆனந்த் பேருந்து முன் பாய தாய் மற்றும் பாட்டியின் கண் முன்னே  தனியார் பேருந்தின் முன் பகுதியில் சிக்கியுள்ளார். இதில், பேருந்தின் முன் சக்கரம் தலையில் ஏறியதில் ஆனந்த் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். மகன் தடுமாறி விழுந்து கண்முன்னே உயிரிழந்ததைப் பார்த்த தாய்  லட்சுமி நடுரோட்டில் கதறி அழுதது காண்போரை கண் கலங்க செய்தது.

இதையடுத்து, போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது.  தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த கோவை மேற்கு சரக போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் விபத்தில் உயிரழந்தவரின் உடலை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.இதையடுத்து, வழக்குப்பதிவு செய்த போலீசார் கோவை மேற்கு சரக போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் நடந்த சம்பவம் தொடர்பாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதனிடையே, விபத்து நடந்த அதிர்ச்சி சிசிடிவி காட்சிகள் வெளியாகி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

அதில், உடல் நிலை சரியில்லாத ஆனந்தை அவரது தாய் மற்றும் பாட்டி சாலையின் ஓரத்தில் நடந்து கூட்டிச் செல்கின்றனர். அப்போது, திடீரென் அவ்வழியாக தனியார் பேருந்து வந்துள்ளது. அதில், திடீரென ஆனந்த் பாய்கிறது சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது. ஆனால், தனியார் பேருந்து ஓட்டுநர் சுதாரித்துக் கொண்டு வண்டியை திருப்பி பிரேக் அடித்துள்ளார். ஆனாலும், யாரும் எதிர்பாராத வகையில் தனியார் பேருந்தின் முன் சக்கரம் ஏறியுள்ளது. இந்த வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியாகி சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. வீடியோவிற்கு சமூக வலைதளங்களில் கமெண்ட்ஸ் செய்யும் நெட்டிசன்கள் மகனை இழந்து தவிக்கும் குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்து வருகின்றனர்.

கோவை மாவட்டத்தில் உடல் நிலை சரியில்லாத இளைஞர் ஒருவர் தனியார் பேருந்து முன்பு பாய்ந்து விபத்தில் சிக்கிய சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தற்போது தாயின் கண்முன்னே விபத்தில் சிக்கி மகன் உயிரிழந்த சிசிடிவி காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

Next Story

வரதராஜ பெருமாள் கோவிலில் நகை திருடிய அர்ச்சகர்; காப்பு போட்ட காவல்துறை

Published on 26/04/2024 | Edited on 27/04/2024
Archakar arrested for stealing jewels from Varadaraja Perumal Temple in Coimbatore

கோவை மருதமலை சுப்பிரமணிய சாமி கோவிலில் ஆண்டுதோறும் நகைகள் சரிபார்க்கும் பணி நடைபெறுவது வழக்கம். அந்த வகையில் இந்த ஆண்டும் கோவை இந்து சமய அறநிலை துறை நகை சரிபார்ப்பு துணை ஆணையர் விஜயலட்சுமி தலைமையில் நகை சரிபார்ப்பு பணி நடைபெற்றது. இதில் மருதமலை கோவிலின் அறங்காவலர்கள் மற்றும் கோவில் நிர்வாகிகள் கலந்து கொண்டு திருக்கோவிலிலுள்ள அனைத்து நகைகளையும் சரி பார்க்கும் பணியில் ஈடுபட்டனர்.

மருதமலை கோவிலின் உபகோவிலான கரி வரதராஜ பெருமாள் கோவில் ஒன்று உள்ளது. இந்த நிலையில் நகையை சரிபார்க்கும் பணியின் போது கரி வரதராஜ பெருமாள் கோவிலின் தினக்கூலி அர்ச்சகர் ஸ்ரீ வாத்சாங்கன் என்பவர் அம்மனுக்கு அணிவிக்கப்படும் 14 கிராம் எடை உள்ள 7  பொன்தாலி 14 பொன்குண்டு ஊசிகள் மற்றும் 150 கிராம் எடையுள்ள வெள்ளி பூணூல் ஆகியவற்றை சரிபார்ப்பு பணிக்காக கொண்டு வந்து கொடுத்துள்ளார்.

அவற்றை அதிகாரிகள் சரிபார்த்த போது அந்த நகைகள் அனைத்தும் போலியானது என கண்டுபிடிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து அவரிடம் அறங்காவலர் மற்றும் கோவில் அதிகாரிகள் விசாரணை செய்ததில் திருடியதை கோவில் அர்ச்சகர் ஒப்புக்கொண்டார். இதனைத் தொடர்ந்து அறங்காவலர்கள் குழு கொடுத்த புகாரின்படி கோவில் அர்ச்சகர் ஸ்ரீ வாத்சாங்கன் கைது செய்யப்பட்டுள்ளார்.