Skip to main content

இனிமேல் சென்னை நமக்குச் சரிப்பட்டு வருமா? தீவிர ஆலோசனையில் கோகுல இந்திரா... திமுக, அதிமுகவின் உட்கட்சி அரசியல் நிலவரம்!

Published on 20/06/2020 | Edited on 20/06/2020

 

admk

 

சீனியர் சுப.தங்கவேல் கோலோச்சிய காலம் வரை ராமநாதபுர மாவட்ட தி.மு.க.வில் அவரை நேரடியாக எதிர்த்தவர்களை விரல் விட்டு எண்ணிவிடலாம். சுப.த.மகன் திவாகரன் மா.செ.வாகி, 2016 தேர்தலில் தோற்றதும் காட்சிகள் மாறின. மா.செ. பதவியைக் கைப்பற்ற பெருநாழி போஸ், மாஜி எம்.பி. பவானி ராஜேந்திரன், மாஜி. எம்.எல்.ஏ. முருகவேல் ஆகியோர் முட்டி மோதினார்கள்.

 

சபரீசன் நெட்வொர்க் மூலம் மாவட்ட பொறுப்பாளர் ஆனார் மறைந்த காதர்பாட்ஷா (எ) வெள்ளைச்சாமியின் மகன் முத்துராமலிங்கம். அப்செட்டான திவாகரன் ஆதரவாளர்கள், முத்துராமலிங்கத்திற்கு எதிராக குரல் எழுப்பினார்கள். இருதரப்பிலும் தலைமைக்கு மாறி மாறி புகார் அனுப்பப்பட்டது. இந்த நேரத்தில்தான் உள்ளாட்சித் தேர்தல் வந்தது. திவாகரன் ஆதரவாளர்கள் மெல்ல மெல்ல முத்துராமலிங்கம் முகாமிற்குள் வர ஆரம்பித்தனர்.

 

dmk

 

தனது மனைவி பார்வதி கவுன்சிலராகும் வரை திவாகரன் ஆதரவாளராக இருந்த சாயல்குடி ஒ.செ. ஜெயபால், மனைவியைக் கடலாடி ஒன்றிய சேர்மனாக்கும் ஆசையில் முத்துராமலிங்கம் முகாமிற்குத் தாவினார். கட்சியினரின் உள்குத்துகளால் கடலாடி அ.தி.மு.க. ஒ.செ. முனியசாமி பாண்டியனின் மகள் முத்துலட்சுமியிடம் பரிதாபமாக தோற்றுப்போனார் பார்வதி. இதைப்போல் இராமநாதபுரம் ஒன்றிய சேர்மன் ரேஸில் குதித்தார் கட்சியின் ஒ.செ.வும் சுப.த.வின் நெருங்கிய உறவினருமான கே.டி.பிரபாகர். கட்சியின் அதிகாரப்பூர்வ வேட்பாளராக தனது ஆதரவாளரை களமிறக்கினார் முத்துராமலிங்கம். ஆனால் பெரும்பான்மை கவுன்சிலர்களின் ஆதரவுடன் பிரபாகரன் ஒன்றிய சேர்மனாகிவிட்டார். இப்போது முத்துராமலிங்கத்தின் ஆதரவாளராகவும் மாறிவிட்டார். இந்த முட்டல் மோதல்களுக்கிடையேதான் கரோனா ஊரடங்கு வந்தது.

 

"ஒன்றிணைவோம் வா" திட்டத்தைச் செயல்படுத்தினார் கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின். ஆனால் இராமநாதபுரம் மாவட்டத்திலோ, "விலகி நிற்போம் போ' என்ற ரீதியில் இரு கோஷ்டிகளும் தனித்தனியாக நிவாரண உதவிகளை வழங்க ஆரம்பித்தனர். இதே ரீதியில்தான் கலைஞர் பிறந்தநாள் நிகழ்ச்சிகளும் நடந்தன.

