Skip to main content

அதிமுக ஆதரவு... பாமக எதிர்ப்பு... சந்தர்ப்பவாத அரசியல் ராமதாஸ் கடும் விமர்சனம்!

Published on 23/11/2019 | Edited on 23/11/2019

நேற்று மகாராஷ்டிரா தலைநகரான மும்பையில் காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் மற்றும் சிவசேனா ஆகிய கட்சிகளின் கூட்டணி தொடர்பான ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.இந்த கூட்டத்திற்குப் பிறகு சிவசேனா தலைவரான உத்தவ் தாக்கரே முதல்வர் பதவியை ஏற்க வேண்டும், அதேபோல் கூட்டணியின் தலைவராக அவரே இருக்க வேண்டும் என முடிவு எடுத்துள்ளதாக தகவல்கள் வெளிவந்தது. இந்த நிலையில் யாரும் எதிர்பார்க்காத நிலையில் தற்போது திடீரென மஹாராஷ்டிரா ஆளுநர் முன்பு மஹாராஷ்ட்ரா முதலமைச்சராக பாஜகவின் தேவேந்திர பட்னாவிஸும், துணை முதலமைச்சராக தேசியவாத காங்கிரஸின் அஜித் பவார் பதவி ஏற்றுக்கொண்டனர். 

 

 

pmk



இது தொடர்பாக பாமக நிறுவன தலைவர் டாக்டர் ராமதாஸ் தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்து ஒன்றை தெரிவித்துள்ளார். அதில், மராட்டியத்தில் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் ஒரு பிரிவுடன் இணைந்து ஆட்சியமைத்தது பாரதீய ஜனதா. காலை நாளிதழ் செய்திகளில் சிவசேனா ஆட்சி. காலை தொலைக்காட்சி செய்திகளில் பாஜக ஆட்சி. மராட்டியத்தில் சந்தர்ப்பவாத அரசியல் எவ்வளவு வேகமாக பயணிக்கிறது என்பதற்கு இதுவே சாட்சி!” என்று குறிப்பிட்டுள்ளார். அதே சமயத்தில் தமிழக துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் மராட்டிய மாநில முதல்வராக பொறுப்பேற்றிருக்கும் தேவேந்திர பட்னாவிசுக்கும், துணை முதல்வராக பொறுப்பேற்றிருக்கும் அஜித் பவாருக்கும் வாழ்த்துக்கள் தெரிவித்து உள்ளார். தமிழகத்தில் ஒரே கூட்டணியில் இருக்கும் அதிமுக, பாமக மகாராஷ்டிரா அரசியல் குறித்து இரண்டு விதமான கருத்து தெரிவித்துள்ளது அரசியல் வட்டாரங்களில் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. 
 

 

சார்ந்த செய்திகள்

 

Next Story

சாதிவாரி கணக்கெடுப்பு - இன்று தனித் தீர்மானம்!

Published on 26/06/2024 | Edited on 26/06/2024
Caste wise census - separate decision today

சென்னை தலைமைச் செயலகத்திலுள்ள சட்டமன்றப் பேரவை மண்டபத்தில் தமிழக சட்டசபை பேரவைக் கூட்டம் கடந்த 20 ஆம் தேதி (20.06.2024) தொடங்கியது. அப்போது மறைந்த முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்களுக்கு இரங்கல் தெரிவித்து மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது. மேலும் கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் குடித்து உயிரிழந்தவர்களுக்கு இரங்கல் தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து சட்டப்பேரவை கூட்டத் தொடரின் இரண்டாம் நாளில் (21.06.2024) இருந்து பல்வேறு துறைகளின் மீதான மானியக் கோரிக்கைகளின் மீது விவாதமும், வாக்கெடுப்பும் நடைபெற்று வருகிறது.

