Skip to main content

“செயற்குழு முடிவுகள் இறுதி தீர்ப்புக்கு கட்டுப்பட்டதே” - சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு

Published on 12/04/2023 | Edited on 12/04/2023

 

chennai high court judgement admk case

 

அதிமுக பொதுக்குழு தீர்மானங்கள் செல்லும்; பொதுச் செயலாளர் தேர்தலுக்கு தடை விதிக்க முடியாது என்று சென்னை உயர் நீதிமன்ற தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவை எதிர்த்து ஓபிஎஸ்,  மனோஜ் பாண்டியன், வைத்திலிங்கம், ஜேசிடி.பிரபாகரன் ஆகியோர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனுக்களை தாக்கல் செய்திருந்தனர். இந்த வழக்கின் இறுதி விசாரணை ஏப்ரல் 20-ல் நடத்தப்படும் என நீதிபதிகள் மகாதேவன் மற்றும் முகமது சபீக் அடங்கிய அமர்வு அறிவித்திருந்தது.

 

இந்த நிலையில், அதிமுகவின் செயற்குழு கூட்டம் ஏப்ரல் 16 ஆம் தேதி நடைபெறும் என எடப்பாடி பழனிசாமி அறிவித்திருப்பதை சுட்டிக்காட்டி, ஓ.பி.எஸ் தரப்பு மேல்முறையீடு செய்திருந்தது.  இந்த மேல்முறையீடு வழக்கு இன்று விசாரணைக்கு எடுக்கப்பட்டவுடன், "இறுதி விசாரணைக்கு எடுத்துக்கொள்வதாக சொன்ன பிறகு, இடைப்பட்ட காலத்தில் எடுக்கப்படும் முடிவுகள் அனைத்துமே இறுதி தீர்ப்பிற்கு உட்பட்டதுதானே!  அப்படி இருக்கையில் ஏன் இந்த அவரச முறையீடு? " என ஓபிஎஸ் தரப்பிடம் நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.

 

அதற்கு ஓபிஎஸ் தரப்பு வழக்கறிஞர்கள், "ஏப்ரல் 20ல் இறுதி விசாரணை தொடங்கவுள்ள நிலையில், 16 ஆம் தேதி செயற்குழு கூட்டம் கூட்டப்பட உள்ளது. கர்நாடகா தேர்தல், கட்சியில் உறுப்பினர்கள் சேர்க்கை குறித்து விவாதிக்க வருகின்றனர். அவர்களின் எண்ணங்களுக்கு ஒத்து வராத உறுப்பினர்களின் கார்டு புதுப்பிக்க மாட்டார்கள்.  புதிதாக சேர்க்க மாட்டார்கள்" என்று முறையீடு செய்யப்பட்டது.  

 

கட்சி எம்.பி. மற்றும் எம்.எல்.ஏ.க்கள் உள்ளிட்ட நிர்வாகிகளுக்கு செயற்குழுவிற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது என்றும், நீக்கப்பட்டுள்ளவர்களிலும் இரண்டு எம்.எல்.ஏ.க்கள் உள்ளதாகவும் குறிப்பிட்டனர். இந்த நீக்கத்தை எதிர்த்து வழக்கு நிலுவையில் உள்ளதால் செயற்குழு தொடர்பாக இடைக்கால உத்தரவு பிறப்பிக்க வேண்டும் எனவும் வலியுறுத்தினர். பொதுச் செயலாளர் செயல்படத் தடைக் கோரி மனுத்தாக்கல் செய்திருந்தாலும், அவர் பதவியில் செயல்படும்வரை யாரும் தடுக்கவில்லை என்றும், கட்சி செயல்படுவதையும் தடை  செய்யவில்லை என்றும் விளக்கம் அளிக்கப்பட்டது. 

 

அதிமுக தரப்பில், "மனுதாரர்கள் கூறுவதுபோல எதுவும் நடக்காது. ஆறு மாதங்களில் உறுப்பினர் சேர்க்கை முடிந்து விடப்போவதில்லை. தேர்தல் முடிந்து பொதுச் செயலாளர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளதால், கட்சி தொடர்பான முடிவுகளை எடுக்க அவருக்கு அதிகாரம் உள்ளது.  2 ஆயிரத்து 665 பொதுக்குழு உறுப்பினர்களில் 4 பேர் மட்டுமே ஓபிஎஸ் பக்கம் உள்ளனர்.  கட்சி நடவடிக்கைகளை நீதிமன்ற வழக்குகள் மூலம் இழுத்தடிக்கின்றனர்" என்று  குற்றம்சாட்டப்பட்டது.

