Skip to main content

எனக்கு எடப்பாடி கொடுத்த பதவி... நீ யாரையும் சிபாரிசுக்கு கூப்பிட்டு வராதே... சிக்கும் அதிமுகவின் முக்கிய புள்ளி!

Published on 06/01/2020 | Edited on 06/01/2020

நம்முடைய செல்போனிற்கு வந்த அந்தக் குரல் தழுதழுத்த நிலையில், "எங்களுக்கு வேறு வழி தெரியல. நக்கீரனை விட்டா வேற நாதியில்ல...' என்கிற தவிப்போடு நம்மிடம் பேசியது. "சார்,…நான் தீவிர எம்.ஜி.ஆர். ரசிகன். மக்களிடம் தினசரி இரண்டறக் கலந்திருக்கும் ஆவின் பால் நிறுவனத்தில் தினசரி கஷ்டப்பட்டு வேலை பார்த்து ஓய்வு பெற்றவர்களை மிரட்டி அவர்களுக்கு கிடைக்க வேண்டிய பணத்திற்கு லஞ்சம் கேட்டு மிரட்டுகிறார்கள். கொஞ்சம் விசாரிச்சு எழுதுங்க சார். எம்.ஜி.ஆர். பெயரில் ஆட்சி நடத்தும் இந்த அரசாங்கத்தை இந்த சேர்மன் கார்த்திகேயனும் அவருடைய தம்பி அரவிந்தும் சேர்ந்து உழைப்பாளிகளின் உழைப்பை உறிஞ்சுகிறார்கள்'' என்று புலம்பித் தீர்த்தார். அதே நேரத்தில் திருச்சி மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் ஆலோசனைக் கூட்டத்தில் பேசிய திருச்சி ஆவின் சேர்மனான கார்த்திகேயன், "என்னோட 20 வருட அரசியலுக்கு முதல்வர் எடப்பாடி கொடுத்திருக்கிற இந்தப் பதவியை பயன்படுத்தி அவருக்கு பெருமை சேர்ப்பது மாதிரி நடந்துகொள்வேன். நீங்க ரெகமண்டேஷன்னு யாரையும் கூட்டிக்கிட்டு வரவேண்டிய அவசியம் இல்ல. நேரடியா பேசுங்க நானே பேசிக்கிறேன்'' என்றார்.

 

admk



என்ன நடக்கிறது ஆவின் பண்ணையில் என விசாரணையில் இறங்கினோம். கார்த்திகேயன் பொறுப்பேற்றவுடன் ஆவின் ஓய்வூதியர் சங்கத்தின் பொறுப்பாளர்களாக நாகராஜன், குருநாதன் என இரண்டுபேரை அலுவலகத்தில் பொறுப்பாளராகப் போட்டார். 2005-ஆம் ஆண்டு முதல் 2016-ஆம் ஆண்டுவரை ஓய்வு பெற்றவர்களுக்கு ஈட்டு விடுப்பு, ஈட்டா விடுப்பு சம்பளம் கொடுக்க வேண்டும், இந்தப் பணத்தை வாங்குவதற்கு 40 சதவீதம் லஞ்சமாக பணத்தை முன் கூட்டியே கொடுத்தால்தான் இந்த விடுப்பு பணத்தை இவர்கள் கொடுக்கிறார்கள். வேறு வழி தெரியாமல் குடும்ப நெருக்கடி காரணமாக லஞ்சம் கொடுத்து ஈட்டுப் பணத்தை வாங்கிக் கொண்டிருக்கிறார்கள் ஓய்வுபெற்றோர். லஞ்சம் கொடுக்காதவர்களிடம், "நீங்க எப்படி வாங்குறீங்கன்னு பாக்குறேன்' என்று சேர்மன் தம்பி அரவிந்தன் மிரட்டுகிறார்.