இத்தகைய சூழலில் தான் நேற்று முன்தினம் (24.06.2024) சட்டப்பேரவையில் பாமக சட்டமன்ற குழு தலைவர் ஜி.கே. மணி, “வன்னியர்களுக்கு 10.5% இட ஒதுக்கீடு வழங்க வேண்டும். சாதிவாரி கணக்கெடுப்பு எடுக்க வேண்டும்” எனக் கேள்வி எழுப்பினார். இதற்குப் பதிலளித்துப் பேசிய தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின், “இப்போது நீங்கள் (பாமக) எந்தக் கூட்டணியில் இருக்கிறீர்கள் என்பது உங்களுக்கு நன்றாகத் தெரியும். எனவே அந்தக் கூட்டணிக் கட்சியோடு பேசி, நாடு முழுவதும் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தி அதற்குப் பிறகுதான் இதை அமல்படுத்த முடியும் ஏற்கெனவே, பீகார் மாநிலத்திலே இதுபோன்று கணக்கெடுப்பு நடத்தப்பட்டு, அது நீதிமன்றத்தால் ரத்து செய்யப்பட்டிருக்கிறது. அதை இந்த நேரத்தில் பாமக சட்டமன்ற உறுப்பினர் ஜி.கே. மணிக்கு நினைவுபடுத்த விரும்புகிறேன். 

Caste wise census - separate decision today

ஜி.கே. மணி சாதிவாரி கணக்கெடுப்பு நடத்திட வேண்டுமெனப் பேசினார். அதற்கு அமைச்சர்கள் உரிய விளக்கங்களை அளித்திருக்கிறார்கள். இந்தப் பிரச்சினைக்கு ஒரு நல்ல தீர்வு காண வேண்டுமென்று சொன்னால், சாதிவாரியான கணக்கெடுப்பு, மக்கள் தொகை கணக்கெடுப்புடன் மத்திய அரசால் விரைந்து எடுக்கப்பட வேண்டும். அதற்காக இந்தச் சட்டமன்றக் கூட்டத் தொடரிலேயே ஒரு தீர்மானத்தைக் கொண்டுவரலாம் என்று முடிவு செய்திருக்கிறோம். அதற்கு ஜி.கே. மணி ஆதரவு தரவேண்டுமென்று கேட்டுக் கொள்கிறேன்” எனத் தெரிவித்திருந்தார்.

இதனையடுத்து சட்டப்பேரவையில் பாமக வெளிநடப்பு செய்தது. மேலும் இது தொடர்பாகச் சட்டப்பேரவை வளாகத்தில் பாமக சட்டமன்றக் குழு தலைவர் ஜி.கே.மணி செய்தியாளர்களுக்குப் பேட்டி அளித்தார். அப்போது அவர் பேசுகையில், “நிலுவையில் உள்ள வன்னியர் 10.5% உள் ஒதுக்கீடு பற்றி தமிழ்நாடு சட்டப்பேரவையில் விவாதித்தோம். அப்போது சாதிவாரி கணக்கெடுப்பு படி தான் உள் ஒதுக்கீடு வழங்குவோம் எனத் தமிழ்நாடு அரசு கூறுகிறது. சாதிவாரி கணக்கெடுப்பும், உள் ஒதுக்கீடும் தனித்தனி பிரச்சனை. ஏற்கெனவே அருந்ததியர்கள், இஸ்லாமியர்களுக்குத் தமிழக அரசு உள் ஒதுக்கீடு வழங்கியுள்ளது. உள் ஒதுக்கீடு வழங்க மாநில அரசுக்கு அதிகாரம் உள்ளது. 10.5% இட ஒதுக்கீட்டுக்கும், சாதிவாரி கணக்கெடுப்புக்கும் தொடர்பில்லை. சாதிவாரி கணக்கெடுப்பு குறித்துப் பேச சட்டப்பேரவையில் அனுமதி மறுக்கப்படுகிறது” எனக் குறிப்பிட்டிருந்தார். 

Caste wise census - separate decision today

இந்நிலையில் நாடு முழுவதும் சாதிவாரி கணக்கெடுப்பை உடனடியாக நடத்த மத்திய அரசை வலியுறுத்தி சட்டப்பேரவையில் இன்று (26.06.2024) தனித் தீர்மானத்தைத் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கொண்டு வருகிறார். மக்கள்தொகை கணக்கெடுப்புடன், சாதிவாரி கணக்கெடுப்பைச் சேர்த்து நடத்த வேண்டும் எனத் தீர்மானம் கொண்டுவரப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது. 