 

கடலாடி தாலுகா நீதிமன்ற வக்கீல்கள் சங்க செயலாளர் போ.பூமுருகனிடம் கேட்டபோது, "துடிப்பான இளைஞர் முத்துராமலிங்கம், மாவட்ட பொறுப்பாளர் ஆனது இங்கே பலபேருக்கு பிடிக்கல. அதனால் அவரைப் பற்றி குற்றம் சொல்லிக்கிட்டேதான் இருப்பாங்க. கட்சிக்காரர்களை அரவணைத்து அவர்களுக்குத் தேவையான உதவிகளையும் செய்றதாலத்தான் மாவட்டத்தின் பெரும்பான்மை ஒ.செ.க்கள் முத்துராமலிங்கம் பின்னால் நிற்கிறார்கள்'' என்றார். ஆனால் இதற்கு நேர் எதிரான குற்றச்சாட்டுகளை வைக்கிறார் திவாகரனின் ஆதரவாளரான நயினார்கோயில் மாஜி ஒ.செ. வேலாயுதம். எல்லாவற்றுக்கும் விளக்கம்பெற மா.பொ. முத்துராமலிங்கத்தைத் தொடர்புகொண்டபோது நமது அழைப்பை அவர் ஏற்கவில்லை. எஸ்.எம்.எஸ். அனுப்பியும் பதில் இல்லை.

 

dmk

 

சுப.த.திவாகரனை தொடர்புகொண்டபோது, "அவருடன் சேர்ந்து செயல்பட நான் தயார்தான். ஆனால் அவர்தான் திட்டமிட்டே என்னைப் புறக்கணிக்கிறார். அதற்காக தலைவர் பிறந்தநாளையும், நிவாரண உதவி நிகழ்வையும் நடத்தாமல் இருக்க முடியுமா?'' என்றார்.

 

சீட் கணக்குகள்!

 

மதுரையில் பிரம்மாண்ட பொதுக்கூட்டம் நடத்தி, மு.க.ஸ்டாலின் முன்னிலையில் தி.மு.க.வில் இணைந்தார் மாஜி அ.தி.மு.க. வி.ஐ.பி.யான ராஜ.கண்ணப்பன். மதுரை அல்லது இராமநாதபுரம் மாவட்டத்தில் ஏதேனும் ஒரு தொகுதி என்பது தான் அவரது டீல். மதுரை கிழக்கு தொகுதி பக்கம் அவர் பார்வை திரும்புவதை அறிந்து பதறிய மா.செ.வும் எம்.எல்.ஏ.வுமான மூர்த்தி, பக்குவமாகப் பேசி ராஜகண்ணப்பனின் பார்வையை இராமநாதபுரம் பக்கம் திருப்பிவிட்டார். திருவாடானை அல்லது முதுகுளத்தூர் தொகுதியைக் கைப்பற்றும் கோதாவில் இறங்கியுள்ளார் கண்ணப்பன். அதிலும் யாதவர்கள் மெஜாரிட்டியாக உள்ள முதுகுளத்தூர் தொகுதியை பெட்டர் சாய்ஸாக நினைக்கிறாராம். இதனால் தி.மு.க. மா.பொ. முத்துராமலிங்கம், திகிலடைவதைவிட… அதிக திகிலானவர், தொகுதியின் தற்போதைய காங்கிரஸ் எம்.எல்.ஏ.வான மலேசியா பாண்டியன். எடப்பாடி புகழ்பாடி வந்தவர் இப்போது கலைஞர், ஸ்டாலின், முத்துராமலிங்கம் படங்களை அச்சிட்ட ஸ்வீட் பாக்ஸ்களை தொகுதிக்குள் கொடுக்க ஆரம்பித்திருக்கிறார். இந்த ஐடியாவை கொடுத்தது நவாஸ்கனி எம்.பி.தானாம்.

 

இது அ.தி.மு.க. ஏரியா!

 

மணிகண்டன் மந்திரியாக இருந்தவரை அடக்கி வாசித்த மா.செ. முனியசாமி, 2016 தேர்தலில் மலேசிய பாண்டியனிடம் தோற்ற தனது மனைவி கீர்த்திகாவை, அதே தொகுதியின் எம்.எல்.ஏ. வாக்கிட வேண்டும் என்ற லட்சியத்துடன் களத்தில் குதித்துவிட்டார்.

 

தொகுதியில் ரேஷன் கார்டு உள்ள அனைவருக்கும் கரோனா நிவாரணப் பைகளை சகட்டு மேனிக்கு சப்ளை பண்ணிவிட்டார் முனியசாமி. உஷாரான எதிர்கோஷ்டியினர், இம்மாவட்ட கட்சிப் பஞ்சாயத்துகளை கவனிக்கும் அமைச்சர் ஆர்.பி.உதயகுமாரிடம் சரண்டராகிவிட்டனர். அண்ணே நீங்க முதுகுளத்தூர் தொகுதியில் நில்லுங் கண்ணே என அவரை உசுப்பேத்தி வருகின்றனர்.

