Skip to main content

இடைத்தேர்தல்: முதலியார் சங்க நிர்வாகிகள் பேட்டி

Published on 10/02/2023 | Edited on 10/02/2023

 

By-elections; Employers' Association executives interviewed

 

தென்னிந்திய செங்குந்த மகாஜன சங்கம் ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் திமுகவுக்கு ஆதரவளிக்கும் என்று அச்சங்கத்தின் மாநிலத் தலைவர் கே.பி.கே.செல்வராஜ் தெரிவித்துள்ளார்.

 

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் தற்போது பரபரப்பு கட்டத்தை எட்டியுள்ளது. திமுகவும் அதன் கூட்டணிக் கட்சிகளும் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டுள்ளன. அமைச்சர்கள், நிர்வாகிகள் ஆகியோரை ஈரோட்டில் முகாமிட வைத்து, கூட்டணிக் கட்சியான காங்கிரஸ் வேட்பாளரை வெற்றி பெறச் செய்ய மிகத் தீவிரமாகக் களத்தில் இறங்கியுள்ளது திமுக. மறுபுறம் அதிமுக, இரட்டை இலை மற்றும் பிற நீதிமன்ற களேபரங்கள் அனைத்தையும் முடித்து நேற்று வேட்பாளர் அறிமுகக் கூட்டத்தை நடத்தியது.

 

இந்நிலையில், தென்னிந்திய செங்குந்த மகாஜன சங்கம் ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் திமுகவுக்கு ஆதரவளிக்கும் என்று அச்சங்கத்தின் மாநிலத் தலைவர் கே.பி.கே.செல்வராஜ் தெரிவித்துள்ளார். அவர் 10ந் தேதி ஈரோட்டில் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசுகையில், "திமுக என்ற கட்சி மறைந்த முன்னாள் முதல்வர் பேரறிஞர் அண்ணாவால் துவக்கப்பட்டது. அவர் எங்களின் செங்குந்த முதலியார் சமூகத்தைச் சேர்ந்தவர். அவர் மறைவிற்குப் பிறகு எந்தப் பதவியையும் நாங்கள் அக்கட்சியில் எதிர்பார்க்கவில்லை. இருந்தபோதிலும் தொடர்ந்து திமுகவை ஆதரிக்கிறோம்.

 

கடந்த அக்டோபர் மாதம் திருப்பூரில் எங்கள் சங்கத்தின் இருபதாவது மாநில மாநாடு நடைபெற்றது. அதில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களின் படி, அறிஞர் அண்ணாவுக்கு பாரத ரத்னா விருது வழங்க வேண்டும். விடுதலைப் போரில் பங்கெடுத்த கொடிகாத்த குமரன் அவர்களுக்கு அவர் பிறந்த சென்னிமலையில் மணிமண்டபம் அமைக்க வேண்டும். திருப்பூர் ரயில் நிலையத்துக்கு குமரன் பெயர் சூட்ட வேண்டும். திருமுருக கிருபானந்த வாரியார் பெயரை தஞ்சை தமிழ் பல்கலைக்கழகத்துக்கு சூட்ட வேண்டும். சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும். செங்குந்த மக்களுக்கு பிற்படுத்தப்பட்ட வகுப்பில் பத்து சதவீதம் உள்ஒதுக்கீடு வழங்க வேண்டும். நெசவாளர்களுக்கு கூலி உயர்வு வழங்க வேண்டும். பஞ்சு ஏற்றுமதி தடை செய்ய வேண்டும். ஜரிகைக்கு மானியம் வழங்க வேண்டும். இலவச வேட்டி, சேலை நெசவு செய்யும் தொழிலாளர் கூலி உயர்வு தடையின்றி வழங்க வேண்டும்.

 

கைத்தறி, விசைத்தறி நெசவாளர்களுக்கு வட்டியில்லா கடன் வழங்க வேண்டும். விசைத்தறி, கைத்தறிகளை நவீனப்படுத்த வேண்டும். மாணவர் சீருடை உற்பத்தி பணியை கைத்தறிகளுக்கு வழங்க வேண்டும். நெசவாளர் குழந்தைகள் உயர்கல்வி பயில உள்ஒதுக்கீடு வேண்டும். அனைத்து மாவட்டங்களிலும் ஜவுளி பூங்கா அமைக்க வேண்டும். எங்கள் பாவடி நிலங்களுக்கு செங்குந்தர்களுக்கு பட்டா தர வேண்டும். கைத்தறிக்கும் விசைத்தறிக்கும் இலவச மின்சாரத்தின் அளவை உயர்த்த வேண்டும். அர்ஜுனா விருது பெற்ற இளவேனில் வாலறிவன் அவர்களுக்கு அரசு வேலை வழங்க வேண்டும். இந்த கோரிக்கைகளை திமுக அரசு நிறைவேற்றுவதாக வாக்குறுதி அளித்துள்ளது. எனவே, திமுகவை ஆதரிக்கிறோம். இந்த ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் திமுக கூட்டணியில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளருக்கு எங்கள் சமூக மக்கள் ஆதரவளித்து வாக்களித்து காங்கிரஸ் வேட்பாளரை வெற்றிபெற வைப்பார்கள்'' என்றார். 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

'குடிநீர் தட்டுப்பாட்டைப் போக்க நடவடிக்கை எடுக்கப்படும்' - அமைச்சர் முத்துசாமி

Published on 29/04/2024 | Edited on 29/04/2024
nn

ஈரோடு மாவட்டம் பவானி சாகர் அணையில் தண்ணீர் வேகமாகக் குறைந்து வருகிறது. இருப்பினும் மாவட்டத்தில் குடிநீர் பற்றாக்குறை ஏற்படாமல் இருக்க உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்று வீட்டு வசதி துறை அமைச்சர் எஸ்.முத்துசாமி கூறியுள்ளார்.