Next Story

'இந்திரா காந்தி சிலையின் சர்ச்சைகளும் சென்டிமென்ட்களும்'- கேள்விகளை அடுக்கிய கராத்தே தியாகராஜன்  

Published on 25/06/2024 | Edited on 25/06/2024
 'Indira Gandhi Statue Controversies and Sentiments' - Karate Thiagarajan Asks Questions

சென்னையில் இந்திரா காந்திக்கு சிலையை அமைக்கப்படும் என சட்டப்பேரவையில் அமைச்சர் சுவாமிநாதன் அறிவித்திருக்கும் நிலையில், இந்திரா காந்தி சிலை அமைப்பதில் சர்ச்சைகள் மற்றும் சென்டிமென்ட்கள் இருப்பதாக பாஜக நிர்வாகியான கராத்தே தியாகராஜன் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், 'தமிழக சட்டமன்றத்தில் 24 ஆம் தேதி செய்தித்துறை மானியக் கோரிக்கைகள் மீதான விவாதத்துக்கு பதிலளித்து பேசிய அமைச்சர் சுவாமிநாதன் சென்னையில் 50 லட்சம் ரூபாய் செலவில் இந்திரா காந்திக்கு சிலை அமைக்கப்படும் என்று ஒரு புதிய அறிவிப்பை வெளியிட்டார். இதனை தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப் பெருந்தகை வரவேற்பதாக தெரிவித்திருக்கிறார். காங்கிரஸ் கட்சியும் இதில் மகிழ்ந்திருப்பதாக தெரிகிறது. ஆனால் இந்தியாவில் எமர்ஜென்சியை இந்திரா காந்தி பிரகடனப்படுத்திய நாள் ஜூன் 25. அந்த நெருக்கடி நிலை காலத்தில் தமிழகத்தில் அதிகம் பாதிக்கப்பட்டது திமுக தான். அப்படி இருக்கும் நிலையில் இந்திரா காந்திக்கு திமுக அரசின் சார்பில் சிலையா/ என்று திமுகவினர் மனதில் எதிரொலிக்கிறது.

அதேபோல் இந்திராவின் எமர்ஜென்சியை நினைவுபடுத்துவதற்காகத் தான் அவருக்கு சிலை அமைக்கும் அறிவிப்பை ஜூன் 24ஆம் தேதி திமுக அரசு அறிவித்திருக்கிறதா என்று உணர்வுள்ள காங்கிரஸ்காரர்கள் கேள்வி எழுப்புகின்றனர். இதெல்லாம் ஒருபுறம் இருந்தாலும் இந்திரா காந்தி சிலையை சுற்றி சர்ச்சைகளும், சென்டிமெண்டுகளும் சூழ்ந்து இருப்பது திமுக தலைமைக்கு தெரியுமா? தெரியாதா? என்பது தெரியவில்லை.

அகில இந்திய அமிதாப்பச்சன் ரசிகர் மன்ற தலைவராக இருந்த வழக்கறிஞர் ஏசைய்யா என்பவர் இந்திரா காந்திக்கு சென்னையில் சிலை வைக்க சென்னை மாநகராட்சி நிர்வாகத்திடம் 1986 ஆம் ஆண்டு அனுமதி கோரி இருந்தார். ஆனால் அவருக்கு அனுமதி மறுக்கப்படுகிறது. இதனை எதிர்த்து அமிதாப்பச்சன் ரசிகர் மன்றத்தின் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு போட்டு இந்திரா காந்திக்கு சிலை அமைக்க அனுமதி பெறுகிறார் ஏசைய்யா. அமிதாப்பச்சன் ரசிகர் மன்றத்திற்கு சிலை வைக்க அனுமதி கிடைக்கிறது. சிலை அமைக்கும் முயற்சிகள் தொடங்குகின்றன. இந்திரா காந்திக்கு சிலை அமைக்கும் முயற்சிகள் எப்போது தொடங்கியதோ அப்போதிலிருந்தே தேசிய அரசியலில் ஏறுமுகமாக இருந்த அமிதாப்பின் அரசியல் வாழ்க்கை இறங்கு முகமானது. தொடர் சரிவுகளை சந்தித்தார். ஹிந்தி சூப்பர் ஸ்டார் அமிதாப்பச்சன் படிப்படியாக அரசியலில் இருந்து விலகவும் நேர்ந்தது. சிலை அமைக்கும் முயற்சிகளும் முறிந்தது.

