Skip to main content

திருநங்கை அப்சரா ரெட்டி மகளிர் காங்கிரஸ் பொதுச்செயலாளராக நியமனம்

Published on 08/01/2019 | Edited on 08/01/2019
a

 

அகில இந்திய மகளிர் காங்கிரஸ் பொதுச்செயலாளராக திருநங்கை அப்சரா ரெட்டி நியமனம் செய்யப்பட்டுள்ளார். 

 

சமூக செயற்பாட்டாளரும் ,  பத்திரிகையாளருமான திருநங்கை அப்சரா ரெட்டிக்கு காங்கிரஸில் புதிய பொறுப்பு வழங்கப்பட்டுள்ளதை  காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி இன்று அறிவித்துள்ளார். இதையடுத்து அப்சரா ரெட்டி    டெல்லியில் காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தியை சந்தித்து வாழ்த்து பெற்றார்.


  கடந்த 2016-ல் பாஜகவில் இணைந்த அப்சரா, அதே ஆண்டு அதிமுகவில் இணைந்து செய்தித் தொடர்பாளர் ஆனார். தற்போது காங்கிரசில் அப்சராவுக்கு பெரிய பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. 

 

சார்ந்த செய்திகள்