 

admk



தினமும் குறைந்தது 3 லட்சம் லிட்டர் பால் கொள்முதல் ஆகிறது. இதில் 1 ரூபாய் முதல் இரண்டு ரூபாய் வரை தனியாக கமிஷன் எடுக்கிறார்கள். ஒரு நாளைக்கு இத்தனை லட்சம் கமிஷன் வந்தால் சும்மாவா இருப்பார். நல்ல நிலையில் இருந்த அலுவலகத்தை 20 லட்ச ரூபாய்க்கு புதுப்பித்துள்ளார். இந்த ஆவின் பால்பண்ணையில் வேலைவாய்ப்பு அலுவலகம் மூலம் தேர்வு செய்தவர்களை இன்னும் ஒப்பந்த ஊழியர்களாவே வைத்திருக்கிறார்கள். யாரையும் நிரந்தரம் ஆக்கவில்லை. உச்சகட்டமாக மனோகர் என்பவரை 3 வருடமாக ஒப்பந்த ஊழியராகவே வைத்திருக்கிறார். "இதுவரை ஆவினில் 96 போஸ்டிங் போட்டிருக்கிறார்கள். இதில் 3 லட்சம் முதல் 15 லட்சம் வரை பணம் வாங்கியிருக்கிறார்கள். இப்போ 200 பணிகளுக்கு போஸ்டிங் போடப்போகிறார்கள். இதிலும் கடைசிநாள் நேரில் கொண்டுவந்து கொடுத்த விண்ணப்பத்தை வாங்க மறுத்துவிட்டார்கள்' என்கிறார்கள் அங்கு பணியாற்றியோர்.

ஓய்வுபெற்றோருக்கு லஞ்சமின்றி ஈட்டுத்தொகை பெற்றுத்தர நிர்வாகத்திடம் தொடர்ச்சியாக முறையிடு பவரான இலக்குமணகுமார் நம்மிடம், "2016 வரை திருச்சி ஆவின் லாபத்தில் இயங்கியது. இப்போது நட்டத்தில் தள்ளாடுகிறது'' என்கிறார்.


"இப்படி மக்களின் அடிப்படை வாழ்வாதாரத்திற்காக வேலை செய்யும் இந்த நிறுவனத்தை வைத்து சம்பாதித்தவர்களுக்கு அவர்களுடைய அரசியல் வாழ்வுக்கு இந்த பதவிதான் கடைசியாக இருந்துள்ளது. இந்தப் பதவிக்கு பிறகு உயர் பதவிக்கு சென்றது இல்லை. உதாரணமாக பொன்.கலிய பெருமாள், திருநாவுக்கரசு, இளவரசன், கே.கே.தங்கராசு, ஆயிலை பழனியாண்டி, எஸ்.எம்.ராஜேந்திரன், இப்போ கார்த்திகேயன்.

இவர், 2011-ஆம் ஆண்டு அ.தி.மு.க. ஆட்சி வந்தவுடன் மரியம்பிச்சையுடன் அ.தி.மு.க.வில் நுழைந்தவர். மரியம்பிச்சை சினிமா வினியோகஸ்தர் தொழில் செய்துவந்த நிலையில்... அவருடைய உதவியால் சென்னையில் உள்ள சினிமா புரோக்கர் இவருக்கு நெருக்கமாகவும், அவர் மூலம் அ.தி.மு.க. அமைச்சர்கள் பலர் இவருக்கு மிகநெருக்கமாகவும் மாற இந்த பழக்கத்தில் பலரையும் திருச்சி சங்கம் ஓட்டலுக்கு அழைத்துவருவார். இவர்கள் மூலம் எடப்பாடி பழனிசாமி அறிமுகம் கிடைத்ததும் அவர் மூலம் மாவட்டச் செயலாளர் சிபாரிசு இல்லாமல் மாவட்ட மாணவர் அணி பொறுப்பு கிடைத்தது. தற்போது மாவட்ட ஆவின் சேர்மன் பதவி என தன் தகுதிக்கு மேல் அரசியலில் வளர்ச்சியடைந்துள்ளார் "ஆவின்' கார்த்திகேயன். அடுத்து தன்னுடைய தம்பிக்கு கவுன்சிலர் பதவியும், தனக்கு கிழக்கு தொகுதியும் கூடுதலாக மா.செ. பதவியும் முதல்வர் தரப்போகிறார் என்று எங்கேயும் எப்போதும் எடப்பாடியின் கிச்சன் கேபினட் பெயரைத்தான் பயன்படுத்துகிறார்.