இதன் பிறகு தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவராக இருந்த வாழப்பாடி ராமமூர்த்தி சந்தித்து இந்திரா காந்திக்கு சிலை அமைப்பது குறித்து விசாரித்தார் ஏசைய்யா. அப்போது அமிதாப்பச்சன் ரசிகர் மன்றத்தின் சார்பில் பெறப்பட்ட அனுமதியை தமிழக காங்கிரஸ் கமிட்டி பெயருக்கு மாற்றி உத்தரவினை உயர்நீதிமன்றத்தில் பெற்றுக் கொடு என்று ஏசைய்யாவிடம் தெரிவித்தார் வாழப்பாடி ராமமூர்த்தி. அதன்படி அனுமதி மாற்றி பெறப்பட்டு அதனை வாழப்பாடியிடம் கொடுத்தார் ஏசைய்யா. சிலை அமைக்கும் முயற்சியை வாழப்பாடி எடுத்த மூன்றாவது நாள் காங்கிரஸ் கமிட்டி தலைவர் பதவி அவருக்கு பறிபோனது. இருந்தாலும் அன்றைய தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் கவனத்துக்கு இந்திரா சிலை குறித்த விஷயத்தை வாழப்பாடி ராமமூர்த்தி கொண்டு சென்ற போது இந்திராவுக்கு சிலை வேண்டாம் ராஜீவ் காந்திக்கு சிலை வைக்கலாம் என்று புதிய யோசனை சொன்னார் ஜெயலலிதா.

அதாவது 1991-ல் தேர்தலுக்கு முன்பு ராஜீவ் காந்தி கடைசியாக மாலை அணிவித்தது ஸ்ரீபெரும்புதூரில் இருக்கும் இந்திரா காந்தி சிலைக்கு தான். சென்டிமெண்டாக இது சரியில்லை என ஜெயலலிதாவுக்கு அப்போது சொல்லப்பட்டிருப்பதால் அதை மனதில் வைத்துக் கொண்டுதான் இந்திராவுக்கு சிலை வேண்டாம் என வாழப்பாடியிடம் ஜெயலலிதா சொன்னதன் ரகசியம்.

இதையடுத்து இந்திரா காந்தியை கைவிட்டு விட்டு சென்னையில் சைதாப்பேட்டை சின்னமலை பகுதியில் ராஜீவ் காந்திக்கு சிலை அமைக்கப்பட்டது. வாழப்பாடி ராமமூர்த்தி தலைமையில் ஜெயலலிதாவின் முன்னிலையில் ராஜீவ் காந்தி சிலையை திறந்து வைத்தார் பிரதமர் நரசிம்மராவ். இந்நிலையில் திமுக -தமாகா கூட்டணி 1996-ல் அமோக வெற்றி பெற்றது. தாமாக தலைவர் மூப்பனாரை சந்தித்து இந்திரா காந்தி சிலை அமைக்கப்படாமல் இருப்பதை சுட்டிக்காட்டி பேசினார் ஏசைய்யா. இந்திரா மீது பற்றுதல் கொண்ட மூப்பனார் சிலை அமைக்கவும் அதற்கான செலவுகளையும் ஏற்றுக் கொண்டார். உடனே சென்னை அண்ணா சாலை ஸ்பென்சர் சந்திப்பில் சிலையும் அமையும் இடத்தை பார்வையிட்டார்/மேலும் புகழ்பெற்ற சிற்பி மணிநாகப்பாவிடம் சிலை வடிவமைக்கும் பணிகளை துவக்குமாறு அறிவுறுத்தியதுடன் முன்பணமாக மூன்று லட்சம் கொடுத்தார் மூப்பனார்.

