Skip to main content

''கரும்பில் ஸ்டிக்கர் ஒட்டியது அதிமுக... பிள்ளைகளுக்கு பேரு வச்சீங்களே சோறு வச்சீங்களா?'' - தங்கம் தென்னரசு பேட்டி!

Published on 12/01/2022 | Edited on 12/01/2022

 

'AIADMK even pasted the sticker on the cane nodes ... thangam thennarasu interview!

 

தமிழக தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு இன்று சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசுகையில், ''தனியார் அமைப்புகள், தொண்டு நிறுவனங்கள், ஆர்வலர்கள் ஒவ்வொரு இடத்திற்கும் போய் மக்களுக்கான நிவாரண பொருட்கள் வழங்கியபோது அப்படி தனியார் நிறுவனங்கள் கொடுத்த அந்த நிவாரண பொருட்களில் கொஞ்சம்கூட கூச்சம் இல்லாமல் அதிமுகவினரை வைத்து அவர்களது பெயர்களையும், ஸ்டிக்கரையும் ஒட்டிக்கொண்ட ஆட்சி அதிமுக ஆட்சி என்பதை மறந்துவிடக்கூடாது.

 

இன்னும் சொல்லப்போனால் பொங்கலுக்கு கொடுத்த கரும்பில் கூட கரும்பின் ஒவ்வொரு கணுக்களில்கூட ஸ்டிக்கரை ஒட்டிய ஆட்சிதான் அது. இன்று திமுக ஆட்சியில் பொங்கல் பையாக இருந்தாலும், எந்த பொருளாக இருந்தாலும் அதில் முதல்வர் புகைப்படம் கூட இல்லாத நல்ல சூழலலை உருவாக்கியுள்ள ஆட்சி திமுக ஆட்சி என  நான் தெரிவித்துக்கொள்ள விரும்புகிறேன். அவர்களைப்போல் ஸ்டிக்கர் ஒட்டிக்கொள்ள வேண்டிய அவசியம் எங்களுக்கு இல்லை. ஆனால் திமுக ஆட்சியில் கொண்டுவரப்பட்ட திட்டங்களில் எல்லாம் எவ்வாறு அதிமுக ஸ்டிக்கர் ஒட்டினார்கள் என நான் விளக்கங்களைச் சொல்லியாக வேண்டும்.  

 

உதாரணத்திற்கு ஒகேனக்கல் கூட்டுகுடிநீர் திட்டம். 2008 ல் கலைஞர் 1928 கோடி ரூபாயில் கொண்டுவந்த திட்டம். ஆகஸ்ட் 26, 2008  அன்று கலைஞர் அந்த திட்டத்தைத் தொடங்கிவைத்தார். அப்பொழுது உள்ளாட்சித்துறை அமைச்சராக இருந்த தற்போதைய முதல்வர் ஸ்டாலின் தலைமையில் 95 சதவிகிதம் பணிகள் முடிந்தது. 2013 -ல் மீதம் இருக்கும் 5 சதவிகித பணியைமட்டும் பார்த்துவிட்டு குழாயில் தண்ணியை மட்டும் திறந்துவைத்துவிட்டு அதை தான் செய்ததாக அதிமுக ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டதை நாட்டுமக்கள் மறந்துவிட முடியாது. அதேபோல் சென்னை கோயம்பேடு பேருந்து நிலையம். கலைஞர் உருவாக்கிய கோயம்பேட்டில் அவரது கல்வெட்டை மறைத்துவிட்டு ஏதோ அதிமுக ஆட்சிதான் அதை உருவாக்கியதைப்போல நாடகமாடினார்கள். அதேபோல் புதிய தலைமைச்செயலகம் அமைக்க கட்டப்பட்ட கட்டிடத்தை ஓமந்தூரார் மருத்துவமனையை என்று போட்டு ஏதோ தாங்கள்தான் உருவாக்கியதை போன்று ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது அதிமுக ஆட்சி. நீங்கள் பெற்ற பிள்ளைகளுக்கு பேர் வச்சீங்களே சோறு வச்சீங்களா? என்றுதான் கேட்க விரும்புகிறேன்'' என்றார். 

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

'குடிநீர் தட்டுப்பாட்டைப் போக்க நடவடிக்கை எடுக்கப்படும்' - அமைச்சர் முத்துசாமி

Published on 29/04/2024 | Edited on 29/04/2024
nn

ஈரோடு மாவட்டம் பவானி சாகர் அணையில் தண்ணீர் வேகமாகக் குறைந்து வருகிறது. இருப்பினும் மாவட்டத்தில் குடிநீர் பற்றாக்குறை ஏற்படாமல் இருக்க உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்று வீட்டு வசதி துறை அமைச்சர் எஸ்.முத்துசாமி கூறியுள்ளார்.

