Skip to main content

அதிமுக ஆட்சி ஏழை, எளிய மக்களுக்கான ஆட்சி: அன்புமணி ராமதாஸ் புகழாரம்

Published on 21/03/2019 | Edited on 21/03/2019

 

அதிமுக ஆட்சி ஏழை, எளிய மக்களுக்கான ஆட்சி என்று பாமகவின் தருமபுரி மக்களவைத் தொகுதியின் வேட்பாளர் அன்புமணி ராமதாஸ் புகழாரம் சூட்டியுள்ளார்.

 

anbumani ramadoss



தருமபுரியில் வேட்பாளர் அறிமுகக் கூட்டம் நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு பேசிய அவர், தமிழக உரிமைகளை மீட்கவே அதிமுக கூட்டணியில் இணைந்துள்ளோம். நம்ம கூட்டணி மெகா கூட்டணி. எல்லா கட்சியும் நம்ம பக்கம் இருக்கிறார்கள். மக்கள் நம்ம பக்கம் இருக்கிறார்கள்.


முதல் அமைச்சர் அவர்களும், துணை முதல் அமைச்சர் அவர்களும் மிகச்சிறப்பான ஆட்சியை செய்து கொண்டிருக்கிறார்கள். அந்த வகையில் அதிமுக ஆட்சி ஏழை, எளிய மக்களுக்கான ஆட்சி. அடித்தட்டு மக்கள், பாட்டாளிகள், தொழிலாளர்கள், விவசாயிகளுக்கான ஆட்சி.

 

தமிழ்நாட்டு உரிமைகளை நாம் மீட்டெடுக்க வேண்டும். நாம் காப்பாற்ற வேண்டும். தருமபுரி மாவட்டத்தில் நான் பிறக்கவில்லை என்றாலும், இந்த மாவட்டம் எனக்கு சொந்தமான மாவட்டமாக இருக்கிறது. என் ஆயுள் உள்ளவரை இந்த மாவட்ட மக்களுக்கு நான் நன்றிக்கடன் பட்டவனாக இருப்பேன். இவ்வாறு பேசினார். 
 

 

 

சார்ந்த செய்திகள்