சிலை அமைக்கும் பணி துவங்கியதுமே மூப்பனார் பிரச்சனைகளை சந்தித்தார். மறைந்தும் போனார். இந்திராவுக்கு சிலை அமைக்கும் பணி துவக்கத்திலேயே முற்றுப்பெற்றது ஏசைய்யாவும் இறந்து போனார். ஆக இந்திரா காந்திக்கு சிலை அமைக்கும் எந்த முயற்சியும் வெற்றி பெறவில்லை. இப்படி இந்திராவுக்கு சிலை எடுக்க முயற்சித்த அரசியல் தலைவர்களின் செல்வாக்கு சரிந்து போனதாக சிலையை சுற்றி சர்ச்சைகளும் செண்டிமெண்டுகளும் அப்போதே உலா வந்தன. காங்கிரஸ் கட்சியை சேர்ந்த நீண்ட கால மூத்த அரசியல் தலைவர்கள் பலருக்கும் இந்த செண்டிமெண்ட் விவகாரம் தெரியும்.

இந்த விவகாரம் எல்லாம் தெரிந்து தான் பெரியாரின் பேரன் என்று வர்ணிக்கப்படுகின்ற ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் உட்பட காங்கிரஸ் தலைவர் யாரும் இந்திராவுக்கு சிலை அமைக்க முயற்சி எடுத்ததே இல்லை. இப்படிப்பட்ட சூழலில் தற்போது இந்திராவுக்கு சிலை அமைக்கப்படும் என்று திமுக அரசு சட்டமன்றத்தில் அறிவித்துள்ளது. அதனை காங்கிரஸ் தலைவர் செல்வ பெருந்தகை வரவேற்கிறார்.

புரட்சி பாரதம், புதிய தமிழகம், விடுதலை சிறுத்தைகள், பகுஜன் சமாஜ் கட்சி என பல்வேறு கட்சிகளுக்கு சென்று விட்டு காங்கிரஸ் கட்சியில் தஞ்சமடைந்து தலைவராக வந்துவிட்ட செல்ல பெருந்தகைக்கு இந்த வரலாறு தெரியாமல் இருக்கலாம். அல்லது தெரியாமல் போகலாம். தெரிந்திருக்கவும் நியாயம் இல்லை. ஆனால் தமிழகம் பெரியார் மண் எனச் சொல்லும் திராவிட இயக்கத்தினருக்கும், பெரியாரின் பேரன் என சொல்லிக் கொள்ளும் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவனுக்கும், காங்கிரசின் மூத்த தலைவர்களுக்கும் இந்த சர்ச்சைகளும், சென்டிமென்ட்டும் நன்றாகவே தெரியும்.

அப்படி இருக்கும் பட்சத்தில் இந்திராகாந்தி சிலை அறிவிப்பை எப்படி திமுக அரசு அறிவித்தது என்று தெரியவில்லை. இந்த சென்டிமென்ட் விவகாரத்தை அறிவித்துள்ள திமுகவுக்கு நெருக்கமான காங்கிரசைச் சேர்ந்த பீட்டர் அல்போன்ஸ்,, கோபண்ணா போன்றோர் இதை திமுக தலைமையின் கவனத்திற்கு கொண்டு செல்வார்களா? இதுவரை தமிழக காங்கிரஸ் தலைவர்களாக இருந்த யாரும் சத்தியமூர்த்தி பவனில் குறைந்தபட்சம் ஒரு மார்பளவில் கூட இந்திராவிற்கு சிலையை ஏன் அமைக்கவில்லை? மேலும் அமைச்சர் சாமிநாதனும் செல்லப்பெருந்தவையும் சிலை அமையும் அண்ணா சாலை பென்சில் பகுதி பார்வையிட்டு அதன் புகைப்படத்தை வெளியிடுமாறு கேட்டுக்கொள்கிறேன்' என தெரிவித்துள்ளார்.