 

அப்போது, ‘செயற்குழுவில் ஏதும் முக்கிய முடிவுகள் எடுக்கப்படுமா’ என கேள்வி எழுப்பினர். அதற்கு அதிமுக தரப்பில், "கட்சி என்றால் கூட்டங்களை கூட்டுவதும், முடிவுகளை எடுப்பதும் தினந்தோறும் நடப்பதுதான் என்றும், கர்நாடகா தேர்தல் தொடர்பாக செயற்குழுவில் எந்த முடிவும் எடுக்கலாம் அல்லது எடுக்கப்படாமல் இருக்கலாம்" என்றும் விவரித்தனர்.  இதனையடுத்து,  நீதிபதிகள், இறுதி விசாரணைக்கு பட்டியலிடப்பட்டு உள்ளதால், எந்த இடைக்கால கோரிக்கையும் விசாரிக்கப்படாது என்பது நீதிமன்றத்தின் முடிவு என தெரிவித்ததுடன், உறுப்பினர் சேர்க்கை மற்றும் நீக்கம் உள்ளிட்ட எதிலும் எடுக்கப்படும் முடிவுகள் இந்த மேல்முறையீட்டு வழக்குகளின் இறுதி தீர்ப்புக்கு கட்டுப்பட்டது என்று  தெரிவித்தனர். 

 

தற்போது உறுப்பினர்களாக உள்ளவர்களுக்கு எந்த பாதிப்பும் ஏற்படுத்த வேண்டாம் என கட்சியினருக்கு அறிவுறுத்தும்படி அதிமுக தரப்பு வழக்கறிஞர்களிடம் நீதிபதிகள் அறிவுறுத்தினர். மேலும், எந்த உத்தரவும் இந்த வழக்கில் இன்று பிறப்பிக்கவில்லை என தெரிவித்த நீதிபதிகள், ஏற்கனவே திட்டமிட்டபடி ஏப்ரல் 20, 21 ஆம் தேதிகளில் இறுதி விசாரணை நடைபெறும் என்றும் தேவைப்பட்டால் ஏப்ரல் 24 ஆம் தேதியும் விசாரிக்கப்படும் என நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

'எப்படி கேமராக்கள் செயலிழக்கும்?'-அதிமுக ஜெயக்குமார் கேள்வி

Published on 28/04/2024 | Edited on 28/04/2024
'How can the cameras fail?'- AIADMK Jayakumar asked

மக்களவைத் தேர்தலுக்கான முதல்கட்ட தேர்தல் தமிழகத்தில் முடிந்திருக்கும் நிலையில் அடுத்தடுத்த கட்டங்களாக பல மாநிலங்களில் தேர்தல் நடைபெற்று வருகிறது. இந்தநிலையில் நீலகிரியில் வாக்கு பெட்டிகள் வைக்கப்பட்டிருக்கும் ஸ்ட்ராங் ரூமில் வைக்கப்பட்டிருந்த சிசிடிவி கேமராக்கள் நேற்று திடீரென 20 நிமிடங்கள் செயலிழந்து பின்னர் சரியானது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

அதீத வெப்பம் காரணமாக சிசிடிவி கேமராக்கள் செயலிழந்ததாக நீலகிரி மாவட்ட ஆட்சியர் தரப்பில் விளக்கம் கொடுக்கப்பட்டிருக்கிறது. இந்நிலையில் செய்தியாளர்களைச் சந்தித்த அதிமுகவின் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாரிடம் செய்தியாளர்கள் இதுகுறித்து கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த அவர், ''சிசிடிவி கேமரா ஃபெயிலியர் ஆகிவிட்டது என்று சொல்கிறார்கள். இதெல்லாம் எலக்சன் கமிஷனுடைய பிரைமரி டியூட்டி. எப்படி சிசிடிவி கேமரா பெயிலியர் ஆகும். ஸ்ட்ராங் ரூமுக்கு உள்ளேயும் வெளியேயும் பொதுவாக சிசிடிவி கேமரா இருக்கும். ஆனால் எப்படி கேமராக்கள் செயலிழந்து. அதற்கான தனியாக யுபிஎஸ் வைத்து பவர் சப்ளை கொடுக்கவில்லையா? இதெல்லாம் எலக்சன் கமிஷன் செய்திருக்க வேண்டும்.

சாதாரணமாக தொழில்நுட்ப பிரச்சனை என்று சொல்லிவிட்டு போகக்கூடாது. அப்படிக் கடந்து செல்லக்கூடாது. ஜனநாயகத்தினுடைய திருவிழா நடத்தப்பட்டு அதன்படி முடிவுகள் அறிவிக்கப்பட இருக்கக்கூடிய இடம் அது. அப்படி இருக்கும் பொழுது அந்தப் பகுதியில் இந்த மாதிரி ஒரு சூழ்நிலை ஏற்பட்டுள்ளது என்று சொல்வது உண்மையிலேயே யாருமே ஏற்றுக்கொள்ள முடியாத விஷயம். தேர்தல் ஆணையம் இதுபோன்ற தவறுகளுக்கு இடம் கொடுக்காமல் விழித்திருந்து முழுமையான பணியை செய்ய வேண்டும். அடுத்தது வாக்குகளை எண்ணப்  போகிறார்கள் அதில் என்ன செய்யப் போகிறார்கள் என்று தெரியவில்லை. அதிலும் சொதப்பாமல் இருந்தால் நல்லது''என்றார்.