 

http://onelink.to/nknapp

 

இனிமேல் சென்னை நமக்குச் சரிப்பட்டு வருமா? என்ற யோசனையில் இருக்கும் கோகுல இந்திராவும், முதுகுளத்தூரை நோக்கிப் பார்வையைத் திருப்பியுள்ளாராம். ஆளும் கட்சியிலும் சரி, எதிர்க்கட்சியிலும் சரி… கரோனாவிலும் ஓயவில்லை கோஷ்டிகளும் கணக்குகளும்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

நீர் மோர் பந்தல் திறப்பதில் கோஷ்டி பூசல்;  மாறி மாறி புகாரளிக்கும் அதிமுக!

Published on 27/04/2024 | Edited on 27/04/2024
Group fight in opening of Neer Mor Pandal; AIADMK reports alternately

அண்மையில் நடைபெற்ற அதிமுக நிர்வாகிகள் கூட்டத்தில் கலந்துகொண்ட எடப்பாடி பழனிசாமி, கோடைகாலம் என்பதால் வெப்பத்தை தணிப்பதற்காக நீர் மோர் பந்தல் அமைக்க வேண்டும் என உத்தரவிட்டிருந்தார். அதன்படி அதிமுகவினர் பல இடங்களிலும் நீர் மோர் பந்தல்களை அமைத்து வருகின்றனர். இந்நிலையில் கடலூரில் நீர் மோர் பந்தல் அமைப்பதில் இரு தரப்பினருக்கிடையே ஏற்பட்ட மோதல் போக்கு  காரணமாக மாறி மாறி புகார் கொடுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

கடலூர் மாவட்டம் திருப்பாதிரிபுலியூர், மஞ்சக்குப்பம் மற்றும் முதுநகர் பகுதிகளில் அதிமுக மாநில எம்ஜிஆர் இளைஞரணி துணைச் செயலாளர் கார்த்திகேயன் தலைமையில் அவருடைய ஆதரவாளர்கள் நீர் மோர் பந்தல் திறக்க ஏற்பாடு செய்துள்ளனர். இந்நிலையில் முன்னாள் தொழில்துறை அமைச்சரும், அதிமுக மாவட்ட செயலாளருமான எம்.சி.சம்பத், அனுமதியின்றி நீர்மோர் பந்தல் அமைக்க அனுமதி தந்தால் சட்ட ஒழுங்கு பிரச்சனை ஏற்படும் என காவல்துறையில் வாய்மொழி புகார் அளித்ததாகவும், அதிமுக சார்பில் மாவட்டச் செயலாளர்கள் யாரை பரிந்துரை செய்கிறார்களோ அவர்கள் தான் நீர் மோர் பந்தலை திறக்க வேண்டும் எனவும் கூறப்பட்டது.

இந்நிலையில் அனுமதியின்றி நீர் மோர் பந்தல் அமைப்பதற்காக செய்யப்பட்ட அனைத்து ஏற்பாடுகளையும் காவல்துறையினர் அப்புறப்படுத்தினர். அதேநேரம் நீர் மோர் பந்தல் அமைக்க அனுமதிகோரி அதிமுக மாநில எம்ஜிஆர் அணி இளைஞரணி செயலாளர் கார்த்திகேயன் அவருடைய ஆதரவாளர்களுடன் கடலூர் கோட்டாட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தார். நீர் மோர் பந்தல் அமைக்க அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி எங்களை அறிவுறுத்தி உள்ளார். அதன்படி நாங்கள் அதை செய்து வருகிறோம் என அனுமதி கேட்டு மனு அளிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு மனு கொடுக்கப்பட்ட சிறிது நேரத்திலேயே அதிமுக மாவட்ட அவைத்தலைவர் குமார் தலைமையில் கடலூர் மாநகராட்சிக்குட்பட்ட பல பகுதிகளில் நீர் மோர் பந்தல் அமைக்க அனுமதி கேட்டு மனு அளிக்கப்பட்டுள்ளது. அந்த மனுவில், அதிமுகவின் மாவட்டச் செயலாளர் எம்.சி.சம்பத் யாரை அனுமதிக்கிறாரோ அவர்களுக்கு மட்டும்தான் நீர் மோர் பந்தல் அமைக்க அனுமதி அளிக்க வேண்டும். இல்லை என்றால் சட்ட ஒழுங்கு பிரச்சனைகள் ஏற்பட வாய்ப்புள்ளது என தெரிவித்துள்ளனர்.