ஆவின் வழியே வந்த வருமானத்தின் மூலம் முதல்வர் எடப்பாடி பெயரை பயன்படுத்தி லைக்கா நிறுவனத்தின் தயாரிப்பான, ரஜினியின் "தர்பார்' படத்திற்கு திருச்சி பகுதியான டி.டி. ஏரியா முழுவதும் ரைட்ஸ் வாங்கியிருக்கிறார். கடந்த 10 நாளில் "பிளஸ் மேக்ஸ்' என்கிற நிறுவனத்தை தன்னுடைய தம்பி அரவிந்த் பெயரில் ஆரம்பித்து 7.40 கோடிக்கு வாங்கியிருக்கிறார்கள். திரையரங்கு உரிமையாளர்களிடம் பேசி முடிப்பதற்காக சென்னையில் இருந்த பாலாஜி என்பவரை நியமித்து இருக்கிறார். ரஜினியின் படங்களிலே அதிக விலைக்குப் போனது இந்தப் படம்தான்'' என்கிறார்கள்.

இத்தோடு இல்லாமல் திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகே உள்ள இரண்டு எழுத்து ஓட்டலை விலைக்கு பேசி முடித்துள்ளதாகவும் பேச்சு உலவுகிறது. இது குறித்து விளக்கம் கேட்பதற்காக ஆவின் சேர்மன் கார்த்திகேயனை நேரில் சந்தித்தோம். குற்றச்சாட்டுகளால் ஆவேசம் அடைந்து பேசியவர், அலுவலகத்தை விட்டு நம்மை வெளியேற்றிவிட்டார்.

 

-ஜீ.தாவீதுராஜா
 

சார்ந்த செய்திகள்

Next Story

கோஷ்டி மோதலால் டாஸ்மாக் கடையை சூறையாடி, தீ வைப்பு; இளைஞர்களின் வெறியாட்டம்!

Published on 29/04/2024 | Edited on 29/04/2024
கோஷ்டி மோதலால் டாஸ்மாக் கடையை சூறையாடி, தீ வைப்பு; இளைஞர்களின் வெறியாட்டம்!

வேலூர் மாவட்டம், அலமேலுமங்காபுரம் ஏரியூர் பகுதியைச் சேர்ந்தவர் சந்துரு. இவர் வேலூரை அடுத்த பெருமுகை கிராமத்தில் டாஸ்மாக் பாரை ஏலத்தில் எடுத்து நடத்தி வருகிறார். இந்த நிலையில், ஏரியூர் பகுதியில் உள்ள திரெளபதி அம்மன் கோவில் திருவிழாவில் துரியோதனன் படுகளம் நேற்று (28-04-24) காலை நடந்தது. திருவிழாவில் அலமேலுமங்காபுரம் பகுதியைச் சேர்ந்த வாலிபர்கள் சிலருக்கும், ஏரியூர் பகுதியைச் சேர்ந்த சிலருக்கும் இடையே வாக்குவாதம், தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால், அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதனையடுத்து, அங்கிருந்த பெரியவர்கள், இருதரப்பையும் விளக்கிவிட்டு அனுப்பியுள்ளனர். கோபம் குறையாமல் இருதரப்பும் சென்றுள்ளது.

அதன் பின்னர், இரவில் நடைபெற்ற தீமிதி திருவிழாவின்போதும் இருதரப்பைச் சேர்ந்தவர்களுக்கும் மீண்டும் தகராறு, மோதல் நடந்துள்ளது. இதில் ஆத்திரமடைந்த அலமேலுமங்காபுரத்தைச் சேர்ந்த சுமார் 10-க்கும் மேற்பட்ட வாலிபர்கள், ‘ஏரியூர் பசங்க இங்கவந்து துள்ளக்காரணமே சந்துருதான்’ எனக்கூறி பெருமுகையில் உள்ள சந்துருவின் டாஸ்மாக் பாருக்கு சென்று காலி மது, பீர் பாட்டில்களால் அங்கிருந்தவர்களை சரமாரியாக தாக்கி விரட்டியுள்ளனர். இதனால், அங்கு மது அருந்தி கொண்டிருந்தவர்கள் அலறியடித்து அங்கிருந்து ஓடியதும், அந்த வாலிபர்கள் அங்கிருந்த அனைத்து பொருட்களையும் அடித்து நொறுக்கி பாருக்கு தீ வைத்துவிட்டு தப்பித்தனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