Next Story

'அவராலே பாதி தண்ணீர் புதுக்கோட்டைக்கு வராமல் போகிறது'-அமைச்சர் ரகுபதி குற்றச்சாட்டு

Published on 28/04/2024 | Edited on 28/04/2024
nn


தமிழ்நாடு முழுவதும் சுட்டெரிக்கும் வெயிலின் தாக்கம் நாளுக்குநாள் அதிகரித்து வரும் நிலையில் அதிமுக, திமுக என அனைத்துக் கட்சிகளும் ஆங்காங்கே தண்ணீர் பந்தல்கள் அமைத்து தாகம் தணித்து வருகின்றனர். அதேபோல், புதுக்கோட்டை திமுக அலுவலகத்தில் திமுக மருத்துவ அணி சார்பில் இன்று ஞாயிற்றுக்கிழமை கோடைகால தண்ணீர் பந்தலை சட்டத்துறை அமைச்சர் ரகுபதி, மருத்துவ பணி மாவட்ட செயலாளர் முத்து கருப்பன் ஆகியோர் திறந்து வைத்து பொதுமக்களுக்கு குளிர்பானங்களை வழங்கினார்கள்.

அதன் பிறகு சட்டத்துறை அமைச்சர் ரகுபதி செய்தியாளர்களை சந்தித்த பேசும்போது, ''குஜராத் என்பது போதைப் பொருட்களின் நடமாட்டத்திற்கான மாநிலம். அங்குள்ள துறைமுகத்திற்கு தான் வெளிநாடுகளில் இருந்து இந்தியாவிற்கு போதைப் பொருட்கள் வருகிறது. பிறகு பல மாநிலங்களுக்கு கொண்டு செல்லப்படுகிறது. குஜராத்தில் போதைப் பொருட்களின் நடமாட்டம் அதிகமாக உள்ளது என்பது அதிசயமான செயல் அல்ல.

மத்திய அரசின் நிதி ஒதுக்கீடு யானை பசிக்கு சோலப் பொறி போல என எங்கள் தலைவர் கூறியுள்ளார். அது எந்த அளவு பத்தும் என்பதை நீங்களே யோசித்துக் கொள்ளுங்கள். இருந்த போதிலும் எங்களுக்கு தேவையான நிதியை தரச் சொல்லி வலியுறுத்துவோம். விஜயபாஸ்கர் அதிமுக ஆட்சி காலத்தில் குடிநீர் பிரச்சினைகளில் தீர்வு காணாமல் கோட்டை விட்டுவிட்டார். புதுக்கோட்டைக்கு வரும் காவிரி நீரை வழிமறித்து அவரது கல்லூரிக்கும், அவரது வயலுக்கும் காவிரி நீரை கொண்டு செல்கிறார். வயலுக்கு காவிரித் தண்ணீரை பயன்படுத்தக்கூடிய ஒரே நபர் விஜயபாஸ்கர் மட்டும்தான். இன்னும் ஒரு மணி நேரத்திற்குள் அங்கு சென்றால் அதை பார்க்கலாம். அது குறித்து நடவடிக்கை எடுக்க சென்றால் போராட்டம் நடத்துவார்கள். அவராலே பாதி தண்ணீர் புதுக்கோட்டைக்கு வராமல் போகிறது.ஆனால் இதை அனுமதிக்க முடியாது. விரைவில் குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகள் அந்த பிரச்சனை குறித்து நடவடிக்கை எடுப்பார்கள்'' என்றார்.

இந்த பேட்டி தொலைக்காட்சிகளில் வெளியான நிலையில், அமைச்சர் ரகுபதி போகிற போக்கில் ஏதேதோ பேசி விட்டு போகிறார். பல வருடமாக குடிநீர் திருட்டு நடப்பதாக இருந்தால் இவர்கள் ஆட்சிக்கு வந்த பிறகு கூட ஏன் தடுக்கவில்லை, நடவடிக்கை எடுக்கவில்லை. ஊராட்சி, பேரூராட்சி, நகராட்சி, மாநகராட்சிகளில் கூட ஒரு வீட்டிற்கு வரும் தண்ணீரை மோட்டார் வைத்து உறிஞ்சினால் உடனே நடவடிக்கை எடுத்து மோட்டாரை பறிமுதல் செய்து அபராதம் விதிக்கப்படுகிறது. ஆனால் எங்கள் முன்னாள் அமைச்சர் காவிரி கூட்டுக் குடிநீரை தங்கள் கல்லூரிக்கும், தோட்டத்திற்கும் எடுக்கிறார் என்றால் இத்தனை ஆண்டுகளாக ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை. அப்படி இருந்தால் நடவடிக்கை எடுக்க வேண்டியது தானே? தண்ணீர் திருட்டு நடந்தால் அதிகாரிகளை அனுப்பி நடவடிக்கை எடுக்க என்ன தயக்கம்? ஆதாரமற்ற குற்றச்சாட்டை கூறியுள்ளார் என்கின்றனர் அதிமுகவினர்.