இப்படி கடலூரில் நீர் மோர் பந்தல் அமைப்பு தொடர்பாக அதிமுகவினர் இரு கோஷ்டியாக மாறி மாறி மனு அளித்துள்ளது அங்கு பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

Next Story

'மோடியா? ராகுலா?'-செல்லூர் ராஜு சொன்ன அசத்தல் பதில்!

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
 Modi? Rahul?-Sellur Raju's wacky answer

உலகின் மிகப்பெரிய ஜனநாயக திருவிழாவான இந்திய நாட்டின் 18ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி வாக்குப்பதிவானது முதற்கட்டமாக கடந்த ஏப்ரல் 19 ஆம் தேதி தொடங்கி வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக நடைபெற உள்ளது. தமிழ்நாடு உள்ளிட்ட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு கடந்த 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்று முடிந்தது. இதன் ஒரு பகுதியாக நாடு முழுவதும் 13 மாநிலங்களில் உள்ள 87 மக்களவைத் தொகுதிகளில் இன்று (26.04.2024) 2ஆம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் மதுரையில் செய்தியாளர்களைச் சந்தித்த முன்னாள் அதிமுக அமைச்சர் செல்லூர் ராஜூ செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது 'மத்தியில் மோடி தலைமையிலான ஆட்சி வருமா? அல்லது ராகுல் காந்தி தலைமையிலான ஆட்சி வருமா?' எனக் கேள்வி எழுப்பினர். அதற்குப் பதிலளித்த அவர், ''எங்களைப் பொறுத்தவரை யார் மத்தியில் ஆட்சிக்கு வந்தாலும் சரி, தமிழகத்துக்கு நல்லது செய்யக்கூடிய யார் வந்தாலும் வரவேற்போம். அது ராகுலாக இருந்தாலும் சரி, மோடியாக இருந்தாலும் சரி, எங்கள் தமிழகத்திற்கு பாதகமற்ற முறையில் யார் ஆட்சி செய்தாலும் அதை அதிமுக வரவேற்கும் என எங்கள் பொதுச்செயலாளரே சொல்லிவிட்டார்.

கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் திமுக சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்ட 39 நாடாளுமன்ற உறுப்பினர்கள் மாதிரி எங்களுடைய நாடாளுமன்ற உறுப்பினர்கள் இருக்க மாட்டார்கள். இந்தியா மதச்சார்பற்ற நாடு. இங்கு ஒவ்வொரு மதத்தையும் குறி வைத்து மோடி போன்ற பெரிய பதவியில் இருப்பவர்கள் பேசுவது சரியில்லை. தமிழ்நாட்டைப் பொறுத்தவரை எல்லாரையும் தூக்கி கொண்டாடுகிறார்கள் மக்கள். மக்களுடைய மனநிலை மக்கள் தீர்ப்பே மகேசன் தீர்ப்பு.

நீங்க பாருங்க எந்தக் கட்சியுமே சொல்லவில்லை நீர் மோர் பந்தல் அமையுங்கள் என எந்த கட்சியின் தலைவராவது அறிவித்துள்ளார்களா? எங்கள் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மட்டுமே தொண்டர்களுக்கு உத்தரவிட்டுள்ளார். உடனடியாக தங்களுடைய தொண்டர்கள் அதை நிறைவேற்றுவார்கள் என்ற அடிப்படையில்தான் அவர் சொல்லியுள்ளார். எல்லா கட்சிகளும் தேர்தலைக் கருத்தில் கொண்டுதான் இயங்குகின்றதே ஒழிய பொதுநோக்கத்துடன் எந்த அரசியல் இயக்கங்களும் இயங்கவில்லை. அதிமுக மட்டும் தான் மக்கள் சேவையே மகேசன் சேவை என்ற அடிப்படையில் செயல்பட்டு வருகிறது'' என்றார்.