இந்தச் சம்பவம் தொடர்பாக போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. இதனையடுத்து, இச்சம்பவம் குறித்து தகவல் அறிந்த வேலூர் எஸ்.பி மணிவண்ணன், ஏ.டி.எஸ்.பி பாஸ்கரன் மற்றும் காவல் ஆய்வாளர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று பார்வையிட்டு அப்பகுதி மக்களிடம் விசாரணை மேற்கொண்டனர். டாஸ்மாக்கை அடித்து நொறுக்கி தீவைத்த நபர்களை சத்துவாச்சாரி காவல் துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர்.

Next Story

'எப்படி கேமராக்கள் செயலிழக்கும்?'-அதிமுக ஜெயக்குமார் கேள்வி

Published on 28/04/2024 | Edited on 28/04/2024
'How can the cameras fail?'- AIADMK Jayakumar asked

மக்களவைத் தேர்தலுக்கான முதல்கட்ட தேர்தல் தமிழகத்தில் முடிந்திருக்கும் நிலையில் அடுத்தடுத்த கட்டங்களாக பல மாநிலங்களில் தேர்தல் நடைபெற்று வருகிறது. இந்தநிலையில் நீலகிரியில் வாக்கு பெட்டிகள் வைக்கப்பட்டிருக்கும் ஸ்ட்ராங் ரூமில் வைக்கப்பட்டிருந்த சிசிடிவி கேமராக்கள் நேற்று திடீரென 20 நிமிடங்கள் செயலிழந்து பின்னர் சரியானது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

அதீத வெப்பம் காரணமாக சிசிடிவி கேமராக்கள் செயலிழந்ததாக நீலகிரி மாவட்ட ஆட்சியர் தரப்பில் விளக்கம் கொடுக்கப்பட்டிருக்கிறது. இந்நிலையில் செய்தியாளர்களைச் சந்தித்த அதிமுகவின் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாரிடம் செய்தியாளர்கள் இதுகுறித்து கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த அவர், ''சிசிடிவி கேமரா ஃபெயிலியர் ஆகிவிட்டது என்று சொல்கிறார்கள். இதெல்லாம் எலக்சன் கமிஷனுடைய பிரைமரி டியூட்டி. எப்படி சிசிடிவி கேமரா பெயிலியர் ஆகும். ஸ்ட்ராங் ரூமுக்கு உள்ளேயும் வெளியேயும் பொதுவாக சிசிடிவி கேமரா இருக்கும். ஆனால் எப்படி கேமராக்கள் செயலிழந்து. அதற்கான தனியாக யுபிஎஸ் வைத்து பவர் சப்ளை கொடுக்கவில்லையா? இதெல்லாம் எலக்சன் கமிஷன் செய்திருக்க வேண்டும்.

சாதாரணமாக தொழில்நுட்ப பிரச்சனை என்று சொல்லிவிட்டு போகக்கூடாது. அப்படிக் கடந்து செல்லக்கூடாது. ஜனநாயகத்தினுடைய திருவிழா நடத்தப்பட்டு அதன்படி முடிவுகள் அறிவிக்கப்பட இருக்கக்கூடிய இடம் அது. அப்படி இருக்கும் பொழுது அந்தப் பகுதியில் இந்த மாதிரி ஒரு சூழ்நிலை ஏற்பட்டுள்ளது என்று சொல்வது உண்மையிலேயே யாருமே ஏற்றுக்கொள்ள முடியாத விஷயம். தேர்தல் ஆணையம் இதுபோன்ற தவறுகளுக்கு இடம் கொடுக்காமல் விழித்திருந்து முழுமையான பணியை செய்ய வேண்டும். அடுத்தது வாக்குகளை எண்ணப்  போகிறார்கள் அதில் என்ன செய்யப் போகிறார்கள் என்று தெரியவில்லை. அதிலும் சொதப்பாமல் இருந்தால் நல்லது''என்றார்.