Skip to main content

“முதலமைச்சரின் கைக்கூலியாக லஞ்ச ஒழிப்புத்துறை செயல்பட்டுவருகிறது..”  சி.வி. சண்முகம்  

Published on 04/12/2021 | Edited on 04/12/2021

 

"The Anti-Corruption Department is working as a bribe to the Chief Minister." CV Shanmugam

 

முன்னாள் அமைச்சரும், அதிமுக விழுப்புரம் மாவட்டச் செயலாளருமான சிவி சண்முகம் நேற்று விழுப்புரத்தில் பத்திரிக்கையாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர், “திமுக அரசு எதிர்க்கட்சியை பழிவாங்கும் நோக்கத்தோடு மட்டுமே செயல்பட்டு வருகிறது. ஆட்சி பொறுப்பேற்று ஆறு மாதம் ஆன போதிலும் இன்னமும் அதிமுகவை தான் குறை சொல்லி வருகின்றனர். ஆட்சி அதிகாரத்தில் இருப்பவர்களுக்கு அரசு நிர்வாகம் மீது துளியும் கவனம் செலுத்தவில்லை. அதிமுக மீதான பழிவாங்கும் நடவடிக்கையை செய்து வருகிறது. அதை நாங்கள் சட்டரீதியாக சந்திக்க உள்ளோம். 

 

அரசு ஊழியர்கள் தயவு இல்லாமல் திமுக ஆட்சி அமைக்க முடியாது. இதை அவர்கள் மறந்துவிட்டனர். இன்று முதலமைச்சரின் கைக்கூலியாக லஞ்ச ஒழிப்புத்துறை செயல்பட்டுவருகிறது. முன்னாள் அமைச்சர் வேலுமணி வீட்டில் லஞ்ச ஒழிப்புத் துறை சோதனை நடத்திக் கொண்டிருக்கும்போதே, லஞ்ச ஒழிப்புத்துறை தலைமை அதிகாரி கந்தசாமி முதலமைச்சரை சந்திக்கிறார். காரணம், வேலுமணியை கைது செய்ய வேண்டும் என்பதுதான் அவர்களின் இலக்கு. ஆனால், அதற்கான ஆதாரங்கள் கிடைக்கவில்லை என்பதால் வேலுமணி கைது செய்யப்படவில்லை. 

 

இந்த அரசுக்கு ஒத்துழைக்காத அதிகாரிகள் மிரட்டப்படுகிறார்கள்; அச்சுறுத்தப்படுகிறார்கள். நேற்று முன்தினம் மாசுக்கட்டுப்பாட்டு வாரியத் தலைவராக இருந்த வெங்கடாசலம் தற்கொலை செய்து கொண்டுள்ளார். அவர் மிகவும் நேர்மையான அதிகாரி. ஆட்சி மாற்றம் ஏற்பட்டதும், அவரை ராஜினாமா செய்யுமாறு வற்புறுத்தினார்கள். ஆனால், அவர் அதற்கு மறுத்துவிட்டதால் பின்னர் அவர் பதவி நீக்கம்செய்யப்பட்டவர் வீட்டில் சோதனை மேற்கொள்ளப்பட்டது. பதினோரு லட்சம் பணம், 4 கிலோதங்கம் வைத்திருந்ததாக வழக்குப்பதிவு செய்யப்பட்டது. வழக்குக்காக அதிகாரி வெங்கடாசலம் அச்சப்படவில்லை. 

 

அவர் தற்கொலை செய்து கொள்ள வேண்டிய அவசியமே இல்லை. ஆனால், அவர் பகலில் தற்கொலை செய்து கொண்டார். அவருக்கு என்ன நடந்தது, அவரது தற்கொலைக்கு என்ன காரணம் என்பது மர்மமாக உள்ளது. கடந்த மாதம் பொதுப்பணித்துறை அதிகாரி வீட்டில் சோதனை நடைபெற்று இரண்டரை கோடி பணம் கைப்பற்றப்பட்டது. ஆனால், அவர் மீது மேல் நடவடிக்கை எடுக்கவில்லை. மாறாக அவருக்கு 10 நாளில் பதவி உயர்வு அளிக்கப்பட்டது. எதிர்கட்சிகள் கேள்வி கேட்ட பின்பு அவர் கைது செய்யப்படுகிறார். முன்னாள் அமைச்சர்கள் மீது குற்றம் சுமத்த வற்புறுத்தப்பட்டுள்ளார். அவர் மறுத்ததால் கைது செய்யப்பட்டுள்ளார். இப்படி முன்னாள் அரசு மீது குற்றம் சுமத்த வேண்டும் என்று வலியுறுருத்தப்பட்டு அதற்கு வெங்கடாச்சலம் மறுத்ததால் அதனால் அவர் தற்கொலை செய்து கொண்டாரா என்ற கேள்வி எழுகிறது. 