அவர் ஈரோடு காந்திஜி சாலையில் திமுக சார்பில் நீர் மோர் பந்தலை திறந்து வைத்தார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது, 'பவானி சாகர் அணையில் மட்டுமல்லாமல் நீலகிரி மாவட்டத்தில் உள்ள மின் உற்பத்தி அணைகளிலும் தண்ணீர் மிக குறைவாக உள்ளது. எங்களுக்கு கீழ் பவானி பாசனப்பகுதியில் உள்ள புஞ்சை பயிர்களுக்கு ஐந்தாவது நினைப்பிற்கு தண்ணீர் விட வேண்டும் என்பது ஆசைதான். ஆனால் நீர் இருப்பு அணையில் இல்லை. தமிழக முதலமைச்சர் 22 மாவட்டங்களுக்கு குடி தண்ணீர் தட்டுப்பாட்டை போக்க ரூபாய் 150 கோடி ஒதுக்கீடு செய்துள்ளார். ஈரோடு மாவட்டத்திலும் எந்தக் குடிதண்ணீர் பிரச்சனையும் ஏற்படாமல் இருக்க முதலமைச்சர் உரிய நடவடிக்கை எடுப்பார். ஈரோடு மாவட்டத்தில் நடப்பாண்டு அதிக உஷ்ணம் நிலவுகிறது. சாலை விரிவாக்கத்திற்காக பல இடங்களில் மரங்கள் வெட்டப்பட்டுள்ளன. அவ்விடங்களில் மரக்கன்றுகள் நட நடவடிக்கை எடுக்கப்படும். நீலகிரி மாவட்டத்தில் வாக்கு எண்ணும் மையத்தில் உள்ள சிசிடிவி கேமராக்கள் 26 நிமிடங்கள் பழுது அடைந்தது குறித்து திமுக சார்பில் தேர்தல் ஆணையத்தில் புகார் செய்யப்பட்டுள்ளது'' என்றார்.

ஈரோடு மாநகர மாவட்டச் செயலாளர் சுப்பிரமணியம் பகுதிச் செயலாளர் அக்னி சந்துரு மூன்றாம் மண்டல தலைவர் சசிகுமார் உட்பட பலர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

Next Story

'எப்படி கேமராக்கள் செயலிழக்கும்?'-அதிமுக ஜெயக்குமார் கேள்வி

Published on 28/04/2024 | Edited on 28/04/2024
'How can the cameras fail?'- AIADMK Jayakumar asked

மக்களவைத் தேர்தலுக்கான முதல்கட்ட தேர்தல் தமிழகத்தில் முடிந்திருக்கும் நிலையில் அடுத்தடுத்த கட்டங்களாக பல மாநிலங்களில் தேர்தல் நடைபெற்று வருகிறது. இந்தநிலையில் நீலகிரியில் வாக்கு பெட்டிகள் வைக்கப்பட்டிருக்கும் ஸ்ட்ராங் ரூமில் வைக்கப்பட்டிருந்த சிசிடிவி கேமராக்கள் நேற்று திடீரென 20 நிமிடங்கள் செயலிழந்து பின்னர் சரியானது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

அதீத வெப்பம் காரணமாக சிசிடிவி கேமராக்கள் செயலிழந்ததாக நீலகிரி மாவட்ட ஆட்சியர் தரப்பில் விளக்கம் கொடுக்கப்பட்டிருக்கிறது. இந்நிலையில் செய்தியாளர்களைச் சந்தித்த அதிமுகவின் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாரிடம் செய்தியாளர்கள் இதுகுறித்து கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த அவர், ''சிசிடிவி கேமரா ஃபெயிலியர் ஆகிவிட்டது என்று சொல்கிறார்கள். இதெல்லாம் எலக்சன் கமிஷனுடைய பிரைமரி டியூட்டி. எப்படி சிசிடிவி கேமரா பெயிலியர் ஆகும். ஸ்ட்ராங் ரூமுக்கு உள்ளேயும் வெளியேயும் பொதுவாக சிசிடிவி கேமரா இருக்கும். ஆனால் எப்படி கேமராக்கள் செயலிழந்து. அதற்கான தனியாக யுபிஎஸ் வைத்து பவர் சப்ளை கொடுக்கவில்லையா? இதெல்லாம் எலக்சன் கமிஷன் செய்திருக்க வேண்டும்.

சாதாரணமாக தொழில்நுட்ப பிரச்சனை என்று சொல்லிவிட்டு போகக்கூடாது. அப்படிக் கடந்து செல்லக்கூடாது. ஜனநாயகத்தினுடைய திருவிழா நடத்தப்பட்டு அதன்படி முடிவுகள் அறிவிக்கப்பட இருக்கக்கூடிய இடம் அது. அப்படி இருக்கும் பொழுது அந்தப் பகுதியில் இந்த மாதிரி ஒரு சூழ்நிலை ஏற்பட்டுள்ளது என்று சொல்வது உண்மையிலேயே யாருமே ஏற்றுக்கொள்ள முடியாத விஷயம். தேர்தல் ஆணையம் இதுபோன்ற தவறுகளுக்கு இடம் கொடுக்காமல் விழித்திருந்து முழுமையான பணியை செய்ய வேண்டும். அடுத்தது வாக்குகளை எண்ணப்  போகிறார்கள் அதில் என்ன செய்யப் போகிறார்கள் என்று தெரியவில்லை. அதிலும் சொதப்பாமல் இருந்தால் நல்லது''என்றார்.