Skip to main content

விஜய் வீட்டில் நடந்த ரெய்ட்... விஜய்க்கு நெருக்கடி கொடுக்க காரணம்... பாஜக போட்ட அதிரடி திட்டம்! 

Published on 14/03/2020 | Edited on 14/03/2020

எல்லோருடைய கவனத்தையும் 12-ந் தேதி தன் பக்கம் திருப்பிய ரஜினி, தமிழகத்தில் அரசியல் எழுச்சி வரட்டும். அது வரை காத்திருக்கிறேன்னு அறிவித்து, பல்வேறு விமர்சனங்களை அரசியல் வட்டாரங்களில் ஏற்படுத்தினார். அதேபோல் அவர் எந்த லீலா பேலஸ் ஓட்டலில் இந்த அறிவிப்பை வெளியிட்டாரோ, அதே ஓட்டலில் தன் "மாஸ்டர்' பட ஆடியோ லாஞ்சை நடத்தும் ஆயத்தத்தில் இருந்த நடிகர் விஜய் வீட்டில்... அதே நேரத்தில் ரெய்டு நடத்தப்பட்டிருக்கிறது என்கின்றனர். 

ஏற்கனவே கடந்த மாதம் 6-ந் தேதி நடிகர் விஜய்யைக் குறிவைத்து, அவர் வீட்டிலும் மதுரை ஃபைனான்ஸியர் அன்புச்செழியன் வீட்டிலும், தயாரிப்பாளர் கல்பாத்தி அகோரம் அலுவலகத்திலும் ரெய்டுகள் நடத்தப்பட்டன. அப்போது அன்புச்செழியன் வீட்டில் மட்டும் 77 கோடி ரூபாய் அளவுக்குக் கறுப்புப் பணம் பிடிபட்டது. அது தமிழக அரசியல் மேலிடங்களின் பணம் என்பதால் பெரிதாக எந்த நடவடிக்கையும் இல்லை. விஜய் வீட்டில், அவர் வாங்கிய ஊதியத்துக்கெல்லாம் உரிய கணக்கை சரியாக வைத்துள்ளார். அப்போது அங்கிருந்து அபவுட்டர்ன் ஆன வருமான வரித்துறை அதிகாரிகள், மறுபடியும் 12-ந் தேதி விஜய் வீட்டில் ஆய்வு நடத்தினர்.
 

vijay



மேலும் முதலில் விஜய் நடித்த  "பிகில்' படத்தைக் குறிவைத்தவர்கள். தற்போது அவரோட "மாஸ்டர்' படத்தைக் குறிவைத்திருப்பது பெரும் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. அதோடு, நடிகர் ரஜினி மீது போட்ட வருமானவரித்துறை வழக்கை, தானாக அந்தத் துறை அதிகாரிகளே வாபஸ் வாங்கி விட்டார்கள். காரணம், அவர் தேசிய சட்டத் திருத்த மசோ தாவுக்கு ஆதரவாகக் குரல் கொடுத்து டெல்லியின் மனசைக் குளிரவைத்தார் என்கின்றனர். இது போன்ற எந்த முயற்சியையும் விஜய் மேற்கொள்ளவில்லை. அவருக்கு சிறு பான்மை மக்கள் மத்தியில் இருக்கும் இமேஜும், இளைஞர்கள் மத்தியில் இருக்கும் பலமான ஆதரவும் பா.ஜ.க.வின் கண்ணை உறுத்துவதாக சொல்லப்படுகிறது. சிறுபான்மைச் சமூகத்தைச் சேர்ந்த அவர், காங்கிரஸோடு தொடர்பில் இருப்பதாகவும் டெல்லிக்குத் தகவல் போயிருப்பதாக சொல்லப்படுகிறது. ஒருவேளை சட்ட மன்றத் தேர்தல் நேரத்தில் அவர் காங்கிரஸுக்கு ஆதரவாகவோ, அதன் கூட்டணித் தலைமையான தி.மு.க.வுக்கு ஆதரவாகவோ குரல்கொடுத்தால் என்ன பண்றது என்று நினைத்து தான், முன்னதாகவே அவரை டெல்லி முடக்கிவைக்க நினைப்பதாக சொல்லப்படுகிறது.

மேலும் மாஸ்டர் படத்தின் இணைத் தயாரிப்பாளரான லலித் ஜெயின் வீட்டில் முதல்நாள் ரெய்டை நடத்திவிட்டு, மறுநாள் விஜய்யின் பனையூர் வீட்டை ஆய்வு செய்தார்கள். வருமான வரித்துறை அதிகாரிகளோ, "மாஸ்டர்' படத்தின் இணைத் தயாரிப்பாளர் என்பதால் அவரை சோதனை செய்தோம். விஜய் வீட்டில் ரெய்டு நடத்தியது, ஒரு வெரிபிகேஷனுக்காகத்தான் என்று சொல்கிறார்கள். விஜய் மட்டும் மாஸ்டர் ஆடியோ ரிலீஸில், குடியுரிமை சட்ட மசோதாவையும், தேசிய குடிமக்கள் பதிவேட்டையும் ஆதரித்து  பேசட்டும். நிலவரம் மாறி விடும் என்று பேசுகின்றனர். 