 

எப்போதெல்லாம் திமுகவினர் மீது குற்றம்சாட்டப்படுகிறதோ அப்போதெல்லாம் அதிகாரிகள் தற்கொலை சம்பவங்கள் நடைபெறுகிறது. மரக்காணம் ஒன்றியக் குழுத் தலைவர் தேர்தலில் அங்கு பணி செய்யும் வட்டார வளர்ச்சி அலுவலர் மிரட்டப்பட்டு தோல்வி அடைந்தவரை வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டு இருக்கிறார். இந்த அரசின் மீதும் காவல்துறை மீதும் நம்பிக்கை இல்லாததால் மாசு கட்டுப்பாட்டு வாரியத் தலைவர் வெங்கடாசலத்தின் மர்ம மரணத்திற்கான காரணத்தை சி.பி.ஐ. விசாரணை செய்ய வேண்டும் என்று நாங்கள் வலியுறுத்துகிறோம். இந்த அரசால் அதிகாரிகள் மிரட்டப்படுகிறார்கள். அதனால் அவர்களை தற்கொலைக்கு தூண்டுகிறது” என்று தெரிவித்துள்ளார்.  

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

முன்னாள் அமைச்சர் சி. விஜயபாஸ்கர் நீதிமன்றத்தில் ஆஜர்!

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
Former Minister C. Vijayabaskar appears in court
கோப்புப்படம்

விராலிமலை சட்டமன்றத் தொகுதி உறுப்பினராக உள்ள முன்னாள் அமைச்சர் சி. விஜயபாஸ்கர் கடந்த அதிமுக ஆட்சியில் அமைச்சராக இருந்த காலகட்டத்திலேயே ஊழல்கள், முறைகேடுகள் எனப் பல்வேறு குற்றச்சாட்டுகளில் சிக்கினார். இதனால் 2017 ஆம் ஆண்டு அமைச்சராக இருந்தபோதே அவருடைய வீடு உள்ளிட்ட பல்வேறு இடங்களில் சோதனை நடத்தப்பட்டது. ஆர்.கே. நகர் இடைத்தேர்தலில் 89 கோடி ரூபாய் பணப் பட்டுவாடா உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் வருமான வரித்துறையினர், அமலாக்கத்துறையினர், கனிமவளத் துறையினர் எனப் பல்வேறு துறையினர் சோதனை நடத்தினர்.

அமைச்சராக இருந்த 2021 அக்டோபர் 18 ஆம் தேதி 2016 முதல் 2021 வரை காலக்கட்டத்தில் வருமானத்திற்கு அதிகமாக 27 கோடி ரூபாய் அசையும் மற்றும் அசையா சொத்துகளை வாங்கிக் குவித்ததாக லஞ்ச ஒழிப்புத் துறை போலீசார் சி. விஜயபாஸ்கர் மீது வழக்குப் பதிவு செய்தனர். வீடு உள்ளிட்ட அவருக்கு தொடர்புடைய 56 இடங்களில் சோதனை நடத்தினர். சோதனையில் 23.85 லட்சம் ரூபாய் ரொக்கம், 4.87 கிலோ தங்கம், 136 கனரக வாகன சான்றிதழ்கள், பல்வேறு ஆவணங்களை லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் கைப்பற்றினர்.

அதனைத் தொடர்ந்து முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கரும் அவருடைய மனைவியும் வருமானத்திற்கு அதிகமாக 35.29 கோடி ரூபாய் சொத்து சேர்த்ததாக புதுக்கோட்டை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் 216 பக்க குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்தனர். 800க்கும் மேற்பட்ட ஆவணங்கள் அந்த குற்றப்பத்திரிகையில் இணைக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் புதுக்கோட்டை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் இந்த வழக்கு தொடர்பாக விஜயபாஸ்கரும், அவரது மனைவி ரம்யாவும் இன்று (25.04.2024) நேரில் ஆஜராகியுள்ளனர். இதனையடுத்து நீதிமன்றம் இந்த வழக்கை ஜூன் 12ஆம் தேதிக்கு ஒத்தி வைத்துள்ளது.