அவர் ஈரோடு காந்திஜி சாலையில் திமுக சார்பில் நீர் மோர் பந்தலை திறந்து வைத்தார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது, 'பவானி சாகர் அணையில் மட்டுமல்லாமல் நீலகிரி மாவட்டத்தில் உள்ள மின் உற்பத்தி அணைகளிலும் தண்ணீர் மிக குறைவாக உள்ளது. எங்களுக்கு கீழ் பவானி பாசனப்பகுதியில் உள்ள புஞ்சை பயிர்களுக்கு ஐந்தாவது நினைப்பிற்கு தண்ணீர் விட வேண்டும் என்பது ஆசைதான். ஆனால் நீர் இருப்பு அணையில் இல்லை. தமிழக முதலமைச்சர் 22 மாவட்டங்களுக்கு குடி தண்ணீர் தட்டுப்பாட்டை போக்க ரூபாய் 150 கோடி ஒதுக்கீடு செய்துள்ளார். ஈரோடு மாவட்டத்திலும் எந்தக் குடிதண்ணீர் பிரச்சனையும் ஏற்படாமல் இருக்க முதலமைச்சர் உரிய நடவடிக்கை எடுப்பார். ஈரோடு மாவட்டத்தில் நடப்பாண்டு அதிக உஷ்ணம் நிலவுகிறது. சாலை விரிவாக்கத்திற்காக பல இடங்களில் மரங்கள் வெட்டப்பட்டுள்ளன. அவ்விடங்களில் மரக்கன்றுகள் நட நடவடிக்கை எடுக்கப்படும். நீலகிரி மாவட்டத்தில் வாக்கு எண்ணும் மையத்தில் உள்ள சிசிடிவி கேமராக்கள் 26 நிமிடங்கள் பழுது அடைந்தது குறித்து திமுக சார்பில் தேர்தல் ஆணையத்தில் புகார் செய்யப்பட்டுள்ளது'' என்றார்.

ஈரோடு மாநகர மாவட்டச் செயலாளர் சுப்பிரமணியம் பகுதிச் செயலாளர் அக்னி சந்துரு மூன்றாம் மண்டல தலைவர் சசிகுமார் உட்பட பலர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

Next Story

நீலகிரியைத் தொடர்ந்து ஈரோடு; தேர்தல் அதிகாரியிடம் திமுக மனு

Published on 29/04/2024 | Edited on 29/04/2024
nn

18ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக கடந்த 19ஆம் தேதி தொடங்கி வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. முதற்கட்டமாக தமிழகம் உள்ளிட்ட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு வாக்குப்பதிவு நடைபெற்றது. இதனையடுத்து வாக்கு பெட்டிகள் அனைத்தும் ஸ்ட்ராங் ரூம் எனப்படும் ஐந்து அடுக்கு பாதுகாப்பு அறைக்குள் வைக்கப்பட்டுள்ளன.

இத்தகைய சூழலில் நேற்று முன்தினம் நீலகிரியில் ஸ்ட்ராங் ரூமில் வைக்கப்பட்டிருந்த சிசிடிவி கேமராக்கள் திடீரென செயலிழந்தது பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது. அதீத வெப்பம் காரணமாக கேமராக்கள் செயலிழந்திருக்கலாம் என மாவட்ட ஆட்சியர்  விளக்கம் அளித்திருந்தார். இந்நிலையில் ஈரோட்டில் வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள ஸ்ட்ராங் ரூமில் நள்ளிரவில் சிசிடிவி கேமரா பழுதானதால் மீண்டும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. ஈரோடு மக்களவைத் தொகுதியின் வாக்கு எண்ணும் மையம் சித்தோடு ஐ.ஆர்.டி.டி. அரசு பொறியியல் கல்லூரியில் அமைக்கப்பட்டுள்ளது. அதில் ஈரோடு மேற்கு சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள ஸ்ட்ராங் ரூம் அறையின் சிசிடிவி கேமரா நேற்று (28.04.2024) இரவு 11.30 மணியளவில் பழுதாகியுள்ளன. இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தேர்தல் அதிகாரிகள் மற்றும் தொழில்நுட்ப நிபுணர்கள் ஆய்வு மேற்கொண்டனர். அதன் பின்னர் இன்று (29.04.2024) அதிகாலை 3.30 மணியளவில் வேறு கேமராக்கள் பொறுத்தப்பட்டன. ஈரோடு மக்களவைத் தொகுதியில் திமுக சார்பில் பிரகாஷும், அதிமுக சார்பில் ஆற்றல் அசோக் குமாரும், பாஜக கூட்டணியில் தமிழ் மாநில காங்கிரஸ் சார்பில் விஜயகுமாரும், நாம் தமிழர் கட்சி சார்பாக கார்மேகனும் போட்டியில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்த இரு சம்பவங்களும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் வாக்கு இயந்திரங்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும் எனத் திமுக சார்பில் மனு கொடுக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹுவை நேரில் சந்தித்த திமுக எம்.பி, என்.ஆர்.இளங்கோ இதற்கான மனுவை அளித்துள்ளார். அதில் 'வாக்கு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள அறைகளில் சிசிடிவி முறையாக இயங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். வாக்கு இயந்திரங்கள் உள்ள அறையை சுற்றி 500 மீட்டர் சுற்றளவில் ட்ரோன் பறக்க தடை விதிக்க வேண்டும் எனக் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.