 

சார்ந்த செய்திகள்

Next Story

“இந்தியா கூட்டணியிடம் பா.ஜ.க தோல்வி பெறும்” - பா.ஜ.க அமைச்சரின் வைரல் பேச்சு

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
BJP minister's viral speech BJP will lose to India alliance in rajasthan

7 கட்டங்களாக நாடு முழுவதும் மக்களவைத் தேர்தல் நடைபெறுகிறது. கடந்த ஏப்ரல் 19ஆம் தேதி முதற்கட்ட வாக்குப்பதிவு 102 தொகுதிகளில் முடிந்துள்ளது. 2வது கட்ட வாக்குப்பதிவு, ராஜஸ்தான் உள்ளிட்ட 88 தொகுதிகளில் வரும் ஏப்ரல் 26ஆம் தேதி நடைபெற உள்ளது. இதற்கான தேர்தல் பிரச்சாரம் சூடுபிடித்துள்ளது.

முன்னதாக, ராஜஸ்தானில் மொத்தமுள்ள 25 மக்களவைத் தொகுதிகளில் 12 தொகுதிகளுக்கு முதற்கட்ட வாக்குப்பதிவு கடந்த ஏப்ரல் 19ஆம் தேதி நடைபெற்றது. அடுத்து உள்ள 13 தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு இரண்டாம் கட்டமாக ஏப்ரல் 26 ஆம் தேதி நடைபெற உள்ளது. இதற்கான இறுதிக்கட்ட தேர்தல் பிரச்சாரம் நேற்று மாலை (24-04-24) முடிவடைந்தது.

இந்த நிலையில், இந்தியா கூட்டணியிடம் பா.ஜ.க தோல்வியடையும் என்று பா.ஜ.க அமைச்சர் ஒருவர் பேசியது தொடர்பான வீடியோ ஒன்று சமூகவலைத்தளங்களில் வெளியாகி பா.ஜ.க தரப்பில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

BJP minister's viral speech BJP will lose to India alliance in rajasthan

ராஜஸ்தான் மாநிலத்தில் முதல்வர் பஜன் லால் ஷர்மா தலைமையில் பா.ஜ.க ஆட்சி நடைபெற்று வருகிறது. முதல்வர் பஜன் லால் ஷர்மா அமைச்சரவையில் மருத்துவத் துறை அமைச்சராக கஜேந்திர சிங் பொறுப்பு வகித்து வருகிறார். இந்நிலையில், பா.ஜ.க அமைச்சர் கஜேந்திர சிங் தனது ஆதரவாளர்களுடன் பேசியது தொடர்பாக வைரலான வீடியோவில், “முதற்கட்ட தேர்தலில் நாம் மோசமாக செயல்பட்டுள்ளோம். நாகௌர் மக்களவைத் தொகுதியில் இந்தியா கூட்டணியிடம் பா.ஜ.க தோல்வியைத் தழுவும். நமது வாக்காளர்கள் வெளியே வரவில்லை. மற்ற இடங்களையும் இழக்கலாம்” என்று கூறியதாக சொல்லப்படுகிறது. இது பா.ஜ.க தரப்பில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

Next Story

விஜய் படம் பார்க்கும் சி.எஸ்.கே வீரர்

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
Ruturaj Gaikwad watch vijay leo movie

இந்தாண்டிற்கான ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் லீக் போட்டிகள் கடந்த மாதம் 22ஆம் தேதி முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் 5 முறை கோப்பையை வென்ற சென்னை சூப்பர் கிஸ் அணியை ருதுராஜ் கெயிக்வாட் தலைமை தாங்குகிறார். இளம் வீரரான இவர் தொடர்ந்து ஒவ்வொரு போட்டிகளிலும் தனது அபார ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார். இதுவரை 8 போட்டிகலில் விளையாடி 4 போட்டிகளில் வெற்றியைப் பெற்றுள்ளார். 

இந்த நிலையில் ருதுராஜ் கெயிக்வாட், தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் விஜய்யின் லியோ படம் பார்ப்பதைப் போன்று ஒரு புகைப்படத்தைப் பகிர்ந்துள்ளார். இதையடுத்து அந்தப் புகைப்படத்தை சி.எஸ்.கே ரசிகர்களும் விஜய் ரசிகர்களும் சமூக வலைத்தளங்களில் அதிகம் பகிர்ந்து வருகின்றனர்.

 

Ruturaj Gaikwad watch vijay leo movie

லியோ படம் விஜய் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கடந்த வருடம் வெளியானது. லலித் குமார் தயாரித்திருந்த இப்படத்திற்கு அனிருத் இசையமைத்திருந்தார். பல சிக்கல்களைத் தாண்டி வெளியான இப்படம் கலவையான விமர்சனத்தையே பெற்றது. இருப்பினும் ரூ.500 கோடிக்கு மேல் உலகம் முழுவதும் வசூலித்துள்ளதாக கூறப்படுகிறது.