Next Story

முதல்வர் ஸ்டாலினை சந்தித்து வாழ்த்து பெற்ற திண்டுக்கல் தொகுதி வேட்பாளர்!

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
Chief Minister Stalin congratulates Dindigul candidate Sachithanantham

திண்டுக்கல் பாராளுமன்ற தொகுதியில் சிபிஎம். கட்சி சார்பாக போட்டியிட்ட வேட்பாளர் சச்சிதானந்தத்தை திமுக மாநில துணைப் பொதுச்செயலாளரும், ஊரக வளர்ச்சித்துறை அமைச்சருமான ஐ.பெரியசாமி, உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி ஆகிய இருவருடன் மாவட்டச் செயலாளரும், பழனி சட்டமன்ற உறுப்பினருமான ஐ.பி செந்தில் குமார் ஆகியோரும் சென்னைக்கு நேரில் அழைத்து சென்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் வாழ்த்து பெற வைத்தனர்.

அப்போது தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தமிழகத்திலேயே அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறப் போகிறீர்கள் என்ற செய்தி கேட்டு மகிழ்ச்சி அடைந்தேன் எனக் கூறியதோடு எவ்வளவு வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவீர்கள் எனக் கேட்டபோது சிபிஎம் வேட்பாளர் சச்சிதானந்தம் சுமார் 3 லட்சம் வாக்குகள் வித்தியசாத்தில் வெற்றி பெறுவேன் எனக்கூறினார். அப்போது உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி, இல்லை 4 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் சிபிஎம் வேட்பாளர் வெற்றி பெறுவார் எனக் கூறினார்.   

அப்போது தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், அமைச்சர் ஐ.பெரியசாமியை பார்த்து நீங்கள் 5 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவார் என கூறுகிறீர்களா? எனக் கேட்டவுடன் அனைவரும் மகிழ்ச்சி அடைந்தனர். அப்போது பேசிய ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர், உங்களின் வழிகாட்டுதலின் படி திண்டுக்கல் தொகுதியில் தேர்தல் பிரச்சாரம் செய்தோம். தமிழக அரசின் நலத்திட்டங்களை பாராட்டி திண்டுக்கல் தொகுதியில் உள்ள வாக்காளர்கள் திமுக தலைமையிலான கூட்டணிக்கு அமோகமான வாக்குகளை அளித்துள்ளனர் என்றார். இந்த சந்திப்பின் போது  அமைச்சர் துரைமுருகன், அமைச்சர்  ஐ.பெரியசாமி,  அமைச்சர் சக்கரபாணி,  எம்.எல்.ஏ., ஐ.பி.செ ந்தில்குமார், ஆத்தூர் தொகுதி தேர்தல் பொறுப்பாளர் கள்ளிப்பட்டி மணி, சிபிஎம்.வேட்பாளர் சச்சிதானந்தம் ஆகியோர் உடன் இருந்தனர்.

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்தது குறித்து திண்டுக்கல் பாராளுமன்ற தொகுதி சச்சிதானந்தம் கூறுகையில், “திமுக சார்பாக போட்டியிட்ட வேட்பாளர்களின் வெற்றிகளை தெரிந்து கொள்ள எவ்வளவு ஆர்வம் காட்டினாரோ அந்த அளவிற்கு கூட்டணி கட்சி சார்பாக (சிபிஎம்) போட்டியிட்ட எனது வெற்றி குறித்தும் தமிழக முதல்வர் ஆர்வமுடன் கேட்டதும், தொடர்ந்து மக்கள் பணியை சிறப்பாக செய்யுங்கள் என வாழ்த்தியதும் எனக்கு மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்தியது. இந்த நேரத்தில் எனது வெற்றிக்கு அயராது உழைத்த அமைச்சர் ஐ.பெரியசாமிக்கும், அமைச்சர் சக்கரபாணிக்கும், திண்டுக்கல் கிழக்கு மாவட்ட திமுக செயலாளர் ஐ.பி. செந்தில்குமாருக்கும் மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகளுக்கும் என்றும் நான் உறுதுணையாக இருப்பேன்” என்று கூறினார்